Pa Paa Poo 6

Advertisement

mallika

Administrator
ஹாய் ஹாய் ஹாய்...



எதுக்கு இத்தனை ஹாய் அப்படினு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது. எல்லாம் அலைப்பறைக்குத் தான்...



சொன்ன சொல் மீற மாட்டான் இந்த கோட்டைசாமி...தலை கீழாகத் தான் குதிப்பேன் மொமெண்ட் போல....



ஜோக்குனு சொல்லி உங்களுக்கு ஜோகங்களைக் கொடுக்காமல், சட்டுனு சப்ஜெக்ட் வரேன்.



சொன்ன சொல் மீறாமல் பரிசை பற்றிய அனௌன்ஸ்மென்ட் சொல்ல வந்தேன்.



கண்டுபிடிக்கும் முதல் நபருக்கு பரிசு என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இரண்டு நண்பர்கள் சொல்லிடீங்களே ? எப்படி என்னால ஒருத்தரை விட்டு ஒருத்தருக்கு கொடுக்க முடியும் ?



விஜயசாந்தி FB ல முதல்ல சொன்னாங்க...பானுமதி ஜெயராமன் அவர்கள் நம்ம மல்லி அக்கா தளத்தில் முதலில் சொல்லியிருக்காங்க...



இரண்டு பேருல யாரை தேர்வு செய்வதுனு ஒரே குஷ்டம்மப்பா...சாரி கஷ்டமப்பா...



அதுனால இரண்டு நபருக்கும் கொடுத்திடலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்.



விஜயசாந்திக்கு... விஜியின் விருப்பத்தின் பெயரில், அடுத்த மாதம் வெளியாகவிருக்கின்ற என்னுடைய வரலாற்றுப் புதினம்.



வாளரி வேந்தன்....இது சிங்கமெனக் கர்ஜித்த பல்லவனின் வரலாறு... என்னுடைய ஒரு வருட உழைப்பும் அந்தப் புதினத்தில் இருக்கு. வரலாறு நாவல் எழுதுறதை நான் நேசிக்கிறது மட்டுமில்ல, ரொம்ப ரசிச்சு பண்ணுவேன். தமிழ் மற்றும் வரலாறு இந்த இரண்டும் என்னுடைய பெருங்காதல்... தீராக்காதால்.... எத்தனை படிச்சாலும் தனியவே தனியாத தாகம்...



நம்முடைய முன்னோர்களின் வாழ்வை வழக்கங்களை வெற்றிகளைச் சின்னச் சின்னக் கற்பனைகளோடு பிணைந்து வாசகர்களிடம் சேர்க்கவேண்டும் என்பது தான் என் உள் நோக்கம். அதிலிருக்கும் சிறு தகவலையாவது வாசகர்கள் புதிதாக அறிந்துகொண்டால் அது தான் எனக்குப் பேரானந்தமும் பெருவெற்றியும்...



நான் வரலாறு என்ற தலைப்பின் கீழ் எதையும் புதிதாகச் சொல்லவில்லை...நாம் மறந்ததை நமக்கு நினைவூட்டுகிறேன் கதையின் மூலமாக... அவ்வளவு தான்....



அடுத்ததாக, பானுமதி ஜெயராமன் அவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பெயரில் விரைவில் வெளியாகவிருக்கும் குடும்ப நாவல் பரிசாக அளிக்க விரிக்கின்றேன்.



என்னுடைய நாவல் அல்ல அது...நான் எழுதின நான்கு நாவல்களையும் பானு அம்மா படிச்சிட்டாங்க...அதுனால, நேரடியாகப் புத்தகமாக வெளிவர போகிற, பானு அம்மா படிக்காத ஒரு நாவலை பரிசாகத் தேர்வு செய்துள்ளேன்.



இரண்டு புத்தகங்களும் வெளியானதும் இருவரிடமும் சேர்பித்துவிடுவேன்...



எழுத்தாளர்கள் என்ன விருப்பம் தெரிவித்தாலும் அதற்கு உடனே ஒகே சொல்ற மல்லி அக்கா க்கும் என்னுடைய நன்றிகள்...



இப்படிக்கு

உங்கள் ராசி

 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்

என்ன பனிமலர் நூறு பவுன் நகை போட்டுக்கிட்டு வந்திருக்கிறாளா?
அப்போ வேற யாருடனோ கல்யாணம் பிக்ஸ் பண்ணி அது பிடிக்காமல் ஓடி வந்து பார்த்திபனின் லாரியில் ஏறி விட்டாளோ?

இந்த நகையை சூர்யா அண்ணன் பொண்டாட்டி ஆட்டைய போடப் பார்க்கிறாள்
பனிமலர் என்ன செய்யப் போறாளோ?
இவளுக்கு ரூம் இல்லைன்னு சொல்லி நகையை பத்திரமா வைச்சிருக்கிறேன்னு சொல்லி ஆட்டைய போட்டிருவாளோ?

ஆமாம் ஒன் ஸ்மால் டவுசர் டவுட்டு
தன்னை நம்பாத வீட்டினருக்கு இனி செலவுக்கு பார்த்திபன் பணம் கொடுப்பானா? மாட்டானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top