P8 இதய கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
தெய்வாவும், மூர்த்தியும் முன்பாவது எதாவது ஒன்னிரண்டு வார்த்தை வனிதாவிடம் பேசுவார்கள். இப்போது சுத்தமாக பேசுவது இல்லை. அவளை பார்ப்பதையே தவிர்த்து ஒதுங்கி போனார்கள்.

வனிதாவுக்கு இப்போது நிம்மதியாக இருந்தது. இப்படி எதாவது அதிரடியாக செய்தால் தான் இவர்களை மிரட்டி வைக்க முடியும் என திமிராகவே இருந்தாள்.

************************************************************************************************************************************

ஆதிரை சரியாக உன்ன முடியாமல் சோர்ந்து சோர்ந்து படுக்க... அவளுக்கு உடல்நலத்தில் பிரச்சனையோ என பயந்து மருத்துவமனை சென்றால்... அவள் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் சொல்ல... எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் கணவனும் மனைவியும் திகைத்துதான் போனார்கள்.

இன்னொரு வாரிசு வரப்போகிறது என்றதும், குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

ஆதிரையை மில்லுக்கு போகலையா என கேட்டுக் கொண்டிருந்த ஜோதியே, “இனிமே வெளிய எங்கேயும் அலையாம வீட்ல இருக்கட்டும்.” என்றார்.

*************************************************************************************************************************************

கணவனும் மனைவியும் கோவிலுக்கு சென்றபோது, வனிதா சாமி கும்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தாள். வெற்றியும் ஆதிரையும் ஜோடியாக வருவதைப் பார்த்தவள், புன்னகையுடன் அவர்களை நெருங்க... ஆதிரை பார்வையாலையே அவளை தள்ளி வைத்தால் என்றால்... வெற்றிக்கோ மனதில் இருந்த மகிழ்ச்சி குறைய, இவள் இப்போது பார்த்தா வர வேண்டும் என நினைத்தவன், ஆதிரையின் கையை அழுத்தத்துடன் பற்றியபடி, ஒரு சிறு தலையசைப்புடன் வனிதாவை கடந்து சென்றுவிட்டான்.

வனிதாவிற்கு தான் முகத்தில் அறைந்தது போல ஆகிவிட்டது. இதற்கு முன்பு இப்படி தனியாக பார்த்தால், “எப்படி இருக்க? எதுல வந்த? எப்படி போகபோற?” இப்படி எதாவது வெற்றி கேட்பான். ஆதிரையுமே நன்றாக பேசுவாள், வீட்டிற்கு அழைப்பாள். ஆனால் இன்று யாரோ போல அவர்கள் நடந்து கொண்டதும், மனதிற்கு வருத்தமாக இருந்தது.

அவள் பேசியது சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் விஷயமா? இவள் போதைக்கு ஆதிரையை ஊர்காய் ஆக்கினால் சும்மாவா விடுவார்கள்.

*************************************************************************************************************************************

விக்ரமின் கார் ஓட்டுனர் வனிதாவிற்கு உளவு சொல்பவன். விக்ரம் எங்கே போகிறான் என்ன செய்கிறான் என்றெல்லாம் அவளிடம் சொல்லிவிடுவான்.

“அண்ணன் இப்ப மில்லுள்ள தான் அதிகம் இருக்காரு. வெற்றி அண்ணன் முன்ன மாதிரி மில்லுக்கு வர்றது இல்லை.” என அவன் சொல்ல...

கணவன் மில்லில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என வனிதா நினைத்துக் கொண்டிருந்தாள். கணக்கு பார்க்க வந்தவள், தன் கணவனை கணக்கு பண்ணுகிறாள் என தெரிய வரும்போது என்ன ஆவாளோ.

**************************************************************************************************************************************
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice precap

வனிதா , நீ உன் புருஷனை கவனிக்காம அடுத்தவங்களை புறணி பேசிகிட்டு இருந்த, இப்ப உன் புருஷனை வேற யாரோ ஒருத்தி கணக்கு பண்றா.. நீ இனி என்ன பண்ண போற???

Waiting for episode...
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

வனிதாக்கு இன்னும் குறையலையே........
தன் வாழ்க்கையை ஒருத்தி குறிவைக்குறானு தெரியுறப்போ தான் புத்தி வருமா???
விக்ரமை கணக்கு பண்ணுறது விக்ரமுக்காவது தெரியுமா இல்லையா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top