P5-Thuli Maiyal Konden

Advertisement

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்.கருத்துக்கள் பகிர்ந்துகொண்ட அனைவருக்குமே நன்றி.நான் கொஞ்சம் பிசி.நேரமிருக்கும் போது நிச்சயம் ரிப்ளை பன்றேன்.நன்றி உங்க சப்போர்ட்க்கு!!!


@@@@@@@@@@

“சொல்றேன் சார்.அதுக்கு தான போன் பண்ணேன்.எனக்கு என் பொண்டாட்டி வேணும்”



“பொண்டாட்டியா?”என்றான் பல்லை கடித்தபடி..



“அதான் சார்.என் மயூ..அவளை தான் சொல்றேன்.ஒரு பொண்ணை எனக்கு கொடுத்துட்டு,இன்னொரு பொண்ணை கூட்டிட்டு போக சொல்லுங்க.என் மயூ என் கைக்கு வந்துட்டா போதும்.வேறெதுவும் எனக்கு வேணாம்.என் மச்சினிச்சிக்கும் எதுவும் வரமா பத்திரமா பார்த்துப்பேன்.இடையில எதுவும் தில்லுமுல்லு பண்ணீங்கன்னு தெரிஞ்சுது,அனுஷாவோட பாதுகாப்புக்கு நான் பொறுப்பில்ல.நான் ரொம்ப நல்லவனா இருக்கணும்னு முயற்சி பண்றேன்.கெட்டவனா அவங்க தான் மாத்திக்கிட்டு வர்றாங்க”பேசிக்கொண்டே சொல்ல,வினோதன் அனுஷாவை எதுவும் செய்யமாட்டான் என்று நம்பிக்கை வர,பொறுமையுடன் அவன் பேசுவதை கேட்டான் மாறன்.

@@@@@@@@@@@

“மகேந்திரா...அந்த அம்மா,சம்மந்தத்தை முறிச்சிக்கிட்டாங்க.மயூரா வர்றா! இனி எது வேணாலும் நடக்கட்டும்.நமக்கு இப்போ அனுஷா..அனுஷா மட்டும் தான் முக்கியம்..புரியுதா?”என்றார்.



“அதெப்படிப்பா”என்றவனை பேசவிடாமல் தடுத்தவர்,



“பிரச்சனைக்கெல்லாம் காரணம் இந்த கழுதை தான்..இனி இவளை யாருக்கு நான் கட்டி வைக்க முடியும்.அவ பேரையே அவளே நாற வைச்சுக்கிட்டா! இனி அவ விருப்பப்படி,அந்த பொறுக்கியை கட்டிக்கிட்டு,எங்கேயோ போய் தொலையுட்டும்.மிச்சமிருக்கற ஒருத்தியையாவது,யார் கால்ல விழுந்தாவது கட்டி வைக்கறேன்”என்றவர் மயக்கம் வருவது போலிருக்க,அப்படியே அமர்ந்துவிட்டார்.

#############
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top