P21 இதய கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
வெற்றியும் விக்ரமும் கமிஷனரை சந்தித்து நடந்த அனைத்தையும் அவரிடம் சொன்னார்கள். முதலில் அவருக்கு கூட பெரிய இடம் இவர்கள்தான் எதுவும் செய்திருப்பார்களோ என எண்ணம். அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர், இப்போதுதான் புதிதாக மாற்றலில் இங்கே வந்திருக்கிறார். அதனால் அவருக்கு இவர்களைப் பற்றி தெரியவில்லை. ஆனால் ஆதாரத்தை எல்லாம் பார்த்த பிறகு திட்டமிட்டே வெற்றியை இதில் சிக்க வைத்திருப்பது புரிந்தது.

“நீங்க முன்னாடியே வந்திருக்காலம். வெளியே தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு யோசிக்கிறீங்க பார்த்தீங்களா... அதைத்தான் இந்த மாதிரி ஆட்கள் தங்களுக்கு சாதகமா பயன்படுத்திகிறாங்க. பரவாயில்லை இப்பவும் ஒன்னும் தாமதம் இல்லை. நீங்களே ஆதாரத்தோட வந்திருக்கீங்க. சீக்கிரம் அவங்களை பிடிச்சிடலாம்.”

“நாளைக்கு லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு புகார் கொடுத்திடுங்க.” என்றவர், எந்த மாதிரி கொடுக்க வேண்டும் எனவும் விளக்கினார்.

***************************************************************************************************

“அண்ணா நாங்க அந்த வெற்றியை பின்தொடர்ந்து போறோம்.”

“பின்னாடி போய் மட்டும் என்ன பண்றது. அவனால நமக்கு ஒரு பைசா பிரோஜனம் இல்லை. அவனை அப்படியே விடக் கூடாது. அடிச்சு போட்டுட்டு வாங்க.” என திலீபன் சொல்ல,

வண்டியின் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்தவன், வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனிடம், “டேய் சீக்கிரம் போய் அவனைப் பிடி. அண்ணா அவனை அடிக்க சொல்றார்.” என சொல்ல, அதை கேட்ட மற்றவன் ன் வண்டியின் வேகத்தை அதிகரிக்க, முன்னால் சென்று கொண்டிருந்த வெற்றி வேகத்தை குறைத்து, இவர்களை மரிப்பது போல வண்டியை குறுக்காக நிறுத்தினான்.

வெற்றி வண்டியை நிறுத்துவிட்டு, அதில் சாய்ந்து கொண்டு தெனாவட்டாக இவர்களைப் பார்க்க, இதை எதிர்பார்க்காதவர்கள் சிறிது தயங்கினாலும், “அவனே வந்து நம்மகிட்ட மாட்டுறான் டா... அவன் ஒரு ஆள் நாம ரெண்டு பேர், என்ன பண்றான் பார்க்கலாம்.” என அவர்கள் இருவரும் வண்டியை நிறுத்திவிட்டு, இறங்கி வெற்றியை நோக்கி செல்ல, வெற்றி அலட்சியமாக ஒரு காலை மடக்கி வேட்டியை உயர்த்திக் கட்டியவன், முதலில் நெருங்கியவனை அதே அலட்சியத்தொடு ஒரு உதை விட்டான்.

*********************************************************************************************************

எப்போதும் போல வேலையினால் வந்த தாமதாம் என்றால் கவலைப்பட்டிருக்க மாட்டாள். அவன் கமிஷனரை பார்க்க சென்றது தெரியும். அந்த வேலை முடிந்தும், ஏன் வீட்டிற்கு இன்னும் வரவில்லை என யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு கணவனைப் பற்றி நன்றாக தெரியும் அல்லவா... உடனே வெற்றியை அழைத்தவள், “எங்க இருக்கீங்க வெற்றி? எதுனாலும் சட்டப்படி பண்ணலாம்ன்னு தானே சொன்னீங்க. இன்னும் ஏன் வீட்டுக்கு வரலை?” ஆதிரை கேட்க, மனைவி தன்னை கண்டு கொண்டது வெற்றிக்கு ஆச்சர்யமே இல்லை. அவள்தான் அவனைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை அறிந்து வைத்திருக்கிறாளே.

“முடிஞ்சது இன்னும் கொஞ்ச நேரம் தான் வந்திடுறோம்.” என்றான்.

“என்ன முடிஞ்சது? என்ன செஞ்சீங்க அவனை.” என்றாள் ஆதிரை பதட்டமாக.

*************************************************************************************************************
 

banumathi jayaraman

Well-Known Member
ஆதிரை வெற்றியை நன்கு அறிந்த அருமையான மனைவி
ஹா ஹா ஹா
அவளிடம் நீ எஸ்கேப் ஆக முடியாது வெற்றி மாப்பி
யோவ் கூறுகெட்ட கமிஷனர்
நார்த் இந்தியாவிலிருந்து நீ வந்தால் உள்ளூரில் எவன் பெரிய மனிதன் எவன் எப்படி எல்லாம் தெரிஞ்சுக்க மாட்டாயா?
வாங்கடா வாங்க
வந்து வெற்றியிடம் நல்லா செமத்தியா வாங்கிட்டு போங்க
 
Last edited:

Joher

Well-Known Member
ரெண்டு பேரும் சேர்ந்து தோலை உரிச்சுட்டானுங்களா???
Life ல காசுக்காக என்ன வேலை வேணும்னாலும் செய்யக்கூடாது னு உணரனும்......
அப்புறம் போலீஸ் கிட்ட ஒப்படைக்கலாம்......

வெற்றி பற்றி ஆதிரை எல்லாமே தெரிஞ்சுவச்சிருக்கா......
So இனி வெற்றி ஆதி கிட்ட மட்டும் எதையும் மறைக்க முடியாது.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top