P18 இதய கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
இத்தனை நாள் மனைவியிடம் விஷயத்தை சொல்லாமல் இருக்கிற குற்ற உணர்வில், வீட்டில் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தவன், இப்போது எல்லாம் சொல்லிவிட்ட நிம்மதியில் மனைவி மகளோடு நேரம் செலவழிக்க எண்ணி, வெற்றி அன்று வீட்டிலேயே இருந்து விட்டான்.

ஆதிரை மகளை குளிப்பாட்டி தூக்கி வந்தவள், ஈர உடலை துடைத்து விட்டு உடைமாற்ற, மகள் சிரிப்பதைப் பார்த்தவன், “குட்டிக்கு குளிக்கிறது பிடிக்குமா டா...” என கேட்க,

“உங்க பொண்ணுக்கு தண்ணியில இருக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும்.” என்றாள் ஆதிரை.

“எவ்வளவு சமத்து எங்க குட்டி.” என மகளை முத்தமிட்டவன், வாசனையா இருக்கீங்களே டா.. குளியல் பொடியா?” என கேட்டு மீண்டும் முத்தமிட குனிய, அவனது கைபேசி அழைத்தது. யாஷிகா தான் அழைத்திருந்தாள். வெற்றிக்கு கடுப்பாக இருந்தது. கைபேசியை அனைத்து வைத்தான்.

*******************************************************************************************************************

விக்ரம் நண்பர்களுடன் பேசிக்கொண்டே மது அருந்தியவன், பிறகே வெற்றி அங்கில்லாததை உணர்ந்தான்.

“எங்க டா வெற்றி..” அவன் அருகில் இருந்த நண்பர்களிடம் கேட்க,

“இப்பத்தான் டா ஒரு மாதிரி இருக்குன்னு எங்கையோ எழுந்து போனான்.”

“எங்கப் போனான் இவன். இவன் பொண்டாடிக்கு யாரு பதில் சொல்றது.” வெற்றியை தேடி விக்ரம் எழுந்து செல்ல,

“டேய் அவன் பொண்டாட்டிக்கு அவன் பயந்தா பரவாயில்லை... நீ ஏன் டா பயப்படுற?”

“உங்களுக்கு ஆதிரைப் பத்தி தெரியாது. அவன் புருஷனுக்கு மட்டும் ஏதாவதுன்னா என்னை மட்டும் இல்லை. உங்களையும் சேர்த்து தொலைச்சிடுவா தெரியுமா”

“இது வேறையா... தாங்காது டா சாமி... நீ போய் அவனைப் பாரு.” என நண்பர்கள் விக்ரமை அனுப்பி வைத்தனர்.

****************************************************************************************************************

“நல்லவேளை நான் இவனை விட்டு போகலை. இவன் போதையில இருந்த போது ரூம்குள்ள வந்து இவன் பக்கத்தில கட்டில்ல படுத்து வீடியோ எடுத்திருந்தாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லை.” விக்ரம் சொல்ல,

“அதுதான் அவளோட திட்டமா இருந்திருக்கும். அதை நீங்க வந்து கெடுத்துடீங்கன்னு கோபத்தில தான் உங்களைப் பார்த்து முறைச்சிருக்கா.” ஆதிரை சொல்ல, நண்பர்கள் இருவரும் திடுக்கிட்டு போனார்கள்.

இதுவே வெளியே தெரிந்தால் பேர் கெட்டு போகும். இதற்கு மேலும் என்பதை வெற்றியால் நினைத்து பார்க்கவே முடியவில்லை.

*******************************************************************************************************************

“நான் ஏற்கனவே சொல்லிட்டேன். ஒழுங்கா நான் சொல்றது கேட்டிருக்கலாம். தேவையில்லாம உங்க பொண்டாட்டிக்கு வேற இப்ப தெரிஞ்சிடுச்சு.”

“எப்படியும் நான் சொல்லித்தான் இருப்பேன். உனக்கு என் பொண்டாட்டியை பத்தி தெரியாது.”

“பார்க்கலாம் நானா அவளான்னு. உங்களுக்கு ரெண்டு நாள் தான் வெற்றி டைம். நீங்க என் வழிக்கு வாங்க. நானே உங்க பொண்டாட்டிக்கு போன் பண்ணி, நான் தெரியாம பண்ணிட்டேன். உன் புருஷன் உத்தமன்னு சொல்லி பழியை என் மேலையே போட்டுகிறேன்.”

“ஏன் உனக்கு கல்யாணம் ஆகாத ஆம்பிளைங்க யாரும் கிடைக்கலையா?”

“எனக்கு உங்களைத்தானே பிடிச்சிருக்கு. அதோட உங்களுக்கும் என்னை பிடிச்சிருந்தது.”

"பொய் திரும்ப திரும்ப சொன்னா உண்மை ஆகிடாது. நான் இத்தனை நாள் அமைதியா போனதுக்கு காரணம், எனக்கு அன்னைக்கு என்ன நடந்ததுன்னு நினைவு இல்லை. ஆனா இப்ப தெரிஞ்சிடுச்சு, நீ ஒன்னும் இல்லாத விஷயத்தை வச்சு வித்தைகாட்டிட்டு இருக்கேன்னு. இதோட விட்டுட்டு ஒதுங்கி போயிடு இல்லைனா தொலைச்சிடுவேன் சொல்லிட்டேன்.”

“என்ன மிரட்டுறீங்களா? சரி உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம். ஒரு தடவை என்னை வந்து நேர்ல பார்த்து பேசிட்டு போங்க. அதோட நான் உங்க பக்கமே வர மாட்டேன்.”
 

Janavi

Well-Known Member
ஆதிரை ஆட்டம் ஆரம்பிக்க போறா...நல்ல வச்சு செய்யணும் யாஷிகாவை.... Eagerly waiting for your ud sis
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
ரம்யாராஜன் டியர்
யாஷிகா திரும்பவும் எதுக்கு வெற்றியைக் கூப்பிடுறாள்?
பட்சி சரியா மாட்டலைன்னா?
இவள் பின்னாடி பெரிய ஆளுங்க யாரும் இருப்பாங்களோன்னு தோணுது
வெற்றி தனியா போவானா?
இல்லை ஆதிரையும் கூடப் போவாளா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top