P17 Nee Enbathu Yaathenil

Advertisement

mallika

Administrator
Friends, இதனால் நான் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்ன வென்றால் என்னை யாரும் திட்டப் படாது. அதாகப் பட்டது இப்போ நான் கையில் எடுத்திருப்பது நீ என்பது யாதெனில்.. புக் போடணும் அதனால அதை கொஞ்சம் பெருசு பண்றதுக்காக எடுத்திருக்கேன்.

நீங்காத ரீங்காரம் என்ன ஆச்சுன்னு கேட்கலாம்

இதோ இது முடிஞ்சதும் அது வரும்.

நான் எனது மனது நம்ம புது சைட் ல போயிட்டு இருக்கு அதையும் படிங்க

நிறைய கதை பெண்டிங் இருக்கு, எனக்கு புரியுது, ஆனா நான் மன்த்லி க்கு திரும்ப கமிட் ஆகிட்டதால ரெண்டு மாசத்துக்கு ஒரு குறு நாவல் முடிச்சே ஆகணும். நான் கதை எழுதறது ரொம்ப ஸ்லொ ஆகிடிச்சுன்னு தான் திரும்ப மன்த்லி கமிட் ஆகிட்டேன். அட்லீஸ்ட் அப்போவாவது எழுதுவேன்னு.

நிறைய திட்டு விழுது எல்லாம் பாதில ன்னு, கண்டிப்பா முடிச்சிடுவேன். இந்த வருஷத்துக்குள்ள நீங்காத ரீங்காரம், சர்வம் சக்தி மாயம் அண்ட் இன்னொரு புது குறு நாவல்..

கண்டிப்பா முடிக்கணும்னு நினைச்சிருக்கேன் கால நேரம் ஒத்துழைக்கணும், அதுவரைக்கு எத்தனை திட்டினாலும் வாங்க கடமை பட்டு இருக்கேன். ஆனா அதுக்காக இதை விட என்னால வேகமா எழுத முடியாது. சோ சாரி,

ஒரு பொண்ணு என்னை ரொம்பவும் பேசினது, என்ன ஆன்லைன் ல படிச்சா உங்க இஷ்டமா, கொஞ்சம் கூட உங்களுக்கு பொறுப்பு வேண்டாமா எல்லா கதையையும் அப்படியே விட்டுட்டு போவீங்களா இப்போ புதுசு ஆரம்பிப்பீங்களா that this ன்னு, அவங்க என் கதை படிக்கற ஆர்வத்துல பேசினாலும்..

மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது..

அவங்க பேசிட்டாங்க.. நிறைய பேர் மனசுல நினைக்கலாம்..

சோ அவங்களுக்காக இந்த விளக்கம்..

இங்க எத்தனை பேருக்கு என்னை பத்தி தெரியும்னு தெரியாது, முதல்ல என்னை பத்தி சொல்லிக்கறேன்..

நான் ஒரு அம்மா இரண்டு பையன்களுக்கு.. எங்களோடது கூட்டு குடும்பம் எங்க பக்கத்துல தான் என் அப்பா அம்மா பாட்டி இருக்காங்க, நான் வேலைக்கு போறேன்.. phd படிக்கறேன் இது தான் என்னோட இரண்டாவது வருடம்..

என் பெரியவன் இப்போ தான் காலேஜ் போனான் , என் சின்னவன் பத்தாவது இப்போ தான் போறான்.

பசங்க நம்மோட முதல் பிரியாரிட்டி இல்லையா.. சோ அவனோட படிப்புக்காக நான் அவனோட அவன் ஸ்கூல் கிட்ட வீடு பார்த்து போயிட்டேன் அவனும் நானும் மட்டும். சின்னவன் இங்க அப்பாவோட.. அப்போ என்னோட வேலைக்கான travel டைம் மட்டும் கிட்ட தட்ட மூணு மணிநேரம் மேல.. இதுல நான் மட்டும் தான் அங்கே ஹெல்ப் க்கு யாரும் கிடையாது.. சோ cooking washing cleaning எல்லாம் நான் தான்.

இப்படி இருக்கும் போது என்னால கதை எப்படி எழுத முடியும்

ஆனாலும் writing என்னோட passion, என்னால விடவே முடியாது.. எழுதினேன்.

என் பையன் டைம் க்கு அட்ஜஸ்ட் செஞ்சு.. அவன் ப்ளஸ் டூ க்கு படிக்கணும் கூடவே neet க்கு , ரொம்ப கஷ்டம் பசங்களுக்கு, பட் நான் இப்போ ஒரு proud mother தான். அவனுக்கு MBBS சீட் மெரிட் லயே கிடைச்சிடுச்சு in karur goverment மெடிக்கல் காலேஜ்..

இப்போ தான் திரும்ப வீட்டுக்கு வந்து செட்டில் ஆகியிருக்கேன்.. எந்த வேலையை பின்ன தள்ளுவேன்... கண்டிப்பா வீட்ல சமைக்கணும், என் சின்னவன் இப்போ டென்த் அவனோட அவன் படிக்கும் போது இருக்கணும் வேலைக்கு போகணும் அங்க உள்ள வேலைகளை பார்க்கணும், நான் ஒரு assoc prof, எனக்கு எழுதறது போலவே teaching அதுவும் ஒரு passion, அதுல எந்த காம்ப்ரமைசும் பண்ண முடியாது, இங்க வீட்ல என் in laws, my parents, my grand maa, இவங்களை பார்க்கணும், படிக்கணும் அண்ட் research work பண்ணனும் phd க்கு..

இதுல பெரிய draw back நான் ஒரு ம்யுசியம் பீஸ் தான், அவ்வளவு ஹெல்த் issues, ஆனா நான் அதை mind பண்ண மாட்டேன் என்னோட health issues காரணமா எந்த வேலையும் நிக்காது..

என்னோட ஃபிரன்ட் டாக்டர் அவ சொல்லுவா, என்ன அக்கா நீங்க இப்படி பண்றீங்க நான் போய் சைட் லயே போடறேன் பாருங்க ன்னு சொல்லுவா,

போன வருஷம் அப்படி தான் ஆனது , ஐ வாஸ் அபௌட் டு collapse, வாஸ் சோ critical, அதுல இருந்து வந்துட்டேன்.. இப்போ மேனேஜ் பண்ணிக்கறேன்.. என்னோட ஹெல்த் issues அப்படியே தான் இருக்கும் , i learn to live with that,

சோ இப்படி எல்லாம் மேனேஜ் செஞ்சு தான் எழுதறேன்..

அதனால் என்னோட இந்த தாமதங்கள் தவிர்க்க முடியாதவை.. வேணும்னு இல்லை.. எத்தனை வேலை இருந்தாலும் எழுதலைன்னா எந்த வேலையும் செய்யாத பீல் தான் எனக்கு.. இதுக்கு நடுவுல நான் எழுதும் போது நான் தியாகம் பண்றது என்னோட தூக்கத்தை.. என்னோட ஒய்வு எடுக்கும் நேரங்கள்..

யாரோடையும் பேசறது கிடையாது , பதில் குடுக்கறது கிடையாது.. அதுக்கு எல்லாம் please அண்ட் sorry thaan. டோன்ட் mistake me, என் கிட்ட நேரம் கிடையாது. மத்தபடி யாருக்கு பதில் சொல்லக் கூடாதுன்னு எல்லாம் கிடையாது.

என்னடா இவங்க பதில் கூட சொல்ல மாட்டேங்கறாங்க ன்னு யாரும் தப்பா எடுக்க வேண்டாம்.. நீங்க எல்லாம் தான் என்னோட driving force நான் எழுத, நீங்க , உங்க எதிர்பார்ப்பு இல்லைன்னா என்னால எழுத முடியாது.

கொஞ்சம் தனிமை விரும்பி ஆகிட்டேன் அப்போ தான் என்னால எழுத முடியுது.. என்னை பொறுத்தவரை எழுதறது ஒரு தவம் தான். அது எத்தனை பேர் ஒத்துக்குவாங்கன்னு தெரியலை..

ஆனா இதுக்கு மேல ஸ்பீட் எனக்கு கொண்டு வர முடியாது. இதுவே ஸ்பீட் தான்.

இதுல உரிமையா கேட்கலாம் ஏன் இன்னும் அப்டேட் வரலைன்னு, ஆனா உங்களுக்கு கொஞ்சமும் பொறுப்பில்லையா ன்னு கேட்டா என்ன சொல்ல,

சோ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க, கதையை கண்டிப்பா முடிப்பேன், ஆன்லைன் ல கண்டிப்பா வரும் நிறுத்த மாட்டேன்,

அதனால் கதை வரலையா எனக்கான காரணங்கள் இருக்கும், ஒரு ஒரு தரமும் அதை சொல்ல கஷ்டமா இருக்கு, சோ லேட் டா வந்தா புரிஞ்சிக்கங்க i am held up ன்னு, காரணம் சொல்ல எனக்கு பிடிக்கறது இல்லை.. என்னை புரிஞ்சிக்குவீங்கன்னு நினைக்கிறேன்..

என்னோட writing carrier ல என்னோட own plans இருக்கும் அதுக்கும் நான் shape கொடுக்கணும்.. நடுவில சைட் பார்க்கணும்.. அதையும் நான் மேல அடுத்த ஸ்டெப் க்கு கொண்டு போகணும்..

இப்படி எத்தனையோ இருக்கு..

என்னோடது ரொம்பவுமே பரபரப்பான வாழ்க்கை, எந்த அளவுக்குன்னா என் கணவர் , என் பசங்க , இவங்க போன் பண்ணினா கூட வேலையா இருக்கியா பேசட்டுமா கேட்டு தான் பேசுவாங்க, வீட்லயும் நான் எழுதினா, மெதுவா வந்து மா ன்னு நிற்பான், இருடா இதை முடிச்சிட்டு வந்துடறேன் ன்னு தான் சொல்வேன்.. இப்படி தான் போகுது..

ஆனா இந்த வாழ்க்கை முறை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, என்னால சோம்பி உட்கார முடியலை , கொஞ்சம் நேரம் ரெஸ்ட் டா உட்கார்ந்தா கூட எனக்கு டைம் வேஸ்ட் பண்ற பீல் தான்..

எனக்கு உதவ இந்த எழுத்துலக பயணத்துல சில நல்ல உள்ளங்கள் இருக்காங்க நேரம் காலம் பார்க்காம எந்த எதிர்பார்ப்பும் இல்லாம என்னோட நட்புக்காக மட்டுமே உதவ,

பிரியங்கா இல்லன்னா பப்ளிகேஷன் possible கிடையாது site tum அவங்களால தான்.. எந்த நேரம் வேணும்னாலும் என்னால அவங்களை டிஸ்டர்ப் பண்ண முடியும்.. இதை செஞ்சிடுங்கப்பா எனக்கு தூக்கம் வருது, இந்த வேலை இருக்கு இப்படி சொல்ல முடியும்.. அவங்க முடிச்சிடுவாங்க.. அவங்க வேலை இருந்தாலும் அதை நிறுத்திட்டு இதை செய்வாங்க..

ஹமீ அண்ட் சரயு இல்லைன்னா சைட் maintain பண்ண எனக்கு ரொம்ப சிரமம்.. புல் டைம் அவங்க ரெண்டு பேரும் என்னோட...

எந்த நேரமும் அவங்களை டிஸ்டர்ப் பண்ணுவேன், அதுவும் ஹமீ, நீங்க தூங்குங்க MM நான் பார்த்துக்கறேன் சொல்லுவாங்க, எனக்கு ஆச்சர்யமா இருக்கும் எப்படி இப்படி ன்னு, நான் அவங்களுக்கு பதில் கொடுக்கற விதத்திலேயே என் மூட் நல்லா இருக்கா இல்லையா எனக்கு உடம்பு சரியில்லையா கண்டு பிடிப்பாங்க..

அது புரிஞ்சிக்கிட்டு தான் என்கிட்டே பேசவே செய்வாங்க.. நான் பேசற மூட் ல இல்லைன்னு புரிஞ்சா.. நீங்க பாருங்க MM நாம அப்புறம் பேசலாம் போய்டுவாங்க..

she does most of the works for me, she plans more than me for my success in this online world..

இப்படிப்பட்ட நட்புக்கள் கிடைக்கறது அபூர்வம்..

எதுவா இருந்தாலும் என்னவா இருந்தாலும் தாமதம் மட்டுமே என் எழுத்து நிற்காது..

எல்லாவற்றிற்கும் மேல நான் ஒரு மணிக்கு precap போட்டா கூட நான் தான் ன்னு ஓடி வர்ற என்னோட வாசக தோழமைகள் அவங்க இல்லைன்னா எதுவுமே முடியாது.. எப்பவும் நான் அவங்களுக்கு தலைவணங்குறேன். அவங்க தான் எத்தனை இடர் வந்தாலும் விடாம எழுத வைக்கறாங்க.. சோ பதில் கொடுக்கறதைல்லைன்னு யாரும் கோபிக்காதீங்க, என்னோட நெருங்க நட்புக்கள் பலர் கூட சொல்றது நீ முன்ன மாதிரி பேசறதில்லைன்னு..

நிஜம்... நேரமும் இல்லை... மூடும் இல்லை.. என்னை புரிந்து.. என்னோடு, என் கதைகளோடு... பயணிப்பீராக..

இப்போ நீ என்பது யாதெனில் படிங்க..

as always thank you for the wonderful support and encouragement.. without you my writing is not possible,


P17 Nee Enbathu Yaathenil


:love::love::love::love:

 

Manimegalai

Well-Known Member
:love:
ரொம்ப நன்றி சிஸ்
இனிய அதிர்ச்சி:love::love::love::love:
நீங்க விளக்கம் தரனும்னு இல்ல
ஆனால் உங்களை பத்தி
குடும்பத்தில் உள்ளவங்க பத்தி எல்லாம் சொன்னது
ஒரு நெருக்கத்தை தருது...
10 கைகள் வேணும் போல
இவ்வளவு வேலைக்கு நடுவில்
கதை வருவதே ரொம்ப மகிழ்ச்சி.
எப்பவும் உங்க கதையோடு மட்டுமே அதிக தொடர்பு.
அதான் வரலைனா வருத்தம்.
சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்.
உங்களை நல்லா பார்த்துக்கோங்க.
நன்றி சிஸ்.
 
Last edited:

fathima.ar

Well-Known Member
எப்படி உங்களுக்கு எழுதுறது passion oh..
உங்க கதைகளை படிக்கிறது எங்களுக்கு passion ஆகிடுச்சு...
எந்த அளவுக்குனா..
வச்சிருந்த மருதாணியை கழுவிட்டு வந்து ரிப்ளை போட்ற அளவு...

Honesty on your story we like the most..
Thanks for sharing...
Sorry சொன்னா கஷ்டமா இருக்கு..
Information ,மட்டும் கொடுங்க போதும்...

Happy for kathir...
கதைகள்ல 25+ doctors உருவாக்குனது இல்லாமல்..
கூடவே ஒரு டாக்டர் உருவாக்கிட்டு வரிங்க..
Hats off...

Stay healthy Malli...
 

Hema27

Well-Known Member
Happy for your son malli...
இன்னும் 5வருடத்தில் " I don't mind my health issue " னு நீங்க சொல்ல முடியாது, தேவையும் இருக்காது.
வீட்டிலயே ஒரு டாக்டர் இருப்பார்.

இவ்வளவு justification not needed...
We will understand..
Pls take care of your health
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top