Ramya Rajan
Well-Known Member
இரவு உணவுக்கு பிறகு, “உன் அத்தை இன்னைக்கு போன் பண்ணி அம்மாகிட்ட பேசி இருக்கா. ரெண்டு நாள் உங்களை அங்க அனுப்பி வைக்க சொன்னாளாம். நீயும் வெண்ணிலாவும் இந்த வாரம் சனி ஞாயிறு அங்க போயிட்டு வந்திடுங்க.” என ஜெயராமன் ஒரு குண்டைப் போட...
“அதெல்லாம் முடியாது.” என்ற பதில் ஜெய்யிடம் இருந்து வேகமாக வர... மொத்த குடும்பமும் அவனைத் தான் பார்த்தது.
“ஏன்?” என்ற தந்தையின் கேள்விக்கு, சட்டென்று என்ன காரணம் சொல்வது என தெரியாமல்.
“நாங்க ஊட்டிக்கு போறோம்.” என்றான்.
“ஓ... சரி அப்ப போயிட்டு வந்து. அப்புறம் ஒருநாள் உங்க அத்தை வீட்டுக்கு போங்க.” என ஜெயராமன் முடித்துக் கொண்டார்.
ஹனிமூன் போக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஜெய்க்கு இல்லை. எதோ வாயில் வந்த காரணத்தை சொல்லி இருந்தான். தந்தை மறுக்காமல் சரியென்றதும், போய் விட்டு வரலாமே என தோன்றி விட... அப்போதே உட்கார்ந்து அறை பதிவு செய்தான்.
*******************************************************************************************************
“அண்ணா, நீ சாப்பிடலை நல்லா இருக்கு.” என்ற சத்யாவிடம், “இதையும் சாப்பிடு.” என கொடுத்து விட... வெண்ணிலாவின் முகம் வாடி விட்டது.
தான் முதல் முதலாக ஒன்று செய்து கணவன் உண்ணவில்லை என்ற வருத்தம். அவளைக் கவனித்த ஜெய், டீ குடித்தபடி அவள் அருகில் சென்று உட்கார்ந்தவன், “என்ன?” என்றான்.
“ஏன் நல்லா இல்லையா? நீங்க ஏன் சாப்பிடலை?” என அவள் கேட்க,
“அங்கப் பாரு உங்க மாமாங்க ரெண்டு பேரும் ரசிச்சு சாப்பிடுறாங்களே போதாதா...” என்றான்.
ஜெயராமனும், சந்திரனும் பிரட்டை பியித்து தக்காளி சாஸில் தொட்டு, எதோ தோசையை போல உண்டவர்கள், “மருமக செஞ்சது நல்லா இருக்கு.” என்று வேறு சொல்ல... வெண்ணிலாவின் முகத்தை பார்த்து ஜெய்கு சிரிப்பாக வந்தது.
“இதுக்கு மேல என்ன வேணும் உனக்கு.” என ஜெய் கேட்க, வெண்ணிலா அவனை முறைத்தவள், எனக்கும் வேண்டாம் என தட்டை மேஜையில் வைக்க...
“ரொம்ப பிடிவாதம்.” என்றவன், அவளுடையதில் பாதி உண்டு விட்டு மீதியை வெண்ணிலாவிடம் கொடுக்க...
“நல்லா இருக்கா...” என கேட்டபடி வெண்ணிலா மீதியை உண்டாள். இவர்கள் இருவரும் டைனிங் ஹாலில் இருக்க.. மற்றவர்கள் ஹாலில் இருந்தனர்.
*****************************************************************************************************
“சாப்பிட கூடாதுன்னு எல்லாம் இல்லை. வீட்ல நாங்க நிறைய பேர். வீட்ல தான் கடலை சுண்டல்ன்னு எதாவது பண்ணுவாங்க. எப்போவோ தான் வெளியே வாங்குவோம். அகல்யா, ராதிகா, சத்யா எல்லாம் என்னை விட ரொம்ப சின்னவங்க. அவங்க தான் இதெல்லாம் சாப்பிட ரொம்ப ஆசைப்படுவாங்க. அதனால நான் எப்பவுமே ஆர்வமா இதெல்லாம் சாப்பிட மாட்டேன். அது அப்படியே பழகிடுச்சு.”
எப்போதுமே ஜெய் ஆர்வமாக உண்டு வெண்ணிலா பார்த்ததே இல்லை. அவன் பசிக்கு தான் உண்ணுவான். ருசிக்கு உண்பவன் அல்ல... அவன் உயரத்திற்கு ஆள் மெலிவு தான்.
“இப்ப எல்லாம் வளர்ந்துட்டாங்க. அதுவும் இப்ப தாராளமா இருக்கு. நீங்க ஒன்னும் உங்களோடது தியாகம் பண்ண வேண்டாம். கொடுக்கிறதை ஒழுங்கா சாப்பிடுங்க.” மனைவியின் மிரட்டல் கூட ஜெய்க்கு அழகாக தெரிந்தது.
தன் மேல் இருக்கும் அன்பிலும் அக்கரையிலும் தானே சொல்கிறாள் என்பதில் மகிழ்ச்சி உண்டானது. உடளவில் இன்னும் அவன் மனைவி ஆகவில்லைதான். ஆனால் மனதளவில் அவன் மனைவியாக தான் இருக்கிறாள் என புரிந்தது.
“அதெல்லாம் முடியாது.” என்ற பதில் ஜெய்யிடம் இருந்து வேகமாக வர... மொத்த குடும்பமும் அவனைத் தான் பார்த்தது.
“ஏன்?” என்ற தந்தையின் கேள்விக்கு, சட்டென்று என்ன காரணம் சொல்வது என தெரியாமல்.
“நாங்க ஊட்டிக்கு போறோம்.” என்றான்.
“ஓ... சரி அப்ப போயிட்டு வந்து. அப்புறம் ஒருநாள் உங்க அத்தை வீட்டுக்கு போங்க.” என ஜெயராமன் முடித்துக் கொண்டார்.
ஹனிமூன் போக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஜெய்க்கு இல்லை. எதோ வாயில் வந்த காரணத்தை சொல்லி இருந்தான். தந்தை மறுக்காமல் சரியென்றதும், போய் விட்டு வரலாமே என தோன்றி விட... அப்போதே உட்கார்ந்து அறை பதிவு செய்தான்.
*******************************************************************************************************
“அண்ணா, நீ சாப்பிடலை நல்லா இருக்கு.” என்ற சத்யாவிடம், “இதையும் சாப்பிடு.” என கொடுத்து விட... வெண்ணிலாவின் முகம் வாடி விட்டது.
தான் முதல் முதலாக ஒன்று செய்து கணவன் உண்ணவில்லை என்ற வருத்தம். அவளைக் கவனித்த ஜெய், டீ குடித்தபடி அவள் அருகில் சென்று உட்கார்ந்தவன், “என்ன?” என்றான்.
“ஏன் நல்லா இல்லையா? நீங்க ஏன் சாப்பிடலை?” என அவள் கேட்க,
“அங்கப் பாரு உங்க மாமாங்க ரெண்டு பேரும் ரசிச்சு சாப்பிடுறாங்களே போதாதா...” என்றான்.
ஜெயராமனும், சந்திரனும் பிரட்டை பியித்து தக்காளி சாஸில் தொட்டு, எதோ தோசையை போல உண்டவர்கள், “மருமக செஞ்சது நல்லா இருக்கு.” என்று வேறு சொல்ல... வெண்ணிலாவின் முகத்தை பார்த்து ஜெய்கு சிரிப்பாக வந்தது.
“இதுக்கு மேல என்ன வேணும் உனக்கு.” என ஜெய் கேட்க, வெண்ணிலா அவனை முறைத்தவள், எனக்கும் வேண்டாம் என தட்டை மேஜையில் வைக்க...
“ரொம்ப பிடிவாதம்.” என்றவன், அவளுடையதில் பாதி உண்டு விட்டு மீதியை வெண்ணிலாவிடம் கொடுக்க...
“நல்லா இருக்கா...” என கேட்டபடி வெண்ணிலா மீதியை உண்டாள். இவர்கள் இருவரும் டைனிங் ஹாலில் இருக்க.. மற்றவர்கள் ஹாலில் இருந்தனர்.
*****************************************************************************************************
“சாப்பிட கூடாதுன்னு எல்லாம் இல்லை. வீட்ல நாங்க நிறைய பேர். வீட்ல தான் கடலை சுண்டல்ன்னு எதாவது பண்ணுவாங்க. எப்போவோ தான் வெளியே வாங்குவோம். அகல்யா, ராதிகா, சத்யா எல்லாம் என்னை விட ரொம்ப சின்னவங்க. அவங்க தான் இதெல்லாம் சாப்பிட ரொம்ப ஆசைப்படுவாங்க. அதனால நான் எப்பவுமே ஆர்வமா இதெல்லாம் சாப்பிட மாட்டேன். அது அப்படியே பழகிடுச்சு.”
எப்போதுமே ஜெய் ஆர்வமாக உண்டு வெண்ணிலா பார்த்ததே இல்லை. அவன் பசிக்கு தான் உண்ணுவான். ருசிக்கு உண்பவன் அல்ல... அவன் உயரத்திற்கு ஆள் மெலிவு தான்.
“இப்ப எல்லாம் வளர்ந்துட்டாங்க. அதுவும் இப்ப தாராளமா இருக்கு. நீங்க ஒன்னும் உங்களோடது தியாகம் பண்ண வேண்டாம். கொடுக்கிறதை ஒழுங்கா சாப்பிடுங்க.” மனைவியின் மிரட்டல் கூட ஜெய்க்கு அழகாக தெரிந்தது.
தன் மேல் இருக்கும் அன்பிலும் அக்கரையிலும் தானே சொல்கிறாள் என்பதில் மகிழ்ச்சி உண்டானது. உடளவில் இன்னும் அவன் மனைவி ஆகவில்லைதான். ஆனால் மனதளவில் அவன் மனைவியாக தான் இருக்கிறாள் என புரிந்தது.