Moonlight Kadhal Episode 5(part 1)

Advertisement

Mers

Writers Team
Tamil Novel Writer
Moonlight Kadhal Episode 5



ஹே பேபி என்று மேகியை இருக கட்டிக்கொண்டான் நம்ம ஐசு ...

அவளும் அன்னு எப்படி டா இருக்க . ஐ missed யு சோ மச் என்று சொல்லிக் கட்டிக் கொண்டாள் .



அப்பொழுது அங்கே வந்த சுந்தரம் இக்காட்சியைக் கண்டுக் கொண்டான் . இவனுக்கு வெவஸ்த்தையே இல்ல காலங் காத்தலே வந்த உடனே அதுவும் நாடு ஹால்ல இப்படியா ஆண்டவனே !!! என்று தலையில் அடித்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்



சுந்தரம் அப்பொழுது தான் உள்ளே நுழைந்தான் . இன்று அவனுக்கே உரிய நாள் அதான் காலையில் கோயில் சென்று கிடைத்த சக்கரை பொங்கல் பிரசாதத்தை மேகிக்கு குடுக்கலாம் என்று எடுத்து வந்தான் . ஆனால் அவன் கண்ட காட்சியில் பிபி ,சுகர் சால்ட் எல்லாம் ஏகத்துக்கும் ஏகிரி விட்டது .



என்ன நெனச்சுருக்கான் இந்த அருண் பய கேக்க ஆள் இல்லனா. வகுந்துருவே வந்து . நாங்கெல்லா திருநெல்வேலி சீமையின் தொண்டு தொட்ட வாரிசு . பேச்சு இல்லடி ஒரே வீச்சு தான் என்று நினைத்து க்கொண்டே உள்ளே போலாமா வேண்டாமா எப்புடியும் வெளிய வந்துதாண்டி ஆகணும் அப்போ இருக்கு .



சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் அவன் வெளியே வந்த வழியைக் காணோம் . டேய் பிலைட் லேண்ட் ஆன உ டனே வீட்டுக்கு போனோமா அம்மை கையாள சோறு தின்னோமா இல்லாம . இவனை என்ன பண்றது . சேரி இன்னும் அரை மணி நேரம் பாக்கலாம் அப்ரோ உள்ள போய்ட வேண்டியது தான் .





அங்கே மேகியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் . என்ன அம்மு இப்புடி இளைத்துட்டே நான் போன ரெண்டு வர்ஷத்துக்குள்ள இப்டி ஒல்லி பெல்லி ஆகிட்ட ... 90 பிளஸ் கிலோ இருந்தவ மாதிரியா இருக்க . டோடல்லி சேஞ்ட் .





அதற்க்கு அவள் புன்முறுவலுடன் இனிமே என்ன யாரும் என் தோற்றத்தை பார்த்து வெறுத்துற கூடாது என்கிறதுக்கு தான் . அதுமில்லாம இப்போ ஐ பீல் சோ லைட்



நீ இன்னும் அவனை தான் நெனச்சுட்டு இருக்கியா . அவன் தான் உன்ன வேண்டான்னு சொல்லிட்டான் இல்ல அப்புரோ ஏன் இப்புடி . அவனுக்கு சமமா இருக்கணும்னு உடம்ப கம்மி பண்ணிருக்கே . உனக்கே இது முட்டாள் தனமா தெரியல . அவன் உனக்கு ஒர்த் இல்ல போயும் போயும் அவனுக்காக ச்சை என்று அவன் சொல்லுவதுற்குள்



அன்னு ஸ்டாப் இட் . என்று சீறினாள்





உனக்குத் தெரியுமா அவனுக்காக தான் நான் குறைச்சேன்னு உனக்கு தெரியுமா சொல்லு தெரியுமா என்று கத்தினாள்



அவ்வளவு நேரம் அவள் நாற்காலியிழும் இவன் கதவின் பக்கவாட்டில் இருந்த பீன் சோஃபாவிலும் உக்கார்ந்து இருந்தவன் அவள் பக்கம் வந்து அவள் முன் மண்டியிட்டு அவள் தாடையை நிமிர்த்தி என் கண்ண பார்த்து சொல்லு என்று கூறினான்



அவளோ என்னடா என்ன பார்த்து சொல்லு என் கண்ணை பார்த்து சொல்லுனு பட வசனம் பேசுற . திருநெல்வேலி பூர்வீகம்னு நிரூபிக்கிறீயா



ஷட் அப் என்று கத்தினான் . அவளோ அவனின் பேச்சை மாற்றுவதற்கு முயன்றாள் என்றால் அவனோ அவளின் பதிலை கேட்டு ஆத்திரம் கொண்டான்



அவனின் கத்தலில் அவளின் முகம் வருத்தத்தில் கூம்பி போய்விட்டது.



சொல்லு அம்மு . என்னிடம் எதையும் மறைக்காதே இத்தனை வருஷ பழக்கத்துக்காவது நீ எனக்கு சொல்லணும் . பிகாஸ் யு ஆர் ஆன்சரபில் டு மீ ஒன்லி மீ . யு காட் இட் ??



அவள் மெதுவாய் தலை நிமிர்ந்து ஆழ மூச்சிழுத்து .



அவள் அறையின் வெளியே பால்கனியில் உள்ள ஊஞ்சல் மீது அமர்ந்தாள் .



இவன் அவள் பின்னே சென்று அவள் பக்கமாய் அமர்ந்து அவள் கையை தன் கைகளுக்குள் பொதித்து வைத்துக் கொண்டான்



அவளும் அவன் தோள்களில் சாய்ந்துக் கொண்டாள் . அப்புடியே அமைதியாய் இருந்தாள் நேரம் தான் சென்று கொண்டிருந்தது அவள் வாய் திறந்த பாட்டை காணும்



என்னனு சொன்னா தானே தெரியும் என்று அவன் சொல்லவும் கதறிவிட்டாள் . ஓ வென்று கதறிவிட்டாள் . என்னால முடியல டா நான் ஸ்ட்ராங் பேர்சன்னு நெனச்சன் பட் ஐ அம் நா ட் சோ .. என்று சொல்லி மீண்டும் மீண்டும் அழுதாள் .



இது வேலைக்காகாது என்று எண்ணி நான் இப்போவே ரிச்சிக்கு கூப்புடுறே . அவனாலதான எல்லாம் . என்று அவன் அலைபேசியை எடுத்து அவன் எண்ணிற்கு அழைக்க போக அவளே நான் சொல்றேன் அவனை டிஸ்டர்ப் பண்ணாதே இப்போதான் நைட் ஷிபிட் பாத்துட்டு தூங்கிருப்பான் . கத்தார்ல இப்போ தா 5 ஓ கிளாக் அன்னு என்று சோகமாய் சொல்லி அவனை நோக்கினாள்





அவன் உன்னை வேண்டான்னு சொல்லியும் உன்ன அவன் யுஸ் பண்றான்னு நான் சொன்னத கூட கேக்காம அவன்கூட பேசுனதான இப்பவும் அவனுக்கு தான் நீ சப்போர்ட் பண்றே.நீ எல்லாம் திருந்த மாட்டே .



அவன் எனக்கு உண்மையா தான் இருந்தான் . இப்பவும் எப்பவும் என் மனசுல இருப்பான். என் வாழ்க்கைல இல்லாம போகலாம் . இப்பவும் நான் தான் அவனை விளக்கி வச்சிருக்கேன் . அவன் இல்ல . எனக்குத் தெரியும் அவனை பத்தி என்று சொல்லிக் கொண்டிருந்தவளை பரிதாபமாக பார்த்தான்



கலெக்டர் பதிவில இருக்குறவங்க காதலிக்க மாட்டாங்களா இல்ல அவங்களுக்கு காதல் தோல்விதான் இல்லாம போகுமா . அதுக்கு அத்தாச்சியாய் இதோ அவள் அம்மு இருக்காளே பிறகென்னே



சிறிது நேர மௌனத்திற்கு பிறகு அவள் கடந்த இரண்டு வருட காலங்கள் நடந்த எல்லாவற்றையும் சொன்ன்னாள் . அவள் என்ன செய்கிறாள் என்று அவனுக்கு தெரிந்து விடும் அசோக் டிடெக்ட்டிவ் ஏஜென்ட்டி டம் தான் அந்த பொறுப்பை குடுத்தான் . அவனும் சொல்வான் தான் வெளியில் அவளுக்கு நடப்பவை தெரியும் . அப் டு டேட் அவனுக்கு செய்திகள் போய்விடும் புகைப்படத்துடன் .



ஆனால் அவள் மனக்குமுறல்கள் அவளின் தொலைபேசி உரையாடல்கள் அவன் அறியவில்லை என்பதை விட அறிய முற்பட வில்லை .அவன் நினைத்திருந்தால் அதையும் செய்துருக்க முடியும் ஆயிரம் தான் இருந்தாலும் அது அவளுடைய பெர்சனல் ஸ்பேஸ் .என்று ஒதுக்கி விட்டான்



அவளின் உடல் எடை குறைப்புக் கூட அவளின் உடல் ஆரோக்யத்துக்கென்று நினைத்தவன் அவளின் தகப்பனா ர் சொன்ன செய்திகள் வைத்து கண்டிப்பாக அதற்காக இருக்காது என்று முடிவெடுத்தான் அதனால் தான் அவன் நேரே விஷயத்திற்கு வந்தது

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்தவை எல்லாம் அவனிடம் ஒப்புவித்தாள் சிறு குழந்தைபோல் .

அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை . அவள் தலையை வருடி கொடுத்துக்கொண்டிருந்தான்



சுந்தரம் பொறுமை இழந்து உள்ளே வந்து ஹாலில் பார்த்தான் யாருமே இல்லை . ஒரு வேளை வெளிய பொய்ற்பங்களோ என்று கார்டநில் தேடினான்



அங்கே அவன் கண்டா காட்சி அவனை அப்புடியே ஸ்தம்பிக்க வைத்தது . மேகி அக்கா அந்த வீனா போனவன் தோள் மேலையா சாஞ்சிட்டு இருக்காங்க . அப்போ இவந்தா அவங்க லவ் பண்ணவனா . ஆனா அப்புடி தெ ரிலேயே .. போயும் போயும் இவனா நெனச்சாலே நாராசமா இருக்கு . இருக்காது இருக்காது . இவன் அக்காக்கு ஒர்த்தே இல்ல

இவன கொன்னாலும் என் ஆத்திரம் தீராது ஜெர்மனில இருந்தவன் அங்கேயே இருக்க வேண்டியது தானே எவன் அவனை இங்க வர சொன்னது மங்கூஸ் மண்டையன் . பேபி பேபி னு உருகுறான் . இருடா ஐஸ் கிரீமு உன்ன உருக வைக்கிறேன்



மேகி தேம்பிக்கொண்டே இருந்தாள் .இவளை எப்புடி வழிக்கு கொண்டு வரதுன்னு முழித்துக் கொண்டு இருந்தவன் சிறிது நேரத்துக்குப் பின் யோசித்தவனாய் ரொம்ப நாளாய் என் மனசில பூட்டி வச்ச என் காதலை உன்கிட்ட சொல்லலாமுன்னு இருக்கேன் அம்மு .



என்ன நீ புரிஞ்சுப்பல்லே . உன்ன விட்ட வேற யாரும் இல்ல டா . என்று ஏக்கத்தோடு சொன்னான் அருண்



இவன் என்ன சொல்ல வரான் என்று யோசித்தவாரே . சொல்லு டா ஏங்கிட்ட என்ன தயக்கம் என்று மேகி சொன்னது தான் தாமதம்



நாம ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது .வி க்நொவ் ஈச் அதர் போர் எ வெரி லாங் டைம் . வி வுட் மேக் எ குட் கப்பில் . வாட் டூ யு சே என்று கேட்டான்



உலகமே தட்டாமலை சுற்றுவது போல் இருந்தது மேகிக்கு ... இவன் உண்மையா தான் சொல்றானா இல்ல விளையாடுறானா என்று அவன் முகத்தை கூர்ந்து கவனித்தாள்



அவன் கூறுவது உண்மையே என்று அடுத்து செய்த செயல் இருந்தது



அவன் மண்டியிட்டு அவள் முன் அழகான வைர மோதிரம் கொண்ட சிறு நகை பெட்டியை நீட்டி "வில் யு மேர்ர்ரி மீ " என்று சிரித்த முகத்துடனே கேட்டான் அருண்



மேகியோ விக்கித்து போய்விட்டாள் . அவள் அவனை உற்ற தோழன் தன் தாய்க்கு நிகரானவன் தனக்காக எதுவும் செய்பவன் என்று நினைத்திருக்க இப்புடி ஒரு முடிவு அவள் எதிர்பார்க்காதது .

வார்த்தைகளற்ற நிலையில் இருந்தாள் அவள்

இதை தூரத்தில் இருந்து பார்த்த சுந்தரத்திற்கு அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சியாகவும் பார்த்ததை நம்ப முடியாததாகவும் இருந்தது .



பிறகு இவ்வளோ நாள் அக்கா என்று அழைத்து வந்தவளை அண்ணி என்று கூப்பிடும் பாக்கியம் அவனுக்கு கிடைக்க போகுதல்லவா.....

அண்ணி என்று அழைத்து பார்த்தான் உள்நாக்கு வரை தித்தித்தது ...


to be continued .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top