காதல் செய்வேன் கட்டளைப்படி..
காதல் 1
“எல்லாம் எடுத்துகிட்டியா? பிரஷ், பேஸ்ட், சோப்பு, டவல். எதையும் மறக்கலையே?” தாயின் குரலுக்கு பதில் அளிக்காமல் போனை நோண்டிக் கொண்டிருந்தாள் குகப்ரியா..
“குகா.. உன்னை தான் கேக்குறேன்.. பதில் சொல்லாம போனையே பார்த்துகிட்டு இருந்தா என்ன அர்த்தம்..”
“ஒரே கேள்விய எத்தனை தடவை கேட்பீங்க? நானும் பதில் சொல்லி சொல்லி டயர்ட் ஆகிட்டேன்.. அயம் ட்வென்டி த்ரீ.. டோன்ட் ட்ரீட் மீ லைக் அ சைல்ட்மா..” குரலில் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது..
“எதையும் மறந்திட போறேன்னு தான் திரும்ப திரும்ப கேக்குறேன்.. அது உனக்கு எரிச்சலா தான் வரும்.. அங்க போயிட்டு அதை வெச்சுட்டேன் இதை வெச்சுட்டேன்னு போன் பண்ணுவ இல்ல, அப்போ இருக்கு உனக்கு..” தாயின் கண்டிப்பில் மேலும் கடுப்பான குகா
“ஒரு தடவை மறந்ததை எத்தனை முறை சொல்லிக் காமிப்பீங்க?” என்றாள்
“ஒரு தடவைனாலும் மறந்த தானே..” அவரும் விடாது கூறினார்..
“ஆளை விடுங்க.. நான் கிளம்புறேன்..” என்றவள் தனது பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்..
“கிப்ட் எடுத்துகிட்ட தானே?” என்று மறுபடியும் குகாவின் தாய் ஆரம்பிக்கவும்..
“அம்மா உள்ள போங்க.. கடுப்பேத்தாம.. கிப்ட் அகல்யாகிட்ட இருக்குன்னு பத்து தடவை சொல்லிருப்பேன்..” கடுகடுத்தவாறே அடுத்த தெருவில் இருந்த அகல்யாவின் வீட்டிற்குச் சென்றாள் குகப்ரியா..
வீட்டிற்குள் நுழையும் போதே “அத்தை..” என்று கத்திக் கொண்டே சென்றாள்.. அவளை வரவேற்றார் அகல்யாவின் தாய்.
“வா குகா.. எப்படி இருக்க? இளைச்சு போயிட்ட..”
“வேலை அத்தை..” என்றாள் சோகமாக.
“என்ன வேலையோ.. உங்க ரெண்டு பேரையும் நாங்களா வேலைக்குப் போகச் சொன்னோம்.. உங்க சிநேகிதப் பிள்ளைங்க எல்லாம் இப்போ ஒரு குடும்பத்தை நடத்துறாங்க.. உங்களுக்கு எப்போ நாங்க கல்யாணம் செஞ்சு வைக்கிறது.. உங்களோடவே சுத்திக்கிட்டு இருந்த ரோகிணிக்கு நாளைக்கு கல்யாணம்.. உங்களுக்கும் பார்க்க ஆரம்பிச்சுடவா?” என்றார் ஆர்வமாக
“அத்தை.. கொஞ்ச நாள் நாங்க ஜாலியா என்ஜாய் செஞ்சுக்கிறோமே.. அப்பறம் மேரேஜப் பத்தி யோசிப்போம்..” என்று கூறியவள் அப்பொழுது தான் அகல்யாவின் தம்பி சற்று தள்ளி நின்றுக் கொண்டு தன்னை முறைப்பதை கவனித்தவள், அவன் அருகில் சென்று
“மச்சான்.. எப்படி இருக்க? எதுக்கு என்னை முறைக்கிற?” என
“போ போ.. போய் உன் அத்தையே கொஞ்சு.. நான் எல்லாம் உன் கண்ணுக்கு தெரியவே மாட்டேன்..” என்றான் கோபமாக
“இல்ல மச்சான். அத்தைய இப்போ கரெக்ட் செஞ்சா தானே, நாளைக்கு நான் இந்த வீட்டுக்கு மருமகளா வரும்போது என்னை நல்லா கவனிச்சுப்பாங்க.. அதுக்கு தான்..” கண்ணடித்து அவள் கூற, அகல்யாவின் தாய் தலையில் அடித்துக் கொண்டார்..
“பார் மச்சான்.. உங்க அம்மா தலையில் அடிச்சுக்கிறாங்க..”
“அது கிடக்குது.. விடு செல்லம்.. பின்னாடி பழி வாங்கிக்குவோம்..” என்றான் கூலாக
“அப்படிங்கிற..”
“ஆமாங்கிறேன்..”
“நீ இன்னைக்கு காலேஜுக்கு போகலையா?”
“என் செல்லம் ஊர்ல இருந்து வந்துருக்கு.. அதைப் பார்க்காம எனக்கு படிப்பா முக்கியம்..”
“கரெக்ட்டா என் கருத்த மச்சான்..” என்று அவனை கொஞ்சியவள் “உங்க கொக்கா எங்க? இன்னும் ரெடி ஆகலையா?” என்க.
அவன் பதில் அளிக்கும் முன்பு அகல்யாவின் தாயார் “குளிச்சிட்டு இருக்கா குகா..” என்றார்
“என்னத்தை.. இப்போ தான் அவ குளிக்கிராளா? இனி தலைய காய வெச்சு ஹேர் ஸ்டைல், கண்ணுக்கு காஜல், உதட்டுக்கு லிப் க்ளோஸ்ன்னு ஒரு மணி நேரம் ஆக்குவா ரெடி ஆக. சீக்கிரமா அவளை எழுப்பி விட்டுருக்கலாம்ல..” சோகமாக குகா கூற
“அஞ்சு மணிக்கு தானே ரெண்டு பேரும் வந்தீங்க.. ட்ரைன்லையும் தூங்கிருக்க மாட்டீங்க, இன்னைக்கு கல்யாணா வீட்டுலையும் ராத்திரி முழுக்க முழிச்சுட்டு ஆட்டம் தான் போடப் போறீங்க.. அதான் கொஞ்சம் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன்.. இங்க இருக்க தூத்துக்குடி.. ரெண்டு மணி நேரத்துல போய்ரலாம்.. ஈவ்னிங் ரிசப்ஷனுக்கு இப்பவே போய் என்ன செய்யப் போறீங்க?”
“சரியா ரிசப்ஷனுக்கு போய் இறங்க அவ என்ன எங்களுக்கு வெறும் ப்ரெண்டா? பெஸ்ட் ப்ரெண்ட்.. நியாயமா ஒரு வாரத்துக்கு முன்னாடியே அவகூட நாங்க இருந்திருக்கணும்.. ஆபிஸ் வேலைல எங்களால போக முடியலை.. அட்லீஸ்ட் முதல் நாள் ஆச்சும் சீக்கிரமா போகலாம்ன்னு பார்த்தா உங்க பொண்ணு மேக் அப் போட்டே நேரத்தை ஓட்டிடுவா..” என்றவள்,
அகல்யாவின் தம்பியிடம் “டேய் மச்சான், போய் தண்ணி வால்வ அடைச்சு விடு.. தண்ணி நின்னா தான் அவ பாத்ரூம விட்டு வெளிய வருவா.. இல்ல குளிச்சிகிட்டே இருப்பா.. என்ன தான் உருண்டு பெரண்டு குளிச்சாலும் சட்டில இருந்தா தான் அகப்பைல வரும்ன்னு உங்க அக்காக்கு தெரிய மாட்டுது..”
“சரியா சொன்னா பட்டு.. ரொம்ப மேக் அப் போடுறா.. சென்னைல யாரையும் கரெக்ட் செஞ்சுட்டாளோன்னு எனக்கு டவுட்.”
“செஞ்சா செஞ்சுகிட்டு போகட்டும் மச்சான்... அவ போனா தான் நம்ம ரூட் கிளியர் ஆகும். முதல்ல அவளை இந்த வீட்ல இருந்து விரட்டுறதுக்கான வேலையைப் பார்ப்போம்..” குகா சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கூற, அகல்யாவின் தாய் இருவரின் முதுகிலும் ஒன்று வைத்தார்..
“என் மகளைப் பார்த்த ரெண்டு பேருக்கும் எப்படி தெரியுது? வாய்லையே போடுறேன்..” என
“என் மேலையே கை வச்சுட்டீங்கள.. கல்யாணம் மட்டும் முடியட்டும் உங்களை முதியோர் இல்லத்துல விடல என் பேர் குகப்ரியா இல்ல..” சவால் விட..
“இந்த ஸ்கேல எங்க வெச்சேன்னு தெரியலை.” அகல்யாவின் தாய் இருவரையும் அடிப்பதற்காக ஸ்கேலை தேட, குகா வேகமாக அகல்யாவின் ரூமுக்குள் சென்று மறைந்தாள்.
அகல்யாவின் தம்பிக்கு இரண்டு அடிகள் தாயிடம் இருந்து கிடைத்தது..
“பட்டு என்னை அடி வாங்க விட்டுட்டு நீ மட்டும் எஸ்கேப் ஆகிட்ட..” அவன் கத்த
“அடுத்து தோசை கரண்டி பறக்கும்..” தாயின் வார்த்தையில் அவனும் தனது ரூமிற்குச் சென்று மறைந்தான்..
“எருமை இன்னும் நீ கிளம்பலையா? பத்து மணின்னு சொன்னா பதினொரு மணிக்காச்சும் ரெடியா இருப்பன்னு தான் பத்துன்னு சொன்னேன்.. இப்போ பதினொன்றை ஆகப் போகுது.. பன்சுவாலிட்டியே இல்லைடி உனக்கு..” தலையை உலரவைத்துக் கொண்டிருந்த அகல்யாவிடம் குகா கூற
“மூடிட்டு போய் பூஜை ரூம்ல இருந்து சந்தனத்தை எடுத்துட்டு வா..” என்றாள் அகல்யா..
“கிளம்புறதே லேட். இதுல சந்தனம் ஒரு கேடா உனக்கு?” என்று திட்டிக் கொண்டே அவள் கேட்டதை எடுத்துக் கொடுத்தாள்..
மேலும் அரைமணி நேரம் தனது அலங்காரத்தை முடித்துக் கொண்டு, இருவரும் தூத்துக்குடியை நோக்கிப் புறப்பட்டனர்..
“லஞ்ச் நம்ம போறதுகுள்ள தீரப் போகுது.. பசியோட என்னை இருக்கவிட்ட உன்னை கடிச்சுக் குதறிடுவேன்..” கையை அகல்யாவின் முகத்திற்கு நேரே காட்டிக் கூறினாள் குகா.
“தின்னிப் பண்டாரம்.. ஹோட்டல்ல வாங்கித் தரேன்..”
“நிஜமா?”
“நிஜமா தான்டி.. கொஞ்ச நேரம் வாய மூடிகிட்டு வரியா? தூக்கமா வருது.. நைட்டும் ட்ரைன்ல தூங்க விடாம தொணத்தொணன்னு பேசிகிட்டே வந்த..” என்றவள் கண்களை மூடிக் கொண்டாள்.
“தூங்கு மூஞ்சி..” என்று கூறியவள் ஹெட்போனில் பாட்டைக் கேட்க ஆரம்பித்தாள்..
இரண்டு மணி நேர பயணத்தில் இருவரும் தூத்துக்குடியை அடைந்தனர்.. அங்கிருந்து திருமண மண்டபத்திற்குச் சென்றனர்..
“வாங்க வாங்க.. என்னமா ரெண்டு பேரும் இவ்வளவு லேட்டாவா வரது..” ரோகிணியின் தாய் இருவரையும் கேட்டார்
“இல்ல ஆண்ட்டி ஆபிஸ்ல கொஞ்சம் வேலை..”
“சரி வாங்க சாப்பிடுங்க.. அப்பறம் பேசுவோம்..”
“ரோகிணியைப் பார்த்துட்டு வரோம் ஆன்ட்டி.” அகல்யா கூற
காதல் 1
“எல்லாம் எடுத்துகிட்டியா? பிரஷ், பேஸ்ட், சோப்பு, டவல். எதையும் மறக்கலையே?” தாயின் குரலுக்கு பதில் அளிக்காமல் போனை நோண்டிக் கொண்டிருந்தாள் குகப்ரியா..
“குகா.. உன்னை தான் கேக்குறேன்.. பதில் சொல்லாம போனையே பார்த்துகிட்டு இருந்தா என்ன அர்த்தம்..”
“ஒரே கேள்விய எத்தனை தடவை கேட்பீங்க? நானும் பதில் சொல்லி சொல்லி டயர்ட் ஆகிட்டேன்.. அயம் ட்வென்டி த்ரீ.. டோன்ட் ட்ரீட் மீ லைக் அ சைல்ட்மா..” குரலில் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது..
“எதையும் மறந்திட போறேன்னு தான் திரும்ப திரும்ப கேக்குறேன்.. அது உனக்கு எரிச்சலா தான் வரும்.. அங்க போயிட்டு அதை வெச்சுட்டேன் இதை வெச்சுட்டேன்னு போன் பண்ணுவ இல்ல, அப்போ இருக்கு உனக்கு..” தாயின் கண்டிப்பில் மேலும் கடுப்பான குகா
“ஒரு தடவை மறந்ததை எத்தனை முறை சொல்லிக் காமிப்பீங்க?” என்றாள்
“ஒரு தடவைனாலும் மறந்த தானே..” அவரும் விடாது கூறினார்..
“ஆளை விடுங்க.. நான் கிளம்புறேன்..” என்றவள் தனது பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்..
“கிப்ட் எடுத்துகிட்ட தானே?” என்று மறுபடியும் குகாவின் தாய் ஆரம்பிக்கவும்..
“அம்மா உள்ள போங்க.. கடுப்பேத்தாம.. கிப்ட் அகல்யாகிட்ட இருக்குன்னு பத்து தடவை சொல்லிருப்பேன்..” கடுகடுத்தவாறே அடுத்த தெருவில் இருந்த அகல்யாவின் வீட்டிற்குச் சென்றாள் குகப்ரியா..
வீட்டிற்குள் நுழையும் போதே “அத்தை..” என்று கத்திக் கொண்டே சென்றாள்.. அவளை வரவேற்றார் அகல்யாவின் தாய்.
“வா குகா.. எப்படி இருக்க? இளைச்சு போயிட்ட..”
“வேலை அத்தை..” என்றாள் சோகமாக.
“என்ன வேலையோ.. உங்க ரெண்டு பேரையும் நாங்களா வேலைக்குப் போகச் சொன்னோம்.. உங்க சிநேகிதப் பிள்ளைங்க எல்லாம் இப்போ ஒரு குடும்பத்தை நடத்துறாங்க.. உங்களுக்கு எப்போ நாங்க கல்யாணம் செஞ்சு வைக்கிறது.. உங்களோடவே சுத்திக்கிட்டு இருந்த ரோகிணிக்கு நாளைக்கு கல்யாணம்.. உங்களுக்கும் பார்க்க ஆரம்பிச்சுடவா?” என்றார் ஆர்வமாக
“அத்தை.. கொஞ்ச நாள் நாங்க ஜாலியா என்ஜாய் செஞ்சுக்கிறோமே.. அப்பறம் மேரேஜப் பத்தி யோசிப்போம்..” என்று கூறியவள் அப்பொழுது தான் அகல்யாவின் தம்பி சற்று தள்ளி நின்றுக் கொண்டு தன்னை முறைப்பதை கவனித்தவள், அவன் அருகில் சென்று
“மச்சான்.. எப்படி இருக்க? எதுக்கு என்னை முறைக்கிற?” என
“போ போ.. போய் உன் அத்தையே கொஞ்சு.. நான் எல்லாம் உன் கண்ணுக்கு தெரியவே மாட்டேன்..” என்றான் கோபமாக
“இல்ல மச்சான். அத்தைய இப்போ கரெக்ட் செஞ்சா தானே, நாளைக்கு நான் இந்த வீட்டுக்கு மருமகளா வரும்போது என்னை நல்லா கவனிச்சுப்பாங்க.. அதுக்கு தான்..” கண்ணடித்து அவள் கூற, அகல்யாவின் தாய் தலையில் அடித்துக் கொண்டார்..
“பார் மச்சான்.. உங்க அம்மா தலையில் அடிச்சுக்கிறாங்க..”
“அது கிடக்குது.. விடு செல்லம்.. பின்னாடி பழி வாங்கிக்குவோம்..” என்றான் கூலாக
“அப்படிங்கிற..”
“ஆமாங்கிறேன்..”
“நீ இன்னைக்கு காலேஜுக்கு போகலையா?”
“என் செல்லம் ஊர்ல இருந்து வந்துருக்கு.. அதைப் பார்க்காம எனக்கு படிப்பா முக்கியம்..”
“கரெக்ட்டா என் கருத்த மச்சான்..” என்று அவனை கொஞ்சியவள் “உங்க கொக்கா எங்க? இன்னும் ரெடி ஆகலையா?” என்க.
அவன் பதில் அளிக்கும் முன்பு அகல்யாவின் தாயார் “குளிச்சிட்டு இருக்கா குகா..” என்றார்
“என்னத்தை.. இப்போ தான் அவ குளிக்கிராளா? இனி தலைய காய வெச்சு ஹேர் ஸ்டைல், கண்ணுக்கு காஜல், உதட்டுக்கு லிப் க்ளோஸ்ன்னு ஒரு மணி நேரம் ஆக்குவா ரெடி ஆக. சீக்கிரமா அவளை எழுப்பி விட்டுருக்கலாம்ல..” சோகமாக குகா கூற
“அஞ்சு மணிக்கு தானே ரெண்டு பேரும் வந்தீங்க.. ட்ரைன்லையும் தூங்கிருக்க மாட்டீங்க, இன்னைக்கு கல்யாணா வீட்டுலையும் ராத்திரி முழுக்க முழிச்சுட்டு ஆட்டம் தான் போடப் போறீங்க.. அதான் கொஞ்சம் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன்.. இங்க இருக்க தூத்துக்குடி.. ரெண்டு மணி நேரத்துல போய்ரலாம்.. ஈவ்னிங் ரிசப்ஷனுக்கு இப்பவே போய் என்ன செய்யப் போறீங்க?”
“சரியா ரிசப்ஷனுக்கு போய் இறங்க அவ என்ன எங்களுக்கு வெறும் ப்ரெண்டா? பெஸ்ட் ப்ரெண்ட்.. நியாயமா ஒரு வாரத்துக்கு முன்னாடியே அவகூட நாங்க இருந்திருக்கணும்.. ஆபிஸ் வேலைல எங்களால போக முடியலை.. அட்லீஸ்ட் முதல் நாள் ஆச்சும் சீக்கிரமா போகலாம்ன்னு பார்த்தா உங்க பொண்ணு மேக் அப் போட்டே நேரத்தை ஓட்டிடுவா..” என்றவள்,
அகல்யாவின் தம்பியிடம் “டேய் மச்சான், போய் தண்ணி வால்வ அடைச்சு விடு.. தண்ணி நின்னா தான் அவ பாத்ரூம விட்டு வெளிய வருவா.. இல்ல குளிச்சிகிட்டே இருப்பா.. என்ன தான் உருண்டு பெரண்டு குளிச்சாலும் சட்டில இருந்தா தான் அகப்பைல வரும்ன்னு உங்க அக்காக்கு தெரிய மாட்டுது..”
“சரியா சொன்னா பட்டு.. ரொம்ப மேக் அப் போடுறா.. சென்னைல யாரையும் கரெக்ட் செஞ்சுட்டாளோன்னு எனக்கு டவுட்.”
“செஞ்சா செஞ்சுகிட்டு போகட்டும் மச்சான்... அவ போனா தான் நம்ம ரூட் கிளியர் ஆகும். முதல்ல அவளை இந்த வீட்ல இருந்து விரட்டுறதுக்கான வேலையைப் பார்ப்போம்..” குகா சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கூற, அகல்யாவின் தாய் இருவரின் முதுகிலும் ஒன்று வைத்தார்..
“என் மகளைப் பார்த்த ரெண்டு பேருக்கும் எப்படி தெரியுது? வாய்லையே போடுறேன்..” என
“என் மேலையே கை வச்சுட்டீங்கள.. கல்யாணம் மட்டும் முடியட்டும் உங்களை முதியோர் இல்லத்துல விடல என் பேர் குகப்ரியா இல்ல..” சவால் விட..
“இந்த ஸ்கேல எங்க வெச்சேன்னு தெரியலை.” அகல்யாவின் தாய் இருவரையும் அடிப்பதற்காக ஸ்கேலை தேட, குகா வேகமாக அகல்யாவின் ரூமுக்குள் சென்று மறைந்தாள்.
அகல்யாவின் தம்பிக்கு இரண்டு அடிகள் தாயிடம் இருந்து கிடைத்தது..
“பட்டு என்னை அடி வாங்க விட்டுட்டு நீ மட்டும் எஸ்கேப் ஆகிட்ட..” அவன் கத்த
“அடுத்து தோசை கரண்டி பறக்கும்..” தாயின் வார்த்தையில் அவனும் தனது ரூமிற்குச் சென்று மறைந்தான்..
“எருமை இன்னும் நீ கிளம்பலையா? பத்து மணின்னு சொன்னா பதினொரு மணிக்காச்சும் ரெடியா இருப்பன்னு தான் பத்துன்னு சொன்னேன்.. இப்போ பதினொன்றை ஆகப் போகுது.. பன்சுவாலிட்டியே இல்லைடி உனக்கு..” தலையை உலரவைத்துக் கொண்டிருந்த அகல்யாவிடம் குகா கூற
“மூடிட்டு போய் பூஜை ரூம்ல இருந்து சந்தனத்தை எடுத்துட்டு வா..” என்றாள் அகல்யா..
“கிளம்புறதே லேட். இதுல சந்தனம் ஒரு கேடா உனக்கு?” என்று திட்டிக் கொண்டே அவள் கேட்டதை எடுத்துக் கொடுத்தாள்..
மேலும் அரைமணி நேரம் தனது அலங்காரத்தை முடித்துக் கொண்டு, இருவரும் தூத்துக்குடியை நோக்கிப் புறப்பட்டனர்..
“லஞ்ச் நம்ம போறதுகுள்ள தீரப் போகுது.. பசியோட என்னை இருக்கவிட்ட உன்னை கடிச்சுக் குதறிடுவேன்..” கையை அகல்யாவின் முகத்திற்கு நேரே காட்டிக் கூறினாள் குகா.
“தின்னிப் பண்டாரம்.. ஹோட்டல்ல வாங்கித் தரேன்..”
“நிஜமா?”
“நிஜமா தான்டி.. கொஞ்ச நேரம் வாய மூடிகிட்டு வரியா? தூக்கமா வருது.. நைட்டும் ட்ரைன்ல தூங்க விடாம தொணத்தொணன்னு பேசிகிட்டே வந்த..” என்றவள் கண்களை மூடிக் கொண்டாள்.
“தூங்கு மூஞ்சி..” என்று கூறியவள் ஹெட்போனில் பாட்டைக் கேட்க ஆரம்பித்தாள்..
இரண்டு மணி நேர பயணத்தில் இருவரும் தூத்துக்குடியை அடைந்தனர்.. அங்கிருந்து திருமண மண்டபத்திற்குச் சென்றனர்..
“வாங்க வாங்க.. என்னமா ரெண்டு பேரும் இவ்வளவு லேட்டாவா வரது..” ரோகிணியின் தாய் இருவரையும் கேட்டார்
“இல்ல ஆண்ட்டி ஆபிஸ்ல கொஞ்சம் வேலை..”
“சரி வாங்க சாப்பிடுங்க.. அப்பறம் பேசுவோம்..”
“ரோகிணியைப் பார்த்துட்டு வரோம் ஆன்ட்டி.” அகல்யா கூற