Just to relax

Advertisement

SahiMahi

Well-Known Member
**பெருசு*
*படுத்தும் பாடு**


ஒரு சின்ன ஊரில் கோர்ட் கேஸ் நடக்குது .

அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு,விசாரிச்சுக்கிட்டிருக்காங்க .

வக்கீல் : பாட்டி உங்கள பத்தி சுருக்கமா சொல்லுங்க .

பாட்டி : என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப பய . சின்ன சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே . அப்புறம் ஒரு நாள் நம்ம ஊரு கோவில் உண்டியலை உடைச்சு நகை பணம் எல்லாம் திருடிட்டே . ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான் . இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற ?

அதிர்ந்து போனார் வக்கீல் ...

மெல்ல சமாளிச்சிகிட்டு...

"சரி பாட்டி இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.

பாட்டி : தெரியுமாவா - இந்த மொள்ளமாரி சின்ன வயசுல ஊர் பொண்ணுங்க ஒண்ணை கூட விட்டு வைக்க மாட்டான் . சரியான பொம்பளை பொறுக்கி . பஞ்சாயத்து இவனை ஊற விட்டு ஒதுக்கி வச்சுருச்சு . இப்போ என்னமோ கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான்

ஜட்ஜ் : மேஜையை தட்டி : " அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும் " ன்னு உத்தரவிட்டுட்டு...

வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார் .

ஜட்ஜ் : கோர்ட் மறுபடியும் தொடங்கியதும் நீங்க ரெண்டு பேரும் " இந்த ஜட்ஜ் அய்யாவை தெரியுமா "ன்னு அந்த கிழவி கிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும் " ன்னு வார்னிங் குடுத்தார்..!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top