ஜோதி ஏன் இப்படி இருக்காள்
வேலைக்கு ஆள் வைக்கறதுக்கெல்லாம்
ஒரு பஞ்சாயத்தா?
கைக் குழந்தை இருக்கிற வீட்டில் அஞ்சு
பேர் இருந்தாலும் வேலை தீராது
வேலைக்காரி இல்லாட்டி ரொம்பவே கஷ்டம்ப்பா
சின்னக் குழந்தைகளையும் பார்த்து காலையில டிபன் சாப்பாடு எல்லாம்
செஞ்சு ஆபீஸுக்கும் போய் வேலைக்கு
ஆள் இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டேன்
என்ன குளிரா இருந்தாலும் மழையா இருந்தாலும் குளிச்சிட்டுத்தான் அடுப்பைத் தொடணும்
மாமியார்லாம் ஒரு ஹெல்ப்பும் பண்ண மாட்டாங்க
நான் ஆபீஸ் போறவரைக்கும் வாசல் திண்ணையை விட்டு நகர மாட்டாங்க
மடி ஆச்சாரம்ன்னு டிரஸ் இல்லாமக் கூட சின்னக் குழந்தையைத் தூக்கக் கூட
மாட்டாங்க
கணவரின் அண்ணன் கூட திட்டுவாரு
வேலைக்காரி இல்லாமல் இரண்டு குழந்தைகளையும் பார்க்க முடியாமல்
ரொம்ப கஷ்டப்பட்டேன்
லீவு நாளில்தான் துணி துவைக்க முடியும்
எறும்பு வந்தால் கூட குழந்தைத் துணியெல்லாம் அப்படியே பக்கெட்டில் இருக்கும்
ஐயோ அம்மா அதை இப்போ நினைத்தாலும் நெஞ்சு வலிக்குது