Enthan Kaathal Neethaanae 14

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அய்யோ வீட்டுல இருந்து காடு வரைக்கும் கைல வச்சிக்கிட்டு இந்த அப்பாக்கள் அடிக்கும் கூத்து இருக்கே.......
ஒரு பைசா பிரயோஜனம் இல்லைனாலும் கைல இருந்து விடமாட்டாங்க.......
மாமியார்களை விட ரொம்ப மோசம் மாமனார்கள் இந்த விஷயத்தில்........

டேய் விடுறா விடுறா........
இன்னைக்கு உன் தங்கைக்குனா நாளைக்கு உனக்கும் தான்........
வெளில கெத்தா சுத்தினாலும் உள்ளுக்குள்ளே தேடும்.......
இதெல்லாம் உலக நியதி........

என்ன இந்த ஜெய் போறதுல முடிவா இருக்கிறானோ???
வெண்ணிலா சப்போர்ட் க்கு அம்மாவை எல்லாம் பேச சொல்றாளே.......
இந்த ராதிகா சும்மா இருக்காமல் ஜெய்யை சீண்டிவிடுறதிலேயே குறியா இருக்காளே......
யுவராஜ் பக்கம் எதையும் காணோமே........
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.கஷ்டப்பட்டு லோன் வாங்கி,அங்கே இங்கே காச புரட்டி கையில இருக்குற காசையும் போட்டு வீடுகட்டி குடுத்தா,அவனையே வெளியே போக சொல்றாரே , நல்லா சொல்லுங்க சந்திரன்:mad::mad:.

வெண்ணிலாவுக்கு இங்கே வசதி பத்தலைன்னு சொன்னாறா,இல்லை இப்படி பிரச்சனை வந்து தன் தம்பி குடும்பம் பிரிஞ்சா வெண்ணிலா மேலே பழி வரும்னு யோசிக்கிறாரா:unsure::unsure::unsure:.

வீட்டு வேலைக்கு ஆள் வச்சா ,வேலையும் குறையும்,பணமும் ஜெய் தான் கொடுக்க போறான் சத்யா நல்லா கேட்கறான்.நல்லவேளை வெண்ணிலா காமாட்சிக்கு மருமகளா வரலை:oops::oops:.

ராதிகா இப்போ கோபம் போயிடுச்சா,உன் கல்யாணத்துலே அண்ணனா எல்லாமே நான் தான் செய்வேன்னு ஜெய் சொல்லிட்டானே:giggle::giggle::giggle:.

ராதிகா எதுக்கு யுவராஜை சீண்டிட்டு இருக்கா,யுவராஜ் அம்மா கூட தங்கச்சிய பார்க்க வந்ததுக்கே கற்பகம் பாட்டி மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டு இருக்கு ,நீ பேசறது மட்டும் தெரிஞ்சது அவ்வளவு தான், எல்லாரும் சேர்ந்து உன்ன லூசுன்னு சொல்லிட்டாங்களே:LOL::LOL::LOL:.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த காமாட்சி முதல்லயே வேலைக்காரியை வைக்க சம்மதிச்சு இருந்தா, இவ்வளவு பிரச்சனையும் வந்து இருக்காதே.. இந்த ராதிகா பொண்ணும் ஓவரா பேசுது..

வெண்ணிலாவை பிரிந்த ஜெய்க்காக...

 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கணவனைத் தேடும் தங்கையை அண்ணன் சீண்டுவதும் அதை அம்மா ரசிப்பதும் நல்லாயிருக்கு
ஆமாம்
மிஸ்டர் கோப்ப்ப்பால் ராஜகோப்ப்ப்பால் இதிலெல்லாம் கலந்துக்க மாட்டாரோ?

தாய்க் கிழவி சூனியக்காரி கற்பகம் எங்கே போனாள்?
செத்துட்டாளா?
அப்பாடா நிம்மதி
எள்ளும் தண்ணியும் இறைச்சுட்டு நிம்மதியா இருங்க, ராஜகோபால்

எப்படியெப்படி?
மருமகள் பிறந்த வீட்டுக்கு போனால் போகட்டுமாம்
ஆனால் பேரன் போகக் கூடாதாம்
பத்து மாசம் மருமகள் சுமந்து பெற்றெடுக்காமல் பேரன் வந்து விடுவானா?
மூதேவிக் கிழவி

ஏன்மா காமாட்சி ஏன்?
முதலிலேயே இந்த வேலையை செய்திருக்கலாமில்லே
வீணாக பிள்ளைகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதுதான் மிச்சம்

சித்தப்பா சந்திரன் அருமையான மனிதர்
அண்ணன் மகனாய் இருந்தாலும் தன் மகனாகவே ஜெய்யை அரவணைத்து செல்கிறார்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top