E78 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
காந்தமாய் ஈர்த்த
நீல கண்களில்..
என்னை தொலைத்தேன்..
முற்றிலுமாய் தொலைந்த
நெஞ்சம்
காதல் தனை அறியுமா..

அவளருகில்
கடல்விழியில்
மட்டும் மூழ்கிட
விளைந்த
நெஞ்சம்...

தனித்துவிட்டதால்
கொண்ட காதலும் புரிந்தது..
நான் என்ற எண்ணங்கள்
மறைய..
அவள் மீது கொண்டது
நேசம் என உணர்ந்தேன்...

என்னை தொலைத்த அவளிடத்தில்...
கடந்த வாழ்வும் காதலும்
சொன்ன நேர்மையும்...
பிரிவுக்கே வழியானதே..

அவள் பொருட்டு
நான் செய்த பிழையும்...
அவளை வருத்த
காரணமானதே..
Awesome.... Fathima:):):)
 

Sundaramuma

Well-Known Member
அவனுக்கு முதலில் கண்களில் ஈர்ப்பு.. கண்டதும் காதலே..
அதனால் தான் அண்ணா சொல்லு என்றான்.
அவனே உணரவில்லை, அவன் கொண்ட காதலை...

அவளுக்கும் காதலே.. இல்லாவிட்டால் ஏன் அவனை உற்று உற்று பார்க்கிறாள்?
அவன் செய்த குற்றத்தை மறைத்தாள்?
Annalum nokinaan...avalum nokkinaal.....
 

Sundaramuma

Well-Known Member
என்னடா பண்றது...
நீயே தானே சொன்னே..
அநியாயத்துக்கு இவ்வளவு நேர்மையா நீ இருந்திருக்க வேண்டியது இல்ல...
அவ மேல இருக்குற காதலுக்காக தான் சொன்னே...
ஆனா உன் காதலி புரிஞ்சிக்க வேணுமேபா...

இப்பவும் அவ வருத்தப்படுறாளேன்னு நீ வருத்தப்படுற பாரு.....
அங்க நிக்குது தல, உன் காதல்....
:D:D:D
 

murugesanlaxmi

Well-Known Member
காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் பெஞ்சில் ஏறி நில்லுங்கோ" என்று ஆசிரியர் சொல்ல, செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள்.
அதிலே ஒரு குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல நின்றது.
ஆசிரியர் அந்த குழந்தையை "இங்கே வாம்மா" என்று அழைத்தார்.
"வீட்டுப்பாடம் செய்தியா?"
"இல்ல சார், எனக்கு அது விளங்க இல்ல"
"வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே"
குழந்தை தயங்கியபடியே சொன்னது.
"எனக்கு அம்மா இல்ல"
ஆசிரியர் துணுக்குற்றுபோனார். அடடா அவசரப்பட்டு பெஞ்சில்ஏற்றிவிட்டோமோ என்று வருந்தினார்.
"அம்மா இல்லாட்டி அப்பாவிடமாவது கேட்டிருக்கலாமேகண்ணா"
"எனக்கு அப்பாவும் இல்லை சேர்"
குழந்தை பயந்த படியே சொல்ல ஆசிரியருக்கு தூக்கிவாரிப்போட்டது. அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல் இந்த குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்? ச்சே எப்படிப்பட்ட்ட கொடுமையை செய்துவிட்டோம் என்று வருந்தினார்.
குழந்தையை பார்க்க பார்க்க ஆசிரியரின் கண்கள் கலங்கிவிட்டது.
"கண்ணம்மா .. இங்க பாரு .. அம்மாவும் அப்பாவும் இல்லையா? .. பரவாயில்ல..நாங்க எல்லாம் இருக்கிறம் தானே .. கவலைப்படாதே. அது சரி, வீட்டில நீ யாரோட இருக்கிறாய்?"
குழந்தை அதே உணர்ச்சியோடு சொன்னது.
"மம்மி டாடியோட"
ஆசிரியர்-??????????????????????????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top