Ayodhyaakandam 9

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
தோழமைகளே,

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் அடுத்த பகுதி..

Ayodhyaakandam 9



இன்று அனுமத் ஜெயந்தி.

ஸ்ரீ ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.
(இன்னும் அனுமனை நாம் பார்க்கவில்லை) அவரைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.

அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு
ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான்


பொருள்:-

அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்...

அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி..

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று..

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு..

அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தார்...

அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பார்.

நட்புகள் அனைவருக்கும் அரணாய் அனுமன் நின்று காக்கட்டும், இறை அருள் பரிபூரணமாக உலகத்தின் மீது பொழியட்டும்.

ஜெய் ஸ்ரீராம்.
 
Last edited:

Janavi

Well-Known Member
ரொம்பவும் சந்தோசம் சிஸ்...சரியாக இன்று இந்த பதிவை கொடுத்ததற்கு....
ஜெய் ஸ்ரீ ராம்....
 

Pashy2k

Well-Known Member
Eppadi irundha kaikeyi...
Idhaan oozhvinai payan nnu sollradhu pola. Eppdi ellam chat chat nnu maari poiduchu.
Lakshmanar, avar wife kitta pesaradhu ellam valmiki ramayanam la illiya laxu?
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Eppadi irundha kaikeyi...
Idhaan oozhvinai payan nnu sollradhu pola. Eppdi ellam chat chat nnu maari poiduchu.
Lakshmanar, avar wife kitta pesaradhu ellam valmiki ramayanam la illiya laxu?
இல்லை நித்யூ. சுமித்திரை மகன் இலட்சுமணன கிட்ட சொல்றது மட்டும் தான் இருக்கு.

ஊர்மிளையோட பேசறதெல்லாம் இல்லப்பா.
 

Pashy2k

Well-Known Member
Seetha, raamar kooda pora. Urmilai lakshmanar kooda pogalai. Adhukku undaana kaarana kaariyangal explain pannra maadiri irukka...
Enakku therinjikanum nnu aasai
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Seetha, raamar kooda pora. Urmilai lakshmanar kooda pogalai. Adhukku undaana kaarana kaariyangal explain pannra maadiri irukka...
Enakku therinjikanum nnu aasai
இல்ல, அதுக்கு எந்த காரணமும் வால்மீகி-ல சொல்லப்படல, ஆனா, ஆரண்ய கண்டத்துல லக்ஷ்மணர் மனைவியை பிரிஞ்சி இருக்கிறவர், அவர் கிட்ட வேணா உன் ஆசையை கேட்டுப்பாருன்னு ராமர் சூர்ப்பனகை கிட்ட சொல்வார். அவளும் லக்ஷ்மனர்கிட்ட போவா. அப்போ, "மா, நானே வேலைக்காரன், அண்ணாக்கு சேவை செய்யத்தான் வந்தேன், என்னால உன்ன கல்யாணம் பண்ணி உன்னை ரக்ஷிக்க முடியாதுன்னு சொல்வார்.

ஆனா, ஊர்மிளை 14 வர்ஷம் தூங்கிண்டு இருந்ததாகவும், அது லக்ஷ்மணனோட தூக்கத்தை தான் வாங்கிண்டு அவர் ராமரை காப்பாத்தற(பின் தொடர்ற) வேலைல சுணங்கி போகாம இருக்கறதுக்கும்ன்னு ஒரு செய்தி இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top