AMP-15

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Very sorry dear frds&siss.. Udalnilai sariyilladha karanathal ud poduvadharku than a shamanic it tat hu.. AMP 15 epi pottachu.. Padithuvittu comments kodukka marakkadhinga... Happy Reading..:):)

அத்தியாயம் - 15

திருமணம்...
இருமனம் இணையும் நேரம்.. மாங்கல்யம்...
இருமனம் ஒருமனமாக மாற்றும்... என்றும் வாடாத பூங்கயிறு...


மாலையானதும் அலுவலகத்திலிருந்து கிளம்பிய ஆதி ஹாஸ்பிட்டல் வாசலில் வண்டியை நிறுத்தினான்.. இளாவுக்கு போன் செய்து "லாலீபாப் நான் ஹாஸ்பிட்டல் அவுட் சைட் வெயிட் பன்றேன்.. வா..." என்று சொல்ல.. "ம்ம்ம்.. இதோ கிளம்பிட்டேன்.. ஜஸ்ட் டூ மினிட்ஸ்.." என்று சொல்லிவிட்டு வைத்தவள்.. வேகமாக வெளியே வந்தவள் யார் மீதோ மோதி கீழே விழுந்தாள்.. அவள் கீழே விழுந்ததை பார்த்த ஆதி வண்டியைவிட்டு இறங்கி வேகமாக சென்றுப் பார்க்க.. தாஸ் இளாவுக்கு கைக்கொடுத்து உதவி செய்துகொண்டிருந்தான்.. அவனை கண்ட ஆதிக்கு மீண்டும் ஏதொ நெருடல் உருவாக.. அதை நிறுத்திவிட்டு இளாவிடம் சென்றவன்... "ஏய்.. அறிவில்ல இப்படிதான் ஓடி வருவியா.. எங்கேயாவது அடிப்பட்டு இருந்தா என்னாகறது.. ம்ம்ம்.." என்று திட்ட.. தாஸ் "சார் அவங்கள எதுக்கு திட்றிங்க.. நான் தான் மேம் மேல தெரியாம இடிச்சிட்டேன்.. அம் சாரி மேம்.." என்று நல்லவன் போல் சொல்ல... ஆதிக்கு கோபம் வர.. "தாஸ்.. ஷீ இஸ் மை லவ்வர்.. சோ.. ப்ளீஸ்.." என்று கர்ஜித்தவன்.. இளாவிடம் திரும்பி "வா.. போகலாம்.." என்று சொல்ல.. அவள் தாஸிடம் "ரொம்ப தேங்ஸ்.. ஹெல்ப் பன்னதுக்கு.." என்று சொல்ல.. ஆதிக்கு இன்னும் கடுப்பாகிப்போக.. "இப்போ வரப்போறியா இல்லையா.." என்று அடிக்குரலில் சொல்ல.. "ம்ம்ம்.. போலாம்.." என்று அவன் பின்னாடி நடந்தாள்.. இல்லை இல்லை ஓடினாள்...

அவர்கள் இருவரும் சென்றதும்... அங்கே இருக்கும் இருக்கை ஒன்றில் அமர்ந்த தாஸ்.. தனது கையை பார்த்துக்கொண்டே... "ம்ம்ம்.. இடிச்சதுக்கே இப்படி ஷாக் அடிக்குதே.. இவள முழுசா அனுபவிச்சா.." என்று நினைத்தவன் அப்படியே சாய்ந்து அமர்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டான்...

ஆதி இறுக்கமான முகத்துடன் வண்டியை ஓட்ட.. இளா அவனையும் ரோட்டையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள்... இளா தன்னை பார்பதைக் கண்டவன்.. "என்ன.." என்று சற்று குரல் உயர்த்தி கேட்கவும்.. "அது.. இனிமேல் அப்படி ஓடிவரமாட்டேன்.. சாரி.." என்று சொன்னவளின் கண்கள் கலங்கிவிட.. ஆதிக்கு அவள் அழுவது தாங்கமுடியாமல்.. வண்டியை ஓரமாக நிறுத்தியவன் அவளை கட்டிக்கொண்டான்.. "லாலீபாப் இப்ப எதுக்கு அழற.. நான் சும்மாதான் கோவமா இருக்க மாதிரி நடச்சேன்.." என்று பொய் சொல்லி அவளை சமாதானம் செய்ய.. அவளுக்கு ஆதி தன்னை கட்டிக்கொண்டதும் ஒரு இனம்புரியாத உணர்வு தோன்ற.. அவன் நெஞ்சின்மேல் சாய்ந்துக்கொண்டாள்... "ஏய்.. லாலீபாப் நீ இப்படி என்மேல இருந்தா.. நான் எப்படி வண்டி ஓட்றது.." என்று ஆதி கேட்க.. அவன் சொன்னதும் முகம் சிவக்க நகர்ந்து அமர்ந்துகொண்டாள்.. இளாவை வீட்டில் இறக்கிவிட்டவன்.. இளா உள்ளே சென்றதும்.. வாட்ச்மேனிடம் சென்று "இங்க யாராவது சந்தேகப்படர மாதிரி சுத்தறாங்களா.." என்று ஆதி கேட்கவும்.. ஆதியின் யூனிபார்ம் மற்றும் அவன் கண்களில் தெரியும் நிமிர்வும் அவ்வாட்ச்மேனுக்கு பயத்தைக்கொடுக்க.. "இல்ல.. சார்.." என்று சொன்னான்.. ஆதியும் "ஓகே.. மேபி அப்படி யாராவது உன் கண்ணுக்கு தெரிஞ்சா.. இந்த நம்பர்க்கு போன்பன்னு.." என்று சொல்லிவிட்டு சென்றான்.. வாட்ச்மேனும் ஆதி கொடுத்த நம்பரை பத்திரப்படுத்திக்கொண்டான்...

ஹரிஷ் வீட்டில் தன்னை தானே திட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்...
"ச்ச்ச.. என்ன சொன்னான்னு கேட்கமாவிட்டது தப்பாபோச்சு.. நானும் யோசிச்சிப் பார்கிறேன்.. ஒன்னும் ஞாபகம் வர மாட்டது.. இந்த கேப்ல அவளோட போன் நம்பரயும் வாங்காம விட்டுட்டேன்.. இப்போ என்ன பன்னலாம்..." என்று யோசித்துக்கொண்டிருந்தவனின் போன் ஒலிக்க புது நம்பராக இருக்கவும் அட்டண்ட் செய்து காதில் வைத்தான்.. "ஹலோ.. மிஸ்டர் ஹரிஷ்.." என்று ஒரு ஆணின் குரல் கேட்க. "எஸ் அம் ஹரிஷ்.. நீங்க.." என்று ஹரிஷ் கேட்க.. "நான் ஆதி பேசுறேன்.." என்று அவன் சொன்னதும்.. "ம்ம்ம்.. சொல்லுங்க சார்.." பவ்வியமாக சொல்ல.. "நீங்க என்ன ஆதின்னே கூப்பிடுங்க... ம்ம்ம்.. எனக்கொரு இன்பர்மேஷன் வேணும்.." என்று சொல்ல.. "ம்ம்ம்.. என்ன வேணும் சொல்லுங்க ஆதி.." என்று ஹரிஷ் கேட்க.. "தாஸ்ங்கிற பேர்ல யாராவது உங்க ஹாஸ்பிட்டல்ல இன்னைக்கு ட்ரீட்மெண்ட் பன்னிருக்காங்களான்ற புல் டீடெய்ல்ஸ் வேணும்.." என்று ஆதி சொல்ல.. "நான் டூ டேஸ் மெடிக்கல் லீவ்.. சோ.. என்னால டுடே கேதர் பன்ன முடியாது.. நாளைக்கு சொல்லட்டுமா.." என்று ஹரிஷ் கேட்டான்.. "ஓகே.. தேங்ஸ் ஹரிஷ்.." என்று ஆதி சொல்ல.. "இட்ஸ் ஓகே ஆதி.." என்று இருவரும் போனை வைத்தனர்..

இரவு ஏழு மணியளவில் வீட்டின் உள்ளே நுழைந்த ரோஹித்தை சிவராம், சீதா.. மற்றும் இளா.. மூவரும் ஹால்ஷோபாவில் உட்கார்ந்து பார்க்க.. "ஆஹா.. போட்டுக்கொடுத்துட்டா போலருக்கே.. சரி.. சமாளிப்போம்.." என்று மனதில் நினைத்துக்கொண்டே அவர்களுக்கு எதிரில் அமர்ந்தவன்.. "அப்..பா.. நான் ரேஷ்மிய மூனு மணிக்கெல்லாம் கொண்டுபோய் ஹாஸ்ட்டல்ல விட்டுட்டேன்.." என்று சொன்னவனை.. சிவராம் "என்னடா சொல்ற.. ரேஷ்மிய வெளியே கூட்டிட்டு போனியா.. கொஞ்சமாவது பொறுப்பிருக்கா.." என்று திட்ட.. இளா கையில் வைத்திருந்த ஸ்நாக்ஸ் தட்டை காலி செய்து மேஜை மேல் வைத்துவிட்டு எழுந்தவள்.. "ஹப்பா.. வேல முடிஞ்சுது.." என்று தனது அறை நோக்கி சென்றாள்.. "அடிப்பாவி.. என் வாயாலயே என்ன மாட்டவச்சிட்டாளே.. இப்போ எப்படி அப்பாகிட்ட இருந்து தப்பிக்கிறது.." என்று யோசித்துக்கொண்டிருந்தவனை திரும்பி பார்த்த இளா சிரித்துக்கொண்டே தூங்க சென்றாள்.. ரோஹித் எப்படியோ தப்பித்துவிட்டான்..

மிட் நைட்டில் வீட்டிற்கு வந்த ஆதியை கண்ட விஷ்வா "என்னடா.. ரொம்ப டென்ஷனா இருக்க.." என்று கேட்க.. "ஒன்னும் இல்லடா.. கலெக்ட் பன்ன ஒவ்வொரு டெக்ஸ்டைல்ஸ் அட்ரஸ்க்கும் மெயில் பன்னிட்டு வரேன்.. நாளையிலருந்து வேலய ஸ்டார்ட் பன்னனும்..." என்று ஆதி சொல்ல.. "அந்த வேலய எங்கிட்ட கொடுத்துருக்கலாம்.. நான் இன்னைக்கு ஆப் தான.." என்று சொன்ன விஷ்வாவை "நீயே.. ட்ரவல்பன்னிட்டு வந்துருக்கடா.. சோ.. அதான் உன்ன டிஸ்டர்ப் பன்ன வேண்டாம்னு கொடுக்கல.." என்று ஆதி சொல்ல.. "ஓகேடா.. நீ போய் ப்ரெஷாகிட்டு வா.. சாப்பிடலாம்.." என்று விஷ்வா சொல்ல இருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றனர்..

காலையிலயே குளித்துவிட்டு அழகாக கிளம்பிய விஷ்வாவை கண்ட ஆதி அதிர்ச்சியடைந்தான்.. "என்னடா.. இவ்வளவு சீக்கிரம் எங்க கிளம்பிட்ட.." என்று கேட்க.. "அதுவாடா.. ஷாலி வீட்ல அவளுக்கு மாப்பிள பார்த்துடாங்களாம்.. நேத்து போன்ல அழுதுட்டாடா.. அதான் இப்பவே போய் அவ அப்பாகிட்ட பேசிடலாம்னு.." என்று சொன்ன நண்பனை அனைத்துக்கொண்ட ஆதி "ஆல் தி பெஸ்ட் மச்சான்..." என்று சொல்லி அனுப்பிவைத்தான்.. விஷ்வாவுக்கு தெரியவில்லை ஏற்கனவே ஆதி வைஷாலியின் அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டான் என்று..

ஷாலியின் வீட்டு காலிங்பெல்லை அழுத்திவிட்டு வெளியே நின்றான்.. கதவை திறந்த ஷாலியின் சித்தி அவனை பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.. அவரின் செய்கையில் கோபம் வந்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டு நின்றிருந்தான்.. ஷாலியின் அப்பா இவனை பார்க்க.. "ஏன் மாப்பிள வாசல்லே நிக்கிறீங்க உள்ள வாங்க.." என்று அழைத்தவரை மதித்து உள்ளே சென்றவன்.. "என்ன.. இவரு மாப்பிளன்னு சொல்றாரு.." என்று நினைத்துக்கொண்டே அமர்ந்தான்.. சேகர் "வைஷு.." என்று குரல் கொடுக்க வெளியே வந்த ஷாலி.. "என்னப்பா.." என்று சொல்லிக்கொண்டே வந்தவள் அங்கே விஷ்வாவை கண்டவள் அப்படியே நிற்க.. "வைஷு.. இவர் தான் உனக்கு பார்த்து இருக்க மாப்பிள.. போய் காஃபி கொண்டுவாடா..." என்று சேகர் சொல்லவும் அவளாள் நம்பமுடியாமல் சமையலறைக்கு சென்றாள்.. அவள் உள்ளே சென்றதும் "மாப்பிள.. என் பொண்ணுக்குன்னு இதுவரைக்கும் எந்த சந்தோஷத்தையும் என்னால கொடுக்க முடியல.. ஆனா உங்க ப்ரெண்ட் ஆதி.. அவர் வந்து நீங்களும் என் பொண்ணும் லவ் பன்றதா சொன்னார்.. என்னால அத ஏத்துக்கமுடியல.. ஆனா என் பொண்ணு இப்போ கொஞ்ச நாளா ரொம்ப சந்தோஷமா இருக்கான்னா அதுக்கு காரணம் நீங்க தான்.. சின்ன வயசுல கிடைக்கவேண்டிய அன்பும் பாசமும் என்னால அவளுக்கு கொடுக்க முடியல.. ஆனா அந்த அன்ப உங்க மூலமா அவளுக்கு நான் கொடுக்கனும்.. அவள நல்லா பார்த்துப்பிங்கல மாப்பிள.." என்று கண்கலங்கி சொன்ன சேகரின் கையை பிடித்துக்கொண்டவன் "மாமா.. நீங்க எதுக்கும் கவலப்படாதீங்க.. ஷாலிய எப்பவும் சந்தோஷமா வச்சிப்பேன்.." என்று சொன்னான் விஷ்வா...

இவர்கள் இருவரும் பேசுவதை கேட்ட ஷாலிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை... காஃபி கொண்டு போய் கொடுக்கப் போனவள் தன் அப்பாவை பார்க்க.. அவர் கண்களை துடைத்துக்கொண்டிருந்தார்.. விஷ்வா இருவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப.. வைஷாலி வாசல்வரை வந்து ரொம்ப "தேங்ஸ்.. விஷு" என்று கட்டிப்பிடிக்க செல்ல... "ஏய்.. என்னடி பன்ற அதுவும் மாமா முன்னாடி.. எதுவா இருந்தாலும் தனியா வச்சிக்கலாம்.." என்று விஷ்வா சொல்ல.. "ம்ம்ம்.. போடா.." என்று ஷாலி சொல்ல.. "சரி.. டைம் ஆயிடுச்சி.. இன்னிலருந்து நிறைய வேல இருக்கு.. பாய்டி.." என்று சொல்லிவிட்டு சென்றான்...

உள்ளே வந்த ஷாலி தன் அப்பாவின் அருகில் சென்று அமர.. அதிசயமாய் பார்த்த தன் தந்தையின் தோலில் சாய்ந்துக்கொண்டாள்.. "சாரிப்பா.. உங்கள நான் புரிஞ்சிக்காம தப்புபன்னிட்டேன்.. நீங்க எப்பவுமே என் செல்ல அப்பா தான்.." என்று அழுதுகொண்டே சொன்னவளின் தலையை தடவிக்கொண்டே "நானும் சாரிடா.." என்று சேகரும் அழ.. இவர்களின் சம்பாஷனைகளை கண்ட ராஜீ தான் ஏதோ தப்பு செய்துவிட்டது போல் உணர்ந்தார்..

வீட்டிற்கு வந்த விஷ்வா ஆதியை கட்டிக்கொண்டு "தேங்ஸ்டா மச்சான்.. எப்படா பேசுன எனக்கு தெரியாம.." என்று கேட்க.. "ம்ம்ம்.. நீ அன்னைக்கு நான் அவள பன்றனா இல்லையானே தெரியல மச்சான்.. ஐடியா கொடேண்டான்னு கேட்டியே... அன்னைக்கே ஐடியாபன்னி தங்கச்சியோட அப்பாகிட்ட பேசிட்டேன்.." என்று சாதாரணமாக சொன்ன நண்பனை கண்டு மீண்டும் பெருமைக்கொண்டான் விஷ்வா...
 

Gayus

Writers Team
Tamil Novel Writer
ஆதியும், விஷ்வாவும் தற்கொலைகள் நடந்த ஏரியாவை சுற்றி உள்ள டெக்ஸ்டைல்ஸில் உள்ள, மூன்று மாதத்திற்கு முன்னாடி ரெக்கார்ட் செய்த சிசி டிவி கேமராவை செக் செய்யும் வேலையில் இறங்கினர்... மதியம் இரண்டு மணியளவில் ஆதிக்கு ஹரிஷிடம் இருந்து போன் வர எடுத்து பேசினான்... "ஆதி நீ சொன்ன பேர்ல நேத்து யாரும் ட்ரீட்மெண்ட் பன்னல.." என்று ஹரிஷ் சொல்ல.. "ஓஓ.. ஓகே தேங்ஸ்மா..." என்று போனை வைத்தவன்.. ஒரு முடிவுக்கு வந்தான்...

இப்படியே நாட்களும் சென்றது.. ஆதி இளாவின் திருமணத்திற்கு ஏழு நாட்களே இருக்கும் பட்சத்தில் சென்னையில் உள்ள நண்பர்களுகெல்லாம் இன்விட்டேஷன் வைக்க என்று பிசியாக இருந்தான் ஆதி.. அந்த சமயத்தில் விஷ்வா பக்கத்து வீட்டிற்கு குடிப்பெயர்ந்தான்.. ஆதிக்கும் அவன் இப்படி செய்வான் என்று தெரியும்.. நண்பர்கள் அல்லவா..

ஹரிஷின் வீட்டிற்கு சென்று ஆதி இன்விடேஷன் வைக்க.. பாட்டியும் அங்கே தான் இருந்தார்.. அதில் இருந்த மணப்பெண் இளா என்று தெரியவர.. "ஆதி யூ ஆர் வெரி லக்கி.. ஷீ இஸ் கரக்ட் மேட்சிங் யூ.. ஆனா செம்ம வாலு பார்த்து இருந்துக்கோ.." என்று ஹரிஷ் சொன்னதும்.. "ம்ம்ம்.. அப்போ என் தங்கச்சிக்கூட செம வாலுதான் நீயும் பார்த்து இருந்துக்கோ..." என்று சொன்ன ஆதியை அதிர்ச்சியாக பார்த்தவன் "உனக்கு எப்படி தெரியும்.." என்று திக்கிதினறிக் கேட்டான் ஹரிஷ்.. "அதெல்லாம் அப்பவே தெரியும்.. மறக்காம கல்யாணத்துக்கு வந்துரு.. இல்லனா நந்து என்ன உண்டுஇல்லனு பன்னிடுவா..." என்று சொன்ன ஆதியிடம் "ரொம்ப தேங்ஸ் மச்சான்.." என்று சொல்லி கட்டிக்கொண்டு விடுவித்தான்..

கல்யாணத்திற்கு நான்கு நாட்களே இருக்க ஊருக்கு கிளம்பினார்கள்.. ஆதியும் விஷ்வாவும்.. கேஸை ராஜனிடம் கொஞ்ச நாளைக்கு ஒப்படைத்திருந்தனர் இருவரும்... ஆனால் ஆதிக்கு அந்த கல்பிரிட் அவனாக இருந்தால்.. என நினைத்துக்கொண்டே தான் ஊருக்கு சென்றான்...

இளா குடும்பத்தினரும் ஊருக்கு புறப்பட்டனர்.. பூர்வீக வீட்டை நோக்கி... ரேஷ்மியின் வீடும் ஆதியின் வீடும் பக்கத்து பக்கத்து வீடுதான்.. ரேஷ்மியின் அம்மாதான் இளாவை பற்றி ஆதியின் அம்மாவிற்கு சொன்னது.. இளாவின் பூர்வீக வீடும் அதே தெருவில் தான் இருந்தது...

- தொடரும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top