AMP-11

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hii...frds& sis...AMP 11 epi pottachu .... Padichittu comments kodukka marakkadhinga..... Happy reading....:):):)


அத்தியாயம் - 11

இயற்கையிலேயே ஒருவர் மீது புதிதாக வரும் அன்பு....
நிறைய சந்தோஷங்களையும், சில துக்கங்களையும் அள்ளி தரும்...
அதுபோல் தான் நமக்கு துணையாக வருபவனும், வருபவளும்...

தனது அறையில் கோயம்புத்தூர் கிளம்பிக்கொண்டிருந்த இளாவின் மனதில்.. "ம்ம்ம்... அவன்கூட எப்படி பேசறது.. எப்படியும் ஊர்ல இருந்து வர்றதுக்கு ரெண்டு நாளாகும்.. என் மனசுல இருக்கறத சீக்கிரமா சொல்லனும்னு தோணுது... ஆனா எப்படி... ச்ச்ச போன் நம்பர்கூட தெரியாதே... கடவுளே எதாவது பண்ணு.." என்று நினைத்துக்கொண்டே ஹாலுக்கு சென்றாள்... அங்கே எல்லோர்க்கும் முன்னாடி கிளம்பி ஷோபாவில் அமர்ந்திருந்த தன் அண்ணணை கண்டவள்.. அவனின் அருகில் போய் தொப்பென்று அமர்ந்தாள்...

அவள் அமர்ந்ததில் அதிர்ந்தவன்.. அவளை "ஏய்.." என்று திட்டப்போக.. தங்கையின் முகம் சரியில்லாததைக் கண்டவன்... "ஏய்.. இளா என்னாச்சிடா.. டல்லா இருக்க.." என்று கேட்க.. "அதுவந்துண்ணா.. நான் ஒன்னு கேட்பேன்.. தப்பா எடுத்துக்காத.." என்று சொன்னவளை கண்டு சிரித்தவன்.. "நீ என்னவேணா கேளுடா.." என்று அவளின் தலையை தடவிக்கொண்டே கேட்க.. "ம்ம்ம்... எனக்கு அவரோட போன் நம்பர்.. வேணும்ணா.." என்று சொல்லிவிட்டு கீழே குனிந்துக்கொண்டாள்.. ரோஹித்தோ "இவள் என் தங்கையா..." என்று நினைத்து அடக்கமுடியாமல் சிரிக்க.. அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள்.. "உன்கிட்ட போய் கேட்டேன் பாரு.. என்ன சொல்லனும்.." என்று எழுந்து போனவளின் கையைப் பிடித்துநிறுத்தியவன்... "லூசு.. நில்லுடி.. ஆல்ரெடி ஆதி என்கிட்ட நம்பர் கொடுத்து.. மச்சான் உன் தங்கச்சிகிட்ட என் நம்பர கொடுத்துடுன்னு.. சொல்லிட்டு தான் போனார்..." என்று சொல்ல... அழகாய் முகம் மலர்ந்தவள்.. அவனிடம் ஆதியின் நம்பரை வாங்கி தனது மனதில் பதிய வைத்துக்கொண்டாள்...

சிவராமும், சீதாவும் கிளம்பி வர... அனைவருமாய்.. கோயம்புத்தூர்க்கு பயணித்தனர்... ஆனால் அங்கே ரோஹித்க்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.. என்று தெரியாமல் சந்தோஷமாக இருந்தான்.. பின்ன அதான் இளா.. தன் தோழியின் சோகத்தை தாங்கமுடியாமல் அவள் ஊருக்கு செல்லும் முன்னே ரேஷ்மியிடம் அனைத்தையும் சொல்லிவிட்டாளே...

இரவு நேரத்தில் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த இளா.. தன் பக்கத்தில் உறங்கும் அம்மாவைவிட்டு தள்ளி அமர்ந்து... ஆதிக்கு போன் செய்ய.. இதற்காகவே காத்திருந்ததுபோல் அவனும் எடுத்தான்... இருவரும் அமைதியாக இருக்க... முதலில் ஆதிதான் "லாலீபாப்.. எதுக்கு இப்போ போன் செஞ்சிட்டு அமைதியா இருக்க.." என்று கேட்க.. "அது.. அது.. உங்ககிட்ட ஒன்னு கேட்கவா..." என்று சொல்ல.. "அதான்.. காலம் முழுக்க நீ சொல்றததான கேட்கப்போறேன்.." என்று நினைத்துக்கொண்டு.. "ம்ம்ம்.. கேளு.." என்று சொன்னான்.. "உங்களுக்கு.. என்ன..பிடிச்.." என்று சொல்ல வந்தவளை தடுத்து... "உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... ஏன் உனக்கு என்ன பிடிக்கலையா..." என்று அவன் வேண்டுமென்றே கேட்க... "இல்ல இல்ல... ரொம்ப பிடிக்கும்... அதுவும் உங்க கண்ணு என்ன ரொம்ப டிஸ்டர்.." என்று சொல்ல வந்தவள் தான் உளறிவிட்டதை எண்ணி நாக்கை கடித்துக்கொண்டாள்... அவள் சொன்னதை கேட்ட ஆதி சிரித்துக்கொண்டான்.. "ஏய்.. லாலீபாப் உன்கிட்ட என்ன பத்தி நிறைய சொல்லனும்.. போன்ல வேணா நேர்ல மீட்ல பண்ணலாமா.." என்று ஆதி கேட்க... "ம்ம்.. ஆனா நாங்க இப்போ கோயம்புத்தூர் போறோமே..." என்று சொல்ல... "அது தெரியும் ஏற்கனவே மச்சான் சொல்லிட்டான்... வந்ததுக்கப்புறம்.. மீட் பண்ணலாம்.." என்று சொன்னான் ஆதி... "ம்ம்ம்.. அப்புறம்... நீங்க என்கிட்ட.. ஒன்னு சொல்லவே இல்லையே..." என்று இளா கேட்க... "என்ன சொல்லல.." என்று அவன் கேட்க.. "அதான்.. ஐ லவ் யூ.." என்று ஹஸ்கி வாய்சில் அவள் சொல்ல.. சிரித்துக்கொண்ட ஆதி.. "அது சொன்னாதான் என்ன ஏத்துக்குவியா.." என்று கேட்க.. "அப்படில்லாம்.." என்று அவள் சொல்ல வர.. யாரோ கத்தும் சத்தம் பயங்கரமாக கேட்க.. ஆதி போனை வைத்துவிட்டு வெளியே ஓடினான்...

வெளியே சென்ற ஆதி சுற்றிமுற்றிப் பார்க்க... மீண்டும் அந்த குரல் கேட்க.. அது வந்த திசை சுந்தரிபாட்டியின் வீட்டிலிருந்து.. ஆதி கதவை தட்ட.. அது திறந்தபாடில்லை.. அதற்குள் விஷ்வா, ஹரிஷ்,நந்து என அனைவரும் வெளியே வந்தனர்... ஆதியும் விஷ்வாவும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே போக.. அங்கே மயக்க நிலையில்கிடந்தார் பாட்டி... அவரை விஷ்வாவிடம் ஒப்படைத்தவன்.. வினிஷா அறைக்கு சென்று பார்க்க எல்லாம் அலங்கோலமாக கிடந்தது.. பால்கனிக்கு சென்று எட்டிப்பார்க்க.. அங்கே ஒரு பூ ஜாடி கீழே விழுந்து.. மண் சிதறி கிடக்க.. அதில் ஒரு ஷூவின் மார்க் பதிந்து இருந்தது.. வேறு யாரும் இல்லை என்றவுடன்.. "ஷிட்.." என்று காலை தரையில் உதைத்தான் ஆதி...

பாட்டியை ஆம்புலன்ஸ் மூலமாக ஹாஸ்பிட்டல் கொண்டு சென்றனர்...அங்கே அவரை அட்மிட் செய்துவிட்டு இரண்டு கான்ஸ்டபிளை காவலுக்கு இருக்க சொல்லிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டனர்..ஆதி விஷ்வா மற்றும் ஹரிஷ்... வண்டி ஓட்டிக்கொண்டிருந்த ஆதி.. விஷ்வாவிடம் "விஷ்வா... நாளைக்கு நீ ஊட்டிக்கு போய்.. நான் சொன்ன டீடெய்ல்ஸ் எல்லாம் கலெக்ட்.. பண்ணிட்டு வந்துடு.. எனக்கு இங்க கொஞ்சம் முக்கியமான வேல இருக்கு.. அந்த நாய கண்டுபிடிச்சி முடிச்சிட்டு தான் மறுவேல..." என்று கர்ஜித்தவனை கண்டு... ஹரிஷ் பயந்துவிட்டான்... "என்னா கோவம்.. நான் இவரு தங்கச்சிய காலைல சைட்டடிச்சது மட்டும் இவருக்கு தெரிஞ்சது அவ்ளோதான்.. அந்த பொண்ணுகிட்ட இருந்து ஒதுங்கியே இருக்கனும்.." என்று நினைத்துக்கொண்டான்...

அப்பார்ட்மெண்ட்டின் உள்ளே சென்ற ஆதி.. காரை ரிவர்சில் கொண்டு வந்து வாட்ச்மேனிடம்... "நாங்க வெளிய போனபிறகு வேறயாராவது.. வெளியப் போனாங்களா..." என்று கேட்க... "இல்ல.. சார்.." என்று அவன் சொல்ல... "ஓகே... வேலயப்பாருங்க.." என்று உள்ளே சென்றான்... மூவரும் இறங்கி... அவரவர் வீட்டிற்கு செல்ல.. ஹரிஷ் தனது வீட்டின் கதவை திறக்க... ஆதி "ஹரிஷ்.. ஒரு ப்வைவ் மினிட்ஸ் உங்ககிட்ட பேசனும்..." என்று சொல்ல... "ஆஹா... இப்பதான நினைச்சோம்.. இவரு தங்கச்சிய சைட் அடிக்க கூடாதுன்னு.. அதுக்குள்ள தெரிஞ்சிடுச்சா..." என்று மனதில் நினைத்தவன்... "ம்ம்ம்... பேசலாம் சார்..." என்று சொல்ல.. மூவரும் உள்ளே ஆதியின் அறைக்கு சென்றனர்...

"ஹரிஷ்... நீங்க எத்தன வருஷமா இங்க இருக்கீங்க.." என்று கேட்க.. "நான் நாலு வருஷமா இங்கதான் சார் இருக்கேன்..." என்று ஹரிஷ் சொல்ல... "இங்க இருக்கறவங்கல பத்தி கொஞ்சம் தெரியனும்...அதான் உங்கள இந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ணவேண்டியதா போச்சி.. சாரி..." என்று ஆதி சொன்னான்... ஹரிஷ் அங்கே இருப்பவர்களை பற்றி சொல்லிக்கொண்டிருக்க... நடுவில் நந்து காஃபி கொண்டு வந்தாள்... அவளை பார்த்த ஆதி... "ஏய்... குட்டிமா தூங்காம என்ன பண்ற நீ.." என்று சத்தம்போட... "டேய்.. அண்ணா.. இப்போதான் எழுந்துருச்சேன்.. சரி நீங்க வந்துட்டீங்களான்னு... பார்க்க வந்தா... பேசிட்டிருந்தீங்க.. சரி காஃபி போட்டு எடுத்துட்டுவந்தா.. ஒவரா பேசுற... விஷ்வா அண்ணா இதெல்லாம் நீங்க கேட்கமாட்டீங்களா.." என்று விஷ்வாவை வம்புக்கு இழுத்தாள்... "ஆஹா.. இவ என்ன வச்சி ஏதோ ப்ளான் பண்ணிட்டா..." என்று நினைத்த விஷ்வா... "பாவம்டா நந்து.. நமக்காக காஃபி போட்டு எடுத்துட்டு வந்துருக்கா... அவளப்போய் திட்டுற..." என்று சொல்லிவிட்டு காஃபியை எடுத்து குடிக்க ஆரம்பித்துவிட்டான்...

அவளின் ஒவ்வொரு செய்கையும் ஹரிஷை கவர... அப்படியே திறந்த வாய் மூடாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்... இவனை கண்ட நந்து சிரித்துக்கொண்டே "காஃபி குடிங்க... ஆறிடப் போகுது.." என்று சொல்லிவிட்டு சென்றாள்...
மூவரும் பேசிவிட்டு உறங்க சென்றனர்...

ஆதி தூங்கப் போகும் முன் டேபிளில் வைத்துவிட்டு சென்ற போனை எடுத்துப் பார்க்க.. மூன்று மிஸ்ட் கால்களும், ஒரு மெசேஜ்ம் இளாவிடமிருந்து வந்திருக்க.. மெசேஜை ஓப்பன் செய்ய.. "எனக்கு தூக்கம் வருது.. நாளைக்கு நீங்கதான் கால் பண்ணணும்... அப்புறம் முக்கியமா... ஐ லவ் யூ சொல்ல மறந்துடாதிங்க... குட் நைட்..." கூடவே மூன்று ஆவிகள் ஸ்மைலீஸ் வேறு... என்று இருக்க.. சிரித்த ஆதிக்கு ஏனோ மனது லேசானதுபோல் இருந்தது... அப்படியே உறங்கிப்போனான்...
விஷ்வாவோ.. நாளைக்கு ஊட்டிக்கு செல்வதை நினைத்து கவலையாக இருந்தான்.. பின்ன இருக்காத முதல் தடவையாக ஷாலியும் இவனும் அவுட்டிங் செல்வதாக ப்ளான் செய்து இருந்தனர்... ஹரிஷ் நந்துவின் புன்னகை முகத்தை நினைத்துக்கொண்டே தூங்கிப்போனான்...

ஆனால்.. இவர்களுக்கு நேர்மாறாக... கோவத்தின் உச்சியில் இருந்தான் தாஸ்... "ச்ச்ச... இந்த கிழவியால இன்னைக்கு மாட்டிருப்பேன்... அந்த பட்டன் வேற காணோம்... ஒரு வேல அந்த ஆதி எடுத்துருப்பானோ..." என்று யோசிக்க.. "அப்படியே எடுத்திருந்தாலும் எதாவது அவன்கிட்ட இருந்து ஆக்ஷன் வந்துருக்குமே.. இதுவரைக்கும் எதுவும் நடக்கல... சீக்கிரமா இங்க இருந்து வேற இடத்துக்கு ஷிப்ட் ஆகனும்.." என்று எதோவொரு பயத்திலேயே தூங்கினான்...

காலையில் ஹோட்டலில் ரெப்ரஷ் செய்து கொண்டு பதினொரு மணியளவில் ரேஷ்மியின் வீட்டை அடைந்தனர் இளாவின் குடும்பம்...
அவர்களை வரவேற்ற ரேஷ்மியின் குடும்பத்தினர் அமர சொல்ல.. இருக்கையில் அமர்ந்தனர் அனைவரும்... ரோஹித்தின் பார்வை ரேஷ்மியின் அறையை தேடிக்கொண்டிருந்தது... அண்ணனின் பார்வையை உணர்ந்த இளா.. மனதுக்குள் "அய்யோ.. இந்த ரேஷ்மிகிட்ட வேற அண்ணன் பண்ணத சொல்லிட்டேனே... என்ன பண்ணப் போறான்னு தெரியலையே... ஆண்டவா நீதான் என் அண்ணன காப்பாத்தனும்..." என்று வேண்டிக்கொண்டே அமர்ந்திருந்தாள்...

பெண்ணை அழைத்து வர சொல்லி பெரியவர்கள் சொல்ல.. ரேஷ்மியும் வர.. எல்லோர்க்கும் காஃபி கொடுத்துக்கொண்டே வந்தவள்... கடைசியாக அமர்ந்திருந்த ரோஹித்க்கு காஃபியை நீட்டியவள் அவனை பார்த்து முறைக்க.. ஆனால் அவள் முறைப்பதுக்கூட தெரியாமல் அவளை ரசித்துக்கொண்டே காஃபியை வாயில் வைத்தவனின் முகம் அஷ்டகோணலாக மாறியது.. உப்பை கொட்டிவைத்திருந்தாள் ரேஷ்மி... அண்ணனின் முகத்தை பார்த்த இளா... சிரித்துவிட்டாள்..

கடைசியாக ரோஹித்திடம் பெண்ணை பிடித்திருக்கிறதா என்று கேட்க.. அவன் உடனே தலையை ஆட்டிக்கொண்டே "ம்ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு.." என்று சொல்ல அனைவரும் சிரித்துவிட்டனர்...
ரேஷ்மியிடம் கேட்க... "எனக்கு பிடிக்கலப்பா... நான் ஒருத்தர லவ் பண்றேன்பா..." என்று அவள் சொன்னதும் ரோஹித் அதிர்ந்து இருக்கையில் இருந்து எழுந்துவிட்டான்... "என்.. என்ன சொல்ற ரேஷ்..." என்று அவன் கேட்க... அவனின் ரியாக்ஷனை கண்ட ரேஷ்மி சிரித்துவிட... ரோஹித்தின் தோளை தொட்ட ரேஷ்மியின் அப்பா கேசவன் "சாரி தம்பி... அவரு மட்டும்தான் என்கிட்ட விளையாடுவாறா.. நானும் விளையாடுவேன்னு... நேத்து என்கிட்ட... நாளைக்கு என்ன நடந்தாலும் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டா..." என்று சொல்ல... அப்பாடா.. என்று மூச்சுவிட்டவன்.. அவளை முறைத்துப் பார்க்க... அவள் உள்ளே ஓடிவிட்டாள்...

-தொடரும்
 

Keerthi elango

Well-Known Member
Nice epi...nalla velayanda reshmi paavam paiyan...patharitan....haha...elam lolipop pandra vela...3 pair ume super... Keep rockinggg dr...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top