Akila Mugilan's Oru Kural Polae Nee Enakullae 4

Advertisement

mallika

Administrator
EPISODE 3

வாங்க மாப்பிள்ளை என்று கார்த்திக் உள்ளே நுழையும் போதே மாதங்கி வரவேற்றார்.





அத்தை எத்தனை தடவை சொல்றது எப்பயும் போல கார்த்தின்னு கூப்பிடுங்க அது தான் எனக்கு பிடிச்சிருக்கு இப்படி கூப்பிட்டா டிஸ்டன்ஸ் வருது சோ வேணாம் ..



கார்த்திக்கின் நலம் விசாரித்து விட்டு அவனுக்கு காபி கலக்க மாதங்கி கிட்செனுள் சென்றதும் நான் ரோஹிணி ரூம் போறேன் அத்தை.. "காபி யா அர்ஜுன் கிட்ட குடுத்து அனுப்புங்க "என்று சொல்லிவிட்டு ரோஹிணி அறைக்கு சென்று விட்டான் .



அர்ஜுன் மனதுக்குள் அம்மா தனக்கும் சேர்த்து காபி கொண்டு வருவார்கள் என நம்பிக்கை இருந்தது ஆனால் மாதங்கி ஒரே ஒரு காபி கப்பை கொண்டு வந்து அர்ஜுன் முன் இருந்த டீப்பாயில் வைத்து விட்டு சென்று விட்டார் ...அதை பார்த்ததும் அர்ஜுன் முகம் சுருங்கி விட்டது அதை மாதங்கி யும் கவனித்தார் ...ஒரு அம்மாவாக அவனின் தவறை மறக்க முயன்றாலும் ஒரு பெண்ணாக அவரின் மகனின் செயல் அவரை மிகவும் காய படுத்தியது.



அர்ஜுன் தன்னை தேற்றிக்கொண்டு காபியை எடுத்துக்கொண்டு ரோஹிணி யின் அறை கதவை தட்டினான்.



உள்ள வாடா என்ற குரலுக்கு உள்ளே சென்று பார்த்தால் ரோஹிணி கார்த்திக்கின் மடியில் தலை வைத்து உறங்கி கொண்டிருந்தாள் ..



ஏண்டா எழுப்பலையா ?.இல்ல அர்ஜுன் எழுப்பினேன் மடியில் படுத்துட்டா தூங்கட்டும் விடு .



கார்த்திக் அவ உன்னை தேடுறா நீ டெலிவரி வரைக்கும் இங்கேயே இரு டா .



அதான் நானும் யோசிக்கிறேன் டா ..எனக்கும் இவ இல்லாமல் இருக்க முடியல..வீட்டுக்கு போய் அண்ணா கிட்ட பேசிட்டு வரணும் .



இவர்கள் கொஞ்சம் நேரம் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் போது ரோஹிணி எழுந்து விட்டாள் . கார்த்திக்கை பார்த்ததும் ரோஹிணி முகத்தில் அப்படி ஒரு பொலிவு அதை அர்ஜுன் கவனித்தான் ..அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி "நான் ரூம் போயிட்டு ப்ரஷ் ஆகிட்டு வரேன் டா" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் .



ரூமை விட்டு வெளியே வந்ததும் அர்ஜுன் மனக்கண்ணில் தோன்றியது ஷ்ரத்தா அவனை பார்த்தாள் அவளின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பது தான்..ஷ்ரத்தாவின் கோப முகம் தான் நினைவுக்கு வந்தது.."கண்டிப்பா நம்மள பார்த்தா மூஞ்சில ஆசிட் ஊத்துனாலும் ஊத்துவா".எதுக்கும் அதை எல்லாம் இமெஜின் பண்ணாம இருக்கறது நமக்கு நல்லது என்று நினைத்து கொண்டு அவனின் அறைக்கு சென்று விட்டான் .



இரவு 7 மணிக்கு கார்த்திக் அவனின் வீட்டிற்கு செல்வதற்கு தாயாராக இருந்தான் .அர்ஜுன் வருவதற்காக வெயிட் பண்ணி கொண்டு இருந்தான்.



ரோஹி மூஞ்ச தூக்கி வச்சுகாத நான் 2 டேஸ் கழிச்சு வந்து இங்கேயே ஸ்டே பண்றேன் ..



சரிங்க பட் 2 டேஸ் தான் டைம்.." என்று அவனிடம் செல்லம் கொஞ்சி கொண்டிருந்தாள் .



என்னடா கால்ல விழுந்துட்டியா என்று கேட்டு கொண்டே அர்ஜுன் கீழ் இறங்கி வந்தான் ..



"அப்படி கூடம் உங்க பையனுக்கு வாழ தெரியல இதுல அவன் இவங்கள கிண்டல் பண்றான் "..என்று மாதங்கி பட்டென்று ராகவனிடம் சொல்லி விட்டார்.



அர்ஜுன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நான் வெளிய இருக்கேன் டா நீ வா என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.



கார்த்திக் வெளிய வந்து சாரி மச்சான் என்னால தான் என்று மன்னிப்பு கேட்டான்..



நீ ஏன் இவ்வளவு ஃபீல் பண்ற கார்த்திக் எனக்கு இது பழகிடுச்சி .. அப்படியாச்சும் அவங்க என்கிட்ட பேசுறாங்களேனு எனக்கு சந்தோஷம் தான் .



சரி நான் வரேன் அர்ஜுன் ..பாய் டா .. என்று விடை பெற்றான் ..



இரவு உணவு உண்பதற்காக அர்ஜுன் யும் வெளியே சென்று சாப்பிட்டு விட்டு ,பீச் க்கு சென்று காரை நிறுத்தி விட்டு இறாங்காமலே பழைய நினைவுகளை அசை போட்டு கொண்டிருந்தான் ....மணி 11 ஆனதும் நாளைக்கு ஃபர்ஸ்ட் ஒரு டிடெக்டிவிடம் சென்று பேச வேண்டும் என்று முடிவெடுத்து வீட்டிற்கு கிளம்பினான் .



ஷ்ரத்தா விற்க்கு சென்னை என்றதுமே பழைய நினைவுகள் வந்து விட்டது ..ஆனாலும் அவளது மகள் அவளின் குறும்பால் இவளை அதிலிருந்து வெளியே கொண்டு வந்து விட்டாள்.



நாட்கள் வேகமாக சென்று சென்னை செல்லும் நாளும் வந்தது..அருந்ததி க்கு முதல் ஃப்ளைட் பயணம் என்பதால் உற்சாகமாக கிளம்பி வந்து இருந்தாள்.இவளை ஃப்ளைட் ஏற்றி விட்டு தான் ரகு அண்ணன் ஊருக்கு கிளம்பினார்.



மிதுணுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று சென்னை வருவதை சொல்லவில்லை .



சென்னை வந்து இறங்கியதும் அரவிந்த் காருடன் நின்று இருந்தான் .



தாங்க்ஸ் அரவிந்த் ..என்று காரின் சாவியை பெற்று கொண்டு .அவளுக்காக புக் பண்ண ஹோட்டலின் விவரங்களை கேட்டு கொண்டாள்.



இதை கூடம் பண்ணமாட்டனா ...நீ கேட்டது எல்லாம் பக்காவா ரெடி பண்ணி குடுத்துட்டேன்..உனக்கு சென்னை புதுசு இல்ல இருந்தாலும் பத்திரமா இருந்துக்கோ ..நான் நாளைக்கு விருது விழா க்கு நேராக வந்துடுறேன் நீயும் வந்துடு என்று மேலும் சில விவரங்களை சொல்லி விட்டு அரவிந்த் விடை பெற்று கொண்டான்.



ஷ்ரத்தா பேபி ஐ உட்கார வைத்து சீட் பெல்ட் போட்டு விட்டாள் அது ஜாலியாக வேடிக்கை பார்த்து கொண்டு வந்தது.



ஷ்ரத்தா விற்கு சென்னை வந்திறங்கியதில் இருந்து பழைய நியாபகங்கள் மனதை பிசைந்தது ..இருந்தாலும் அனைத்தையும் ஒதுக்கி விட்டு சென்னை யின் மாற்றங்களை கவனித்து கொண்டே ஹோட்டல் வந்து அடைந்தாள்.



அவர்கள் தங்க வேண்டிய ஹோட்டல் வந்து இறங்கி செக் இன் எல்லாம் முடித்து சாப்பிட என்ன வேண்டும் என்று ஆர்டரும் குடுத்து விட்டே ரூமிற்குள் சென்றாள் .



உள்ளே வந்ததும் பேபி க்கு கார்ட்டூன் வைத்து குடுத்து பார்க்க சொல்லி விட்டு இவள் ஃப்ரெஷ் ஆகி பேபி க்கும் எல்லாம் முடிக்கவும் ..இரவு உணவு வரவும் சரியாக இருந்தது ..



சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில் குழந்தை உறங்கி விட்டது ..



இவளும் குழந்தையின் பக்கத்தில் படுத்துக் கொண்டு யோசித்து கொண்டு இருந்தாள் ....அவள் தங்கி இருப்பது அடையாரில் அவளின் வீடு இங்கு இருந்து 10 நிமிடம் தான் பெசன்ட் நகர் ஏரியாவில் உள்ளது ..அங்கிருந்து இரண்டு தெரு தள்ளி அர்ஜுனின் வீடு ..



இப்படி எல்லோரும் இருந்தும் இவள் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்க வேண்டிய நிலை ..



இதற்கு காரணம் அர்ஜுன் மட்டும் தான் என்றாலும் ..இவளின் பிடிவாதம் மற்றொரு காரணம் ..



அவளின் குடும்பத்தின் மேல் எந்த தவறும் இல்லை ..இருந்தாலும் அவர்களை சந்தித்தால் அர்ஜுன் குடும்பமும் அவளிடம் நெருங்கும் என்ற காரணத்தினால் விலகி இருக்கிறாள் ..



ஏனோ அர்ஜுனின் துரோகம் இவளை யாரிடமும் நெருங்க விடாமல் தடை செய்தது.



இப்பொழுதெல்லாம் அரு பேபி அப்பா பற்றி கேட்க ஆரம்பித்து விட்டாள் ...என்னதான் அவளுக்கு பதில் சொல்லி சமாளித்தாலும் ,"என்னோட பிடிவாதத்தால் தான் என் மகள் அப்பா இல்லாமல் வளர்கிறாலோ என்ற குற்ற உணர்வு அடிக்கடி வருகிறது ".



எல்லாவற்றையும் யோசித்து கொண்டு உறங்கி விட்டாள்..



மறுநாள் காலை எழுந்து " நல்ல அழகான ஃபுல் லெந்த் சல்வார் அணிந்து ,அவளின் நீளமான முடியை ஒரு போனிடைலில் அடக்கி ஒரு சிறிய போட்டு வைத்து கொண்டு விருது வழங்கும் விழாவுக்கு ரெடி ஆனாள்"..



இவளின் சல்வாரின் நிறத்திலேயே பேபி க்கும் ஒரு ஃப்ராக் அணிந்து தலையில் ஒரு பூ போட்ட கிளிப் சொருகி அழைத்து கொண்டாள்.



அங்கு இவர்களுக்கு முன்னே அரவிந்த் மற்றும் அவனின் மனைவி வந்து காத்திருந்தனர் ..



காரை விட்டு இவர்கள் இறங்கி வருவதை பார்த்த அரவிந்தின் மனைவி "ப்பா ரெண்டு பேரும் போட்டி போட்டுட்டு அழக வரமா வாங்கிட்டு வந்து இருப்பாங்க போல..அவ்ளோ அழகா இருக்காங்க" என்று அரவிந்திடம் சொன்னாள் ..



ஆமா ..இவளை அவார்டு வாங்க மட்டும் வர வைக்கல ..எப்படியாச்சும் சென்னை வந்தாலாச்சும் அவ ஃபேமிலி நியபாகம் வந்து அவங்க கூட சேர்ந்துட கூடாதான்ற ஆசையில் தான் வர வச்சேன் என்றான் ..



அவ்வளவு நல்லவனா நீ என்று அவனின் மனைவி அவனை பார்த்து கேட்டாள் ..ஏனென்றால் அவளுக்கு தெரியும் ஷ்ரத்தா வேலையை விட்டு வந்தால் அது அர்ஜுனின் கம்பெனி க்கு மிகப்பெரிய நஷ்டம் ..இருந்தாலும் அதை யோசிக்காமல் ஷ்ரத்தா வின் வாழ்க்கை பற்றி யோசிப்பது நினைத்து இன்னும் காதல் வந்தது அவனின் மேல் ..



ஷ்ரத்தா அரவிந்த் மனைவி ஏற்கனவே அறிமுகம் என்பதால் ப்ரீ ஆக பேசினாள்..



விருது வழங்கும் விழா நல்ல படியாக முடிந்தது ..இதன் மூலம் அரவிந்த் கம்பெனியின் பெயர் அங்கு பேச பட்டது ..அதுவே அரவிந்த் க்கு மகிழ்ச்சி ..



விழா முடிந்து வெளியே வந்ததும் அரவிந்திடம் சொல்லி கொண்டு ஷ்ரத்தா வெளியே கிளம்பினாள் ..



இன்றும் நாளையும் சென்னையை அவளின் பேபி க்கு சுற்றி காட்ட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தாள்.



அதன்படி சென்னையின் மிக பெரிய மால் க்கு சென்று சமீபத்தில் ரிலீஸான 3D கார்ட்டூன் படத்திற்கு அழைத்து சென்றாள் ..



இவர்கள் இருவரும் தியேட்டர் எல்லாம் சென்று படம் பார்த்தது இல்லை அதனால் பேபி க்கு அப்படி ஒரு சந்தோஷம்.



படம் முடித்து விட்டு வெளியே வந்து கொஞ்சம் ஷாப்பிங் மற்றும் இரவு உணவையும் அங்கேயே முடித்து கொண்டு அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலை வந்து அடைந்தனர் .



ஊர் சுற்றிய களைப்பில் பேபி சீக்கிரமாக உறங்கி விட்டாள் ..இவளும் நாளைக்கு இவளின் உயிர் தோழன் ஹரீஷ் ஐ மீட் பண்ண செல்ல வேண்டும் .. சர்ப்ரைஸ் ஆக போய் பார்க்க வேண்டும் என்று முடிவு பண்ணி படுத்து விட்டாள்..
 

mallika

Administrator
அந்த பக்கம் மாலை 5 மணிக்கே ரோஹிணி க்கு லேபர் பெயின் வந்து விட்டது ...அவர்கள் மருத்துவ மனையிலேயே அட்மிட் செய்து சிறிது நேரத்திற்கெல்லாம் ஆண் குழந்தை பிறந்தது ..



கார்த்திக்கின் அண்ணன் சரண்,அண்ணி வைஷ்ணவி ,அர்ஜுன்,ரோஹிணி அம்மா ,அப்பா எனஅனைவரும் மருத்துவ மனையில் தான் இருந்தனர் ..



அனைவரும் கார்த்திக்கிற்கு வாழ்த்து சொல்லி விட்டு குழந்தையை பார்ப்பதற்காக வெயிட் பண்ணி கொண்டு இருந்தார்கள். .



நார்மல் டெலிவரி என்பதால் பெரிதாக சிக்கல் எதுவும் இல்லை ..அதுவும் பிரசவம் பார்த்தது வர்ஷினி தான் ..



கொஞ்சம் நேரம் சென்று நார்மல் வார்டுக்கு மாற்றிய பின் ஒவ்வொரு வராக பார்த்து விட்டு வந்தனர் .



கொஞ்சம் நேரம் கழித்து சரணும்,வைஷ்ணவி யும் நாளை வருவதாக சொல்லி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்..



அவர்கள் மருத்துவமனை என்பதால் அவர்களுக்கு என்றே தனி அறை இருந்தது... ராகவனை வீட்டுக்கு அனுப்பி விட்டு அர்ஜுன் அங்கேயே உறங்கி விட்டான் ..



கார்த்திக் ,மாதங்கி இருவரும் ரோஹிணி அறையில் தங்கி கொண்டனர் ..



மறுநாள் ஞயிற்றுக்கிழமை என்பதால் அர்ஜுன் பொறுமையாக 8 மணிக்கு எழுந்து வீட்டிற்கு சென்று ஃப்ரெஷ் ஆகி 10 மணி போல் மருத்துவமனை வந்தான் ..



கார்த்திக் "நீ வீட்டுக்கு போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா ..நான் இங்க இருக்கேன் " என்றான் ..



இல்லை அர்ஜுன்" அத்தை ,மாமா வரட்டும் அப்புறம் நான் போறேன் " என்று சொல்லி விட்டு அர்ஜுனின் பக்கத்திலேயே அமர்ந்தான்..



கொஞ்சம் நேரத்திலேயே வருண், வர்ஷு இருவரும் வந்தனர் ..குழந்தையை தூக்குவதற்காக வர்ஷினி கை கழுவ சென்றாள் அப்பொழுது அவளின் மொபைல் ஒலித்தது ..



வருண் போன் அட்டெண்ட் பண்ணி வர்ஷுவிடம் குடுக்கும் போது கை பட்டு லவுடு ஸ்பீக்கர் ஆன் ஆகி விட்டது ..



வர்ஷுக்கா என்ற அழு குரல் தான் முதலில் கேட்டது ..அந்த குரலை கேட்டதும் அனைவருக்கும் அதிர்ச்சி ..இது ஷ்ரத்தா வின் குரல் தான் என்று .



அழு குரல் என்றதும் வர்ஷா யாரையும் கவனிக்காமல் "ஷ்ராவ்ஷ் என்ன ஆச்சு அழாத சொல்லு அருந்ததி க் எதாச்சும் பிராப்ளம் ஆ "என்று கரெக்ட் ஆக கேட்டாள்..



ஆமா க்கா சடன் ஆ பிட்ஸ் வந்து மயக்கம் போட்டு விழுந்துட்டா ..ஃபர்ஸ்ட் அய்டு பண்ணியாச்சு ..



வர்ஷூ,"ஷ்ரத்தா உடனே பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல்ல அரு வை அட்மிட் பண்ணு நான் உடனே கெளம்பி கொச்சின் வரேன்"



நான் கொச்சின் ல இல்ல சென்னை ல தான் இருக்கேன் ..



வாட் சென்னையா ..?சரி அழாத உன் ஹாஸ்பிடல் க்கு தூக்கிட்டு வா



அட்ரஸ் சொல்லுங்க நான் அடையார் ல இருக்கேன் ..



பெசன்ட் நகர் வா நான் எல்லாம் ரெடி பண்ணுறேன் .ஃபர்ஸ்ட் நீ அழுகாம வா சரி கம் க்விக் பாய் என்று சொல்லி விட்டு பிறகு தான் வர்ஷுவுக்கு சுற்றம் உரைத்தது ...





எல்லோரும் வருஷுவயே பார்த்தனர் .. வருண் மட்டும் தெளிவாக இருந்தான் அவள் பேசியது ஷ்ரத்தா விடம் தான் என்று ..மற்ற இருவரும் வர்ஷுவயே பார்திருந்தனர் ..



சாரி அர்ஜுன் என்று வர்ஷா சொன்னதுமே ..வருண் வர்ஷவை ஓங்கி ஒரு அறை வைத்திருந்தான் அவளின் கன்னத்தில் ....



எவ்வளவு பெரிய விஷயத்தை நீ எங்க கிட்ட மறைச்சுருக்க தெரியுமா ..உனக்கு அர்ஜுன் கஷ்டபடுறத பார்த்து கூடமா சொல்லணும் தோணலை ..



வர்ஷூ எதுவுமே பேசவில்லை..அர்ஜுனை பார்த்தால் அவன் ஒரு உணர்வற்ற நிலையில் இருந்தான் ..கார்த்திக் தான் முதலில் சுதாரித்து "சரி போ எல்லாம் ரெடி பண்ணு என்று அனுப்பி வைத்தான் ".



அப்பொழுதும் அவள் வெளியே செல்லும் முன் "பிளீஸ் அவ கண்ணு முன்னாடி யாரும் வராதீங்க".. என்று சொல்லி விட்டு தான் சென்றாள்.



வருண்,"அர்ஜுன் ஏன் அமைதியா இருக்க ..நல்ல சான்ஸ் அர்ஜுன் அவ இங்க வந்துட்டா திரும்பி எங்கேயும் போக விடாமல் பண்றது உன் கையில் தான் இருக்கு"...என்று அர்ஜுனின் கையை ஆறுதலாக பிடித்து கொண்டு கூறினான் .



"சரி வருண்" இதை தவிர அர்ஜுன் எதுவுமே பேச வில்லை ..அவன் மனதுக்குள் மிகவும் போராடிக்கொண்டு இருக்கிறான் என புரிந்தது.



கார்த்திக் தான் நான் சரண் அண்ணா விற்கு கால் பண்றேன்.அண்ணியால் தான் ஷ்ரத்தா கிட்ட நெருங்க முடியும் என்று ஃபோன் பேச சென்று விட்டான்.



போன் எடுத்ததும் "சொல்லு கார்த்திக் எதாச்சும் கொண்டு வரணுமா உனக்கு" என்று சரண் கேட்டான்.ஒண்ணுமில்ல அண்ணா ,அண்ணிக்கிட்ட போன் குடு கொஞ்சம் பேசணும் என்றான் ..



சரண் வைஷ்ணவி யிடம் போன் குடுக்கும் போதே டல்லாக பேசுறான் என்னனு கேளு என சொல்லிவிட்டு தான் குடுத்தான் .



அப்படியா குடுங்க என்று வாங்கி காதில் வைத்து சொல்லு கார்த்திக் ஏன் வாய்ஸ் டல்லா இருக்கு என்று கேட்டாள் .



அண்ணி "ஷ்ரத்தா வராலாம் இங்க ஹாஸ்பிடல் க்கு வர்ஷினியை பார்க்க "..நீங்க உடனே கெளம்பி வாங்க என்று சொல்லி விட்டு போன் வைத்து விட்டான்..



அவனுக்கு தெரியும் இப்பொழுது அவன் அண்ணி பேச முடியாமல் அழுது கொண்டு இருப்பார் .



வைஷ்ணவி கண்ணில் நீரை பார்த்ததும் என்னாச்சு நீ ஏன் இப்படி இருக்க என்று சரண் பதட்டமடைந்தான் ..



ஷ்ரத்தா வந்துருக்காளாம் ஹாஸ்பிடல் க்கு ..வாங்க உடனே போலாம் என்று சரணை கூட்டிக் கொண்டு கிளம்பினாள் ..



சரணுக்கும் கண் கலங்கி விட்டது..மற்றவர்களுக்கு விட இவர்களுக்கு தான் வலி அதிகம் ..இவர்களின் முதல் குழந்தையே ஷ்ரத்தா தானே .



போன் வைத்து அடுத்த 15 நிமிடத்தில் ஹாஸ்பிடல் வந்து இருந்தால் ஷ்ரத்தா..அவளின் கண்ணில் படாதவாறு அர்ஜுன் ,கார்த்திக்,வருண் மூவரும் நின்று இருந்தனர் ..



அவள் காரை விட்டு இறங்கியதும் பார்த்தனர் ..பார்த்தது பார்த்த படி நின்று விட்டினர் அர்ஜுன் க்கு உலகமே நின்று விட்டது ..



அர்ஜுன் பக்கத்தில் இருந்த சுவற்றில் ஓங்கி குத்தினான் ..அதில் தெளிந்த கார்த்திக்கும் வருனும் "என்ன அர்ஜுன்" என்று கத்தினர்..கார்த்திக்கை கட்டிக் கொண்டு கதறி விட்டான்..



அய்யோ என்ன பண்ணி வச்சுருக்கேன் நான் என்னடா இப்படி மாறி போய் இருக்கா ..இப்ப தான் டா நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்கேன் என்று புரியுது என்று உணர்ச்சி வச பட்டான் .



அர்ஜுன் இப்படி எளிதில் உணர்ச்சியை வெளிக்காட்டும் ஆள் கிடையாது ..அவன் நினைப்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும் ..



இந்த பக்கம் ஷ்ரத்தா அழுது கொண்டே வந்து குழந்தையை அட்மிட் பண்ணி விட்டு வெளியே உட்காந்து இருந்தாள்..



ஷ்ரத்தா வை செக்கப் பண்ணி விட்டு வர்ஷினியும் ,இன்னொரு குழந்தை ஸ்பெசலிஸ்ட் டாக்டரும் வந்து கொண்டு இருந்தனர் ..



டாக்டர் என்ன ஆச்சு,ஏன் இப்படி சடன் ஆ பிட்ஸ் வந்துச்சு என்று வரிசையாக கேள்வி கேட்டாள்..



ரிலாக்ஸ் Mrs. அர்ஜுன் இத ஈஸி ஆ சரி பண்ணிடலாம் ..நீங்க ரொம்ப வொரி பண்ணாதீங்க ..மீதி டீட்டில்ஸ் டாக்டர் வர்ஷினி சொல்லுவாங்க..என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.



வர்ஷூ க்கா என்று அவளை கட்டி கொண்டாள் ,ஷ்ரத்தா பயப்படாத இதுலாம் இப்ப ஜெனிடிக் ஆ கூடம் வருது ..உனக்கு தெரிஞ்சு யாருக்காச்சும் இருக்கா உங்க வீட்ல..



எனக்கு தெரிஞ்சு என் ஃபேமிலி ல இல்ல பட் அவனுக்கு சின்ன வயசில வந்துருக்கு ..அர்ஜுன் க்கா ?



எஸ்..



சரி நீ இங்க இரு நான் டெஸ்ட்

ரிசல்ட் பார்க்கணும்..ஒரு 1 ஹவர் கழிச்சு தான் பேபி ய பார்க்க விடுவாங்க..நான் வந்துடுறேன் ...



சரி நீங்க போங்க .. வர்ஷினி நகர்ந்ததும் ஓய்ந்து போய் அமர்ந்து கண்ணை மூடி கொண்டாள்..வரும் வழியிலேயே மிதுனுக்கும் கால் பண்ணி சொல்லி விட்டாள் ..



அர்ஜுன் அவளை மட்டுமே பார்த்தான் ..பார்த்தான் பார்த்துக் கொண்டே இருக்கிறான் .. ஒரு கருப்பு கலர் லாங் ஸ்லீவ்லெஸ் டாப் (maxi type)

,கழுத்தில் ஒரு பிளாட்டினம் மெல்லிய செயின்..அவன் கட்டிய தாலி இல்லை ..ஒரு கண்ணுக்கு தெரியாத பொட்டு ..இவ்வளவு தான் அவள் அணிந்து இருந்தது..ஆனாலும் அதிலும் அவள் பேரழகி தான் அர்ஜுன் கண்ணிற்கு ..ஆனால் அவனுக்கு அவனின் பழைய ஷ்ரத்தா நியாபகத்தில் வந்தாள்..



ஷ்ரத்தா முன்பு சற்று பூசிய உடல்வாகு அவளின் வயதுக்கு அது கொஞ்சம் அதிகம் என்று தோன்றும்..எப்பொழுதும் ஸ்லீவ்லெஸ் டாப் வித் ஸ்கர்ட் தான் அவளின் உடை ..அதை தவிர வேறு அணியவே மாட்டாள்.முகத்தில் எப்பொழுதும் ஒரு சிறு பிள்ளை தனமான சிரிப்பு இருக்கும் இப்பொழுது இருகி போய் இருந்தது பக்கத்தில் யாரையும் நெருங்க விடாத மாதிரியான தோற்றம் ..



ஷ்ரத்தா எழுந்து அந்த தளத்தின் முடிவில் இருந்த விநாயகர் சிலை முன் அமர்ந்து விட்டாள் ..உன்கிட்ட இப்ப வரைக்கும் எதுமே கேட்டது இல்லை பிளீஸ் என் குழந்தையை எனக்கு பத்திரமா குடுத்து விடு என்று கண்ணை மூடி வேண்டி கொண்டிருந்தாள் ..அர்ஜுன் அதை கவனித்து கொண்டிருந்தான்..



அர்ஜுன் மட்டும் அல்ல,கார்த்திக் ,வருண் அப்பொழுது வந்த சரண் அனைவருமே அவளையே தான் பார்த்து இருந்தனர்.அவர்களின் ஷ்ரத்தா இப்பொழுது இல்லை என்று மட்டும் நன்றாக புரிந்தது..



அப்பொழுது கரெக்ட் ஆக மிதுன் வந்தான் ...மிதுனை பார்த்ததும் ஷ்ரத்தா சென்று அனைத்து கொண்டு அழுக ஆரம்பித்து விட்டாள் ..அப்படி ஒரு அழுகை நமக்கு உரியவர்களிடம் மட்டும் வரும் தடையற்ற அழுகை .



மிதுனுக்கு அதட்டினால் தான் இப்பொழுது அவள் அழுகையை நிறுத்துவாள் என்று தெரிந்து ஒரு அதட்டல் போட்டான்.."இப்ப நீ அழறத நிறுத்து உன்னை பார்க்கிறதா இல்லை பேபி யை பார்க்கவா " என்று சத்தம் போட்டான் .



நான் தான் வந்துட்டேன்ல நான் பார்த்துக்கிறேன் நீ வா உட்காரு என்று இரண்டு பேரும் உட்காந்து ஷ்ரத்தா அவன் மடியில் படுத்து கொண்டாள் ..
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அகிலா முகிலன் டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
very nice up late ta vandalum super epi oda vandingale:cool::cool: sekrama adutha epi thanga
 

Chittijayaram

Well-Known Member
Hi mam nice epi, Arjun pavam shradha va ninaichitu feel panran, shradha ku Ava baby Dan mukkiyam, Arjun shradha va parthu pesuvana nu terialaye, pesina shradha Enna pesuvala ellaya teriala, thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top