ஹாய் ஹாய் ஹாய் நட்புக்களே... கீத்ஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்...
அப்படி என்ன சந்தோஷம்னு பார்க்கறீங்களா?! எனக்கு இது ரொம்பவே சந்தோஷமான விஷயம் தாங்க! 12 வயசுல இருந்து வாழ்க்கைல கஷ்டங்களையும், இழப்புகளையும், அவமானங்களையும் மட்டுமே அதிகமா சந்திச்ச கீதுவுக்கு, இன்னிக்கு இறைவன் ஒரு அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். என்னடா ரொம்பவே பில்ட் அப் பண்றா? ஒருவேளை ஏதாவது விருது வாங்கிட்டாளோன்னு யோசிக்கிறீங்களா?! எஸ்ஸ்ஸ் இன்னிக்கு கீதுவுக்கு அவளோட எழுதுப்பணியையும், அவளோட வாழ்க்கைல அவ சந்திச்ச போராட்டங்களையும் தாண்டி அவ தனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கிட்டு இருக்காங்கிறதை பாராட்டியும், பம்மல், ஸ்ரீ சங்கரா வித்தியாலய பள்ளியில் பெண்மையை போற்றுவோம் என்ற விழாவில் என்னையும் சேர்த்து 19 பெண்மணிகளை அவரவர் துறையிலும், அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் புரிந்த பணிகளையும் பாராட்டி விருது வழங்கி உள்ளனர். எம்போன்றோருக்கு இவ்வகை விருதுகள் மிகவும் ஊக்குவிக்கும் விதமாகவும், உற்சாகமூட்டும் விதமாகவும், எங்கள் பணிகளை மென்மேலும் சிறப்புடனும் பொறுப்புணச்சியுடனும் செய்யவும் வழிகோலாய் அமைகிறது.
இப்படி ஒரு விருதை நான் பெறுவதற்கு மிக முக்கிய காரணிகள் வாசகர்களாகிய நீங்களும், என் எழுத்து பயணத்தின் முதல் அடியை நான் எடுத்து வைப்பதற்கு மிக மிக உறுதுணையாய் இருந்த பெண்மை உறுப்பினர்களும், அன்பு சகோதரிகளுமான சுமதி ஸ்ரீனி அக்கா, ஜெயந்தி அக்கா, உமா மனோஜ் அக்கா, கார்த்தி, வெண்ணிலா சந்திரா, அதைப் புத்தக வடிவில் வெளியிட்ட அருண் ஐயா, லட்சுமணன் அய்யா, இந்த தளத்தில் கதை எழுத உந்துதலாய் இருந்த மல்லி அவர்களும்தான். எனவே தங்கள் அனைவருக்கும் என் அன்பும் பணிவும் கலந்த முதற்கண் நன்றிகள்.
இத்தகைய அற்புதமான வாய்ப்பை எனக்கு அளித்த இறைவனுக்கும், ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி சான்றோர்களுக்கும், இதற்கு முழுமுதற்க்காரணமாய் இருந்த என் அன்பு தங்கை சக்தி அதாவது சரயுவிற்கும், ஜெயந்தி மா அவர்களுக்கும், ரேணுகா மேம் அவர்களுக்கும் என் அன்பும், பணிவும் கலந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
இந்த நேரத்துல இன்னொரு முக்கியமான ஒருத்தருக்கு நான் நன்றி செலுத்த கடமை பட்டிருக்கேன். அது யாருன்னு உங்கள்ல பல பேருக்கு தெரிஞ்சிக்கும். 15 வயசுல இருந்து தாயில்லாத குறையே தெரியாம என்னை கவனிச்சுக்கிற என் தாயுமானவர், நான் இன்னிக்கு இந்த நிலைமைலயும் உயிர் வாழ முழுமுதற்க்காரணமாய் விளங்கும் என் அன்பு உலகமாகிய என் தந்தை! My lovvvvvve my world My everything..... அவருக்கு என்னோட இந்த சிறு வெற்றியை நான் சமர்ப்பிக்கிறேன். நான் இந்த விருதை வாங்கி கொண்டு வந்து என் அப்பா கிட்ட காண்பிக்கும் போது அவர் முகத்துல எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? என்னால அந்த அன்பு தெய்வம் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் ஒரு சின்ன சந்தோஷம் இன்னிக்கு நான் அவருக்கு கொடுத்திருக்கேன். Thanks for giving such a wonderful moment in my life sakthi dear.
தங்களுக்கும் மிக்க மிக்க நன்றி வாசகத் தோழமைகளே...



அப்படி என்ன சந்தோஷம்னு பார்க்கறீங்களா?! எனக்கு இது ரொம்பவே சந்தோஷமான விஷயம் தாங்க! 12 வயசுல இருந்து வாழ்க்கைல கஷ்டங்களையும், இழப்புகளையும், அவமானங்களையும் மட்டுமே அதிகமா சந்திச்ச கீதுவுக்கு, இன்னிக்கு இறைவன் ஒரு அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். என்னடா ரொம்பவே பில்ட் அப் பண்றா? ஒருவேளை ஏதாவது விருது வாங்கிட்டாளோன்னு யோசிக்கிறீங்களா?! எஸ்ஸ்ஸ் இன்னிக்கு கீதுவுக்கு அவளோட எழுதுப்பணியையும், அவளோட வாழ்க்கைல அவ சந்திச்ச போராட்டங்களையும் தாண்டி அவ தனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கிட்டு இருக்காங்கிறதை பாராட்டியும், பம்மல், ஸ்ரீ சங்கரா வித்தியாலய பள்ளியில் பெண்மையை போற்றுவோம் என்ற விழாவில் என்னையும் சேர்த்து 19 பெண்மணிகளை அவரவர் துறையிலும், அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் புரிந்த பணிகளையும் பாராட்டி விருது வழங்கி உள்ளனர். எம்போன்றோருக்கு இவ்வகை விருதுகள் மிகவும் ஊக்குவிக்கும் விதமாகவும், உற்சாகமூட்டும் விதமாகவும், எங்கள் பணிகளை மென்மேலும் சிறப்புடனும் பொறுப்புணச்சியுடனும் செய்யவும் வழிகோலாய் அமைகிறது.
இப்படி ஒரு விருதை நான் பெறுவதற்கு மிக முக்கிய காரணிகள் வாசகர்களாகிய நீங்களும், என் எழுத்து பயணத்தின் முதல் அடியை நான் எடுத்து வைப்பதற்கு மிக மிக உறுதுணையாய் இருந்த பெண்மை உறுப்பினர்களும், அன்பு சகோதரிகளுமான சுமதி ஸ்ரீனி அக்கா, ஜெயந்தி அக்கா, உமா மனோஜ் அக்கா, கார்த்தி, வெண்ணிலா சந்திரா, அதைப் புத்தக வடிவில் வெளியிட்ட அருண் ஐயா, லட்சுமணன் அய்யா, இந்த தளத்தில் கதை எழுத உந்துதலாய் இருந்த மல்லி அவர்களும்தான். எனவே தங்கள் அனைவருக்கும் என் அன்பும் பணிவும் கலந்த முதற்கண் நன்றிகள்.
இத்தகைய அற்புதமான வாய்ப்பை எனக்கு அளித்த இறைவனுக்கும், ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி சான்றோர்களுக்கும், இதற்கு முழுமுதற்க்காரணமாய் இருந்த என் அன்பு தங்கை சக்தி அதாவது சரயுவிற்கும், ஜெயந்தி மா அவர்களுக்கும், ரேணுகா மேம் அவர்களுக்கும் என் அன்பும், பணிவும் கலந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
இந்த நேரத்துல இன்னொரு முக்கியமான ஒருத்தருக்கு நான் நன்றி செலுத்த கடமை பட்டிருக்கேன். அது யாருன்னு உங்கள்ல பல பேருக்கு தெரிஞ்சிக்கும். 15 வயசுல இருந்து தாயில்லாத குறையே தெரியாம என்னை கவனிச்சுக்கிற என் தாயுமானவர், நான் இன்னிக்கு இந்த நிலைமைலயும் உயிர் வாழ முழுமுதற்க்காரணமாய் விளங்கும் என் அன்பு உலகமாகிய என் தந்தை! My lovvvvvve my world My everything..... அவருக்கு என்னோட இந்த சிறு வெற்றியை நான் சமர்ப்பிக்கிறேன். நான் இந்த விருதை வாங்கி கொண்டு வந்து என் அப்பா கிட்ட காண்பிக்கும் போது அவர் முகத்துல எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? என்னால அந்த அன்பு தெய்வம் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் ஒரு சின்ன சந்தோஷம் இன்னிக்கு நான் அவருக்கு கொடுத்திருக்கேன். Thanks for giving such a wonderful moment in my life sakthi dear.
தங்களுக்கும் மிக்க மிக்க நன்றி வாசகத் தோழமைகளே...

