வசந்தம்-9 அ

Advertisement

surthi

Well-Known Member
தன்னை நோக்கி வரும் உருவத்தை கண்டு அதிர்ந்து நின்ற ரிஷி க்ரிஷ் ன் அலறல் சத்தத்தில் நினைவுக்கு வந்தான் காரணம் அங்கு காருக்கு முன் விழுந்த அந்த உருவத்தின் மேல் மேலும் இரண்டு சிறிய உருவங்கள் எங்கிருந்தோ பாய்ந்து விழுந்து முதுகில் அமர்ந்து சண்டை இட்டு கொண்டிருந்தது இல்லை இல்லை அவர்களுக்குள் சண்டை இட்டு கொண்டும் கீழிருந்த உருவத்தை மொத்திக் கொண்டும் இருந்தது இவர்கள் சண்டையை உணர்ந்த கீழ் இருந்த அந்த பெரிய உருவம் தலையில் கை வைத்து இருந்தது .
அந்த சிறிய உருவங்கள் வேறு யாரும் இல்லப்பா கிரிஷ்டோபர் அடுத்தது மாதவ் தான் பெரிய உருவம் ஜோசப்
க்ரிஷ் ன் அலறல் சத்தத்தில் நினைவுக்கு வந்த ரிஷி தன் காருக்கு முன் பரிதாபமாக விழுந்திருந்தத ஜோசப் இடம் சென்றான்
யாருடா இது நம்ம கிட்ட வருது சரி அது யாருனு கொஞ்சம் தலையை நிமிர்ந்து தான் பார்ப்போமே
தலையை நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஐய்ஐய் யோ நடு ரோட்டில ஒரு காருக்கு முன்னாடியா விழுந்து கிடக்கோம் நல்ல வேளை நமக்கும் பசங்களுக்கும் ஒன்னும் ஆகல என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே வெளியே ஒன்றும் நடவாதது போல டேய் பசங்களா வாங்கடா வீட்டுல போய் மிச்ச மீதி சண்டையை கண்டினுயூ பண்ணலாம் என்றானே பார்க்கலாம் கார் ஓட்டி ஜோ வை மேலும் கீழும் பார்த்தார் என்றால் ஜாலி பேர் வழியான க்ரிஷ்ற்கே இரத்த அழுத்தம் ஹை யில் எகிறியது
இதில் அதிசயமாக ரிஷி கோபப்படாமல் இருந்ததோடு மீல்லி மீட்டர் அளவு அவன் முகத்தில் புன்னகையும் தோன்றியது
ரிஷி சிரிப்பதற்கும் அநாமிகா அவர்களை நெருக்குவதற்கும் சரியாக இருந்தது
அநி அவர்களை நெருங்கியவுடன் அவ்விருவரையும் முறைத்த முறைப்பில் இருவரும் தலையை குனிந்து கொண்டு ஜோசப்பின் பின் அவன் கால்களை இருக்கி கட்டி கொண்டனர்
இதில் இன்னும் ஆத்திரம் கொண்ட அநி டேய் இவ்வளவு நேரம் அண்ணன நடு ரோட்டுல தள்ளி அவர் மேல ஏறி உட்கார்ந்து சண்டை போடும் போது எங்க போச்சு இந்த பயம் இப்போ நான் வந்த உடனே அவர் பின்னேயே போய் ஒளியரரேங்களா உங்கள என்று அவள் கையை ஓங்கி கொண்டு போகவும் அதுவரை அமைதியாக அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த ரிஷி அவள் கையையை பிடித்து தடுத்தான்
ரிஷி அநாமிகாவின் கையை பிடித்தது தான் தாமதம் அநாமிகாவிற்கு உடல் முழுவதும் ஷாக் அடித்தது போல் இருந்தது தலையில் பாரம் ஏறியது போலும் கண்ணுக்குள் எதேதேதோ காட்சிகள் வந்து வந்து போய் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது இதில் தன்னை அடக்கி கொண்டு அநாமிகா திரும்பி ரிஷியை பார்த்தால் அவனை நேர்கொண்டு பார்த்தவுடன் அவளுக்கு எண்ண தோன்றியதோ ஷிவ் என்று அலறிக்கொண்டே ‌‌அவன் கழுத்தை கைகளால் இருக்கி அவனிடம் அடைக்கலம் ஆனாள் அப்படியே அவன் நெஞ்சில் தோய்ந்து அரை மயக்க நிலைக்கு சென்றாள் முதலில் அவளின் அழைப்பில் கோபமும் சந்தோஷமும் வருத்தமும் கொண்டிருந்த ரிஷி அவள் பாய்ந்து தன்னை அணைத்து கொண்ட உடன் நெகிழ்ந்தே விட்டான் ஆனால் விதி அவனை பார்த்து நீ. வேண்டிய அளவு இப்போதே சந்தோஷ பட்டுக்கொள் இன்னும் சிறிது நேரத்தில் உன் சந்தோஷம் எல்லாம் ஒட்டு மொத்தமாக வருத்தமாக மாற போகிறது பார் என்று நினைத்து முடிக்கவில்லை அதற்குள் அநாமிகா (அனுரிதா) ரிஷியின் கைகளில் அரை மயக்க நிலையில் தோய்ந்து விழுந்தாள்.
அவள் சரிவதை உணர்ந்த ரிஷி அனு அனு என்று கூப்பிட்டு கொண்டே அவள் கன்னத்தை தட்டினான் ரிஷியின் பதட்டத்தை கண்ட க்ரிஷ் ஓடி வந்து அனுவின் கையை பிடித்து பார்த்தான்
அண்ணா ஒன்னும் இல்ல அதிர்ச்சி மயக்கம் தான் கொஞ்சம் தூங்கின சரியாகிடும் ணா என்று க்ரிஷ் கூறும் போதே அனுவை சோதித்திருந்த ஜோசப்பும் அதை உறுதி படுத்தினான்

சார் அநாமிகாவிற்கு சாதாரண அதிர்ச்சி மயக்கம் தான் அவ இப்படி மயங்கி விழறது ஒன்னும் புதுசில்லை அவ இங்க வந்ததில் இருந்தே அவளுக்கு டீரிட்மேண்டு பாக்கறது நானும் என் மனைவி மேரியும் தான் அதனால பயப்படற மாதிரி அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
அதோட எவ்வளவு நேரம் இங்கேயே இருக்கிறது இங்க ஆள் நடமாட்டம் நிறைய இருக்காது அதனால தான் கூட்டம் கூடல யாராவது இங்க வரத்துக்குள்ள வாங்க இங்கேயிருந்து போயிடலாம்
அதுவும். சரி தான் உங்க வீடு இங்க பக்கத்திலயா இருக்கு மிஸ்டர்….
ஜோசப் என் பெயர்
ஓ.. தேங்க்ஸ் ஜோசப்
இட்ஸ் ஓகே டாக்டர். க்ரிஷ் இங்க பக்கத்தில வீடு எதுவும் இல்லை ஒரு 15 – 20 நிமிஷம் நடந்தா நாங்க இருக்கிற இடத்துக்கே போய்டலாம்
கார்ல போன பத்து நிமிஷம் தான் நீங்க கார்ல நேரா போய் மரியம் வீடு எது அப்படினு கேளுங்க அங்க உள்ளவங்க சொல்வாங்க நான் பசங்கள கூட்டிகிட்டு நடந்து வரேன்
சரி அப்ப நாங்க அனுவை கார்ல கூட்டிட்டு போறோம்
ம்ம்ம்
இதில் எதுவும் தலையிடாது ரிஷி அனுவையே பார்த்து கொண்டு இருந்தான்

இங்கு ஜோசப் வீட்டில் மரியம் அமர்ந்திருந்த சோஃபாவில் இருந்தபடியே பைபிளை படிப்பதும் மணியை பார்ப்பதும் பின் வாசலை பார்ப்பதுமாக இருந்தார்

இதை கிச்சனில் வேலை செய்து கொண்டே இவரை கவனித்து இருந்த மேரி என்ன அம்மா எதுக்கு இப்போ வீட்டு வாசலையும் மணியையும் மாறி மாறி பார்த்துட்டு இருக்கிங்க
ஏன் உனக்கு தெரியாதாமா எல்லாம் குழந்தைகளும். ஜோசஃப்பும் இன்னும் காணலையே ன் தான்
மேரியும் மரியமும் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் வீட்டின் வாயிலில் ஏதோ ஒரு வாகனத்தின் சத்தம் கேட்டது அதை கேட்டவுடன் மரியம் அவசர அவசரமாக எழுந்து வாயிலை நோக்கி சென்றார் என்றால் மேரி மனதில் யோசித்து கொண்டே சென்றால் காரணம் மேரிக்கு நிச்சயமாக தெரியும் இப்போது வந்திருப்பது ஜோசப்பும் குழந்தைகளும் இல்லை என்று வேறு யாராவதுதாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணி கொண்டே வாயிலை நெருங்கவும் ரிஷி காரில் இருந்து இறங்கி அனுவை தூக்கி கொண்டு உள்நுழைந்தான் அதை பார்த்து மரியத்திற்கும் மேரிக்கும் உள்ளூர பதட்டம் ஏற்பட்டாலும் அதை மறைத்து கொண்டு அனுவை நோக்கி விரைந்தனர்
அனுவை பக்கத்தில் இருந்த அறையின் கட்டிலில் விட சொன்ன மேரி அவளை பரிசோதிக்க தொடங்கவும் மேரி மரியம் ரிஷியையும் க்ரிஷையும் ஹாலிற்கு அழைத்து வந்து தன் கேள்வி அம்புகளை வீச ஆரம்பித்தார்
அனுக்கு என்னாச்சு தம்பி ? நீங்க யாரு? அனு உங்ககிட்ட எப்படி கிடைச்சா ? என்ன தம்பி நான் கேட்டுகிட்டே இருக்கேன் பதில் சொல்ல மாட்டேங்கிறேங்க என்று பேசிக்கொண்டே இருந்தவர் திடீரென்று பேச்சை நிறுத்தி ரிஷியை கூர்ந்து கவனித்தார் பின் என்ன நினைத்தாரோ வேகமாக எழுந்து நின்று ஐயா மன்னிச்சுடுங்க நீங்கனு தெரியாம நான் ஏதேதோ பேசிகிட்டே இருந்துட்டேன் என்று அவர் முடிக்கவில்ல ரிஷி எழுந்து அவரிடம் நான் மன்னிக்கற அளவுக்குத் நீங்க எந்த ஒரு பெரிய தப்பையும் பண்ணல மாயா அம்மா
மாயா அம்மா என்ற வார்த்தையை கேட்டு மரியம் கண்கலங்க ரிஷியை நிமிர்ந்து பார்த்து கண்களில் கருணை அன்பு பாசம் நிறைய அவன் முகத்தை தடவி மகிழ்ந்தார் என்றால் அவ்வார்த்தையை கேட்டு இன்னொரு ஜீவனும் உள்ளம் உடல் உயிர் அனைத்தும் அதிர நின்றது
அப்போது அனுவிற்கு ஒன்றுமில்லை என்று அறிந்து வெளியே வந்த மேரி ஜோசப் வாசலில் சிலை போல நிற்பதை கண்டு அவனிடம் சென்றாள் ஆனால் ஜோசஃப் தன்னிடம் நெருங்கிய மேரியை தவிர்த்து ரிஷியை நோக்கி சென்றான் அப்போது மேரி அறையில் இருந்து வெளி வந்து வீட்டின் வாயிலை நோக்கி செல்வதை கண்ட மரியம் தன் பார்வையை வீட்டு வாயில் பக்கம் திருப்பினார் அவரின் பார்வையை தொடர்ந்து ரிஷியும் திரும்பி பார்த்தான் அங்கு ஜோசஃப் தன்னை நோக்கி வருவதை கண்டு ஜோசஃப்பை கூர்ந்து பார்த்தான் ரிஷியின் பார்வை தன்னை உடூவூருவுவதை உணர்ந்தவன் தன் தலையை தாழ்த்தி கொண்டான் அதுவும் ஒரு நிமிடம் தான் பின் என்ன நினைத்தானோ நிமிர்ந்து ரிஷியை மேலிருந்து கீழாக தவிப்புடன் பார்த்தான்
இவ்வளவு நேரம் ஜோசஃப்பை கூர்ந்து பார்த்து கொண்டிருந்த ரிஷியின் புருவமோ ஜோசஃப்பின் தவிப்பை பார்த்து உயர்ந்தது என்றால் மனமோ கோபத்தில் கொதித்தது அதை. அடக்க வழி தெரியாமல் ரிஷி ஜோசஃப்பை இருகன்னத்திலும் இரு அறை விட்டு அவனை இழுத்து அணைத்து கொண்டான் இதை பார்த்து க்ரிஷ் ஆச்சரியத்துடன் ரிஷியை பார்த்தான் என்றால் மற்றும் மேரி அதிர்ச்சியுடன் இருவரையும் பார்த்தாள் ஆனால் ஏற்கனவே ரிஷியை பார்த்தவுடன் அநி மயங்கியதில் கோபமாக இருந்த மாதவ் ரிஷி இப்போது தனக்கு மிகவும் பிரியமான தானும் க்ரிஸ்டோபரும் குறும்பு செய்தால் தங்களை திட்டாமல் தங்களுடன் இணைந்து குறும்பு செய்வது அப்படி செய்து யாரிடமாவது மாட்டிக்கொண்டால் அவர்களிடம் இருந்து தங்களை தப்பிக்க வைத்து விட்டு அதற்கும் சேர்த்து திட்டு வாங்குவது என்று எல்லோர் மீதும் அன்பாகவும் பாசமாகவும் இருக்கும் தன் ஜோவை ரிஷி அடித்தது மாதவ் ஆல் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் கோபத்தில் ரிஷி நெருங்கினான் ஆனால் ரிஷி. தன்னை விட உயரமாக இருந்தது இன்னும் கோபத்தைக் கொடுக்க என்ன செய்கிறோம் என்று உணராமல் ஜோவ விடு ஜோவ விடு என்று கூறிக்கொண்டே மாதவ் ஆல் எவ்வளவு உயரம் எம்ப முடியுமோ அவ்வளவு எம்பி நின்று அவன் பிஞ்சு கைகளால் ரிஷியை அடிக்க ஆரம்பித்த விட்டான் இதை எதிர்பாராத அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து அவனை தடுப்பதற்குள் மரியம் மாதவின் முதுகில் அடிக்க கை ஓங்கவும் ஜோசஃப்யிடம் இருந்து பிரிந்து அவரை கை நீட்டி தடுத்தான் ரிஷி மரியத்தை தடுத்த ரிஷி மாதவின் உயரத்திற்கு சம்மணம் இட்டு தரையில் அமர்ந்தான் அதை பார்த்து ஜோசஃப் மரியம் க்ரிஷ் மூவரும் பதற இதை எல்லாம் ஒன்றும் புரியாமல் வெறும் பார்வையாளர் ஆக மட்டும் பார்த்து கொண்டிருந்தனர் மேரியும் க்றிஸ்டோபரும்.
இவ்வளவு நேரம் ரிஷியை அடித்துக்கொண்டு இருந்த மாதவ் மரியமே தன்னை அடிக்க கை ஒங்கியதில் பயந்திருந்தாலும் ரிஷி தன் எதிரில் அமரவும் அவனை முறைத்து வைத்தான் மாதவ் தன்னை முறைப்பது ரிஷிக்கு சிரிப்பை வரவழைத்தது

இங்கு அனைவரும் இவ்வாறு இருக்க அங்கு அறையில் அநிக்கு மெது மெதுவாக முழிப்பு வந்தது அநி முழிப்பு வந்தவுடன் அவளுக்கு என்ன தோன்றியதோ விழுக்கென்று எழுந்தமர்ந்தாள் அவள் வாய் தானாக எதையோ முனுமுனுத்து கொண்டே அறையை சுற்றி முற்றி பார்த்தாள் முதலில் அவளுக்கு ஓன்றுமே புரியவில்லை தலைவேறு சிறிது பாரமாக இருப்பதாக தோன்றியது அதனால் தலையில் கையை சிறிது கண்களை மூடினாள் அப்பொழுது அவளின் மூடிய அவளது இமைக்குள் அவள் பிறந்தது முதல் தற்போது வரை நடந்தவை எல்லாம் படமாக ஓடியது பட்டென்று கண்களை திறந்தாள் அப்பொது தன் எதிரில் இருந்த உருவத்தையும் தன் பக்க வாட்டில் இருந்த டிரேஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தையும் கண்டு அவளின் இதயம் அதிர்ச்சியில் வாய் வழியே வந்து விடும் அளவுக்கு துடித்ததோடு அநியின் மனம் தான் இழக்க கூடாத சிலவற்றை இழந்துவிட்டதாக கூப்பாடு போட்டது என்றால் புத்தியோ மிக பெரிய தவறு நடந்துள்ளதை உணர்த்தியது

அநியின் யோசனையை முற்றும் முழுதாக உணர்ந்தது போல அநியின் எதிரில் இருந்த உருவம் அநி மனதில் நினைத்தவற்றுக்கு எல்லாம் பதில் சொல்ல துடங்கவும் அநி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள்..



வசந்தம் பூக்கும்.......................................
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்ப நாள் கழித்து நீங்க வந்ததால்
இந்த அழகான ஸ்டோரியை எல்லோரும்
மறந்திட்டாங்க போலவே, ஸ்ருதி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top