மெல்லிய காதல் பூக்கும் P26

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
உன் கண்ணில் என் விம்பம் நியாபகம் வரும்...:):)


download (13).jpg
ரிஷிக்கு கீதாராணி செய்யும் கொடுமைகளை கண்டு அமுதவள்ளி ரிஷி அங்கிருந்து சென்று விட்டால் போதும் என்று கடவுளை எந்தநாளும் பிரார்த்திக்க அன்று பந்து விளையாடும் பொழுது குட்டி மலருக்கு என்ன தோன்றியதோ!





காவலாளி கேட்டில் இல்லாத நேரம் கேட்டும் திறந்திருக்க, கீதாராணியின் வேட்டை நாய்களும் மலர் இருக்கும் பொழுது ரிஷியை ஒன்றும் செய்யாது என்பதால் பந்தை தூக்கி வெளியே எறிந்தாள். அது பாதையின் மறு விளிம்பிற்கு உருண்டோடியது.





எடுத்து கொண்டு வா என்றால் ரிஷி கேட்டை தாண்டி ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டான் என்று அறிந்தவள் கீழே உருண்டு, புரண்டு அழ ரிஷியும் வேறு வழியில்லாது பாதையை கடந்தான்.





அவன் பாதையை கடக்கும் போதே கேட்டை இழுத்து பூட்டியவள் அவனுக்கு பலிப்புக் காட்டிக் கொண்டிருக்க, அங்கே என்ன நடந்ததென்று அறியாத கீதாராணி ரிஷி பாதையை கடப்பதையும், வேட்டை நாய்கள் அவனை துரத்தாமல் இருப்பதையும் கண்டு துப்பாக்கியோடு வந்தவள் வேட்டை நாய்களை சுட்டுத் தள்ளினாள்.





ரிஷி அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவனை இங்க இருந்து போகுமாறு சொன்னேன். அவன் காதில் விழுந்தால் தானே! கத்தினேன் ஓடு... ஓடு.. அவனும் ஓடினான்... இந்த வீட்டிலிருந்து... கீதாராணியின் பிடியிலிருந்து... ஆனால் அது கீதாராணியின் காதிலும் விழுந்ததுதான் விதி.





ரிஷி வீட்டை விட்டு சென்ற கோபமும், அதற்கு காரணம் மலர்விழி என்ற கோபமும், வேட்டை நாய்கள் வேடிக்கை பார்த்திருந்த கோபமும் ஒன்று சேர்ந்து கீதாராணியின் மூளை மங்கிக் கொண்டிருக்கும் பொழுது துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த அமுதவள்ளியை கண்டு மொத்த கோபத்தையும் அவள் மேல் காட்டினாள்.





அந்த வேட்டை துப்பாக்கியை மாற்றி பிடித்தவள் அமுதவள்ளியை தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தாள். குட்டி மலர்விழி தடுக்க கீதாராணியின் ஒரு கையால் அவள் தள்ளி விடப்பட தூர விழுந்தாள்.





ரத்னவேல் வீட்டிலில்லை. வேலையாட்களால் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது, தடுக்கவோ! வாய் திறக்கவோ முடியாது.





அமுதவள்ளியின் முதுகிலும், இடுப்பிலும் பல அடிகள் விழ, குப்புற விழுந்தவளை முன் புறம் திருப்பி மார்பிலும் அடித்தாள். அதில் அவளின் மார்பெலும்பு முறிந்திருந்தது.



images (4).jpg

இரத்த வெள்ளத்தில் அன்னையை கண்டு அதிர்ச்சியில் மலர்விழி மயங்கி விழ அதை கண்டு ஒரு வேலையாள் கத்தவும் தான் கீதாராணி சுநினைவுக்கே வந்தாள்.





அதன் பின் தாய் மகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ரத்னவேலுக்கு தகவல் சொல்லப்பட்டு வந்து சேர்ந்தான்.

download.jpg



அமுதவள்ளி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க மலர்விழியும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாள். அவளின் மயக்கம் தெளியவே இல்ல. என்ன நடந்ததென்று அறிந்துக் கொண்ட ரத்னவேல் தங்கையின் மேல் கோபம் கொள்வதற்கு பதிலாக அவளின் தலையை தடவியவாறே அமைதிகாத்தான்.





அந்நேரத்தில் தான் இன்ஸ்பெக்டர் பாண்டியன் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட மனைவியை காண மருத்துவமனைக்கு வந்தார். அவரை அறிந்த மருத்துவர் ஒருவர் அமுதவள்ளியை பற்றி சொல்லி கொலை முயற்சி என்று சொல்ல தானாகவே விசாரணையை ஆரம்பித்தார்.



அவரின் விசாரணையில் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் குழம்பிய இன்ஸ்பெக்டர் பாண்டியன் அமுதவள்ளி கண்விழித்தாள் என்று மருத்துவரின் மூலம் அறிந்துக் கொண்டு அவளிடம் வாக்குமூலம் பெற அவளைக் காணச் சென்றார்.



கழுத்துக்கு கீழும் இடுப்புக்கு மேலும் கட்டோடு, நெஞ்செலும்பு முறிந்தமையால் அசைய முடியாதபடி படுத்திருந்தாள் அமுதவள்ளி. கீதா அடித்த ஒரு அடியாவது தலையில் பட்டிருந்தால் அந்த கணமே அமுதவள்ளியின் உயிர் பிரிந்திருக்கும்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ அம்மா
படிக்கும் பொழுதே ஈரக் குலையெல்லாம் நடுங்குதே
இந்த கீதாராணி பெண்ணே இல்லை
ராட்சசி பேய் ரத்தக் காட்டேரி
இவள் பெற்ற மகனைக் காப்பாற்றியதற்கு அமுதவள்ளிக்கு மரணம்தான் பரிசா?
அடப்பாவி ரத்னவேல்
பொண்டாட்டியை அடிச்சே கொன்னிருக்கா
அவள் தலையில பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு கொல்லாமல் தடவி விடுறானே கூமுட்டை ரத்னம்
இதுதான் இவனுக்கு அமுதா மீதுள்ள
காதலா?
அந்த இன்ஸ்பெக்டர்தான் யாதவ்
மாதவ்வின் அப்பாவா?
பாவம் அந்த இன்ஸ்பெக்டர்
விசாரிக்க வந்தவனையும் கொன்னுட்டாங்களே
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
Pontatiya thangachi adichirukka adha patthi kekkama ava talaya thadavi vitrunea unakku evlo koluppu irukanum. Ithula amuthava sincerea love pannaram
இதுல இருந்தே தெரியுதே ரத்னவேலுக்கு கீதாராணி எவ்வளவு முக்கியம்னு. :rolleyes::rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top