மாயவனின் அணங்கிவள் (பாகம்-2) மாயவன் -1

Advertisement

Priyamehan

Well-Known Member
"வேந்தனுக்கு பயமா... நம்ப முடியலையே ...?"

"மத்தவீங்க தான் என்னையப் பார்த்து பயப்படணும் .. உன்னை அன்னிக்கு மாதிரி காயப்படுத்திடுவனோன்னு தான் பயம்.. அந்த அளவுக்கு ஹார்சா நடந்துக்கிட்டனா இல்ல நீ அந்தவளவுக்கு வீக்கா இருக்கியா?"

"ரெண்டு தான் .." என்றாள் மெலிதாக

அவள் காதில் ஏதோ சொன்னவன் "சாப்பாட்டு உடம்பை தேத்தி வைடி... "

ச்சை என்ன இப்படி பேசறீங்க...? போங்க" என்று அவனை தள்ளி விட்டவளின் முகம் ரத்தமாக சிவந்திருக்க அந்த இருளிலும் தெரிந்தது.

தள்ளிய கையை பிடித்து இதழ் பதித்தவன்.. "உங்கிட்ட மட்டும் தாண்டி பேச முடியும் உங்கிட்ட டீசன்ட் பார்த்தா வேலையாகுமா? வீட்டுக்கு போலாம்" என்று அவள் முதுகில் கைப் போட்டு தன்னோடு இறுக்கி கொண்டான்.

"நீங்க இருக்கிற ஸ்பீடைப் பார்த்தா பயமா இருக்கு மாமா... வாங்க கோவிலுக்கு போலாம்....வீட்டுக்கு போனா அடுத்த பத்து மாசத்துல நம்ப அப்பா அம்மா ஆயிடுவோம்"

"ஆனா சந்தோசம் தாணடி... கல்யாண பரிசா நம்ப குழந்தையை குடுத்துடுவோம்..."

"ஹா ஆசை தான் மாமா, ரொம்ப நேரம் இங்க இருக்க வேண்டாம் மாமா... வாங்க போலாம்"

"ம்ம் போலாம்" என்றவன் மீண்டும் அவள் இதழ் தீண்ட...

இருவரும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி நின்றனர்.

ஒருவர் மீது ஒருவர் எல்லையில்லா காதலை கொண்டிருக்கின்றனர். இருவருக்கும் இடையில் இருக்கும் காதல் நீடிக்குமா?

அருவியின் இதழ் தீண்டி விடுவித்தவன்..

அலைபேசியை எடுத்து நிருவிற்கு அழைத்தான்.

"ஹா... சொல்லு வேந்தா..."

"எங்க இருக்க...?"

"கோவில்ல..."

"ம்ம் நானும் அவளும் வீட்டுக்கு போறோம்.."

"ஏன் என்னாச்சி..?"

"அவளுக்கு காலையில சாப்பிட்ட சாப்பாடு ஒதுக்கல வாமிட் பண்ணிட்டா மயக்கம் வர மாதிரி இருக்காம் ...இன்னும் மொளப்பாரியே வரல அது வந்து பூஜை பண்ணறதுக்குள்ள லேட்டாகிடும் அவ்வளவு நேரம் அவளால தாக்குப் புடிக்க முடியாது.. நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.. எல்லாம் முடிஞ்சதும் போன் போடு வந்தரேன்"

"நான் வேணா வரட்டுமா எங்க இருக்க சொல்லு?"

"அதலாம் வேண்டா நான் கார்க்கு பக்கத்துல தான் இருக்கேன் நீ அங்க இருந்து வரதுக்குள்ள வீட்டுக்கேப் போய்டுவேன்"

"ம்ம்..சரி, பார்த்து போங்க" என்ற நிருவிற்கு வேந்தன் மீது அலாதிய நம்பிக்கை இருக்கும் போது அவனை நம்பி தங்கையை அனுப்ப மாட்டானா...? என்ன?

பேசிவிட்டு அழைப்பு துண்டித்த வேந்தனையே ஆச்சரியத்தில் விழியகற்றாமல் பார்க்க...

"என்னடி..?"

"கோவிலுக்கு போலாம்னு சொன்னா நீங்க என்ன பண்றீங்க மாமா..?"

"ஹாஹா கோவிலுக்கு நாளைக்கு வந்துக்கலாம்.. சாமி எப்போ வந்தாலும் வரம் கொடுக்கும்... இப்போ கிடைக்கற வாய்ப்பு திரும்ப எப்போ அமையுமோ .. வாடி.."

"ம்ஹும்"

"ஏன் என்மேல் நம்பிக்கை இல்லையா...?"

"ஐயோ அப்படி சொல்லல?"

"பின்ன என்ன?" என்றவனின் குரலில் கடினம் ஏறியிருக்க..

'இவன்கிட்ட ஒன்னு சொல்லிடக்கூடாது உடனே மூஞ்சை தூக்கி வெச்சிப்பான் ராஸ்கல்' என்று நினைத்தவள்."போலாம்" என்றாள்.

இருவரும் கோவிலுக்கு செல்லாமல் குளத்தை சுற்றி செல்லும் இன்னொரு வழி வழியாக காருக்கு வந்தவர்கள்...
வீட்டை நோக்கிச் சென்றனர்.

அருவி வேந்தனை ஆச்சரியமாக பார்த்தாள்.

அவளின் ஒவ்வொரு பார்வைக்கும் அர்த்தம் தெரிந்தவன் "என்ன?" என்றான்.

"வேந்தன் மாமாவா இதுன்னு ஆச்சரியமா இருக்கு... எப்போவும் மூஞ்சில முள்ளை கட்டுன மாதிரி சுத்துவீங்க...உங்களுக்கு சிரிக்கவே தெரியாது போலன்னு நானே பலதடவை நினைச்சிருக்கேன்,நீங்க பேச ஆரம்பிச்சாவே எல்லோரும் அமைதியாகிடுவாங்க நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்னு வீட்டுல எல்லோருக்கு உங்கமேல தனி மதிப்பு மரியாதை இருக்கு... வீட்டுலையே இப்படின்னா ஊருக்குள்ள சொல்லவே வேண்டா... வேந்தன் சொல்லிட்டா மறுப்பேச்சே இல்லைன்னு எல்லோரும் உங்களுக்கு தான் ஜால்ரா தட்டுவாங்க,அப்படி இருந்த நீங்க டோட்டலா சேஞ்சான மாதிரி, உங்க பார்வையே என்னை கடிச்சி திங்கற மாதிரி இருக்கு, எப்படா நேரம் கிடைக்கும் பார்த்துட்டு இருக்கீங்க... அப்படி இல்லைனா நீங்களே ஒரு வாய்ப்பை உருவாக்கறிங்க... பார்க்கும் போதுலாம்" என்று உதட்டை அழுந்த துடைத்தவள்.. அவள் சொல்லவருவதை செயலால் காட்ட

அவள் சொல்லவருவதை புரிந்துக் கொண்டவனின் கண்கள் அருவியின் உதட்டை உரசி சென்றது.

"இப்படிலாம் பண்றது வேந்தன் இல்லை... உன்னோட அதி.. இது எல்லாமே உனக்கு மட்டும் சொந்தமானது.. உன்கிட்ட வேந்தனா இவ்வளவு நாள் இருந்தேன்,அது உனக்கு பிடிக்கல... இனி அதியா உங்கிட்ட இருக்கனும்னு நினைக்கிறேன் கண்டிப்பா இந்த அதி உனக்கு பிடிக்கும்"

"அதி... வேந்தன்னு தனி தனியா பிரிச்சி பார்க்க முடியல.. எனக்கு அதிவேந்தனாலே பிடிக்கும்..."என்று அவன் தோள் சாய்ந்தவள்.
"மாமா எனக்கு பயமா இருக்கு" என்றாள்.

அவள் மனம் முழுக்க ரித்துவைப் பற்றிய சிந்தனை தான். அவளைப் பற்றி சொல்ல ஒரு நல்ல வாய்ப்பாக இந்த தனிமை கிடைக்க...மூளை சொல்லிவிடு என்று வற்புறுத்தியது. மனமோ ரித்துவைப் பற்றி சொல்லி உங்கலளுக்கு இடையே இருக்கும் நல்ல உறவை கெடுத்துக் கொள்ளாதே என்றது.

இருவேறு எண்ணங்களில் இருந்தவள்...இறுதியில் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டாள்.

"வேந்தன் பொண்டாட்டி தைரியமா இருக்க வேண்டாமாடி.." என்று காரை வீட்டில் நிறுத்தினான்.

இருவரும் காரை விட்டு இறங்கி நடக்க...
.சாவிப் போட்டு கதவை திறந்த வேந்தன் அருவியின் நடுக்கத்தை உணர்ந்து

"நான் இருக்கும் போது என்ன பயம்?"

நீங்க இருக்கறது தானே பயமே என்று தொண்டை வரை வந்த வார்த்தையை வெளியே சொல்லாமல் மென்று முழுங்கினாள்.

கதவை திறந்த வேந்தன் நேராக சென்று நின்றது அவனுடைய அறைக்கு தான்.. அவன் பின்னால் சென்ற அருவி அவன் அறைக்கு சென்றதும்..

"ஏற்கனவே சித்திக்கிட்ட மாட்டி எப்படியோ தப்பிச்சிட்டோம்... இப்போ மறுபடியும் இவர் அறைக்கு போனதை யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..."என்று தயங்க

"சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைப்பாங்க" என்றான் வேந்தன்

"மாமா"

"தெரியும்டி நீ இப்படி தான் நினைப்பேன்னு.. உன்னைய ரேப்லாம் பண்ணிட மாட்டேன் பயப்படாம வா..."என்று உள்ளே செல்ல சட்டென்று நின்று திரும்பியவன், "அப்படி பாதுகாத்து யாருக்கும்டி தரப் போற?" என்றான் எடக்காக...

"என்னது?" என்று புரியாமல் முழித்தவள் ... பிறகு அவன் சொன்ன அர்த்தம் புரியவும் "மாமா...." என்று சிணுங்க..

"எனக்காதை நான் இப்போ பார்த்தா என்ன? எப்ப பார்த்தா என்ன?" என்று அவளை நெருங்க

"மாமா நீங்க எதும் பண்ண மாட்டேன்னு தானே சொன்னிங்க" என்று வார்த்தை திக்கு திணறி சொன்னவளுக்கு இதயம் வெளியே குத்தித்துவிடும் போல் இருந்தது..

அதில் வேந்தன் அழகாக புன்னகைக்க... அந்த புன்னகை வேறு அவளை மயக்கி . அவன் கையில் தானாக விழ தயாராகி நின்றாள்.

வேந்தன் அருவியின் அருகில் வந்து அவள் தோளில் கைப் போட்டு தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டவன்.

வா என்று முன்னோக்கி சென்றான்.

அவனை புரியாமல் பார்த்தவள் அவனுடன் சேர்ந்து நடக்க... சுவரில் இருந்த திரையை விலக்கினான் வேந்தன்..

திரை விலகியதும் அவள் கண்ணில் பட்டதை வியப்பில் விழிகள் இரண்டும் வெளியே தெறித்து விடுவதுப் போல் பார்த்தாள் அருவி..

அதில் வேந்தனுடன் அருவியும் சேர்ந்து இருக்கும் பல புகைப்படங்கள் இடம் பிடித்திருந்தது.

ஐஸ்க்கிரீம் சாப்பிடும் போது உதட்டில் இருந்து வழிவது கூட தெரியாமல் வேடிக்கைப் பார்ப்பது போல. தலைக்கு பூ வைப்பது போல, இளநீர் குடுப்பது போல, தண்ணீரில் நீந்துவது போல..இதுபோன்ற பலப் போல புகைப்படங்கள் இருக்க... அனைத்தையும் பிரேம் பண்ணி சுவரில் மாட்டப்பட்டிருந்தது.

இதையும் தாண்டி... அருவியை மிகவும் கவர்ந்த புகைப்படம் என்றால் அது... இருவரும் மணக்கோலத்தில் இருப்பது போல மார்பிங் செய்ய புகைப்படமும், வயதான தாத்தா பாட்டி உருவத்தில் வேந்தன் அருவியின் தோளில் கைப் போட்டிருப்பது போல இருந்த புகைப்படமும் தான் அருவியை வெகுவாக கவர்ந்திருந்தது.

"மாமா இதையிலாம் எப்போ பண்ணீங்க?"என்றாள் ஆச்சரியம் கலந்த குரலில்.

"ஆறு மாசம் இருக்கும்" என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்....

"நான் முரடன் தான் பாசத்தை காட்ட தெரியாதவன் தான் ஆனா என்னோட உயிரே நீ தாண்டி.." என்று அருவியின் மூடிய கண்களில் இதழ் பதிக்க அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டவள்

"அதி" என்று உணர்வு பூர்வமாக அழைத்தாள்.

"ம்ம்"

"சொல்ல வார்த்தை வரல ... என்மேல இவ்வளவு அன்பு வெச்சிருக்கீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல".

வேந்தன் அருவி சொல்வதை அமைதியாக கேட்டவன்.. "எனக்கு ஒரு ஆசை இருக்குடி" என்று மார்பில் கிடந்தவளை விலக்கி சொல்ல

என்ன என்பது போல் பார்த்தாள்.

"இங்க வா..." என்று அருவியின் கைப் பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்றவன்... அங்கு இருளில் தெரிஞ்ச நிலவைக் கைக் காட்டி..

"இந்த நிலா வெளிச்சத்துல உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தான் ஆசை" என்றவன் அவளை சுவற்றில் சாய அமர வைத்து அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.

இதை அனைத்தையும் அருவி ஒரு பிரமிப்புடன் பார்த்தாள்.

வாழ்க்கையில் தனக்கு கிடைக்கவே கிடைக்காது என்ற ஒன்று கிடைத்துவிட்டால் தான் அதை பிரமிப்பாக பார்ப்போம்.. அருவியும் இப்போது அதே நிலையில் தான் இருந்தாள். வேந்தன் தன்னை விரும்பிகிறான் என்பதையே தாமதமாக தெரிந்துக் கொண்டவள்.. அவளை விட அதிகமாக விரும்புகிறான் என்று தெரிந்ததும் பிரமித்துப் போய் விட்டாள்..

மாயவனின் மயக்கத்தில் இருந்ததால் அருவி தன்னையே மறந்திருக்க... ரித்துவையா நியாபகம் வைத்துக்கொள்வாள்.

ரித்துவை மறந்ததால் பின்னால் வர இருக்கும் பிரச்சனையின் வீரியத்தை தாங்குவாளா அருவி...

பட்டு புடவையில் அழகில் நிலவுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தவளை வெறுமனே பார்த்துக் கொண்டு மட்டும் இருக்க முடியவில்லை வேந்தனால். நிலாவொளியில் பளிரென்று தெரிந்த இடை வேந்தன் மனதை அசைக்க... விரல்கள் கொண்டு வீணை வாசிக்க ஆரம்பித்தான்...

கை முழுவதையும் வைத்து அழுத்தும் போதுக் கூட அருவியின் உடல் நடுங்கவில்லை ஒற்றை விரல் உரசி சென்றதால் மொத்த உடலும் நடுங்கியது .

வேந்தனின் நரம்போடிய வலிய கரத்தினுள் தன் கை குச்சிப் போல் இருக்க... அவனை தடுக்க முடியாமல் தவித்தாள்..

"ஹனி...."

"ம்ம்"

"எப்போடி கல்யாணம் பண்றது..." என்று அருவியின் மடியில் படுத்தவாறே அவளது இடையில் முகம் புதைக்க

அவன் மீசையும் இதழும் கொடுத்த குறுகுறுப்பில் நெளிய தொடங்கியவளின் முகம் ரத்தமாக சிவந்திருந்தது

முகம் உணர்த்தி அருவியின் உணர்வு பூர்வமான முகத்தைப் பார்த்தவன்.... இதற்கு மேல் தன்னால் உணர்வுகளை அடக்க முடியாது... என சட்டென்று அருவியிடம் இருந்து விலகி அமர்ந்தவனுக்கு..நிருவிடம் இருந்து அழைப்பு வந்தது.
 

Nirmala senthilkumar

Well-Known Member
"வேந்தனுக்கு பயமா... நம்ப முடியலையே ...?"

"மத்தவீங்க தான் என்னையப் பார்த்து பயப்படணும் .. உன்னை அன்னிக்கு மாதிரி காயப்படுத்திடுவனோன்னு தான் பயம்.. அந்த அளவுக்கு ஹார்சா நடந்துக்கிட்டனா இல்ல நீ அந்தவளவுக்கு வீக்கா இருக்கியா?"

"ரெண்டு தான் .." என்றாள் மெலிதாக

அவள் காதில் ஏதோ சொன்னவன் "சாப்பாட்டு உடம்பை தேத்தி வைடி... "

ச்சை என்ன இப்படி பேசறீங்க...? போங்க" என்று அவனை தள்ளி விட்டவளின் முகம் ரத்தமாக சிவந்திருக்க அந்த இருளிலும் தெரிந்தது.

தள்ளிய கையை பிடித்து இதழ் பதித்தவன்.. "உங்கிட்ட மட்டும் தாண்டி பேச முடியும் உங்கிட்ட டீசன்ட் பார்த்தா வேலையாகுமா? வீட்டுக்கு போலாம்" என்று அவள் முதுகில் கைப் போட்டு தன்னோடு இறுக்கி கொண்டான்.

"நீங்க இருக்கிற ஸ்பீடைப் பார்த்தா பயமா இருக்கு மாமா... வாங்க கோவிலுக்கு போலாம்....வீட்டுக்கு போனா அடுத்த பத்து மாசத்துல நம்ப அப்பா அம்மா ஆயிடுவோம்"

"ஆனா சந்தோசம் தாணடி... கல்யாண பரிசா நம்ப குழந்தையை குடுத்துடுவோம்..."

"ஹா ஆசை தான் மாமா, ரொம்ப நேரம் இங்க இருக்க வேண்டாம் மாமா... வாங்க போலாம்"

"ம்ம் போலாம்" என்றவன் மீண்டும் அவள் இதழ் தீண்ட...

இருவரும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி நின்றனர்.

ஒருவர் மீது ஒருவர் எல்லையில்லா காதலை கொண்டிருக்கின்றனர். இருவருக்கும் இடையில் இருக்கும் காதல் நீடிக்குமா?

அருவியின் இதழ் தீண்டி விடுவித்தவன்..

அலைபேசியை எடுத்து நிருவிற்கு அழைத்தான்.

"ஹா... சொல்லு வேந்தா..."

"எங்க இருக்க...?"

"கோவில்ல..."

"ம்ம் நானும் அவளும் வீட்டுக்கு போறோம்.."

"ஏன் என்னாச்சி..?"

"அவளுக்கு காலையில சாப்பிட்ட சாப்பாடு ஒதுக்கல வாமிட் பண்ணிட்டா மயக்கம் வர மாதிரி இருக்காம் ...இன்னும் மொளப்பாரியே வரல அது வந்து பூஜை பண்ணறதுக்குள்ள லேட்டாகிடும் அவ்வளவு நேரம் அவளால தாக்குப் புடிக்க முடியாது.. நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.. எல்லாம் முடிஞ்சதும் போன் போடு வந்தரேன்"

"நான் வேணா வரட்டுமா எங்க இருக்க சொல்லு?"

"அதலாம் வேண்டா நான் கார்க்கு பக்கத்துல தான் இருக்கேன் நீ அங்க இருந்து வரதுக்குள்ள வீட்டுக்கேப் போய்டுவேன்"

"ம்ம்..சரி, பார்த்து போங்க" என்ற நிருவிற்கு வேந்தன் மீது அலாதிய நம்பிக்கை இருக்கும் போது அவனை நம்பி தங்கையை அனுப்ப மாட்டானா...? என்ன?

பேசிவிட்டு அழைப்பு துண்டித்த வேந்தனையே ஆச்சரியத்தில் விழியகற்றாமல் பார்க்க...

"என்னடி..?"

"கோவிலுக்கு போலாம்னு சொன்னா நீங்க என்ன பண்றீங்க மாமா..?"

"ஹாஹா கோவிலுக்கு நாளைக்கு வந்துக்கலாம்.. சாமி எப்போ வந்தாலும் வரம் கொடுக்கும்... இப்போ கிடைக்கற வாய்ப்பு திரும்ப எப்போ அமையுமோ .. வாடி.."

"ம்ஹும்"

"ஏன் என்மேல் நம்பிக்கை இல்லையா...?"

"ஐயோ அப்படி சொல்லல?"

"பின்ன என்ன?" என்றவனின் குரலில் கடினம் ஏறியிருக்க..

'இவன்கிட்ட ஒன்னு சொல்லிடக்கூடாது உடனே மூஞ்சை தூக்கி வெச்சிப்பான் ராஸ்கல்' என்று நினைத்தவள்."போலாம்" என்றாள்.

இருவரும் கோவிலுக்கு செல்லாமல் குளத்தை சுற்றி செல்லும் இன்னொரு வழி வழியாக காருக்கு வந்தவர்கள்...
வீட்டை நோக்கிச் சென்றனர்.

அருவி வேந்தனை ஆச்சரியமாக பார்த்தாள்.

அவளின் ஒவ்வொரு பார்வைக்கும் அர்த்தம் தெரிந்தவன் "என்ன?" என்றான்.

"வேந்தன் மாமாவா இதுன்னு ஆச்சரியமா இருக்கு... எப்போவும் மூஞ்சில முள்ளை கட்டுன மாதிரி சுத்துவீங்க...உங்களுக்கு சிரிக்கவே தெரியாது போலன்னு நானே பலதடவை நினைச்சிருக்கேன்,நீங்க பேச ஆரம்பிச்சாவே எல்லோரும் அமைதியாகிடுவாங்க நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்னு வீட்டுல எல்லோருக்கு உங்கமேல தனி மதிப்பு மரியாதை இருக்கு... வீட்டுலையே இப்படின்னா ஊருக்குள்ள சொல்லவே வேண்டா... வேந்தன் சொல்லிட்டா மறுப்பேச்சே இல்லைன்னு எல்லோரும் உங்களுக்கு தான் ஜால்ரா தட்டுவாங்க,அப்படி இருந்த நீங்க டோட்டலா சேஞ்சான மாதிரி, உங்க பார்வையே என்னை கடிச்சி திங்கற மாதிரி இருக்கு, எப்படா நேரம் கிடைக்கும் பார்த்துட்டு இருக்கீங்க... அப்படி இல்லைனா நீங்களே ஒரு வாய்ப்பை உருவாக்கறிங்க... பார்க்கும் போதுலாம்" என்று உதட்டை அழுந்த துடைத்தவள்.. அவள் சொல்லவருவதை செயலால் காட்ட

அவள் சொல்லவருவதை புரிந்துக் கொண்டவனின் கண்கள் அருவியின் உதட்டை உரசி சென்றது.

"இப்படிலாம் பண்றது வேந்தன் இல்லை... உன்னோட அதி.. இது எல்லாமே உனக்கு மட்டும் சொந்தமானது.. உன்கிட்ட வேந்தனா இவ்வளவு நாள் இருந்தேன்,அது உனக்கு பிடிக்கல... இனி அதியா உங்கிட்ட இருக்கனும்னு நினைக்கிறேன் கண்டிப்பா இந்த அதி உனக்கு பிடிக்கும்"

"அதி... வேந்தன்னு தனி தனியா பிரிச்சி பார்க்க முடியல.. எனக்கு அதிவேந்தனாலே பிடிக்கும்..."என்று அவன் தோள் சாய்ந்தவள்.
"மாமா எனக்கு பயமா இருக்கு" என்றாள்.

அவள் மனம் முழுக்க ரித்துவைப் பற்றிய சிந்தனை தான். அவளைப் பற்றி சொல்ல ஒரு நல்ல வாய்ப்பாக இந்த தனிமை கிடைக்க...மூளை சொல்லிவிடு என்று வற்புறுத்தியது. மனமோ ரித்துவைப் பற்றி சொல்லி உங்கலளுக்கு இடையே இருக்கும் நல்ல உறவை கெடுத்துக் கொள்ளாதே என்றது.

இருவேறு எண்ணங்களில் இருந்தவள்...இறுதியில் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டாள்.

"வேந்தன் பொண்டாட்டி தைரியமா இருக்க வேண்டாமாடி.." என்று காரை வீட்டில் நிறுத்தினான்.

இருவரும் காரை விட்டு இறங்கி நடக்க...
.சாவிப் போட்டு கதவை திறந்த வேந்தன் அருவியின் நடுக்கத்தை உணர்ந்து

"நான் இருக்கும் போது என்ன பயம்?"

நீங்க இருக்கறது தானே பயமே என்று தொண்டை வரை வந்த வார்த்தையை வெளியே சொல்லாமல் மென்று முழுங்கினாள்.

கதவை திறந்த வேந்தன் நேராக சென்று நின்றது அவனுடைய அறைக்கு தான்.. அவன் பின்னால் சென்ற அருவி அவன் அறைக்கு சென்றதும்..

"ஏற்கனவே சித்திக்கிட்ட மாட்டி எப்படியோ தப்பிச்சிட்டோம்... இப்போ மறுபடியும் இவர் அறைக்கு போனதை யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..."என்று தயங்க

"சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைப்பாங்க" என்றான் வேந்தன்

"மாமா"

"தெரியும்டி நீ இப்படி தான் நினைப்பேன்னு.. உன்னைய ரேப்லாம் பண்ணிட மாட்டேன் பயப்படாம வா..."என்று உள்ளே செல்ல சட்டென்று நின்று திரும்பியவன், "அப்படி பாதுகாத்து யாருக்கும்டி தரப் போற?" என்றான் எடக்காக...

"என்னது?" என்று புரியாமல் முழித்தவள் ... பிறகு அவன் சொன்ன அர்த்தம் புரியவும் "மாமா...." என்று சிணுங்க..

"எனக்காதை நான் இப்போ பார்த்தா என்ன? எப்ப பார்த்தா என்ன?" என்று அவளை நெருங்க

"மாமா நீங்க எதும் பண்ண மாட்டேன்னு தானே சொன்னிங்க" என்று வார்த்தை திக்கு திணறி சொன்னவளுக்கு இதயம் வெளியே குத்தித்துவிடும் போல் இருந்தது..

அதில் வேந்தன் அழகாக புன்னகைக்க... அந்த புன்னகை வேறு அவளை மயக்கி . அவன் கையில் தானாக விழ தயாராகி நின்றாள்.

வேந்தன் அருவியின் அருகில் வந்து அவள் தோளில் கைப் போட்டு தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டவன்.

வா என்று முன்னோக்கி சென்றான்.

அவனை புரியாமல் பார்த்தவள் அவனுடன் சேர்ந்து நடக்க... சுவரில் இருந்த திரையை விலக்கினான் வேந்தன்..

திரை விலகியதும் அவள் கண்ணில் பட்டதை வியப்பில் விழிகள் இரண்டும் வெளியே தெறித்து விடுவதுப் போல் பார்த்தாள் அருவி..

அதில் வேந்தனுடன் அருவியும் சேர்ந்து இருக்கும் பல புகைப்படங்கள் இடம் பிடித்திருந்தது.

ஐஸ்க்கிரீம் சாப்பிடும் போது உதட்டில் இருந்து வழிவது கூட தெரியாமல் வேடிக்கைப் பார்ப்பது போல. தலைக்கு பூ வைப்பது போல, இளநீர் குடுப்பது போல, தண்ணீரில் நீந்துவது போல..இதுபோன்ற பலப் போல புகைப்படங்கள் இருக்க... அனைத்தையும் பிரேம் பண்ணி சுவரில் மாட்டப்பட்டிருந்தது.

இதையும் தாண்டி... அருவியை மிகவும் கவர்ந்த புகைப்படம் என்றால் அது... இருவரும் மணக்கோலத்தில் இருப்பது போல மார்பிங் செய்ய புகைப்படமும், வயதான தாத்தா பாட்டி உருவத்தில் வேந்தன் அருவியின் தோளில் கைப் போட்டிருப்பது போல இருந்த புகைப்படமும் தான் அருவியை வெகுவாக கவர்ந்திருந்தது.

"மாமா இதையிலாம் எப்போ பண்ணீங்க?"என்றாள் ஆச்சரியம் கலந்த குரலில்.

"ஆறு மாசம் இருக்கும்" என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்....

"நான் முரடன் தான் பாசத்தை காட்ட தெரியாதவன் தான் ஆனா என்னோட உயிரே நீ தாண்டி.." என்று அருவியின் மூடிய கண்களில் இதழ் பதிக்க அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டவள்

"அதி" என்று உணர்வு பூர்வமாக அழைத்தாள்.

"ம்ம்"

"சொல்ல வார்த்தை வரல ... என்மேல இவ்வளவு அன்பு வெச்சிருக்கீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல".

வேந்தன் அருவி சொல்வதை அமைதியாக கேட்டவன்.. "எனக்கு ஒரு ஆசை இருக்குடி" என்று மார்பில் கிடந்தவளை விலக்கி சொல்ல

என்ன என்பது போல் பார்த்தாள்.

"இங்க வா..." என்று அருவியின் கைப் பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்றவன்... அங்கு இருளில் தெரிஞ்ச நிலவைக் கைக் காட்டி..

"இந்த நிலா வெளிச்சத்துல உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தான் ஆசை" என்றவன் அவளை சுவற்றில் சாய அமர வைத்து அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.

இதை அனைத்தையும் அருவி ஒரு பிரமிப்புடன் பார்த்தாள்.

வாழ்க்கையில் தனக்கு கிடைக்கவே கிடைக்காது என்ற ஒன்று கிடைத்துவிட்டால் தான் அதை பிரமிப்பாக பார்ப்போம்.. அருவியும் இப்போது அதே நிலையில் தான் இருந்தாள். வேந்தன் தன்னை விரும்பிகிறான் என்பதையே தாமதமாக தெரிந்துக் கொண்டவள்.. அவளை விட அதிகமாக விரும்புகிறான் என்று தெரிந்ததும் பிரமித்துப் போய் விட்டாள்..

மாயவனின் மயக்கத்தில் இருந்ததால் அருவி தன்னையே மறந்திருக்க... ரித்துவையா நியாபகம் வைத்துக்கொள்வாள்.

ரித்துவை மறந்ததால் பின்னால் வர இருக்கும் பிரச்சனையின் வீரியத்தை தாங்குவாளா அருவி...

பட்டு புடவையில் அழகில் நிலவுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தவளை வெறுமனே பார்த்துக் கொண்டு மட்டும் இருக்க முடியவில்லை வேந்தனால். நிலாவொளியில் பளிரென்று தெரிந்த இடை வேந்தன் மனதை அசைக்க... விரல்கள் கொண்டு வீணை வாசிக்க ஆரம்பித்தான்...

கை முழுவதையும் வைத்து அழுத்தும் போதுக் கூட அருவியின் உடல் நடுங்கவில்லை ஒற்றை விரல் உரசி சென்றதால் மொத்த உடலும் நடுங்கியது .

வேந்தனின் நரம்போடிய வலிய கரத்தினுள் தன் கை குச்சிப் போல் இருக்க... அவனை தடுக்க முடியாமல் தவித்தாள்..

"ஹனி...."

"ம்ம்"

"எப்போடி கல்யாணம் பண்றது..." என்று அருவியின் மடியில் படுத்தவாறே அவளது இடையில் முகம் புதைக்க

அவன் மீசையும் இதழும் கொடுத்த குறுகுறுப்பில் நெளிய தொடங்கியவளின் முகம் ரத்தமாக சிவந்திருந்தது

முகம் உணர்த்தி அருவியின் உணர்வு பூர்வமான முகத்தைப் பார்த்தவன்.... இதற்கு மேல் தன்னால் உணர்வுகளை அடக்க முடியாது... என சட்டென்று அருவியிடம் இருந்து விலகி அமர்ந்தவனுக்கு..நிருவிடம் இருந்து அழைப்பு வந்தது.
Nirmala vandhachu
Welcome back ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top