தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா
பத்தினிப் பெண்ணே பத்தினிப்பெண்ணே
ஊரு பார்க்க மணமுடிப்போம் பொறுத்திரு
கண்ணா
அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம்
ஒண்ணுல ஒண்ணா ஒண்ணுல ஒண்ணா
ஆஹா ஆடையைத் தொட்டவன்
ஜடையைத் தொட்டவன்
மேடையைத் தொட்டாண்டி
ஆஹா அள்ளுற அள்ளுல கிள்ளுற
கிள்ளுல வெக்கத்தை விட்டாண்டி
அம்மாடி கொஞ்சம் பூச்சூட வா
அத்தாணி முத்தம் நான் போடவா
அம்மானே பெற்ற பெண்ணாயினும்
சும்மா வருமோ சொர்க்க லோகம்
எடுத்து எடுத்துக் கொடுக்க
கொடுத்துக் கொடுத்து சிவக்க
அடுத்து அடுத்து நடக்கும் நாளை
நெனைச்சு கொள்ளேண்டி நெனைச்சு
கொள்ளேண்டி
இனிக்க இனிக்க நெனைச்சு
இரவும் பகலும் துடிச்சு
படுத்து படுத்து புரண்ட நாளை
நெனைச்சு கொள்வேனே நெனைச்சு
கொள்வேனே (தேரு)
சிரிச்சு மயக்கும் ஒருத்தி
செடியில் வெடித்த பருத்தி
அணைச்சு ரசிக்கும் நாளை நெனைச்சு
ஆட வந்தேண்டி ஆட வந்தேண்டி
நெனைக்கத் தெரிஞ்ச மனசு
ரசிக்க தெரிஞ்ச வயசு
வளைக்கும் சுகத்தை நெனைச்சுதானே
வந்தேன் முன்னாடி வந்தேன் முன்னாடி
ஐய்யய்ய மறைக்க மறைக்க துடிக்கும்
ஐய்யய்ய நெருங்க நெருங்க நெனைக்கும்
ஆஹா கட்டுற கட்டுல வெட்டுற வெட்டுல
ஊர்வசி கெட்டாடி
ஆஹா மாப்பிள்ளை போடுற மந்திரத்தில்
அந்த இந்திரன் கெட்டாண்டி (அம்மாடி)