பிரிவு : பொருட்பால், இயல் : நட்பியல், அதிகாரம் : 89. உட்பகை, குறள் எண்: 882 & 889.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 882:- வாள்போல் பகைவரை அஞ்சற்க: அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

பொருள் :- வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை; ஆனால் உறவினரைப்போல இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
 

Sasideera

Well-Known Member
குறள் 889:- எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு.

பொருள் :- எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.
 

Sasideera

Well-Known Member
அதிகார விளக்கம் :-

இன்பம் தராத உறவுகளும் உண்டு அவர்கள் வாள் கொண்டு அழிக்கும் பகைவரை விட கொடுமையானவர்கள். உட்பகை உள்ளவருடன் வாழ்தல் சுடாத பானையில் உலை வைத்தல் போன்றது. உள்ளத்தின் இயல்பை அழிக்கும் உட்பகை குடுப்பத்திற்கு கேடு. உட்பகை கொண்டவருடன் வாழ்வதும் கொடிய பாம்புடன் இருட்டில் இருப்பதும் ஒன்றே.
 

malar02

Well-Known Member
குறள் 882:- வாள்போல் பகைவரை அஞ்சற்க: அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

பொருள் :- வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை; ஆனால் உறவினரைப்போல இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
உண்மைதான் ,கொடுமை இது
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top