பிரிவு : பொருட்பால், இயல் : நட்பியல், அதிகாரம் : 85. புல்லறிவாண்மை, குறள் எண்: 842 & 848.

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் 842:- அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்.

பொருள் :- அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை; அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.
 

Sasideera

Well-Known Member
குறள் 848:- ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்.

பொருள் :- தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.
 

Sasideera

Well-Known Member
புல்லறிவாண்மை என்பது தாழ்ந்த அறிவை ஆளுந்தன்மையை அதாவது பயன்படுத்தலைக் குறிக்கும். புன்மைமிக்க அறிவினைக் கைக்கொண்டு, பெருமையுடையவன்போல் வாழ முயலுதல் ஆம். இது சிற்றறிவின் செறிவைச் சொல்வது. தான்‌ சிற்றறிவுடையவனாயிருந்தும்‌ தன்னைப்‌ பேரறிவு உடையவனாக மதித்து செருக்குடன் நடப்பது புல்லறிவு.
 

Manimegalai

Well-Known Member
புல்லறிவாண்மை என்பது தாழ்ந்த அறிவை ஆளுந்தன்மையை அதாவது பயன்படுத்தலைக் குறிக்கும். புன்மைமிக்க அறிவினைக் கைக்கொண்டு, பெருமையுடையவன்போல் வாழ முயலுதல் ஆம். இது சிற்றறிவின் செறிவைச் சொல்வது. தான்‌ சிற்றறிவுடையவனாயிருந்தும்‌ தன்னைப்‌ பேரறிவு உடையவனாக மதித்து செருக்குடன் நடப்பது புல்லறிவு.
புதிய சொற்கள்....
நன்றி சசி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top