நேசம் மறவா நெஞ்சம்-27Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-27

கயல் தன்னை பார்த்து இந்த கேள்வியே கேட்கவும் அதுவரை கயலுக்கு முத்தமிட்டு கொண்டிருந்தவன்..... தன் சுயநினைவுக்கு வந்தான்...... மெதுவாக அவளை விட்டு விலகியவன்.....கயலை நிமிர்ந்து பார்க்க....



“ஏங்க என்கிட்ட ஒரு வார்த்தைகூட கேக்கல.....??”

அவளை ஆழ்ந்து பார்த்தவன் “ஏன் உனக்கு .... என்னைய பிடிக்கலையா.......?”.

“ம்கூம்........ இப்ப..... இந்தா இவளோ பிடிச்சிருக்கு…..” என்றபடி தன் கையை அகல விரித்து காட்டியவள்.... “ஆனா அப்போ.... எனக்கு பயமாயிருந்துச்சு......” என்றபடி அவன் அருகில் வந்து அவன் மடியில் தலை வைத்து படுத்தாள்.....



கண்ணன் தன் கையை எடுத்து அவள் தலையை வருட.... அவன் கையை பிடித்து தன் கன்னத்தில் வைத்தவள்....” எங்க அக்காவ உங்களுக்கு பிடிச்சிருந்து தானே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டிங்க..... அவ அவர கல்யாணம் பண்ணவும் தானே என்னைய வேற வழியில்லாம கல்யாணம் பண்ணிகிட்டிங்க...... என்னைய புடிக்காம கல்யாணம் பண்ணி அப்புறம் எனக்கேத்த மாதிரி நீங்க மாறிகிட்டு இருக்கிங்கள்ள..... நான் உங்களுக்கு பொருத்தம் இல்லதானே......”



“ஏய் லூசு.... இப்புடியெல்லாம் பேசக்கூடாது... பேசாம படு.....”



அவனை தன் புறம் இழுத்தவள்.... அவன் இருகன்னத்திலும் முத்தமிட்டவள் கண்ணனையே பார்த்துக் கொண்டிருக்க...



“ என்னடா......???”



“நீங்க ஏன்.... என்னையவே... பொண்ணு பாத்து கட்டல.......எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு.......எங்க அக்கா விட்டு குடுத்ததாலதான் என்னைய கல்யாணம் பண்ணிகிட்டிங்கன்னு என்னோட மனசுல ஓடிக்கிட்டே இருக்கு..... என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறம் கட்டியிருக்களாம்..... ஏங்க இப்புடி செஞ்சிங்க....எங்க குடும்பத்து மேல உள்ள கோபத்துனாலதான் இப்புடி செஞ்சிங்களா....?”. அவள் கண்ணில் நீர் வழிந்தபடி இருக்க.........



கயலை அள்ளி தன் மார்பில் சாத்தியவனுக்கு மனதை பிசைந்தது.......



“நீங்க உங்களுக்கு கடையெல்லாம் இருக்குன்னு சொல்லியிருந்தா எங்க அக்கா உங்களையவே கல்யாணம் பண்ணியிருப்பா.....”



அவள் முகத்தை தன் மார்பில் இருந்து எடுத்தவன்.....” அது தப்பில்லையா...... பணத்துக்காக ஒருத்தர கல்யாணம் பண்ணுறது தப்புதானே.....”.



“தப்புதான்.... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசை.... நீங்க கூட ஆசைபட்டதால தானே கடைவச்சிருக்கிங்க..... உங்களால முடிஞ்சது வச்சிட்டிங்க.... ஆனா எங்க அக்கா அந்த வாசு மாமாட்ட என்னமோ நிறைய வசதியிருக்குன்னு நினைச்சு ஏமாந்துட்டாங்க..... ஆனா இப்ப கஷ்டப்படுறான்னு நினைக்கிறேன்..... அவ எதுவும் சொல்லல... ஆனா எனக்கு தோனுது..... எங்க அக்கால்லாம் அவன லவ்பண்ணியிருக்காதுங்க.... உங்கவீட்ல வசதி இல்லைன்னு சொல்லவும்தான் அவருவெளிப் பூச்ச பாத்து மயங்கிருச்சுன்னு நினைக்கிறேங்க.......”.என்றபடி தன் போக்கில் புலம்பியபடி இருக்க......



“ஏய்.... சும்மாகிடடி.....தூங்கு...... நாளைக்கு பேசிக்கலாம்....”.தன் மடியில் போட்டு தட்டிக்கொடுக்க...... மனதிற்குள்.... உங்க அக்காவுக்கு என்னோட குடும்பமே பிடிக்கலடி....உன்கிட்ட சொன்னா நீ நம்பமாட்ட....



“இல்லங்க...... நீங்க என்னைய கட்டிகிட்டு ரொம்ப கஷ்டப்படுறிங்க.... நீங்க ரொம்ப பாவம்ங்க....... அன்னைக்கு எங்க அக்காவால தானே... உங்க சொந்தகாரங்க முன்னாடி ரொம்ப அசிங்கபட இருந்திங்க.... அதுனால தானே வேறவழியில்லாம எனக்கு தாலி கட்டவேண்டியதா... போச்சு.... எங்க அக்கா முதல்லயே வேணாமுன்னு சொல்லியிருந்தா..... நீங்க வேற உங்களுக்கு புடிச்ச பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணியிருப்பிங்கள்ள....ஆனா இத இனிமே மாத்த முடியாது....... நான்தான் கடைசிவரைக்கும் உங்களுக்கு பொண்டாட்டி.... இங்க வந்து ஒரு வாரமும் யோசிச்சுகிட்டே இருந்தனா..... இனிமே... நீங்க என்ன சொன்னாலும் கேக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்.....லூசு மாதிரி எதையும் செய்யமாட்டேன்,,,....”



“பேசிட்டியாடி.........”.



“ஏங்க.....”



“இல்லை.... இங்க ஒரு பெரியமனுசி இருந்தாலே... அவ பேசிமுடிச்சிட்டாளான்னு கேட்டேன்....”

“அதுயாருங்க அந்த பெரியமனுசி....”.

“ம்ம்ம்...நீதான் உன்னைய......” என்றவன்.. அவள் இதழில் வன்மையாக தன் இதழை புதைத்தவன்.... இப்புடி பேசுவியா.... பேசுவியா... என்று கேள்விகேட்டு மீண்டும் மீண்டும் அவள் இதழில் தன் இதழை புதைக்க....



“ஏங்க .... விடுங்க... எனக்கு மூச்சு முட்டுது....விடுங்க......”



“ம்ம்... எங்க விட்டாதான் தேவையில்லாம எதையாவது பேசிவைக்கிறியே......எனக்கு இந்த பெரியமனுசி கயலவிட....... எனக்கு குழந்தைதனமான கயலுதாண்டி புடிச்சிருக்கு.... என்னைய பாத்தா உன்னோட கஷ்டப்பட்டு குடும்பம் நடத்துறமாதிரியா இருக்கு.... போடி லூசு....”



“அப்ப... இல்லையா.....”



“நான் உங்கிட்ட ஒன்னு சொல்லவா......”



“ம்ம்ம்....நீங்க சொல்லிக்கிட்டே இருங்க நான் தூங்கிட்டே கேட்டுகிட்டு இருக்கேன்....... எனக்கு தூக்கம் வருது........”



“அடிப்பாவி... இவ்வளவு நேரம் நீ மட்டும் தேவையில்லாம பேசுன... இப்ப நான் என்னோட மனசுல உள்ளத சொல்லப் போனா உனக்கு தூக்கம் வருதா......”



அதற்குள் கயல் அவன்மார்பில் சிறுகுழந்தை போல முகம் புதைத்து தூங்கியிருந்தாள்.... கண்ணனின் செல்போனில் அலாரம் அடிக்க மணியை பார்த்தவன் மணி 12.... கயலை தன் மார்பில் இருந்து தூக்கியவன்..... அவள் நெற்றியில் முத்தமிட்டவன்.... “பிறந்தநாள் வாழ்த்துகள்டி.... செல்லக்குட்டி…..”



தூக்க கலக்கத்தில் அவன் சொன்னதை காதில் வாங்கியவள்....” ம்ம்ம் தாங்க்ஸ் மச்சான்” என்றபடி அவள் கன்னத்தை.... அவள் கன்னத்தோடு உரசியவள் .....

“ போய்யா... போ... உன்னோட தாடி குத்துது...”. என்றபடி மீண்டும் அவன் மார்பில் முகம் புதைத்து தூங்கியிருந்தாள்.....



“ஆமாடி.... சென்னைக்கு போனவன்... வீட்டுக்குகூட போகாம உனக்கு பிறந்தநாளுன்னு இங்க வந்தேன் பாரு..... நீ நல்லா தூங்கு......ஒரு மனுசன் நம்மள பாக்க ஆசையா வந்திருக்கானே... அவன்கிட்ட ஆசையா பேசுவன்னு பாத்தா....தேவையில்லாதது எல்லாம் பேசுற....... ஆனா நீ மச்சான்னு கூப்புடுறது ரொம்ப கிக்கா இருக்குடி........” .என்றபடி அவள் பக்கத்தில் படுத்தவனுக்கு இவளுக்கு நாம இவகிட்ட ஒரு வார்த்தைகூட கேக்காம தாலிகட்டுனது.... மனச உறுத்திக்கிட்டே இருக்கோ....... அன்னைக்கு நம்ம குடும்பம் தலை குனியாம இருக்குறதுக்காக இவ பிஞ்சு மனச ஒடைச்சிட்டமோ..... இவுக அப்பத்தா பேச்சை மட்டும் கேக்காம இவகிட்ட ஒரு வார்த்தை கேட்டுருக்கலாம்.... ஆனா அப்புடி கேட்டுருந்தா... இவ கண்டிப்பா ஒத்துக்கிட்டு இருந்திருப்பாளா...... அது சந்தேகம்தான்.....



ஒருவொரு ஆம்பளைங்க ஏழெட்டு பொண்ண பாக்குறாங்க.... ஆனா எல்லா பொண்ணையுமா புடிக்குது... நான் ஒரு ரெண்டுநிமிசம் இவ அக்காவ பாத்தேன்... அத புடிச்சிகிட்டு இவ தொங்குறாளே.....நம்ம வாழ்க்கையில வந்த முதல் பொண்ணு இவதான்..... எனக்கு இவள மட்டும்தான் புடிச்சிருக்குன்னு எப்புடி புரியவைக்கிறது... இவளுக்கும் என்னைய புடிச்சிருக்கு ஆனா ஆழ்மனசுக்குள்ள ஒரு நெருடல் இருக்கு.....அத எப்புடி போக்குறது என்று யோசித்தவன்.... கயல் அவன் மேல் கையை போடவும்.... அவளை பார்த்தபடி உறங்கியிருந்தான்......
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மறுநாள் காலை கண்விழித்த கயல்…. தன் அருகில் படுத்திருந்த கண்ணனை நிமிர்ந்து பார்க்க.... கண்ணன் கயலை பார்த்தபடி படுத்திருந்தான்.....



“வந்துட்டிங்களா.... நைட்டு கோயில்ல... நீங்க நடந்து வாரத பாத்துட்டு உங்ககிட்ட வேகமா வந்த ஞாபகம்தான் இருக்கு....அப்புறம் ஒன்னுமே ஞாபகம் இல்லை... நைட்டு நீங்க சாப்புட்டிங்களா.......நாம எப்புடி வீட்டுக்கு வந்தோம்....??”



“ இப்ப நல்லா கேள்வி கேளு...இங்க வா...”

“என்னங்க....”.

“ம்ம்ம்……. பிறந்த நாள் வாழ்த்துக்கள்....”

“ஆமால்ல எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் உங்களுக்கு தெரியுமா... நீங்க வரமாட்டிங்கன்னு நினைச்சேன்....”.

“அது இருக்கட்டும்.... நைட்டு கோயில்ல என்ன குடிச்ச....??”

“கோயில்லயா.... முதல்ல பானாக்கம் குடுத்தாங்க.... அப்புறம் ஜீஸ் குடுத்தாங்க....”

“ஜீஸ் யாரு குடுத்தா....?”

“ம்ம்ம் நானும் மல்லிகாவும் உக்காந்திருந்தமா...... சுதாக்கா கொழுந்தன்ல அவருதான் வாங்கி குடுத்தாரு....”

“யாரு என்ன குடுத்தாலும் வாங்கி குடிச்சிருவீங்களா..... அதுல அவன் மயக்க மருந்த கலக்கி குடுத்திருந்தான்.....நானும் ராமனும் வரல.... நீயும் உந்தங்கச்சியும் என்ன ஆகிருப்பிங்கன்னு எனக்கே தெரியல......”



“அங்க எல்லாருக்கும் தாங்க ஜீஸ் குடுத்தாங்க..... அதுல எப்புடி கலக்கமுடியும்..... ம்ம்ம் இருக்கட்டும் நானும் மல்லிகாவும் சேந்து என்னைக்காச்சும் அவன் இங்க சாப்புட வருவான்ல அவனுக்கு அதுல பேதிமாத்திரைய கலந்து குடுத்துருறோம்....சூப்பர்ல...”.

“ஆமாடி... நீ இப்புடியே யோசி... உனக்கு மட்டும் எப்புடித்தான் டிசைன்டிசைனா பிரச்சனை வருதோ..... என்னால முடியல....”

“ஆனா ஒன்னும் மட்டும் நான் கண்டுப்பிடிச்சுட்டேங்க.....”.

“என்ன சொல்லு அந்த கொடுமையையும் நான் கேக்குறேன்....”



“அதுவந்து....நீங்க 108 ஆம்புலன்ஸ் மாதிரி ஆயிட்டிங்க.... எனக்கு எப்பல்லாம் பிரச்சனை வருதோ.... அப்பல்லாம் கரெக்டா வந்து காப்பாத்தி விடுறிங்க..... என்ன....... 108 போன் பண்ணா மட்டும்தான் வரும்.... ஆனா நீங்க போன் பண்ணாம வாரீகள்ள......”



“உன்னைய........ என்னதான்டி பண்ணுறது..... கொஞ்சம்கூட சீரியஸ்நெஸ் இல்லாம.... இதுல என்னைய பாத்தா.... 108 ஆம்புலன்ஸ் மாதிரி இருக்கா……” அவள் காதை பிடித்து திருக.........



“ப்ளிஸ்... .....விட்டுறுங்க.... ப்ளிஸ்ங்க..... இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்... அதுனால விட்டுறுங்க....”



“ம்ம்ம்.....போ..போய் குளி...”.என்றவன் கீழே வந்து...தன் காரில் இருந்த டிரஸை கொடுத்தவன்....

“இத இன்னைக்கு கட்டிக்கிட்டு வா நாம கோவிலுக்கு போயிட்டு வருவோம்....”

“நான் ஒன்னு கேக்கவா....”.

“சொல்லு...”

“இல்ல... சுதாக்கவ போய் பாத்துட்டு வருவமா..... ப்ளிஸ் கோவிச்சுக்காதிங்க....”.கயலுக்கு இரவு தான் பேசியது எதுவும் நினைவில் இல்லை....

“ம்ம்ம்... போவோம்.....” கண்ணனுக்கு அந்த வினோத்தை.... வெளுக்கும் அளவுக்கு ஆத்திரம் இருந்ததால் அங்கு செல்ல சம்மதித்தான்....

கயல் குளித்து கோவிலுக்கு கிளம்பி வந்தவள்.... அந்த பாசி பச்சை நிறத்தில் இருந்த டிசைனர்சாரி அவளுக்கு பொருத்தமாக இருந்தது....... கண்ணன் வாங்கிவந்த கேக்கை வெட்டியவள்... தன் அம்மா அப்பா... அப்பத்தாவிடம் காலில் விழுந்து திருநீறு பூச வாங்கி கொண்டாள்.... கண்ணன் காலிலும் விழுந்தாள்.....திருநீறு பூசியவனிடம் குங்குமத்தை கொடுக்க கயலின் நெற்றியிலும் வகிட்டிலும் வைத்து விட்டவன்... அவள் இரு கன்னத்திலும் முத்தமிட்டு” நீ ……..எப்பவும் சந்தோசமா இருக்கனும்டா....”



அவளை கோவிலுக்கு அழைத்து சென்றுவர.... கயல் சுதாவின் வீட்டுக்கு செல்வதாக சொல்லவும்... குடும்ப உறுப்பினர் அனைவரும் கிளம்பினர்..... சகுந்தலாவுக்கு சுதாவின் மெலிவு கண்ணுக்குள்ளேயே இருந்தது..... காந்திமதியும் தன் பேத்தி அங்கு வேலை பார்ப்பதை கேள்விப்பட்டவள்...அவர் மனதுக்கு உறுத்த ஆளுக்கு முதலாக கிளம்பியிருந்தார்... மாணிக்கம் அப்போதுதான் சுதா அவள் வீட்டைவிட்டு தோப்பில் இருப்பதை சொன்னார்... கண்ணனுக்கு கயல் இரவு பேசியது ஞாபகத்திற்கு வந்தது.... இவளுக்கு இவ அக்கா நமக்கு பண்ண துரோகம் முழுசா தெரியல.... இனி அத சொல்லி அவ மனசு கஷ்டப்பட வைக்க வேண்டாம் என்று நினைத்து அமைதியாக இருந்துவிட்டான்... மாணிக்கமும் தன் இரண்டாவது மகள் செய்த காரியத்திற்கு கண்ணனிடம் பல முறை மன்னிப்பு கேட்டிருந்தார்.....



கயலுக்காக கண்ணன் வருவதாக சொல்லவும்..... கயலுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை....”ரொம்ப தாங்க்ஸ்ங்க.... எங்க நீங்க முதல்ல வரேன்னு சொல்லிட்டு அப்புறம் மாட்டேன்னு சொல்லிருவிங்கன்னு நினைச்சேன்....”



“நீதான சொன்ன அவுகள ஓயாம பாக்கத்தானே போறோம்னு... அதான் சரி எம்பொண்டாட்டிக்காக போனா போகுதுன்னு பாத்தேன்..... ஆனா இப்ப ஒரு கண்டிசன்.....”



“கண்டிசனா.... என்ன கண்டிசன்ங்க....”



“ஆமா... எப்பபாத்தாலும் வாங்க... போங்கன்னு...சொல்ற... என்னைய முறைவச்சு கூப்புடு அப்பத்தான் நான் உங்க அக்காவீட்டுக்கு வருவேன்......என்னைய எப்புடி கூப்புடனும்னு தெரியும்ல..... “



“ம்ம்...தெரியும்.......” என்று தன் முகத்தை மூடியவள்....” எனக்கு வெக்கமாயிருக்கே…..”

“உனக்கு வெக்கமாயிருக்கா.... நைட்டு நீ பேசுனத எல்லாம் கேட்டுக்கிட்டு தானே இருந்தேன்.... எப்புடி வெக்கப்பட்டுக்கிட்டே.... ரொம்ப மரியாதையா பேசுன.... ஒழுங்கா கூப்புட்டா போகலாம் இல்லையா ஊருக்கு கிளம்புற வழிய பாரு......”



“இல்லையில்ல சொல்லிருறேன் ..... மச்சான்.....போதுமா...வாங்க போகலாம்.....”

“இது என்னடி இப்புடி சப்புன்னு கூப்புடுற...சே...நேத்து நைட்டு கூப்புட்ட பாரு அப்புடியே செம கிக்கா இருந்துச்சு...... இப்பவும் கூப்புடுறியே நல்லாவேயில்ல....போ..போ……”

“அதெல்லாம் முடியாது கூப்புட சொன்னிங்க கூப்புடிடுட்டேன். வாங்க அக்காவீட்டுக்கு” என்றபடி அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள்
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அனைவரும் தோப்பிற்கு வரவும்..... சுதாவுக்கு ஒன்னுமே புரியவில்லை..... சந்தோசத்தில் அழுகையே வந்தது.... வீட்டிற்குள் அவ்வளவு இடம் இல்லாததால் அனைவரும் பாயை போட்டு வெளியே அமர்ந்திருந்தனர்....



கயல்... “அக்கா சூப்பரா இருக்குக்கா..... தோப்பு....”

இவர்கள் வந்ததை போனில் சுதா சொல்லவும் வாசு 5 நிமிடத்தில் வீட்டில் இருந்தான்... அவனுக்கு சுதாவின் முகத்தை பார்க்க முடியாமல் இருந்திருந்தான்.... தன்னால் அவள் மிகுந்த கஷ்டப்படுகிறாள் ..... தன்னிடம் முகம் குடுத்துகூட பேசவில்லை.... அவுக அம்மா வீட்டுக்குகூட போகாம இங்க இருக்கான்னா அவுக வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களோ.... அதனால் தான் அவளை கோவிலுக்கு கூட்டிவந்திருந்தான்.... உழைப்பின் அருமை இப்போதுதான் அவனுக்கு தெரிந்திருந்தது... தன்னுடைய ஊதாரித்தனம் புரியவும்தான் கண்ணனின் கோபமும் புரிந்தது... தன்னுடைய முயற்சிய யாராவது தட்டிப் பறிச்சா நமக்கு எம்புட்டு கோபம் வரும் அதுமாதிரிதானே கண்ணனுக்கும் கோபம் வந்திருக்கும்.... அதுவும் என்னைய போல அவுக அப்பா.. தம்பி உதவியில்லாம தன்னோட சொந்த முயற்சியில பண்ணா கோபம் வரத்தானே செய்யும்... என்று கண்ணனின் நியாயத்தை புரிந்து கொண்டான்....



அனைவரையும் வரவேற்றவன்.... கண்ணனையும் தனியாக சென்று வரவேற்று... மனதார மன்னிப்பும் கேட்டான்...... சுதா அனைவருக்கும் காப்பி போட்டுக் கொடுக்க அனைவரும் தோப்பை சந்தோசமாக சுற்றிப் பார்த்தனர்..... கண்ணனுக்கு போன் வந்து கொண்டே இருக்க....... கண்ணன் போன் பேச செல்லவும் மற்றவர்கள் சுற்றிப் பார்க்கச் சென்றனர்..... போன் பேசி முடிக்கவும் வாசு வந்து மீண்டும் மன்னிப்பு கேட்க....



“விடுங்க.......நீங்க என்னோட வயசு பெரியவுக..... அதையே பேசவேண்டாம்.... நான் இங்க வந்ததுக்கு ஒரு முக்கியமான காரணம்... உங்க தம்பிய....உடனே போன் பண்ணி கொஞ்சம் வரச்சொல்லுங்க.... நான் தனியா.... பேச வேண்டியது இருக்கு.....”



“இல்லையே ........ இப்பத்தான் வார வழியில அம்மாவ பாத்தேன்... அவன் எங்கயோ ஊருக்கு போயிட்டானாம் வர ரெண்டு மூனுநாளு ஆகும்னு சொன்னாங்க....என்னாச்சு எதுக்கு அவன்கிட்ட தனியா பேசனும்......”.



கண்ணன் கோவிலில் நடந்ததை சொல்ல..... வாசுவுக்கு.. ச்சை...நம்ம தம்பின்னு சொல்றதுக்கே அசிங்கமாயிருக்கே......நம்ம பொண்டாட்டியைதான் தப்பா பேசுனான் நினைச்சா...... இவன் அவுக குடும்பத்துக்கிட்டயே அவனோட வேலையை காட்டப் பாக்குறான்னா.....



“நான் அவன் வந்தவுடனே உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன்......நானும் அவனை கொஞ்சம் கவனிக்கிறேன்..... நம்ம தோப்பு இளநி ஒன்னு வெட்டுறேன் குடிச்சுப் பாருங்க உங்க தோப்பு இளநி மாதிரி இருக்கான்னு......”



“இல்லண்ணே.... வேணாம்... அவுகல்லாம் வரட்டும்.... உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்.... என்னோட பிரண்ட் ஒருத்தன்....படம் எடுக்குறான்.... என்னோட தோப்புலத்தான் எடுத்துக்குறதா சொன்னான்.... ஆனா என்னோட தோப்பைவிட உங்களோட நல்ல பெரிசா இருக்கு.... இங்க வேணா எடுக்கச் சொல்லவா...... எத்தனைநாள் எடுக்குறாங்களோ... அத்தன நாளுன்னு கணக்குப் போட்டு ஒரு அமௌவுண்ட் குடுத்துருவாங்க......”



வாசுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.....இப்ப இருக்குற நிலைமைக்கு அது ரொம்ப உதவியா இருக்கும்..... வாசுவும் உடனே ஒத்துக் கொள்ளவும் போனில் விவரத்தை சொல்லவும்.......



“அவனும்... அந்த படத்தோட தயாரிப்பாளரும் இங்க பக்கத்துலதான் இருக்காங்களாம்.... வரவான்னு கேக்குறாங்க.....”



“ம்ம்... வரச்சொல்லுங்க...” வாசுவுக்கு கண்ணனின் நல்ல மனது புரிந்தது... இங்க வந்தவுடனே நம்ம நிலைமைய பாத்துட்டு அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை நமக்கு குடுக்குறாரே..... நமக்கு வாழ்க்கைன்னா என்னன்னு இப்பத்தான் புரியுதுன்னு நினைக்கிறேன்.... இவ்வளவுநாளும் எம்பின்னாடியே திரிஞ்ச கூட்டாளி பயலுக எல்லாம் நாம கொஞ்சம் கஷ்டப்படுறோம்னு தெரிஞ்சவுடனே... ஒரு பயகூட போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறாங்க.....



அவர்களும் வர ஒரு தொகை பேசப்பட்டு.... அடுத்த நாளில் இருந்து சூட்டிங் ஆரம்பம் என முடிவுசெய்யப்பட்டது.....



தயாரிப்பாளர் வந்ததிலிருந்து செயற்கை பூச்சு பூசிய நடிகைகளை பார்த்திருந்தவருக்கு இங்கிருந்த அந்த சகோதரிகளின் இயற்கை அழகில் வியந்து போயிருந்தார்..... கயலிடமும்... மல்லிகாவிடமும் மீண்டும் மீண்டும் பேச முயற்சிக்க....கண்ணனுக்கு என்னடா.... இது எங்க போனாலும் பெரிய தொல்லையா இருக்கு..... ஒரு பொம்பள புள்ளைக வெளிய சுதந்திரமா..வெளியே வரதுக்கு கூட சுதந்திரம் இல்லாம போச்சு.....

கயல் வந்து மெதுவாக கண்ணன் கையை பிடித்தவள்....” ஏங்க... வீட்டுக்கு போவமா...??”



“கிளம்புங்க....”.மல்லிகாவை முதலில் காரில் ஏறச் சொன்னவன்... வாசுவை கூப்பிட்டு சூட்டிங் முடியுற வரைக்கும் சுதாவை அவுக அம்மாவீட்டுக்கு போக சொல்லி சொன்னான்...... காந்திமதியும் தன் மகனிடம் சொல்வதாக சொல்லியிருந்தார்.....



அனைவரும் வீட்டிற்கு வந்தவுடன் கண்ணன் மாணிக்கத்திடம்.... தனியாக கூப்பிட்டு வினோத்தின் செயலை கோடிட்டு காட்டியிருந்தான்....

“நீங்க உள்ளுருல இருக்குறதால அவுகள அடிக்கடி பாக்கனும் மாமா... இந்த பிரச்சனைய விடுங்க.... நான் பாத்துக்குறேன்.... அவன என்ன செய்யனுமோ பாத்துக்கலாம்... மல்லிகாவ கொஞ்சம் கவனமா பாத்துக்கங்க.... உள்ளுர் ஸ்கூல படிச்சாலும் போக்குவரத்துல உங்க கண்ண வச்சுக்குங்க மாமா....”



அருண்கிட்டயும் கொஞ்சம் எடுத்து சொன்னான்....” நீதான் இனி உங்க அக்காவையெல்லாம் பாத்துக்கனும்.... “மாணிக்கத்திற்கு கண்ணனை நினைத்து ரொம்ப பெருமையாக இருந்தது.... தன் தாயிடம்....” எனக்கு ஒரு மூத்த மகனா கயலு மாப்புள்ளை இருப்பாருத்தா...... கடவுள் கயலுக்கு தங்கம் மாதிரி ஒரு மாப்பிள்ளை குடுத்திருக்காரு....”



“அது உனக்கு இப்பத்தான் புரியுதா... எனக்கு பாத்தவுடனே புரிஞ்சிருப்பா....”



“இல்லத்தா...... காலையில இந்த அறுவடையில வந்த பணத்துல கொஞ்சம் நகைவாங்கி வச்சிருந்தோம்லத்தா அத குடுக்குறேன்... எம்பொண்டாட்டிக்கு நான் சம்பாரிச்சு வாங்கி குடுப்பேன் மாமா... இத உங்க மத்தபுள்ளைகளுக்கு வச்சுக்குங்க சொல்றாரு.... என்னமும் வேணும்னாலும் எந்த நேரமும் என்னைய கூப்புடுங்க.... சங்கடப்படாதிங்கன்னு சொன்னாருத்தா.... சுதாவையும் மன்னிக்க சொல்றாரு.... பெரிய மனசுதான் இந்த புள்ளைக்கு......”



கண்ணனும் கயலும் காரில் ஊருக்கு கிளம்பிவர...... “ஏங்க....எனக்கு ரொம்ப சந்தோசமா ... இருக்கு....உங்கள எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப புடிச்சிருக்கு... எல்லாரும் உங்கள பத்தியே பெருமையா பேசுனாங்க.....அப்பத்தா சொன்னுச்சு போகவும் உங்களுக்கு சுத்தி போடனும்னு.....”



“ஆமாடி ஆரம்பிச்சுட்டுடியா உங்க அப்பத்தா புராணத்த.... அவுகளும் நம்ம குடும்பம்தான்டி... நாங்க அக்கா தங்கச்சியோட பொறக்காதவங்க....எங்க அம்மா சின்னபுள்ளையில இருந்தே சொல்லிக்கிட்டே இருப்பாங்க....கட்டுன பொண்டாட்டிய தவிர அம்புட்டு பேரும் அக்கா தங்கச்சின்னு.... அது எப்பவும் நினைப்புல இருக்கும்டி... ... அப்புறம் ஒன்னு ஞாபகத்துல வச்சுக்க..... எனக்கு ஒரு பொம்பள புள்ளையாச்சும் பெத்துக்குடுத்துரு....சொல்லிட்டேன்.....”



அதுவரை அவன் முகம் பார்த்து பேசிக் கொண்டிருந்தவள்.... கண்ணனின் இந்த பேச்சை கேட்கவும் காரின் கதவுபுறமாக திரும்பி உட்காரவும் கண்ணன் ஒரு ஓரமாக காரை நிப்பாட்டினான்.....”என்ன அங்கிட்டு திரும்பிக்கிட்ட...”.என்றவன் அவள் முகத்தை தன்புறமாக திருப்பவும் கயலின் முகம் வெட்கத்தால் சிவந்து போயிருந்தது.....

“என்னடி ஒன்னும் சொல்லாம இருக்க...... சொல்லு....”என்றபடி அவள் கையை பிடித்து அவள் முகத்தை தன்னை பார்க்க செய்ய....



“இல்ல ...... அத்தையும் ஊருக்கு வரும் போது சொன்னாங்க.... இந்த சாமிக்கிட்ட நல்லா வேண்டிக்கிட்டு வரச்சொன்னாங்க.... நானும் நல்லா வேண்டிக்கிட்டேன்.....நமக்கு பொம்பளபுள்ள கண்டிப்பா பொறக்கும்ங்க.....”

“ஆமாமா..சாமிகிட்ட வேண்டிக்கிட்டயில இனி பொறந்துரும்...என்று கேலி செய்தவன்..... ஆனா அதுக்கு இனிமே நீ என்னைய விட்டுட்டு தனியா உங்க ஊருக்கு வரணும்னு நினைக்காத..... புரியுதா......”

“ம்ம்ம்.....”

கண்ணனும்... கயலும்... வாழ்க்கையில் இணைவார்களா......????



இனி.....................???
தொடரும்.................
 
Last edited:

muthu pandi

Well-Known Member
அனைவரும் தோப்பிற்கு வரவும்..... சுதாவுக்கு ஒன்னுமே புரியவில்லை..... சந்தோசத்தில் அழுகையே வந்தது.... வீட்டிற்குள் அவ்வளவு இடம் இல்லாததால் அனைவரும் பாயை போட்டு வெளியே அமர்ந்திருந்தனர்....



கயல்... “அக்கா சூப்பரா இருக்குக்கா..... தோப்பு....”

இவர்கள் வந்ததை போனில் சுதா சொல்லவும் வாசு 5 நிமிடத்தில் வீட்டில் இருந்தான்... அவனுக்கு சுதாவின் முகத்தை பார்க்க முடியாமல் இருந்திருந்தான்.... தன்னால் அவள் மிகுந்த கஷ்டப்படுகிறாள் ..... தன்னிடம் முகம் குடுத்துகூட பேசவில்லை.... அவுக அம்மா வீட்டுக்குகூட போகாம இங்க இருக்கான்னா அவுக வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களோ.... அதனால் தான் அவளை கோவிலுக்கு கூட்டிவந்திருந்தான்.... உழைப்பின் அருமை இப்போதுதான் அவனுக்கு தெரிந்திருந்தது... தன்னுடைய ஊதாரித்தனம் புரியவும்தான் கண்ணனின் கோபமும் புரிந்தது... தன்னுடைய முயற்சிய யாராவது தட்டிப் பறிச்சா நமக்கு எம்புட்டு கோபம் வரும் அதுமாதிரிதானே கண்ணனுக்கும் கோபம் வந்திருக்கும்.... அதுவும் என்னைய போல அவுக அப்பா.. தம்பி உதவியில்லாம தன்னோட சொந்த முயற்சியில பண்ணா கோபம் வரத்தானே செய்யும்... என்று கண்ணனின் நியாயத்தை புரிந்து கொண்டான்....



அனைவரையும் வரவேற்றவன்.... கண்ணனையும் தனியாக சென்று வரவேற்று... மனதார மன்னிப்பும் கேட்டான்...... சுதா அனைவருக்கும் காப்பி போட்டுக் கொடுக்க அனைவரும் தோப்பை சந்தோசமாக சுற்றிப் பார்த்தனர்..... கண்ணனுக்கு போன் வந்து கொண்டே இருக்க....... கண்ணன் போன் பேச செல்லவும் மற்றவர்கள் சுற்றிப் பார்க்கச் சென்றனர்..... போன் பேசி முடிக்கவும் வாசு வந்து மீண்டும் மன்னிப்பு கேட்க....



“விடுங்க.......நீங்க என்னோட வயசு பெரியவுக..... அதையே பேசவேண்டாம்.... நான் இங்க வந்ததுக்கு ஒரு முக்கியமான காரணம்... உங்க தம்பிய....உடனே போன் பண்ணி கொஞ்சம் வரச்சொல்லுங்க.... நான் தனியா.... பேச வேண்டியது இருக்கு.....”



“இல்லையே ........ இப்பத்தான் வார வழியில அம்மாவ பாத்தேன்... அவன் எங்கயோ ஊருக்கு போயிட்டானாம் வர ரெண்டு மூனுநாளு ஆகும்னு சொன்னாங்க....என்னாச்சு எதுக்கு அவன்கிட்ட தனியா பேசனும்......”.



கண்ணன் கோவிலில் நடந்ததை சொல்ல..... வாசுவுக்கு.. ச்சை...நம்ம தம்பின்னு சொல்றதுக்கே அசிங்கமாயிருக்கே......நம்ம பொண்டாட்டியைதான் தப்பா பேசுனான் நினைச்சா...... இவன் அவுக குடும்பத்துக்கிட்டயே அவனோட வேலையை காட்டப் பாக்குறான்னா.....



“நான் அவன் வந்தவுடனே உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன்......நானும் அவனை கொஞ்சம் கவனிக்கிறேன்..... நம்ம தோப்பு இளநி ஒன்னு வெட்டுறேன் குடிச்சுப் பாருங்க உங்க தோப்பு இளநி மாதிரி இருக்கான்னு......”



“இல்லண்ணே.... வேணாம்... அவுகல்லாம் வரட்டும்.... உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்.... என்னோட பிரண்ட் ஒருத்தன்....படம் எடுக்குறான்.... என்னோட தோப்புலத்தான் எடுத்துக்குறதா சொன்னான்.... ஆனா என்னோட தோப்பைவிட உங்களோட நல்ல பெரிசா இருக்கு.... இங்க வேணா எடுக்கச் சொல்லவா...... எத்தனைநாள் எடுக்குறாங்களோ... அத்தன நாளுன்னு கணக்குப் போட்டு ஒரு அமவுண்ட் குடுத்துருவாங்க......”



வாசுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.....இப்ப இருக்குற நிலைமைக்கு அது ரொம்ப உதவியா இருக்கும்..... வாசுவும் உடனே ஒத்துக் கொள்ளவும் போனில் விவரத்தை சொல்லவும்.......



“அவனும்... அந்த படத்தோட தயாரிப்பாளரும் இங்க பக்கத்துலதான் இருக்காங்களாம்.... வரவான்னு கேக்குறாங்க.....”



“ம்ம்... வரச்சொல்லுங்க...” வாசுவுக்கு கண்ணனின் நல்ல மனது புரிந்தது... இங்க வந்தவுடனே நம்ம நிலைமைய பாத்துட்டு அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை நமக்கு குடுக்குறாரே..... நமக்கு வாழ்க்கைன்னா என்னன்னு இப்பத்தான் புரியுதுன்னு நினைக்கிறேன்.... இவ்வளவுநாளும் எம்பின்னாடியே திரிஞ்ச கூட்டாளி பயலுக எல்லாம் நாம கொஞ்சம் கஷ்டப்படுறோம்னு தெரிஞ்சவுடனே... ஒரு பயகூட போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறாங்க.....



அவர்களும் வர ஒரு தொகை பேசப்பட்டு.... அடுத்த நாளில் இருந்து சூட்டிங் ஆரம்பம் என முடிவுசெய்யப்பட்டது.....



தயாரிப்பாளர் வந்ததிலிருந்து செயற்கை பூச்சு பூசிய நடிகைகளை பார்த்திருந்தவருக்கு இங்கிருந்த அந்த சகோதரிகளின் இயற்கை அழகில் வியந்து போயிருந்தார்..... கயலிடமும்... மல்லிகாவிடமும் மீண்டும் மீண்டும் பேச முயற்சிக்க....கண்ணனுக்கு என்னடா.... இது எங்க போனாலும் பெரிய தொல்லையா இருக்கு..... ஒரு பொம்பள புள்ளைக வெளிய சுதந்திரமா..வெளியே வரதுக்கு கூட சுதந்திரம் இல்லாம போச்சு.....

கயல் வந்து மெதுவாக கண்ணன் கையை பிடித்தவள்....” ஏங்க... வீட்டுக்கு போவமா...??”



“கிளம்புங்க....”.மல்லிகாவை முதலில் காரில் ஏறச் சொன்னவன்... வாசுவை கூப்பிட்டு சூட்டிங் முடியுற வரைக்கும் சுதாவை அவுக அம்மாவீட்டுக்கு போக சொல்லி சொன்னான்...... காந்திமதியும் தன் மகனிடம் சொல்வதாக சொல்லியிருந்தார்.....



அனைவரும் வீட்டிற்கு வந்தவுடன் கண்ணன் மாணிக்கத்திடம்.... தனியாக கூப்பிட்டு வினோத்தின் செயலை கோடிட்டு காட்டியிருந்தான்....

“நீங்க உள்ளுருல இருக்குறதால அவுகள அடிக்கடி பாக்கனும் மாமா... இந்த பிரச்சனைய விடுங்க.... நான் பாத்துக்குறேன்.... அவன என்ன செய்யனுமோ பாத்துக்கலாம்... மல்லிகாவ கொஞ்சம் கவனமா பாத்துக்கங்க.... உள்ளுர் ஸ்கூல படிச்சாலும் போக்குவரத்துல உங்க கண்ண வச்சுக்குங்க மாமா....”



அருண்கிட்டயும் கொஞ்சம் எடுத்து சொன்னான்....” நீதான் இனி உங்க அக்காவையெல்லாம் பாத்துக்கனும்.... “மாணிக்கத்திற்கு கண்ணனை நினைத்து ரொம்ப பெருமையாக இருந்தது.... தன் தாயிடம்....” எனக்கு ஒரு மூத்த மகனா கயலு மாப்புள்ளை இருப்பாருத்தா...... கடவுள் கயலுக்கு தங்கம் மாதிரி ஒரு மாப்பிள்ளை குடுத்திருக்காரு....”



“அது உனக்கு இப்பத்தான் புரியுதா... எனக்கு பாத்தவுடனே புரிஞ்சிருப்பா....”



“இல்லத்தா...... காலையில இந்த அறுவடையில வந்த பணத்துல கொஞ்சம் நகைவாங்கி வச்சிருந்தோம்லத்தா அத குடுக்குறேன்... எம்பொண்டாட்டிக்கு நான் சம்பாரிச்சு வாங்கி குடுப்பேன் மாமா... இத உங்க மத்தபுள்ளைகளுக்கு வச்சுக்குங்க சொல்றாரு.... என்னமும் வேணும்னாலும் எந்த நேரமும் என்னைய கூப்புடுங்க.... சங்கடப்படாதிங்கன்னு சொன்னாருத்தா.... சுதாவையும் மன்னிக்க சொல்றாரு.... பெரிய மனசுதான் இந்த புள்ளைக்கு......”



கண்ணனும் கயலும் காரில் ஊருக்கு கிளம்பிவர...... “ஏங்க....எனக்கு ரொம்ப சந்தோசமா ... இருக்கு....உங்கள எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப புடிச்சிருக்கு... எல்லாரும் உங்கள பத்தியே பெருமையா பேசுனாங்க.....அப்பத்தா சொன்னுச்சு போகவும் உங்களுக்கு சுத்தி போடனும்னு.....”



“ஆமாடி ஆரம்பிச்சுட்டுடியா உங்க அப்பத்தா புராணத்த.... அவுகளும் நம்ம குடும்பம்தான்டி... நாங்க அக்கா தங்கச்சியோட பொறக்காதவங்க....எங்க அம்மா சின்னபுள்ளையில இருந்தே சொல்லிக்கிட்டே இருப்பாங்க....கட்டுன பொண்டாட்டிய தவிர அம்புட்டு பேரும் அக்கா தங்கச்சின்னு.... அது எப்பவும் நினைப்புல இருக்கும்டி... ... அப்புறம் ஒன்னு ஞாபகத்துல வச்சுக்க..... எனக்கு ஒரு பொம்பள புள்ளையாச்சும் பெத்துக்குடுத்துரு....சொல்லிட்டேன்.....”



அதுவரை அவன் முகம் பார்த்து பேசிக் கொண்டிருந்தவள்.... கண்ணனின் இந்த பேச்சை கேட்கவும் காரின் கதவுபுறமாக திரும்பி உட்காரவும் கண்ணன் ஒரு ஓரமாக காரை நிப்பாட்டினான்.....”என்ன அங்கிட்டு திரும்பிக்கிட்ட...”.என்றவன் அவள் முகத்தை தன்புறமாக திருப்பவும் கயலின் முகம் வெட்கத்தால் சிவந்து போயிருந்தது.....

“என்னடி ஒன்னும் சொல்லாம இருக்க...... சொல்லு....”என்றபடி அவள் கையை பிடித்து அவள் முகத்தை தன்னை பார்க்க செய்ய....



“இல்ல ...... அத்தையும் ஊருக்கு வரும் போது சொன்னாங்க.... இந்த சாமிக்கிட்ட நல்லா வேண்டிக்கிட்டு வரச்சொன்னாங்க.... நானும் நல்லா வேண்டிக்கிட்டேன்.....நமக்கு பொம்பளபுள்ள கண்டிப்பா பொறக்கும்ங்க.....”

“ஆமாமா..சாமிகிட்ட வேண்டிக்கிட்டயில இனி பொறந்துரும்...என்று கேலி செய்தவன்..... ஆனா அதுக்கு இனிமே நீ என்னைய விட்டுட்டு தனியா உங்க ஊருக்கு வரணும்னு நினைக்காத..... புரியுதா......”

“ம்ம்ம்.....”

கண்ணனும்... கயலும்... வாழ்க்கையில் இணைவார்களா......????



இனி.....................???
தொடரும்.................
nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top