நேசம் மறவா நெஞ்சம் -26Nesam Marava Nenjam

Advertisement

muthu pandi

Well-Known Member
அன்று இரவு அனைவரும் கோவிலுக்கு போனவர்கள்..... அது பெரிய கோவிலாகவெல்லாம் இருக்காது.... ஒரு சிறு திண்டுமாதிரி கட்டி ஒவ்வொரு பெரிய வீதிக்கும் ஒவ்வொன்று இருக்கும்...... அந்தந்த வீதியில் இருப்பவர்கள் அந்த மேடையில் சிறு அம்மன் சிலையை வைத்து பாரி வளர்த்து சாமி கும்பிடுவார்கள்... இரவெல்லாம் ஆண்களும் பெண்களும் கும்மியடிப்பார்கள்..... சிறு வயதில் இருந்தே.... இந்த ஐந்து சகோதரிகளும் நன்றாக.கும்மியடிப்பார்கள்.... அந்த திண்டை சுற்றி பெண்கள் ஒரு வட்டமாகவும்... அவர்களை சுற்றினாற் போல் ஆண்கள் ஒரு வட்டமாகவும் சுற்றுவார்கள்....ஏதாவது ஒரு பாட்டி வந்து மாரியம்மன் மேல் பாட்டுச் சொல்வார்கள்..... ஏதாவது கிராமத்து மெட்டில் இருக்கும் .... சினிமா பாட்டெல்லாம் பாட மாட்டார்கள்.... அந்த பாட்டுக்கு அவர்கள் கும்மி கொட்டுவது பார்ப்பதற்கே ரொம்ப அழகாக இருக்கும்.......



நேரம் ஆக ஆக வேகமாக கொட்ட ஆரம்பிப்பார்கள்.... கையும் கைலும் மாற்றி மாற்றி தாளத்துக்கு ஏற்றவாறு ஆடவும் செய்வார்கள்..... இடையிடையே சற்று மூச்சு வாங்கும் போது பானாக்கமோ.... தண்ணீரோ... ஜீஸோ கொடுப்பார்கள் அதை குடிக்க மட்டும் ரெஸ்ட் எடுத்துக் கொள்வார்கள்....



இன்று கயல் நல்ல பெப்சி ப்லுகலர் சேலைகட்டியிருந்தாள் தலைக்கு குளித்து இருந்ததால்..... தளர பின்னி பூ வைத்திருந்தாள்.....மல்லிகா பாவாடை தாவனி அணிந்திருந்தாள்.... முதலில் ஆரம்பிக்கும் போது பிள்ளையார் பாட்டோடுதான் ஆரம்பிப்பார்கள்......பின் ஒவ்வொரு தெய்வமாக பாட ஆரம்பிக்க..... நேரமானதும் அருணாவை கூட்டிக்கொண்டு சகுந்தலா மல்லிகாவையும் கயலையும் கூப்பிட....



மல்லிகா...” அம்மா நீங்க போங்க... இன்னைக்குத் தானே கடைசி... இனிமேல் அடுத்த வருசம்தானே... ப்ளிஸ் நீங்க போங்க நம்ம தெரு அப்பத்தா யாராச்சும் வருங்க... நாங்க சேந்து வந்துருறோம்.... இன்னும் ஒரு மூனு பாட்டுத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்... நீங்க போங்கம்மா...”



“ம்ம்ம் பாத்து வாங்க.....” மேலும் ஒரு அரைமணி நேரம் கழித்து அனைவருக்கும் மூச்சு வாங்க உட்கார்ந்தவர்களுக்கு ஜீஸ் கொடுக்கப்பட மல்லிகாவுக்கும் கயலுக்கும் வினோத் ஜீஸ் கொடுக்க...... இருவரும் வாங்கி குடித்தார்கள்.....

அப்போதுதான் ராமனும் வந்து சேர்ந்தான்.... வண்டியை விட்டு இறங்கியவன் கூட்டத்தில் இவர்களை தேடியவன்....... இருவரையும் பார்த்து விட்டான்.... இவர்கள் இருவரும் மொளைக் கொட்டவும் மல்லிகாவை பார்த்தவன்.... இங்க பாருடா இந்த குலோப்ஜாமூன.... என்ன ஆட்டம் போடுறா... என்று மல்லிகாவின் ஆட்டத்தை ரசித்து கொண்டிருந்தான்....



மல்லிகாவுக்கு ஒரு மாதிரி மயக்கம் வருவதுபோல இருந்தது...... கயலை பார்க்க அவள் சற்று தள்ளி நிற்கவும் இவள் சற்று ஓய்வெடுக்க கொஞ்சம் தள்ளிச் செல்ல.... ராமன் இவ ஏன் இருட்டுக்குள்ள போறா என்றபடி அவள் பின்னால் சென்றவன்....



“ஏய் ....ஜாமூன் இங்க என்ன பண்ணுற.....”

“நீங்களா..... அக்கா அங்க இருக்கா..... எனக்கு என்னன்னு தெரியல லேசா தலைய சுத்துது....”

“ஆமா... இந்த ஆட்டம் போட்டா.... கும்மிங்குறது அமைதியா கொட்டுவாங்கன்னு கேள்விபட்டிருக்கேன்.... நீங்க இப்புடி குதிச்சு குதிச்சு ஆடுனா.... ஏன் மயக்கம் வராது....”



“இதவிட வேகமா கூட ஆடியிருக்கேன்....” என்றபடி கீழே உட்கார......

“ஏய் என்ன கீழ உட்காந்திட்ட..... ரொம்ப மயக்கமா வருதா....” என்றவன் அவள் கீழே விழபார்க்கவும் சட்டென தாங்கி பிடித்தான்......

வினோத் மல்லிகாவின் பின் வந்தவன்..... அவள் இருட்டுக்குள் போகவும் வேகமாக வந்தவன்...ராமனை பார்க்கவும் சற்று பின் தங்கினான்.... இவனை அன்னைக்கு அவுக வீட்ல பாத்தோம்ல...... ச்சை ....நம்ம பிளான கெடுத்துட்டானே..... என்றபடி கயலை நோக்கி வந்தவன்.... அவள் எதிர் திசையில் செல்லவும் சுற்றிக் கொண்டு கயலுக்கு நேராக வந்தவன்..... கயல் சிரித்து கொண்டு வரவும் பரவால்ல வினோத் நாம போட்ட மயக்க மருந்து வேலை செய்யுது போலவே... என்று சந்தோசத்துடன் அவளை நோக்கி வேகமாக வந்தவன் கயலின் கையை பிடிக்க நீட்டியவனின் கை பின்னால் முறுக்கப் பட மறுகை கயலை அணைத்திருந்தது.....

வலியால் முகத்தை சுளித்தவன்.... திரும்பி பார்க்க கண்ணன் ருத்ர மூர்த்தியாக கயலை அணைத்தப் படி நின்றிருந்தான்.....



“இவ என்னோட பொண்டாட்டி.....”.

இந்த பய எப்போ வந்தான்...... நாம நல்லா சுத்திபாத்துட்டுதானே மயக்க மருந்தை இதுக ரெண்டுக்கும் குடுத்தோம்.... அண்ணன் ...தம்பி ரெண்டுபேரும் கரெக்டா வந்திருக்காங்க....”அது...வந்து இவுக கீழ விழுகுறமாதிரி இருந்துச்சு.... அதான் கைய புடிச்சு நிப்பாட்டலாம்னு வந்தேன்......”அவனுக்கு கைவலி உயிர் போயிற்று.....



“இந்த சமூக சேவையெல்லாம் வேற எங்கயாவது போய் வச்சிக்க.... எங்க குடும்பத்து பொண்ணுக்கிட்ட வாலாட்டுறத பாத்தேன்.... அப்புறம் நடக்குறதே வேறயா இருக்கும் ... சொந்தகாரனா இருக்குறதால கொஞ்சம் நிதானமா பேசுறேன் ....போ...”என்றபடி கையை விட....



வினோத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியிருந்தான்.... கயல் கண்ணன் மார்பில் சாய்ந்திருந்தவள்..... மயக்கத்தில் கண்ணனை நிமிர்ந்து பார்த்தவள்......



“ஐ.... ஐயனாரு வந்திட்டிங்களா..... வரமாட்டேன்னு சொன்னிங்க....” என்று உளர ஆரம்பிக்க...

“என்னது ஐயனாரா.... யாரு ஐயனாரு......”

அவன் மார்பில் சாய்ந்தபடி.... அவன் மார்பில் விரலால் தொட்டவள்....” நீங்கதான் ஐயனாரு... அது அப்போ.... ஆனா... இப்ப மச்சான்..... ஏன்னா என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கள்ள..... அப்ப மச்சான்தான்....” என்றபடி அவன் மார்பில் மீண்டும் சாய்ந்தாள்....



இவளுக்கு என்னாச்சு.... ஒருமாதிரி பேசுறா.... என்று நினைத்தவன் அவளை தன் காருக்கு தூக்கிச் சென்றவன்......அவளை பின்சீட்டில் படுக்க வைக்க...அவனை தன்னை நோக்கி இழுத்தவள்..... அவன் இரு கன்னத்திலும் முத்தமிட்டாள்....



அடிப்பாவி... இன்னைக்கு இவளுக்கு என்னாச்சு... அதிர்ச்சி மேல அதிர்ச்சியா குடுக்குறா...போன் ஒலிக்க அதை எடுத்தவன்....

“.ஏண்டா...கோவிலுக்கு போறேன்னு சொன்ன.... வரலையா.... இல்லண்ணே.. .வந்திட்டேன்.. . இங்க அண்ணியோட தங்கச்சி மயக்கமா இருக்காங்க... அதான் என்ன பண்ணுறதுன்னு தெரியாம நின்னுகிட்டு இருக்கேன்....”



இப்போதுதான் கண்ணனுக்கு யாரோ இருவருக்கும் மயக்கமருந்து கொடுத்திருப்பார்களோ என்ற எண்ணம் தோன்றியவுடன்....வினோத்தான் அவன் கண்முன் வந்தான்... இது அவனோட வேலைதான்.....” நீ எங்க நிக்குற...”

“கோயிலுக்கு பின்னாடிண்ணே...”.

“சரி நீ அங்கயே நில்லு.... நான் காருலதான் வந்தேன்.... பின்னாடி வாரேன்...”

சுதாவை ஏற்றியவன்....”.இதுக ரெண்டுபேருக்கும் யாரோ மயக்க மருந்து குடுத்துருக்காங்கன்னு நினைக்கிறேன்....”

“என்னண்ணே.... சொல்றிங்க.... மயக்க மருந்தா.....”

“ஆமாடா.... அநேகமா அந்த வாசுவோட தம்பின்னு நினைக்கிறேன்...”.

“அவனா.... அவன் அன்னைக்கு அண்ணிய பாத்த பார்வையே சரியில்லண்ணே......”

“சரி.... நாளைக்கு கயலுக்கிட்ட கேட்டுட்டு அப்புறம் முடிவெடுப்போம்... நீ வண்டியில வீட்டுக்கு வா... நான் போறேன்....”

இருவரும் வீட்டிற்கு வர கண்ணன் கையில் ஏந்தியிருந்தான்....” ஏ.... ஐயனாரு என்னைய எங்கயா தூக்கிட்டு போற......”

“ஏய் வாயமூடுடி...சும்மா கத்தாம... எல்லாரும் எந்திரிக்க போறாங்க.”

..கதவை திறந்த சகுந்தலா...” என்னாச்சு மாப்புள்ள... கயல தூக்கிட்டு வாரிங்க...”

“நீங்க ஏன் இதுக ரெண்டை மட்டும் விட்டுட்டு வந்திக.....போங்க காருல மல்லிகா படுத்திருக்கு போய் கூட்டிட்டு வாங்க....”

“ஐய்யய்யோ.....மல்லிகாவுக்கு என்னாச்சு....”

“சத்தம் போடாதிங்க..... காலையில பேசிக்கலாம்...”.

மல்லிகாவை படுக்க வைத்தவர் இருவரையும் சாப்பிட அழைக்க.....கண்ணன் தனக்கு பசியில்லை என்று சொன்னதால் ராமனுக்கு மட்டும் சாப்பாடு போட்டார்....

அறையில் கயலை கட்டிலில் படுக்கவைத்தவன் தன் உடையை மாற்ற....” ஏய் என்னையா எனக்கு முன்னாடி டிரஸ மாத்துற.....”.

“ஆமாடி..... இப்புடிதான் புருசன மரியாதையா பேசனும்....நீ டிரஸ மாத்துரியா...”

“போய்யா...போ... நான் என்னோட மச்சான் முன்னாடியே மாத்த மாட்டேன்.... ஐயனாரு முன்னாடி மாத்திருவனா ...... நீ இப்ப என்னோட மச்சானா... இல்ல ஐயனாரா.....”

“ம்ம்ம் நீயே கண்டுபிடி....”

கயல் எழுந்து அவன் கழுத்தில் மாலையாக கோர்த்தவள் அவன் மீசையை முறுக்கியவள்” இப்ப ஐயனாரு...”..சாதாரணமாக வைத்தவள்

“இப்ப மச்சான்.......”.அவன் கன்னத்தில் முத்தமிட்டு....” நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கவா......”

“ம்ம்ம்…..” என்று அவள் முகத்தில் முத்தமிட்டு கொண்டே வந்தவன்......

“அது நானும் ஒரு பொண்ணுதானே...... நீங்க அன்னைக்கு எங்கிட்ட ஒரு வார்த்தைகூட கேக்காம... ஏன் தாலிய கட்டுனீங்க.... நான் பாவம் தானே.......”என்றபடி பாவமாக அவனை பார்த்தாள்.......

இனி....................????..

தொடரும்....................
nice
 

NithyaSriram

Active Member
சுதாவுக்கு கொஞ்சம் கொஞ்சமா புரியுது போல... இனியாவது வாசு-சுதா நல்லா இருந்தா சரி தான்...
ஆத்தா கயலு, என்னமா, இத்தன நாள் மனசுல இருந்ததெல்லாம் இப்போ கொஞ்சமா வருது..... சந்தோசம் மா... அப்படியே அந்த வினோத் கொஞ்சம் நல்லா கவனிச்சி அனுப்பு கண்ணா....
Nice epi sis....
 

Chittijayaram

Well-Known Member
Enna ma kayal mayakathula iyyanaar machan agitara, nalla nerathula kannan vandutan, ellana avlavu dan, kayal nalla maritu varama nee phone panra, parkanum nu solra nadathuma nadathu, mayakathula ketiye Oru kelvi sema Kanna Enna solra nu parakalam, vasu nee thirundutiya pa un pondatti maranum, Vinoth ku iyyanaar un velaya katu pa ellana adangamatan, super ah podu mam story, nice mam thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top