நேசம் மறவா நெஞ்சம் புத்தக வெளியீடு

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம் புத்தகம் வெளியீடு





ஹாய் பிரண்ட்ஸ் நான் எழுதிய முதல் கதை நேசம் மறவா நெஞ்சம் மல்லி மேமோட பப்ளிக்கேஷன்ல வெளிவரப்போகுது... ஒரு இல்லத்தரசியா இருந்த எனக்கு இங்க நான் கேட்ட உடன தளம் அமைச்சு கொடுத்து எழுத வாய்ப்பு கொடுத்த மல்லி மேம்க்குத்தான் நான் முதல்ல நன்றிய சொல்லனும்... நான் கேட்ட நிறைய சந்தேகங்களுக்கு பொறுமையா விளக்கம் சொல்லி இன்னைக்கு என்னுடைய கதையும் ஒரு புத்தகமா வெளிவர வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்காங்க... எனக்குள்ளயும் இருந்த திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்காங்க.... என்னோட கதையும் ஒரு புத்தகமா வெளிவர போகுதுன்னு நினைச்சு பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு.... அப்புறம் முக்கியமா என்னோட நன்றி எனக்கு கமெண்ட்ஸ் போடுறவங்களுக்கு... என்னோட முதல் கதையிலிருந்து இப்ப வரைக்கும் எனக்கு உற்சாகம் கொடுக்கிறாங்க... கமெண்ட்ஸ் போடுறத தாண்டி நல்ல ப்ரண்ட்ஸா.. அக்காவா... அம்மாவா....அறிவுரை சொல்லுரவங்களா...என் தவறை சுட்டிக்காட்டுறவங்களா.... மகளா.... .டியர்ஸா..செல்லங்களா...சின்ன சின்ன கேலி கிண்டல்கள்னு ரொம்ப உற்சாகப்படுத்தியிருக்காங்க... எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்.... நன்றிங்கிறது சின்ன வார்த்தைதான்... ஆனா எனக்கு வேற எப்படி வெளிப்படுத்துறதுன்னு தெரியல...நீங்க கொடுக்கிற ஒவ்வொரு கமெண்ட்ஸ்ம். லைக்ஸ்ம் எனக்கு கைதட்டல் மாதிரிதான்... இந்த ஊக்கத்தை இனி வரும் கதைகளுக்கும் கொடுப்பிங்கன்னு நினைக்கிறேன் பிரண்ட்ஸ்.... அடுத்த பெரிய நன்றி என் பொண்ணுக்குத்தான் ஒரு சாதாரண குடும்ப தலைவியா வீட்டுக்குள்ளயே சமையல்... வீட்டு வேலை... டிவின்னு இருந்த எனக்கு இன்னொரு உலகம் இருக்கு உனக்குள்ளயும் கதை எழுதுற திறமை இருக்குன்னு சொல்லி இங்க சேர்த்துவிட்டா... அவளாலதான் நான் இங்க வந்தேன்... என் பெரிய நன்றி என் பெண்ணுக்குத்தான் பிரண்ட்ஸ்....

 

banumathi jayaraman

Well-Known Member
:coffee: :D :D :coffee:
எனக்கு ரொம்பவும் பிடித்த
உங்களுடைய ''நேசம் மறவா
நெஞ்சம்''-ங்கிற அழகான
அருமையான நாவல்
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் கதைக்கு நாங்க நன்றி சொல்லரோம்:love::love:
இல்ல சிஸ் நான்தான் நன்றி சொல்லனும் என்னோட முதல் கதையை நீங்களெல்லாம் ரசிச்சு படிச்சதாலதான் இன்னைக்கு இந்த கதை புத்தகமா வெளிவரப்போகுது சிஸ்... எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:coffee: :D :D :coffee:
எனக்கு ரொம்பவும் பிடித்த
உங்களுடைய ''நேசம் மறவா
நெஞ்சம்''-ங்கிற அழகான
அருமையான நாவல்
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
பானு டியர் முதல் கதையிலிருந்து நீங்க கொடுக்கிற உற்சாகமும் கமெண்ட்ஸ் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... என்னுடைய கதைகள் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே சந்தோசம் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top