நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 51

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
வாழ்வே
வண்ணமாய்
மாறிட
மங்கையவள்
புன்சிரிப்பே
காரணம்.....
ரித்வி பாடிக்கொண்டே கீபோர்டினை வாசித்து முடித்ததும் அங்கிருந்த அனைவரும் கைதட்டி விசிலடித்தனர்.... ஹேமாவிற்கு அன்றைய நாள் நினைவில் வர அது தந்த இனிமையான உணர்வில் ஆழ்ந்திருக்க சுற்றுபுறம் மறந்து ரித்வி அருகே சென்று அவன் அவனை இறுக கட்டிக்கொண்டு அவனது கன்னத்தில் இதழொற்றினாள்.. ரித்வியோ அவளது திடீர் பரிசில் திகைத்தவன் அவனும் அவளை அணைத்து முன்னுச்சியில் இதழ் பதித்தான்... இருவரும் சுற்றுபுறம் மறந்து ஒரு மோனநிலையில் இருக்க அனுவோ அவர்கள் இருவரையும் ஒருமுறை சுற்றி வந்து ரித்வியின் காதில்
“அத்தான் நீங்க நடு ஹால்ல இருந்து ரொமேன்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க.. உங்களை சுற்றி நிறைய சிங்கிள் பசங்களும் இருக்கோம் அத்தான்...” என்று அவன் காதில் கூற அவனோ கூலாக
“அதுக்கு என்ன அனு பண்ணுறது??? மை பொண்டாட்டி ஆசையா கிப்ட் கொடுக்கும் போது வேணாம்னு சொல்லமுடியுமா??? வேணும்னா ஒன்னு பண்ணலாம்... எல்லாரும் நான் சொல்லுற வரைக்கும் கண்ணை மூடிக்கோங்க....” என்று கூற தன் தலையில் அடித்துக்கொண்ட அனு ஹேமாவிடம் வந்து
“அக்கா ஹேமா அக்கா....” என்று அனு அழைக்க ஹேமாவோ
“என்ன ராஜ் அனுவோட வாயிசில பேசுறீங்க???”
“அனுவோட வாய்சில்லை அக்கா... அனு தான் பேசுறேன்..” என்று அனு கூற அப்போது தான் சுற்றுப்புறம் உணர்ந்தவள் ராஜிடமிருந்து விலகினாள்... விலகியவள் ராஜை முறைக்க அவனோ பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு முழிக்க இவர்களிருவரையும் பார்த்தபடியிருந்த அனு
“ஸ்சப்பா... இப்பவே கண்ணை கட்டுதே..... என்ன தான் பா நடக்குது இங்க?? உங்க யாருக்காவது புரிஞ்சிதா?” என்று அனு கன்னத்தில் கைவைத்தபடி கேட்க ரவியோ
“அம்மாடி அனு அதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம்... நமக்கு எதுக்குமா வம்பு.... இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிருவோம்..”
“நீங்க சொல்லுறதும் வாஸ்துவம் தான் அண்ணா.... அத்தான் அக்கா அப்படிக்கா போயிட்டு உங்க ரொமேன்சை கண்டினியூ பண்ணுங்க.... இப்போ அடுத்த டாஸ்க்... வேணாம்.... இதுங்களை சேர்த்து வைக்கிற மாதிரி டாஸ்க் கொடுத்தா ரொமேன்ஸ் பண்ணுறேனு நம்ம பீ.பியை ஏத்துதுங்க... அதனால இப்போ பிரிச்சிவிடுறமாதிரி டாஸ்க் கொடுப்போம்..... அடுத்த டாஸ்க் எங்க அக்கா ஶ்ரீயிற்கு... அம்மாடி ஶ்ரீதான்யா... கண்ணால மாமா கூட டூயட் பாடுனது போதும்.. இப்போ இப்படிக்கா வாங்க...” என்று அனு கூற அவளை செல்லமாய் முறைத்தபடி வந்தாள் ஶ்ரீ....
ஶ்ரீ வந்ததும் அனு அவளிடம்
“நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்பேன்... அதுக்கு உண்மையான பதில் சொல்லனும்.... ஓகேவா... பொய் சொல்லமுடியாது...”
“சொன்னா என்ன பண்ணுவ???”
“நான் ஒன்னும் பண்ண மாட்டேன்... சாமி கண்ணை குத்திடும்..” என்று அனு கண்ணை உருட்டி காட்ட அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்...
“சரி கேளு சொல்லுறேன்....”
“ம்ம்... கேள்வி என்னதுனா நீ இப்போ மாமாவை மேரேஜ் பண்ணலை.... வன் சைட்டா டாவடிச்சிட்டு இருக்க.... அப்போ உன் கண்முன்னாடியே ஒரு பொண்ணு வந்து மாமாக்கு ப்ரபோஸ் பண்ணிடுச்சு.... மாமாவும் அதை ஆக்சப்ட் பண்ணிட்டு அதை எக்ஸ்பிரஸ் பண்ணுற மாதிரி அந்த பொண்ணுக்கு கிஸ் கொடுக்குறாரு... இப்போ நீ எப்படி ரியாக்ட் பண்ணுவ... ???” என்று அனு கேட்க ஶ்ரீயோ
“அந்த கிஸ் அடிச்ச வாயிற்கு ஆசிட் ஊத்திடுவேன்..”
“ஐயோ எனக்கா சொல்லுற?? மாமா அவரு விரும்புற பொண்ணுக்கு கிஸ் கொடுக்குறதுல உனக்கு என்ன கஷ்டம்...??”
“ஏன்டி நீ சொல்லுறதுல ஏதாவது லாஜிக் இருக்கா??? அது எப்படி அந்த பொண்ணு பிரபோஸ் பண்ணுதாம்... இவரு உடனே ஆக்செப்ட் பண்ணிட்டு கிஸ் கொடுக்குறாராம்... இது தான் அதிகமாக தமிழ் படம் பார்க்காதனு சொல்லுறது..”
“அத்தானுக்கும் அந்த பொண்ணுமேல லவ் இருந்திருக்கும்... அதனால உடனே ஆக்சப்ட் பண்ணி கிஸ் கொடுத்திருக்கலாம்...”
“போடி நீயும் உன் லாஜிக்கும்... அவரை டாவடிக்கிறேன்னு சொன்னியே... அவரை பத்தி தெரிஞ்சிக்காமலேயா அவரை டாவடிப்பேன்..??? நீ என்ன நினைச்சிட்டு இருக்கு உங்க அக்காவை பத்தி??? அதுவும் உங்க மாமுவுக்கு அவரு வேலையை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும்..?? இதுல எங்கடி அவருக்கு லவ் பண்ண டைம் இருக்கும்.... நான் மட்டும் இவரை மேரேஜ் பண்ணியிருக்காட்டி இன்னேரம் இமயமலை கூட்டத்தோட சன்னியாசி போறேன்னு போயிருப்பாரு... அப்படி பட்டவரை பார்த்து நீ இப்படி சொல்லிட்ட.....” என்று ஶ்ரீ கூற
ஹரியோ “மச்சான்... தங்கச்சி சொல்லுறது எல்லாம் உண்மையாடா?? நீ அந்த ஐடியால தான் இருந்தியா?? அதான் காலேஜ் டைமில் உனக்கு வந்த பிரபோசல் எல்லாத்தையும் ரிஜெக்ட் பண்ணியா?? இது தெரியாமல் உன்னை நான் எப்படியெல்லாம் திட்டியிருக்கேன்...” என்று போலியாய் வருத்தப்பட்டவனிடம்
“ஏன்டா நீயுமா?? அவ தான் என்னை வகையா வச்சி செய்றானா நீயும் அவளுக்கு பக்கவாத்தியம் வாசிக்கிற??” என்று ரிஷி பாவமாய் முகத்தை வைத்தபடி கேட்க அனுவோ
“சாரி மாமா.. சரியான கேள்வியை தப்பான ஒருத்தர்ட்ட கேட்டு உங்களையும் டேமேஜ் பண்ணிட்டேன்.... ஆனா இதுக்கு நிச்சயம் ரிவென்ஜ் எடுத்தே ஆகனும் மாமா... இப்போ உங்களுக்கான சான்ஸ்.. இவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணும் போது உங்களுக்கு என்ன சாங் நியாபகத்தில் வரும்.. அதாவது இந்த சர்வம் படத்துல ஆர்யாவுக்கு த்ரிஷாவை பார்க்கும் போதெல்லாம் இளையாராஜா பீஜிம் கேட்குமே.. அந்தமாதிரி என் உடன்பிறப்பை பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு எந்த பாட்டு நியாபகத்துல வரும்..???” என்று அனு கேட்க ரிஷியோ
“க்வெஸ்ஷன் பாஸ்...” என்று கூற அனுவோ
“அப்போ இது தான் ஆன்சர் தெரிஞ்சிக்க வேண்டிய கேள்வி... சொல்லுங்க மாமா... அந்த. உண்மையை சொல்லுங்க...” என்று அனுகூற ஶ்ரீயை பார்த்தவன் அனுவிடம்
“வேணாம் அனு... இப்போ தான் மேரேஜ் ஆகிருக்கு... அதுக்குள்ள டைவஸ் வாங்கி கொடுத்துடாத..”
“எதுக்கு மாமா இப்படி பயப்படுறீங்க... நாங்க எல்லாரும் உங்களுக்கு சப்போட்டுக்கு இருக்கோம்... நீங்க பயப்படாம சொல்லுங்க... அப்படியே அவ ஏதும் சொன்னா என்னோட தாய்குலத்துக்கு ஒரு குரல் கொடுத்தா அவங்க மாப்பிள்ளையை காப்பாற்ற ஓடோடி வந்திடுவாங்க.. பயப்படாம சொல்லுங்க..” என்று அனு சொல்ல மீண்டும் ஒருமுறை ஶ்ரீயை பார்த்தவன் தன் மொபைலை எடுத்து ஒரு பாடலை ஓடவிட்டான்...
நேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி
நானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி
சோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புற
கோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குற
பட்டுன்னு பாத்தவொடனே
போட்டேன் ஒரு ஐடியா
சிட்டி புல்லா சுத்த போறோம்
நாங்க இப்போ ஜோடியா
டக்கு டக்குன்னு
ஹோட்டல் பேர சொல்லவா
கண்ண மூடின்னு
மெனு கார்ட சொல்லவா
சுக்குபாய் வறுத்தா கறி
வாங்கித்தரேன் டோன்ட் வொர்ரி
கம்ப்ளிட்டா அஜினோமோட்ட ப்ரீ
டெய்லி வீட்டுல
சமையல் செய்ய வேணாம்டி
கிட்சன் இல்லாம
வீடு கட்ட நான் ரெடி
உனக்கு எதெல்லாம் புடிக்கும்
ஒரு லிஸ்ட்டு போட்டு சொல்லடி
நான் அதெல்லாம் வாங்கி
உனக்கு தருவேன் கண்மணி
டெய்லி வீட்டுல
சமையல் செய்ய வேணாம்டி
கிட்சன் இல்லாம
வீடு கட்ட நான் ரெடி
டெய்லி டெய்லி
டேய் டேய் டேய் டேய்
டேய் டேய் டேய் டேய்
டெய்லி வீட்டுல
டேய் டேய் டேய்
சமையல் செய்ய வேணாம்டி
டேய் டேய் டேய்
கிட்சன் இல்லாம
கிட்சன் கிட்சன்
கலத்தி கலத்தி
கலத்தி ரோஸ்மில்க்க
ரெண்டு சொல்லட்டா
டவ்சர் கடை கறி சோற
பார்செல் பண்ணட்டா
பாம்பே லஸ்ஸி சக்கரை தூவி
வாங்கி தரட்டா
ஜெனிக்கா பல டேஸ்ட்ட
நானும் காட்டட்டா
நெய் பொங்கல் ஊட்டி விடட்டா
டா டா டா டா
அந்த கட்டன் சாயா
வாங்கி தரட்டா டா டா டா டா
சரிகம பதநி
ஜாடிகேத்த மூடி நீ
லைப் இஸ் ஒன்லி
கொத்து பரோட்டா
டேய் டேய் டேய் டெய்லி
கிட்சன் கே கே கே கிட்சன்
நேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி
நானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி
சோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புற
கோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குற
கைய புடிச்சு என் காதல் சொல்லட்டா
கட்டி அணைச்சு ஒரு டூயட் பாடட்டா
ஹோட்டல் போக வேணாமடி
குக்கிங் பண்ண நானும் ரெடி
ஓகே சொன்னா வூட்டுகாரேன்
இல்லையுனா சமையல்காரன்
டி டி டி டி டி டி
டெய்லி வீட்டுல
சமையல் செய்ய வேணாம்டி
கிட்சன் இல்லாம
வீடு கட்ட நான் ரெடி
உனக்கு எதெல்லாம் பிடிக்கும்
ஒரு லிஸ்ட்டு போட்டு சொல்லடி
நான் அதெல்லாம் வாங்கி
உனக்கு தருவேன் கண்மணி
சொக்கா பூரி
சொக்கா பூரி தேடியே பாய் சாப்
சொக்கா பூரி தேடியே பாய் சாப்
சொக்கா பூரி தேடியே பாய் சாப் சொக்கா பூரி
என்று பாடல் முடிந்ததும் அனுவோ வயிற்றைபிடித்துக்கொண்டு சிரிக்கத்தொடங்க அவளோடு அங்கிருந்த கூட்டமும் இணைந்து கொண்டது...
“மாம்ஸ்.. சான்சே இல்லை போங்க.. இது தான் ரிவென்ஜ்... பா.. எங்க அக்காவுக்குனே தேடி பாட்டு எழுதி ரிலீஸ் பண்ணியிருக்கானுங்க.. அக்கா.. மாமாவுக்கு உன்னை பார்க்கும் போதெல்லாம் இந்த பாட்டு தான் நியாபகத்துல வருதாம்.. சூப்பர்ல... சத்தியமா இதுக்கு மேல என்னால சிரிப்பை கண்ட்ரோல் பண்ணமுடியாது....” என்று அனு மீண்டும் சிரிக்க அதில் கடுப்பான ஶ்ரீ எழுந்து ரிஷியருகே சென்று அவனை கைகளாலே மொத்தத்தொடங்கினாள்...
“நான் சோத்துமூட்டையா?? உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை சோத்தைமூட்டைனு சொல்லுவ.... அதுக்கு சார் பாட்டு தேடி போடுவாராம்.. உன்னை... போடா..” என்றவள் எழுந்து படியேறி சென்று ரிஷியின் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்...
இங்கு ரிஷியோ தலையில் ககை வைத்துக்கொண்டு என்ன சோதனைடா இது என்ற ரீதியில் அமர்ந்திருக்க அனுவோ
“என்ன மாமா அக்கா கோவிச்சிட்டு போயிட்டா??”
“இதுக்கு தானேமா ஆசைப்பட்ட... நல்லா செஞ்ஞமா நீ...”
“ஹப்பா... இப்போ தான் திருப்தியா இருக்கு... ரொமேன்ஸ் பண்ணுறேனு லொள்ளா பண்ணீங்க.. எப்படி வேட்டு வச்சேன்னு பார்த்தீங்களா??? போங்க போங்க... போயிட்டு உங்க பொண்டாட்டி காலை பிடிச்சி கெஞ்சி அவளை சமாதானம் பண்ணுங்க.. “ என்று பெரிய மனுஷியாய் அறிவுரை கூறியவளுக்கு ஒரு கும்பிடு வைத்துவிட்டு தன் மனையாளின் பெயரை ஏலமிட்டபடி தன்னறையை அடைந்தான் ரிஷி...
அவன் சென்றதும் அனு
“நல்லபடியா ஒரு ஜோடிக்கிடையில கொளுத்தி போட்டாச்சு... அடுத்து....” என்று ஆரம்பிக்க அவளை தடுத்த ரித்வி
“அம்மாடி அனு உனக்கு புண்ணியமா போகும் எங்களை விட்டுடு... உன் கைவரிசையை காட்டி என்னை சோதிச்சிராத...” அவளை சரணடைய அவளோ
“சரி ரொம்ப கெஞ்சுறீங்க அதனால பிழைச்சு போங்க.. ஆனால் இந்த கேமை முடிக்காமல் விட எனக்கு மனசு வரலை... அதனால இப்போ ஹரி மாமாவுக்கு இந்த டாஸ்கை கொடுக்கலாம்னு நினைக்கிறேன்... மாமா..”
“அம்மாடி... வேணாம்மா... நானே சுனாமில அடிப்பட்ட பில்டிங் மாதிரி ரொம்ப கஷ்டப்பட்டு மேனேஜ் பண்ணிட்டு இருக்கேன்... அதை தூக்கியடிச்சிராதமா... உனக்கு புண்ணியமா போகும்... “ என்று ஹரி கூற ப்ரீதாவோ
“அப்போ நான் உங்களை கஷ்டப்படுத்துறேன்.. அப்படி தானே..” என்று தொடங்க
“ஐயோ நான் எப்பமா அப்படி சொன்னேன்..??”
“அப்போ நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம்???”
“அது ஒரு ப்ளோர்ல சொல்லிட்டேன்மா... மற்றபடி எந்த அர்த்தமும் இல்லை...”
“இதை என்னை நம்ப சொல்லுறீங்களா??”
“ஐயோ இப்படி கேள்வி கேட்டா நான் எப்படிமா பதில் சொல்லுறது??”
“அப்போ நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம்??”
“அப்படி கேளுக்கா.. சொல்லுங்க மாமா..”
“அம்மாடி அனு வேணாம்மா.. உங்க மாமா பாவம்... இப்படி சமயம் பார்த்து லாக் பண்ணாதமா.. “
“மாமா.. நான் என்ன சொல்ல வர்றேன்னா..”
“நீ இவ்வளவு நேரம் சொன்னதே போதும்... ப்ரீ.. நானா ஏதோ டங்க் ஸ்லிப்பாகி..” என்று ஹரி ப்ரீதாவை மலையிறக்க போராடிக்கொண்டிருக்க அவர்களது செல்ல ஊடலை அங்கிருந்த இளைஞர் பட்டாளம் அவர்களுக்கு உரியமுறையில் ரசித்துக்கொண்டிருக்க அங்கு அறையில் சென்று அடைந்து கொண்ட ஜோடிகள் உள்ளே வேறொரு உலகத்தில் இருந்தனர்...
“அம்லு.. சாரிமா... நான் சும்மா ஒரு பண்ணுக்கு தான் அப்படி பண்ணேன்.. சாரிமா...”
“நீ தெளிவா தான் இருக்கியா அத்தான்???”
“புரியலை அம்லு..”
“உனக்கு எது தான் சீக்கிரம் புரிஞ்சிருக்கு... கஷ்டப்பட்டு ஒரு சீனை க்ரியேட் பண்ணி உன்னை இங்க இழுத்துட்டு வந்தா நீ சாரி கேட்டுக்கிட்டு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க...... நீ சுத்த வேஸ்ட் அத்தான்..”
“என்னது சீனா?? அப்போ நீ கோவிச்சுக்கிட்டு இங்க வரலையா??”
“அந்த சப்ப மேட்டருக்கெல்லாம் யாராவது கோபப்படுவாங்களா??”
“அடிப்பாவி அப்போ எதுக்கு அப்படி கோவப்படுறமாதிரி நடிச்ச ??”
“ஆ.... இதுக்கு தான்..” என்றவள் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு அவனது இதழ்களை சிறை செய்தாள்...
இருவரும் இதழொற்றல் எனும் யுத்தத்தில் முற்றாய் மூழ்கி எழ வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது அந்த யுத்தம்...
மெதுவாய் விலகி திரும்பிச்செல்ல முயன்றவளை பின்னாலிருந்து அணைத்தான் ரிஷி..
அவளது இடையை அரணிட்ட கைகள் சில்மிஷம் செய்ய அதில் நாணி கோணி நின்றவளது சங்குக்கழுத்தில் தன் முகம் பதித்தான் ரிஷி... அவனது ட்ரிம் செய்யப்பட்ட தாடி குறுகுறுப்பை ஏற்படுத்த அதை கூச்சம் வரப்பெற்றவள் கண்மூடியபடியே
“அத்தான் தாடி குத்துது அத்தான்... “ என்று மெல்லிய குரலில் கூற
“அப்படியா அம்லு.... சரி அதை சரி செஞ்சிடலாம்...”என்று அவள் கழுத்தில் இதழ் பதித்த நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டு இருவரும் விலகினர்....
ஶ்ரீயோ கடுப்பாய் கதவை முறைக்க ரிஷியோ கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போச்சே என்ற கவலையில் ஶ்ரீயை பார்த்தபடியிருந்தான்...
மறுபடியும் கதவு தட்டப்பட ஶ்ரீயே சென்று கதவை திறக்க வெளியே அனு நின்றிருந்தாள்...
அவளை கண்டதும் ஶ்ரீ முறைக்கத்தொடங்க அனுவோ மனதினுள்
“அச்சச்சோ இவ இன்னும் மலையிறங்கல போலயிருக்கே... மாமா நிலைமை எப்படினு தெரியலையே....” என்று நினைத்தபடி உள்ளே எட்டிபார்க்க ரிஷியின் சோகமான முகத்தை கண்டவள் மனதினுள்
“மாமாவுக்கு செம்ம டோஸ் போல... இப்ப இவகிட்ட வாய்குடுத்தா நம்மை பீஸ் பீசாக்கிருவா...வந்த வேலையை முடிச்சிட்டு உடனே இடத்தை காலி பண்ணிரு அனு..” அறிவுறுத்தியபடி
“அக்கா உன்னையும் மாமாவையும் கீழே வரச்சொன்னாங்க....” என்று கூறிவிட்டு விரைந்து அங்கிருந்து சென்றுவிட்டாள் அனு...
அவள் சென்றதும் ரிஷியருகே வந்த ஶ்ரீ
“அத்தான் கீழ வர சொல்றாங்களாம்....” என்று கூறியபடி திரும்பியவளின் கைபிடித்து தடுத்தவன் அவளை இழுத்து தன் மார்பில் போட்டுக்கொண்டவன் இடுப்பை வளைத்தபடி
“கட்டாயம் போகனுமா அம்லு??”
“கூப்பிடுறாங்களே அத்தான்....”
“நான் வேணும்னா லேட்டாகி வர்றோம்னு அம்மாவுக்கு சொல்லட்டா???”
“அதெல்லாம் வேணாம் அத்தான்... நாம கீழே போவோம்...ப்ளீஸ்...” என்று இதழ் குவித்து கன்னம் சுருக்கி கேட்டவளின் அழகில் மயங்கியவன் அந்த கன்னத்தில் முத்தமொன்றை பரிசளித்துவிட்டு அவளை அழைத்துக்கொண்டு கீழே சென்றான்...
கீழே சில உறவினர்கள் வந்திருக்க அவர்கள் தம்பதிகள் இருவரையும் வாழ்த்தி தாம் கொண்டு வந்திருந்த பரிசுகளை கொடுத்துவிட்டு சென்றனர்....
பின் மதிய உணவு முடிந்ததும் புதுமண தம்பதிகள் இருவரையும் அவர்களது அறைக்கு அனுப்பிவைத்த பெரியவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து ஏற்பாடுபாடு செய்யப்பட்டிருக்கும் ரிசெப்ஷனிற்கான வேலைகள் தொடர்பாக கலந்துரையாடத்தொடங்கினர்...
ஹேமாவும் ரித்வியும் அவர்களது அறைக்கு வந்ததும் ஏதோ கேட்க வந்த ஹேமாவை தடுத்தவன்
“மிக்கி.... நீ என்ன கேட்க போறனு எனக்கு தெரியும்... அதுக்கு நான் நிச்சயம் பதில் சொல்றேன்... அதுக்கு முதல்ல நீ நல்லா ரெஸ்ட் எடு... நீ ரொம்ப டயார்டா இருப்ப.... இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடு... நாம நைட் பேசலாம். .” என்று பிற்போட முயல ஹேமாவோ இப்பொழுதே தன் கேள்விகளுக்கான பதில் தெரியவேண்டுமென பிடிவாதம் பிடிக்க மேலும் மறுக்க விரும்பாதவன்
“சரி சொல்றேன்... இப்போ நீ என்ன தெரிஞ்சிக்கனும்???”
“ஏன் இவ்வளவு அவசரமா நம்ம மேரேஜ் நடந்தது??”
“நம்ம பாப்பாவுக்காக தான்.... எந்த காலத்துலயும் அவளுக்கு எந்தவொரு வேற்றுமையும வந்திட கூடாது... என்றைக்கும் நான் தான் அவளோட அப்பா.... அதேமாதிரி உன்னோட ஒழுக்கத்துக்கும் எந்தவொரு அவப்பெயரும் வந்திடக்கூடாதுனு தான் உன்கிட்ட கூட சொல்லாமல் மேரேஜை ஏற்பாடு செய்தேன்..”
“சரி ராஜ்... ஆனா ஶ்ரீயோட மேரேஜ் மண்டபமெடுத்து செய்றதாக தானே முடிவெடுத்திருந்தாங்க... திடீர்னு எதுக்கு இப்படி குலதெய்வ கோயில்ல நடத்துனாங்க....??”
“அது... அது... ஶ்ரீ ஆசைபட்டானு அண்ணாவும் அங்கே நடத்தலாம்னு சொல்லிட்டாங்க... அதான்..”
“ராஜ் என்கிட்ட பொய் சொல்லி மறைக்கலாம்னு நினைக்காதீங்க... உண்மையை சொல்லுங்க... என்ன நடந்தது??”
“அது... அது...”
“ராஜ்...”
“மிக்கி... அது வந்து..”
“ராஜ் ப்ளீஸ் உண்மையை சொல்லுங்க....”
“உனக்காக தான் மிக்கி...”
“எனக்காகவா???”
“ஆமா... நீ என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டா எனக்கு தலைகுனிவு அப்படினு ஶ்ரீகிட்ட நீ புலம்புனதை அவ என்கிட்ட சொன்னா.... நம்ம மேரேஜை மத்தவங்க கமெண்ட் பண்ணுறது என்னோட இமேஜை பாதிக்கும்னு நீ நினைச்சு பீல் பண்ணதையும் அவ சொன்னா.. எனக்கு என்ன சொல்லுறதுனே.. புரியலை.... அப்போ ஶ்ரீயே தான் அண்ணாகிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு இப்படி குலதெய்வ கோவில்ல சிம்பிள்ளா மேரேஜ் பண்ணிட்டு கிரேண்டா ஒரு ரிசப்ஷன் வச்சிடலாம்னு சொன்னா... வீட்டுலயும் எல்லாரும் சரினு சொல்லிட்டாங்க..... எங்க உன்கிட்ட சொன்னா நீ ஏதாவது காரணம் சொல்லி தட்டிகழிச்சிடுவனு தான் உனக்கு சொல்ல வேணாம்னு ஶ்ரீ சொல்லிட்டா....” என்று ரித்வி சொல்ல ஹேமாவிற்கு கண்கள் கலங்கியது...
தனக்காக தன்னுடைய நலனுக்காக அனைவரும் இவ்வளவு தூரத்திற்கு யோசித்து என் வாழ்வை சரிப்படுத்தியிருக்கிறார்களே என்று எண்ணியவளுக்கு கண்களில் நீர் சிந்த அதை பார்த்து பதறியவன் அவளை அணைத்தபடி
“ஹே மிக்கி... ப்ளீஸ்மா அழாத... உன்னை ஹெர்ட் பண்ணனும்னு நாங்க எதுவும் செய்யலை..” என்றவனின் வாயினை தன் கையால் பொத்தியவள்
“சாரி ராஜ்.... உங்களை நான் ரொம் ஹெர்ட் பண்ணிட்டேன்... ஐயம் சாரி... என்னால உங்களுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாதுனு நினைச்சேனே தவிர நான் இல்லாமல் ஒரு வாழ்க்கை உங்களுக்கு இல்லைனு புரிஞ்சிக்க தவறிட்டேன்.... ப்ளீஸ் என்னை மன்னிச்சிருங்க ராஜ்....” என்று தன் மார்பில் புதைந்து அழுதவளை ஆற்றியவன்
“இங்க பாரு மிக்கி... இனிமே நீ எப்பவும் அழவே கூடாது.. உனக்காக நான் எப்பவும் இருப்பேன்... அதை மட்டும் நீ எப்பவும் மறக்கவே கூடாது... புரியிதா...” என்று ஹேமாவின் கண்களை துடைத்தபடி ரித்வி கேட்க அவளும் சரியென்று ஒப்புக்கொண்டாள்...
“ராஜ் இன்னொரு விஷயம்???”சொல்லு மிக்கி...”
“அந்த... அந்த... வேந்தன்....”
“அவன் இனி எப்பவும் ஜெயில்ல இருந்து வெளிய வரமாட்டான்.... அவனுக்கான சரியான தண்டனையை சட்டம் கொடுத்திருக்கு.... அவனை பத்தி நீ கவலைப்படாத... இப்போ எதை பத்தியும் யோசிக்காமல் நீ கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடு மிக்கி...” என்று செல்லத்திரும்பியவனின் கரம்பிடித்து தடுத்தவள் அவன் என்னவென்று பார்க்க
“லவ் யூ பேபி...” என்று கூற அவளது அந்த வார்த்தைகளில் மெய் சிலிர்த்தவன் அவளை இறுக்கி அணைத்து
“மீ டூ டி புஜ்ஜி குட்டி....” என்று கூறி முன்னுச்சியில் முத்தமிட்டவன் அவளை ரெஸ்ட் எடுக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்றான்...
மாலையில் இரண்டு ஜோடிகளையும் முதலிரவுக்கென்று அவர்களுக்கு பதிவு செய்திருந்த ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தனர்..... அடுத்த இரண்டு நாட்களுக்கு கரி நாள் என்பதால் இரண்டு ஜோடிகளையும் நேரே ரிசப்ஷனுக்கு வருமாறு பெரியவர்கள் பணிக்க அவர்களும் ரிசப்ஷனன்று மாலை நேர அந்த மண்டபத்திற்கு வந்தனர்...
ரிசப்ஷனும் நன்றாக முடிவடைய இரண்டு ஜோடிகளும் தம் இல்லற வாழ்வை இனிதாய் தொடங்கி தத்தமது துணையின் அன்பில் பூரித்து மகிழ்ந்தனர்....
ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு பங்கம் விளைவிக்கவென்றே சில சம்பவங்கள் நடந்தேறியது....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனு சந்திரன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top