நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 26

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
என் மனம்கவர்ந்தவள்
வலியால் துடித்து
வெம்பி நிற்பதை
கண்டு
தினம் தினம்
உதிரம்
வடிக்கிறது காதல்
கொண்ட
இதயம்..

மாலை ஹேமாவை டிஸ்சார்ஜ் செய்ய அவளை தன் வீட்டிற்கு அழைத்து சென்றாள் ஶ்ரீ.....
ராஜேஷ்குமார் வந்ததும் ரித்வி சென்றுவிட கண்விழித்த ஹேமாவிற்கு ரித்வி அவளை அனுமதித்தது தெரியாது... ஶ்ரீயும் அது பற்றி தெரிவிக்கதாதால் ஹேமாவுக்கு தெரியவில்லை...
மயக்கத்தில் இருந்து எழுந்த ஹேமா மீண்டும் பயத்தில் புலம்ப, அவளை அமைதிப்படுத்திய ஶ்ரீ அவள் தற்போது தன்னுடன் பாதுகாப்பாய் இருப்பதை வார்த்தைகளால் உணர்த்தியவள் இனி அவளை எந்த ஆபத்தும் நெருங்காமல் தான் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்தாள் ஶ்ரீ...
ஶ்ரீயின் வார்த்தைகள் சரியாய் ஹேமாவிடம் வேலை செய்ய ஹேமாவின் புலம்பலும் நின்றது...
மாலை ஶ்ரீயின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டவள் ஶ்ரீயின் அறையில் தங்குவதாக முடிவு செய்யப்பட்டது...
ராதாவும் அனுவும் ஹேமாவிற்கு தேவையானவற்றை செய்து கொடுக்க ஶ்ரீயின் துணையுடன் ஹேமா தங்கியிருந்தாள்...
இரவு உணவை முடித்துவிட்டு ஹேமா உறங்கத்தயாராக ஏதோ வயிற்றை பிரட்டுவது போல் இருக்க வாஷ் ரூம் சென்றவள் வாஷ்பேசனில் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டாள்...
அவள் வாஷ்ரூம் சென்றதும் பின்னாலேயே சென்ற ஶ்ரீ அவளது நெற்றியை பிடித்தபடி தலையை தாங்கிக்கொண்டாள்...
ஐந்துமுறை வயிற்றிலிருந்த அனைத்தையும் வெளியே எடுத்தவள் சோர்ந்து அரை மயக்கத்திற்கு சென்றுவிட்டாள்...அவளை தாங்கிக்கொண்ட ஶ்ரீ அவளை சுத்தப்படுத்திவிட்டு கைத்தாங்கலாய் வாஷ்ரூமிலிருந்து அழைத்து வந்து ஹேமாவை கட்டிலில்படுக்க வைத்துவிட்டு தன் அன்னையை அழைத்து வந்தாள் ஶ்ரீ....
ஶ்ரீயுடன் அறைக்கு வந்த ராதா ஹேவாவின் அருகில் சென்று அவளை ஆராய அவளது சோர்வு பற்றி ஶ்ரீயிடம் விசாரிக்க ஶ்ரீ அப்போது தான் ராதாவிடம் ஹேமா கர்ப்பாக இருக்கும் விடயத்தை கூறினாள்... அதை கேட்டதும் அவளை வையத்தொடங்கினாள் ராதா...
“ ஏன்டி அறிவு கெட்டவளே... இதை ஏன்டி முதல்லயே சொல்லலை.... வயித்து புள்ளைக்காரிக்கு மொதல் மூனு மாசம் மசக்கை படுத்தியெடுக்கும்.... அந்த நேரத்துல ரொம்ப சத்தான ஆகாரமா கொடுக்கனும்.... இப்போ டின்னருக்கு ஒரு இட்லியோடயே போதும்னு எழும்பிட்டா.... மொதல்லையே தெரிஞ்சிருந்தா வற்புறுத்தி அவளை நல்லா சாப்பிட வச்சிருப்பேன்... இப்போ பாரு சாப்பிட்டதெல்லாம் வெளிய வந்து மயக்கமாயிட்டா...இப்படி இருக்கது கருவுல வளர்ற குழந்தைக்கு சரியில்லை... இரு நான் போய் பால் ஆத்தி கொண்டு வர்றேன்... அதை மொதல்ல குடிக்க கொடுப்போம்..” என்றுவிட்ட அறையிலிருந்து சென்ற ராதா சிறிது நேரத்தில் ஒரு கையில் பால் கோப்பையுடனும் மறுகையில் பெருஞ்சீரகத்துடனும் வந்தார்...
ஶ்ரீயும் அனுவும் ஹேமா சாய்வாய் எழுந்து அமர உதவி செய்ய அவளருகே வந்தமர்ந்த ராதா பால் கோப்பையை நீட்ட
“வேணா ஆன்டி.... முடியலை... ஒரு மாதிரி கிறுகிறுனு இருக்கு...”
“அப்படி தான் மா இருக்கும்... வெறும் வயித்தோடு இருக்கக்கூடாது. இந்த பாலை குடிச்சிட்டு இந்த பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மெல்லு.. வாமிட் வராது....” என்று ராதா கூற அவரது கூற்றை மறுக்கமுடியாது பாலை கையில் வாங்க முயன்றவளுக்கு கை நடுங்கியது....
ராதாவே பாலை புகட்டிவிட அதை ஒருவாறு குடித்து முடித்தவள் எங்கே மறுபடியும் வாமிட் வந்துவிடுமோ என்ற பயத்தில் பெருஞ்சீரகத்தை வாங்கி வாயில் போட்டுக்கொண்டாள்....
சிறிது நேரத்தில் சரியாகிவிட சற்று தெம்பான ஹேமா தான் படுத்துக்கொள்வதாக கூற ராதா
“சரிமா படுத்துக்கோ.... உனக்கு ஹாட் பேக்குல கொஞ்சம் இட்லியும் பிளாஸ்கில் பாலும் எடுத்து வைக்கிறேன்... இடையில பசிச்சா எழுந்து சாப்பிடு.. முடியலைனா தான்யாகிட்ட சொல்லு... அவ போட்டு தருவா.... வயித்தை காயப்போட்டுராத.. இந்த நிலையில் வயித்தை காயப்போடக்கூடாது... எதுவும் தேவைனா ஒரு குரல் குடு நான் வர்றேன்... சரியா???” என்று கேட்க தலையாட்டினாள் ஹேமா
“தான்யா ஹேமாவை பார்த்துக்கோ.. எப்பவும் போல கும்பகர்ணன் மாதிரி தூங்கிறாத... சரியா??”
“கவலைப்படாதே தாய்க்குலமே... என் நட்பு போதும் போதும்னு என் காலில் விழுந்து கெஞ்சுற அளவுக்கு அவளை பத்திரமா பார்த்துக்கிறேன்.... போதுமா..??”
“இப்படி வக்கணையா மட்டும் நல்லா பேசு.... சரி ஹேமா நீ படுத்துக்கோ மா.....” என்றுவிட்டு அனுவையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றார் ராதா..அவர் சென்றதும் கதவை அடைத்துவிட்டு வந்த ஶ்ரீ
“நீ தூங்கு பப்ளி ரொம்ப டயர்டா இருக்க....எனக்கும் தூக்கம் கம்மிங்... நைட்டு பசிச்சா என்னை எழுப்பு.... நீயா எழும்பு போயிராத.... சரியா...” என்று அருகில் படுத்தவளிடம்
“ஶ்ரீ உன்கிட்ட ஒன்னு கேட்கனும்....”
“சொல்லு பப்ளி???”
“நான் கன்சீவ்வா இருக்கேனா???” என்று ஹேமா கேட்க படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்த ஶ்ரீ என்ன கூறுவதென்று தெரியாமல் முழிக்க
“ஏன் ஶ்ரீ இப்படி முழிக்கிற??? உண்மையை சொல்லு.. நான் கன்சீவ்வா இருக்கேனா....”
“ஆ....மா.... ஹேமா... ஆனால் ஹேமா...”
“ஶ்ரீ எனக்கு இந்த குழந்தை வேணாம்..... இதை நாளைக்கே அபார்ஷன் பண்ணிடலாம்....”
“ஏய் லூசாடி நீ... இது என்ன கடையில விற்கிற பொருளா வேணும்னா வாங்குறதுக்கும் வேணாம்னா தூக்கி வீசுறதுக்கும்... உயிர்டி.... இன்னமும் உருவமே வராத அந்த உயிரை கொல்ல போறேன்னு சொல்லுற???? என்ன பிரச்சனைனாலும் ஒரு உயிரை கொல்லுறது நியாயமா டி?? பேசாம தூங்கு... எதுனாலும் காலையில பேசிக்கலாம்.... ரொம்ப டயர்டா இருக்க. படுத்து தூங்கு...” என்றுவிட்டு லைட்டை அணைத்தவன் நைட் லேம்பை ஒளிரச்செய்துவிட்டு படுத்துவிட்டாள்....
ஏதோ பேச முயன்ற ஹேமாவை குட்நைட் சொல்லியே கடுப்பாக்கிவிட்டு உறங்கிவிட்டாள் ஶ்ரீ...
ஆனால் ஹேமாவோ இரவு முழுவதும் தூங்கவில்லை... தாய்மை அடைந்ததை எண்ணி மகிழ்வதா அந்த தாய்மையை கொடுத்தவனை எண்ணி நோவதா என்று புரியவில்லை... இந்த தாய்மையை அடைய அவள் அனுபவித்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல... சுமப்பவள் தான் என்றாலும் அதை கொடுத்தவனையும் அதை கொடுத்த விதத்தையும் எண்ணியவளுக்கு மேனி நடுங்கியது... மூன்று மாதங்களாக அவள் அனுபவித்த கொடுமைகள் கண் முன் வந்து அவளை இன்னும் பயமுறுத்தியது.... தன் வாழ்வு இவ்வாறு சீரழிக்கபடுமென்று அவள் கனவிலும் நினைத்ததில்லை.... என் குழந்தை என்று ஒரு மனம் மகிழ மறு மனமோ அவனது வாரிசு என்று உரக்க கூறி அவளை வதைத்தது... ஊரும் உலகமுமே அதை தான் கூறும் என்ற உண்மையையும் அவள் மனம் எடுத்துரைக்க தவறவில்லை....
அது கண்ணீரை வரவழைக்க தலையணையை கட்டிக்கொண்டு குலுங்கி குலுங்கி அழத்தொடங்கினாள் ஹேமா...
சத்தம் கேட்டு கண்விழித்த ஶ்ரீ ஹேமாவை பார்க்க அவள் அழுவது தெரிந்தது.... விரைந்து லைட்டை ஆன் செய்தவள்
“ஹேய் ஹேமா..ஏன் அழுற?? என்னாச்சு....???” என்று கேட்டபடி ஹேமாவை அணைத்துக்கொண்டவள் மெதுவாக தடவிக்கொடுத்தாள்....
அப்போது ஆதரவாய் ஒரு அணைப்பை வேண்டி நின்ற ஹேமாவோ ஶ்ரீயின் அணைப்பில் தன் மொத்த துயரத்தையும் அழுகையாய் வெளிப்படுத்தியவள் ஒரு கட்டத்தில் சோர்ந்து கண்ணீரை மட்டும் வெளியேற்ற தொடங்கியவள்
“ஏன்டி என்னோட வாழ்க்கையில விதி இப்படி விளையாடுச்சு??? நான் என்ன பாவம் பண்ணேன்...... என்னோட கருவில வளர்ற என்னோட குழந்தையை கூட வெறுக்கிற நிலைமை ஏன் எனக்கு உருவானது??? பல பேருக்கு ஏங்கியிருந்தும் கிடைக்காத தாய்மை எனக்கு கிடைச்சபோதும் அதை சந்தோஷமா அனுபவிக்கிற சந்தரப்பம் ஏன் எனக்கு அமையல??? சந்தோஷமா இருந்த என் வாழ்க்கையை ஏன் அந்த ராட்சசன் வந்து அழிச்சான்??? ஏன்டி என்னோட வாழ்க்கை இப்படி மீழமுடியாத புதைகுழியில விழுந்து அழிந்து போச்சு.... “ என்று கேள்வி கேட்டு அழதவளுக்கு ஆறுதல் கூறினாள் ஶ்ரீ...
“இங்க பாரு பப்ளி... உனக்கு எதுவும் நடக்கலை... இப்போ நீ பத்திரமா என் கூட இருக்க...இனியும் உன்னையும் உன் வயித்துக்குள்ள இருக்க குட்டி பாப்பாவையும் நாங்க எல்லாரும் பாத்துப்போம்...மறுபடியும் யாரும் உன்னை கஷ்டப்படுத்த விடமாட்டேன்... இது நான் உனக்கு பண்ணி தர பிராமிஸ் சரியா??? இப்போ எதை பத்தியும் நினைக்காமல் தூங்கு... நீ நல்லா இருந்தா தான் பாப்பாவும் நல்லாயிருக்கும்..... சோ எதை பத்தியும் நினைக்காமல் தூங்கு பப்ளி...” என்று ஶ்ரீ ஹேமாவை உறங்கக்கூற ஹேமாவோ
“இல்லைடி... அவன்... அவன் என்னை தேடி வருவான்.... என்ன.. என்ன... அவன்.....அவன் வந்தா என்னை திரும்ப அனுப்பிராத..... ப்ளீஸ் டி...” என்று குழந்தையாய் கெஞ்ச
“லூசாடி நீ.... உன்னை மறுபடியும் அவன் கூட அனுப்பிருவேனா?? அவனை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போவேனே தவிர உன்னை அவன் கூட அனுப்ப மாட்டேன்.... புரியிதா??? இப்போ தூங்கு... “ என்ற ஶ்ரீயின் வார்த்தைகளில் சற்று அமைதியடைந்தவள் கட்டிலில் படுக்க முயல
“பப்ளி கொஞ்சம் சாப்பிட்டு படுக்குறியா?? பால் குடிச்சு ரொம்ப நேரமாச்சு.... பாப்புக்கு பசிக்கும்.. கொஞ்சம் சாப்பிடு...” என்று ஶ்ரீ கூற ஹேமா சரியென்று தலையாட்டினாள்...
கட்டிலிருந்து எழுந்த ஶ்ரீ அவளுக்கு உணவு எடுத்து கொடுத்துவிட்டு ஆபிஸில் நடந்த விஷயங்களை சுவாரஸ்யமாக கூறிக்கொண்டிருந்தாள்... ஶ்ரீயின் பேச்சில் துக்கம் மறந்த ஹேமா பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தாள்..
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
ஹேமா சாப்பிட்டு முடித்ததும் உணவு தட்டை கழுவி வைத்த ஶ்ரீ ஹேமாவை படுக்கச் சொல்லிவிட்டு தானும் அருகில் படுத்துக்கொண்டாள்....
ஶ்ரீ படுத்ததும் ஹேமா மெதுவா
“ஶ்ரீ.... ரா... ரித்வி எப்படி இருக்காரு...”
“நல்லா இருக்காருடி.. மூனு மாசம் ரஷ்யால இருந்துட்டு எங்க என்கேஜ்மண்டுக்கு முதல் நாள் தான் வந்தாரு... “
“ம்...” என்றவளுக்கு வேறு வார்த்தைகள் நியாபகம் வரவில்லை....
இப்படி அழுறத பார்க்கும் போது மனசே ஆறமாட்டேங்குது....”
“பாவம் தான்மா.. கஷ்டமே தெரியாம வளந்த பொண்ணு... இப்படி வாழ்க்கையே சூனியமாகி வந்திருக்கத பார்க்கிறபோ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...ஹேமா அவளோட ஹஸ்பண்டை பத்தி ஏதாவது சொன்னாளா??”
“இல்லைபா வாயே திறக்கமாட்டேங்கிறா.... நான் நேரடியா கேட்கலை... ஆனா அவனோட பேச்சையே எடுக்கவிட மாட்டேங்கிறா..நானும் பொறுமையா கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன்... ரித்வி அத்தான்கிட்ட அந்தாளோட ஊரையும் போட்டோவையும் குடுத்திருக்கேன்...அவர் விசாரிக்கிறதா சொல்லியிருக்காரு.. பார்ப்போம்பா....”
“சரிமா ஹேமாவோட அம்மா அப்பா....???”
“அங்கிளும் ஆண்டியும் எங்கயிருக்காங்கனு தெரியலைபா... அவங்களையும் தேட சொல்லியிருக்கேன்.. அவங்க இவ பக்கத்துல இருந்தா இன்னும் கொஞ்சம் தெம்பா இருப்பா... ஆனா என்ன நடந்ததுனு தெரிஞ்சிக்காம அவகிட்ட இதபத்தி பேச பயமா இருக்கு.... நைட்டு பேபியை அபார்ட் பண்ணிரலாம் அப்படினு ரொம்ப ஆர்ப்பாட்டாம் பண்ணிட்டா.. நான் தான் காலையில பார்த்துக்கலாம் அப்படினு ஆப் பண்ணிட்டேன்... இப்போ எழுந்ததும் அவள எப்படி சமாளிக்கப்போறேனு தெரியலை...”
“ஶ்ரீ அம்மாகிட்ட சொல்லு... அவ பார்த்துக்குவா... நானும் அம்மாவை ஹேமாகூட பேச சொல்லுறேன்.... நீ இதை பத்தி எதுவும் ஹேமாகிட்ட பேசாத... அப்புறம் அவளை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் புல் செக்கப் பண்ணனும்... அனுகிட்ட கேளு. அவ யாரு நல்ல கைனோகோலஜிஸ்ட்னு சொல்லுவா... அங்க கூட்டிட்டு போய் எல்லா டெஸ்ட்டும் எடுத்துக்கலாம்....நாளைக்கே அப்பாயிண்ட்மென்ட் பிக்ஸ் பண்ணமுடியும்னா ரொம்ப நல்லது...”
“சரிபா... நான் அனுகிட்ட கேட்குறேன்... நான் ரித்வி அத்தான்க்கு ஒரு கால் பண்ணிட்டு வர்றேன்...” என்றுவிட்டு ஶ்ரீ வெளியே சென்றாள்...
ரித்விக்கு அழைக்க முதல் ரிங்கிலேயே அழைப்பு எடுக்கப்பட்டது..
“சொல்லு ஶ்ரீ..”
“அத்தான் ஹேமா பத்தி ஏதாவது தெரிந்ததா அத்தான்... ??”
“இல்லைமா.. ஒரு டிடெக்டிவ் ஏஜன்சிக்கு நீ குடுத்த டீடெய்ல்ஸ் எல்லாம் குடுத்திருக்கேன்... அவங்க டூ டேஸ் டைம் கேட்டுருக்காங்க...”
“சரி அத்தான்... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம் கண்டுபிடிங்க அத்தான்..”
“சரி ஶ்ரீ.. அதை நான் பார்த்துக்கிறேன்... ஹேமா எப்படியிருக்கா??” என்று ரித்வி கேட்க நேற்றிரவு நடந்த அனைத்தையும் கூறினாள் ஶ்ரீ..
அதனை கேட்வனது மனது கனத்தது... எப்படியிருந்தவள் இப்படியாகிவிட்டாளே... என்று வருந்தினான்...
“சரி ஶ்ரீ.. ஒரு சின்ன வேலையா இருக்கேன்.. பிறகு கூப்பிடுறேன்..” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவன் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான்..
மூன்று மாதங்கள் ஹேமாவின் பிரிவால் வருந்திய ரித்விக்கு அவளது தற்போதைய நிலை அவனுள் இன்னதென்று சொல்லமுடியாத ஒரு வலியை உருவாக்கியிருந்தது..
அவளை மயங்கிய நிலையில் பார்த்த கணத்திலிருந்து காதல் கொண்ட மனமோ இரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தது... தங்கத்தட்டில் தாங்கி சீராட்ட எண்ணியிருந்தவள் வீதியில் ஆதரவற்று அடிபட்டு மயங்கியிருந்ததை கண்டவனுக்கு இதயம் இரண்டாய் பிளந்ததாய் உணர்ந்தான்...
அவளது வாடிய தோற்றமும் முகத்தில் தெரிந்த தெளிவின்மையும் அவள் ஏதோவொரு இக்கட்டில் இருப்பதை அவனது காதல் உள்ளம் உணர்த்தியிருந்தாது... அவளை காணும்வரை அவள் மீதிருந்த வருத்தம் அவளை கண்ட நொடியிலிருந்து கவலையாய் மாறியிருந்தது... காரணமில்லாமல் பிரிவை அறிவிக்காமலே காணாமல் போனவள் இப்போது வாழ்க்கையை தொலைத்துவிட்டதாய் வந்து நிற்க அதனை காதல் கொண்ட உள்ளத்தால் ஜீரணிக்கமுடியவில்லை... அவளை இந்நிலைக்கு ஆளாக்கியவனை தேடிப்பிடித்து கொல்லத்துடித்தது காதல் மனது. எப்போதும் மலர்ந்திருக்கும் குழந்தைத்தனம் ததும்பும் அந்த அழகிய வதனத்தின் மகிழ்ச்சியை சூறையாடி நாசம் செய்ததவனை வதைக்க துடித்தது காதல் மனம்... ஹேமா மீது ரித்வி கொண்டிருந்த காதல் அவளை துன்புறுத்தியவனை தேடிப்பிடித்து தண்டிக்கும் வெறியை அதிகரித்திருந்தது. அதுவும் ஶ்ரீ ஹேமா கூறி அழுததாக கூறியதை கேட்டதிலிருந்து அவனது கோபம் கட்டுக்கடங்காது அதிகரித்தது...
ஹேமாவின் கணவனை பற்றி விசாரிக்கச்சொல்லியிருந்த டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தும் தன் நண்பன் விமலை அழைத்தான் ரித்வி...
அவனிடம் அந்த கயவனை பற்றி விபரம் கேட்க விமல் கூறிய தகவல் அவ்வளவு உவப்பானதாய் இல்லை.... அதுவும் அவன் ஹேமாவை திருமணம் செய்த சந்தர்ப்பத்தை கூற கேட்டவனுக்கு அவனது கோபத்தை அதிகப்படுத்தியது.... அவனது முழுவிபரத்தையும் தனக்கு அனுப்ப கூறிய ரித்வி ஹேமாவின் அம்மா அப்பா பற்றியும் விசாரித்து தெரிவிக்க சொன்னவன் அழைப்பை துண்டித்துவிட்டு தன் அண்ணன் ரிஷியை காண அவனது அறைக்கு சென்றான்....
“அண்ணா...”
“வாடா ரித்வி...”
“அண்ணா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்..”
“சொல்லுடா... என்ன விஷயம்??”
“அண்ணா ஶ்ரீ பேசுனாளா??”
“ஆமாடா.. ஹேமா..”
“ஆமா அண்ணா... ஹேமா இப்போ ஶ்ரீ வீட்டுல தான் இருக்கா...” என்று நேற்று நடந்த முழுவிபரத்தையும் கூறியவன் தன் நண்பன் கூறிய தகவலையும் கூறினான்...
“அண்ணா.. ஹேமாவை அசிங்கப்படுத்தி அந்த அயோக்கியன் கல்யாணம் பண்ணியிருக்கான் அண்ணா... ஹேமாவுக்கும் அவனுக்கும் ஏதோ பிரச்சனையிருந்திருக்கும் போலயிருக்கு... ஹேமா ஊருக்கு போகும்போதெல்லாம் அவன் வாலாட்ட இவ ஒருநாள் எல்லாரும் இருக்கும் போது அவனை திட்டியிருக்கா...இவன் அதை மனசுல வச்சிருந்து அவளை பழிவாங்க நினைச்சிருக்கான்... அவனுக்கு ஹேமாவோட உறவுக்கார பொண்ணை மேரேஜ் பண்ண முடிவு பண்ணி ஹேமா அவங்க மேரேஜிக்கு போயிருக்கா.. அவன் இவளை பழிவாங்குறதுக்காக கல்யாணத்துக்கு முதல்நாள் நைட்டு ஹேமாவை அவ ரூம்ல தனியா படுக்கிறமாதிரி ஏற்பாடு பண்ணிட்டு இவன் அந்த ரூம்ல போய் படுத்துட்டான்...ஹேமாவுக்கும் அவளுக்கு தெரியாம அவ சாப்பிட்டுல ஏதோ கலந்து கொடுக்க அவளும் மயக்கத்துல இருந்திருக்கா.. காலையில ஹேமாவும் இவனும் ஒரு ரூம்ல இருந்ததை வீட்டுல உள்ளவங்க பார்த்து இவ ரெண்டு பேருக்கும் ஏதோ தப்பான உறவு இருக்குனு சொல்ல இவனும் ஆமா... நாங்க ரெண்டு பேரும் விரும்புறோம்... அவ நேத்து என்னை வரச்சொன்ன... அப்படினு கதைசொல்ல ஊருல உள்ளவங்க எல்லாரும் அவன் சொல்லுறது உண்மைனு நம்பிட்டாங்களாம்..... ஹேமாவோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நானும் ஹேமாவும் விரும்புறது தெரிஞ்சதாலயும் ஹேமாவுக்கும் அவனுக்கும் ஏற்கனவே பிரச்சினை இருந்தது தெரிஞ்சதாலேயும் அவங்க ஹேமாவுக்கு சப்போர்ட்டா பேசி சண்டை பிடிச்சிருக்காங்க... ஆனா ஊருல அந்த அயோக்கினம் பெரிய தலை அப்படிங்கிறதால அவனுக்கு சப்போர்டா பேசி ஹேமாவையும் அவ அம்மா அப்பாவையும் ரொம்ப தப்பா பேசியிருக்காங்க... ஊர்காரங்க பேசுனதை தாங்க முடியாமல் ஹேமா அவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டா.. அவ அம்மா அப்பா எவ்வளவோ சொல்லியும் அவ கேட்காம என்னால நீங்க அசிங்கப்பட வேண்டாம்னு சொல்லிட்டு அந்த அயோக்கியன் கையால தாலி வாங்கிக்கிட்டா......”​
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
“ ஒரு பொண்ணு அசிங்கப்படுத்துனா அந்த அயோக்கியனும் அவளை இப்படியா பழி வாங்கனும்?? ஹேமாவும் கொஞ்சம் நிதானமா முடிவெடுத்திருக்கலாம்.. அவ அம்மா அப்பாவே அவளுக்கு சப்போர்ட்டா இருந்தப்போ அவ ஏன் இப்படியொரு முட்டாள்தனமான முடிவெடுத்தா?? கடைசியில அந்த அயோக்கியனோட பழிவெறி இவளோட வாழ்க்கையை காவு வாங்கிருச்சே...”
“ஹேமாகிட்ட ஒரு பழக்கம் இருக்குனா.. எந்த காரணத்தைக்கொண்டும் அவளை பெத்தவங்க யாருகிட்டயும் தன்னால தலைகுனிந்து நிற்கக்கூடாதுனு உறுதியா இருப்பா.. அந்த அயோக்கியனும் அதை தெரிஞ்சிக்கிட்டு தன்னோட ஆட்களையே செட் பண்ணி அவ அம்மா அப்பாவை தப்பா பேச சொல்லியிருக்கான்.. இவளும் அதுக்காக இப்படி அந்த அயோக்கியன் கையில சிக்கியிருக்கா..”
“சே... என்ன மனுஷன்டா அவன்... ஒரு பொண்ணை இப்படியா பழிவாங்குறது??”
“அந்த ராஸ்கலுக்கு பொண்ணுங்க சகவாசமும் இருந்திருக்கு... குடியும் குடுத்தனமாக தான் இருந்திருக்கான்...ரௌடிசம் கட்டப்பஞ்சாயத்துனு அவன் செய்யாத விஷயம் எதுவும் இல்லை... அவனை எதிர்க்கிறவங்க யாரும் அந்த ஊருல உயிரோட இருக்கமாட்டாங்களாம்.... போலிஸ்ல இருந்து பஞ்சாயத்து வரைக்கும் இவன் சொல்லரது தான் பைனல் டிசிஷனாம்... அந்த பொறுக்கி ராஸ்கல் ஏதோ காரணத்துக்காக ஹேமா.....ஹேமாவுக்கு..... பித்து.... பிடிச்சிருக்குனு அவனோட வீட்டுக்கு பின்னாடி இருந்த குடோன்ல அடைச்சி வச்சிருந்திருக்கான்...” என்று கூறியவனுக்கு வேறு வார்த்தைகள் வரவில்லை... தொண்டையில் வார்த்தைகள் சிக்க கண்களிரண்டும் கலங்கியது ரித்விக்கு....
அவனது வேதனையை உணர்ந்த ரிஷி ரித்வியை அணைத்துக்கொண்டான்... ஹேமாவிற்கு நிகழ்ந்த கொடுமையை காதால் கேட்டவனுக்கு அதை அனுபவித்தவளின் வலி உணரநேர்ந்த போது அது சொல்லொண்ண துக்கத்தை ஏற்படுத்தியிருந்தது....
பழிவாங்குவதற்காக ஒரு பெண்ணை இவ்வளவு தூரமா வதைப்பது என்று வருந்தியவனுக்கு ஹேமாவின் கணவன் மீது கட்டுக்கடங்காமல் கோபம் கொப்பரித்தது.
“அவனை கண்டுபிடிக்கனும் அண்ணா... ஹேமா பட்ட அத்தனை கஷ்டத்தையும் அந்த அயோக்கியன் அனுபவிக்கனும்... என்னோட தேவதையோட சந்தோஷத்தை நாசம் பண்ணவனுக்கு அவன் கனவிலயும் நினைத்து பார்க்கமுடியாதபடியொரு தண்டனை கிடைக்கனும். .. என்னோட தண்டனையில அவன் இனிமே யாரையும் பழிவாங்கனும்னோ எந்த பொண்ணுகிட்டயும் தரக்குறைவா பேசவோ நடந்துக்கவோ கூடாது... அதை பத்தி நினைக்கக்கூட முடியாத மாதிரி அவனுக்கு ஒரு தண்டனையை நான் அவனுக்கு கொடுப்பேன்... அதுக்கு நீங்க தான் அண்ணா உதவி பண்ணனும்... உங்க இன்ப்ளூவன்சை வைத்து அவனை உருதெரியாம அழிக்கனும்... என்னோட ஹேமா அவனை பத்தி பயப்படாம நிம்மதியா இருக்கனும்....”
“அவனை நான் பார்த்துக்கிறேன்... நீ அவனோட டீடெய்ல்ஸை மட்டும் அனுப்பு.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்....”
“இல்லணா... அவனை நான் தான் தண்டிக்கனும்.... நான் தான் அவனுக்கு எமன்... நீங்க எனக்கு உதவியா மட்டும் இருங்க.. அது போதும்...”
“சரிடா அவனை பார்த்துக்கலாம்... ஹேமா எப்படி அவன்கிட்ட இருந்து தப்பிச்சு வந்தா??”
“அது தெரியல அண்ணா... விமல் ஒரு நாள்ல இவ்வளவு டீடெய்ல்ஸ் தான் கலெக்ட் பண்ணமுடிஞ்சதுனு சொன்னான்... இதை கேட்டதுமே எனக்கு மனசு செத்துபோச்சு.... எதுக்கு அந்த ராட்சசன் இப்படி எங்க வாழ்க்கையில விளையாண்டான்..?? அவன் மட்டும் வராம இருந்திருந்தா நானும் அவளும் சந்தோஷமா இருந்திருப்போம்... அவ நைட்டு ஶ்ரீகிட்ட என்னை அவன்கூட அனுப்பிடாதனு சொல்லு அழுதுருக்கா.. அதை கேட்டதும் இன்னும் நொந்து போய்ட்டேன்.... ஒருநிமிஷம் சே.. ஏண்டா இன்னும் உயிரோட இருக்கோம்னு தோனிருச்சி...அவ்வளவு வலிக்குதுணா..”
“ரித்வி நீயே இப்படி பேசுறது சரியா?? இப்போ ஹேமாவுக்கு நாம சப்போர்ட்டா இருக்கனும்... அவளுக்கு இப்போ தேவை பாதுகாப்பு... அதை நாம தான் அவளுக்கு குடுக்கனும்... அந்த பொறுக்கி நடமாடிட்டு இருக்கும் வரை ஹேமாவுக்கு பாதுகாப்பில்லை... அதுக்கு முதல்ல ஒரு வழி பண்ணனும்... மற்றதை பிறகு பார்த்துக்கலாம்....”
“அண்ணா உங்களுக்கு ஹேமா மேல கோபம் ஏதுமில்லையே???”
“கோபமெல்லாம் இல்லை... வருத்தம் தான் இருந்துச்சு... அதுவும் திடுதிடுப்புனு கல்யாணம் பண்ணிட்டு உன்னை ஏமாற்றிட்டாளே அப்படீங்கிற வருத்தம் தான்...அதுவும் உன்னோட நிலைமையை பார்த்ததும் ஜாஸ்தியாகிருச்சு... நீ அப்படி வாழ்க்கையையே வெறுத்தவன் மாதிரி எதுலயும் பற்றில்லாமல் கவலையோட சுத்திட்டு இருந்ததை பார்த்ததும் அவ செய்ததை என்னால மன்னிக்கமுடியல... அதான் உன்னை ரஷ்யாவுக்கு அனுப்புனேன்....இடம்மாற்றம் உனக்கு ஒரு மாறுதலா இருக்கும்னு நினைச்சேன்... ஆனா அங்கேயும் நீ அப்படி தான் இருந்ததா மேனஜர் ராம் சொன்னாரு..... நீயா புரிஞ்சிப்பனு எதிர்பார்த்தேன்... ஆனா நீ அதிலிருந்து மீளமுடியாமல் கஷ்டப்பட்ட..... இப்படி உன்னை மாத்திட்டாளே... அப்படீங்கிற வருத்தம் தான்... மத்தபடி தனிப்பட்ட வகையில் எனக்கு எந்த கோபமும் இல்லை... இப்போ ஹேமாவோட நிலைமையை கேட்டதும் அந்த வருத்தம் இல்லாமல் போயிருச்சி...”
“தேங்க்ஸ் அண்ணா... எங்க நீங்க அவ மேல கோபமா இருக்கீங்களோனு பயந்துட்டேன்...” என்றவாறு ரிஷியை கட்டியணைத்தான் ரித்வி..
பின் இருவரும் சில முக்கியவிடயங்களை பற்றி பேசிவிட்டு தத்தமது வேலைகளை கவனிக்க கிளம்பினர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top