நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 23

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
உன் விழிப்பார்வை
எனை வீழ்த்த
உன் கள்ளச்சிரிப்பு
எனை கவிழ்க்க
காதலெனும் யுத்தகளத்தில்
எனை நிராயுதபாணியாக்கி
எனை வென்று
எனக்கு வெற்றிவாகை
சூடியவளுக்கு
நான் மணமாலை
சூட்டும் நாள்
எப்போது???

சமாலை நான்கு மணியளவில் ரெஜிஸ்டரார் வர ஶ்ரீயின் வீட்டிற்கு வெளியேயிருந்த கார்டனில் மோதிரம் மாற்றும் நிகழ்வும் சட்டபூர்வமாய் திருமணத்தை பதிவு செய்யும் நிகழ்வும் நடைபெற்றது....
கார்டன் முழுவதும் வெள்ளை மற்றும் சிவப்பு நிற பலூன்களாலும் இன்னும் பல பூக்கள் மற்றும் அலங்கார பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது... கார்டனின் ஒரு பக்கமாய் அங்கிருந்து ஒரு பெரிய மரத்தின் கீழே இரும்பினால் செய்யப்பட்ட ஊஞ்சலொன்று அமைக்கப்பட்டிருந்தது... அது முழுதும் சிவப்பு ரோஜாப்பூக்களாலும் வெள்ளை ரோஜாப்பூக்களாலும் பிளாஸ்டிக்காலான கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.... அமரும் இடத்தில் வெள்ளையும் சிவப்பும் கலந்த ஒரு விரிப்பான் போர்த்தப்பட்டிருந்தது... அந்த ஊஞ்சலிருற்கு நேர் மேலே மரத்தில் வெள்ளை நிற பூக்களும் சிவப்பு நிற பூக்களும் சேர்த்து தொடுக்கப்பட்டிருந்த பூச்சரங்கள் அடுத்தடுத்தாய் தொங்கவிடப்பட்டிருந்தது..... இவ்வாறு மணையலங்காரமிருக்க மணப்பெண்ணான ஶ்ரீயும் மணமகனான ரிஷியும் அவர்களிருந்த அறைகளிலிருந்து நண்பர்கள் துணையுடன் அழைத்து வரப்பட்டனர்.
ரிஷி வெள்ளைநிற சர்வானி குர்த்தியும் கையில் ஒமேகா ஜார்ட் வாச்சும் அணிந்திருந்தான்.... எப்போதும் போல் அலையலையாய் முன்னெற்றியை மறைத்துநிற்கும் கேசத்தினை ஜெல்லின் உதவியால் வாரியிருந்தான்....கம்பீரமாய் எழுந்து நிற்கும் புருவங்களும் கூரான நாசியும் என்றும் போல் இன்றும் அவனது ஆண்மைக்கு கர்வம் சேர்க்க எப்போதும் முழுதாய் சவரம் செய்யப்பட்டிருக்கும் தாடி இன்று ட்ரிம் மட்டும் செய்யப்பட்டிருந்தது... அது எப்போதும் போலல்லாது இன்று அவனது அழகை இன்னும் அசத்தலாய் காட்டியது....... மன்மதனாய் தயாராகி வந்தவனுக்கு ஏற்ற ஜோடியாய் ரதியாய் வந்து சேர்ந்தாள் ஶ்ரீதான்யா....
சிவப்பு நிற லெஹேங்காவில் ரதியாய் ஜொலித்தாள் ஶ்ரீ..... ஆங்காங்கே வெள்ளைநிற கற்களின் கைவண்ணத்தால் அந்த லெஹேங்கா ஜொலிக்க அது அவளது கோதுமை நிறத்திற்கு மெல்லிய உடல்வாகுவிற்கும் பொருத்தமாய் இருந்தது..... இரு கைகளிலும் சிவப்பு நிற கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தவள் கழுத்தையொட்டி ஆடைக்கு பொருத்தமாக நெக்லஸ் ஒன்று அடிந்திருந்தாள் .... இருபுறமும் இரண்டு கூந்தல் கற்றைகளை ரோல் செய்து பின்புறம் ஹேர்பின்னின் உதவியுடன் இணைந்திருந்தாள்.....ஒரு பகுதி கூந்தல் கற்றை திராட்சைக் கொடியில் தொங்கும் திராட்சனையினைபோல் சுருள் சுருளாக வலப்புற மார்பின் முன் தொங்கியபடியிருக்க மற்றைய கூந்தல் கற்றை பின்முதுகை மறைத்திருந்தது.... ரோல் செய்யபட்டிருந்த கூந்தல் கற்றைகளின் இடையிடையே சிறு சிவப்பு நிற பிளாஸ்டிக் ரோஜாப்பூக்கள் சொருகப்பட்டிருந்தன... ஆடையிலே முக்கால்வாசி அலங்காரம் முடிந்துவிட மீதி கால்வாசி பியூட்டிஷனின் கைவண்ணத்தில் பூர்த்தியாகியிருந்தது........
இவ்வாறு மன்மதன் ரதியாய் நின்றவர்களின் ஜோடிப்பொருத்தத்தில் அங்கிருந்த அனைவரும் வாயடைத்துப்போயினர்.......
மூர்த்தி தம்பதியினரும் ராஜேஷ்குமார் தம்பதியினரும் தம் பிள்ளைகளின் வாழ்வு அவர்களது ஜோடிப்பொருத்தம் போல் எப்போதும் இனிக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக்கொண்டனர்.
முதலில் அந்த ஊஞ்சலில் ரிஷி அழைத்து வந்து அமர்த்தப்பட அவனை தொடர்ந்து ஶ்ரீ அழைத்து வரப்பட்டாள்....
தோழிகள் சூழ அன்னப்பதுமையாய் நடந்து வந்தவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான் ரிஷி.....
ஒரு நிமிடம் “ ப்பா என்ன பொண்ணுடா இவ...” என்ற கேள்வியை எழுப்ப ரிஷியின் காதல் உள்ளம் மறக்கவில்லை.....
ஏற்கனவே காலையில் சேலையில் இருந்தவளை கண்டு மயக்கத்தில் இருந்தவனை மொத்தமாய் போதையில் கவிழ்க்கவென வந்து சேர்ந்தாள் ஶ்ரீ...
ரிஷியின் அருகில் அமர்ந்தவள் அவனை திரும்பி பார்க்க அவனது பார்வை அவளை அணுவணுவாய் விழுங்கிக்கொண்டிருந்தது... அதில் கன்னமிரண்டும் செம்மையேற இன்னும் மிளிர்ந்தாள் ஶ்ரீ......
வெட்கத்தில் நாணிக்குனிந்தவளின் கையின் மீது தன் கையை வைத்தான் ரிஷி...
அதை பார்த்துக்கொண்டிருந்த இளைஞர் பட்டாளமோ ஓ ஹோ என்று கூப்பாடிட்டது... அதில் மேலும் வெட்கிச்சிவந்தவள்
“அத்தான் ப்ளீஸ்.... எல்லாரும் பார்க்குறாங்க.....” என்று மெல்லியகுரலில் கூற அவனோ அவள்புறம் குனிந்து
“என்ன அம்லு சத்தத்தையே காணோம்.... வெறும் காத்து மட்டும் தான் வருது...” என்று கண்ணடிக்க அதில் மேலும் சிவந்தாள் ஶ்ரீ.....
பின் இந்த காதல் பரிமாற்றத்திற்கு இடைவெளி வழங்கும் முகமாக ஒரு மேசையினை தள்ளிக்கொண்டு வந்தனர் அனுவும் ரித்வியும்...
அது ரிஷியும் ஶ்ரீயும் அமர்ந்திருந்த ஊஞ்சல் இருக்கைக்கு எதிராக போடப்பட்டு அதனுடன் ஒரு கதிரையும் போடப்பட்டது...
அப்போது அங்கு அழைத்துவரப்பட்ட ரெஜிஸ்ரார் அதில் அமர்ந்து அவர்களது விவாகப்பதிவு வேலையில் ஈடுபட்டார்.... இருவரிடமும் இரண்டு இடங்களை காட்டி கையொப்பமிடக்கூறியவர் சாட்சிக்கையெழுத்தாக ரிஷியின் மாமாவும் ஶ்ரீயின் மாமாவும் கையெழுத்திட்டனர்... அனைவரும் கையெழுத்திட்டதும் மாரேஜ் சேட்டிவிக்கட்டை இருவரிடமும் கொடுத்தவர் வாழ்த்திவிட்டு விடைபெற்றார்.....
அவர் சென்றதும் மேஜையை அப்புறப்படுத்திய அனுவும் ரித்வியும் ஆளுக்கொரு தட்டுடன் வந்தனர்....
ரித்வி கையில் வைத்திருந்த தட்டில் ஒரு மணப்பெண் பொம்மையும் அதனுடன் இதயவடிவ மோதிரப்பெட்டியொன்று திறந்த நிலையில் இருந்தது.... அதனுள்ளே வைரக்கல் பதித்த மோதிரமொன்று இருந்தது... அதே போல் அனு கையில் வைத்திருந்த தட்டில் மணமகன் பொம்மையும் அதனருகே இதயவடிவ மோதிரப்பெட்டி திறந்திருக்க அதனுள்ளும் ஒரு வைரக்கல் பதித்த மோதிரமொன்று இருந்தது......
ரித்வி தான் வைத்திருந்த தட்டை ரிஷி புறம் நீட்ட அதிலிருந்து மோதிரத்தை எடுத்தவன் ஶ்ரீயின் புறம்தன் இடக்கையை நீட்ட அதில் அவள்தன் இடக்கையை வைக்க முழந்தாளிட்டு அவள் புறங்கையில் முத்தமிட்டவன்அந்நிலையிலேயே அவளை பார்க்க ஶ்ரீயோ அவனது முத்தம் தந்த குறுகுறுப்பில் அவள் முகம் சிவக்க அதை மறைக்கும் வழி தெரியாது தடுமாறியபடி மறு கையால் முகத்தை மறைக்க முயல சுற்றியிருந்த அனைவரும் கை தட்டி கூச்சலிட்டனர்.... முழந்தாளிலிருந்து எழுந்தவன் அவளது மோதிரவிரலில் அந்த நிச்சய மோதிரத்தை அணிவித்தான்.மோதிரம் அணிவிக்கும் போது மரத்திலேயே பொருத்தி வைக்கப்பட்டிருந்த பூக்கூடை கவிழ்க்கப்பட அதிலிருந்து அந்த ஜோடிகளை ஆசிர்வதிக்கும் விதமாக கொட்டியது ரோஜாப்பூ இதழ்கள்......
ஶ்ரீயும் அனுவின் கையிலிருந்த தட்டிலிருந்து மோதிரத்தை எடுத்தவள் ரிஷியிற்கு அணிவிக்க சபையோர் அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பரிக்க மீண்டும் பூ மழை பொழிந்தது....
நிச்சய மோதிரம் மாற்றியதும் அனு ஶ்ரீயை கட்டிக்கொண்டு தனது வாழ்த்தை தெரிவிக்க ரித்வியும் தன் அண்ணனை கட்டிக்கொண்டு தனது வாழ்த்தை தெரிவித்தான்....
பின் இருவரின் பெற்றோரும் வந்து அவர்களை ஆசிர்வதித்தனர் ...
பெற்றோரிடம் ஆசி வாங்கியதும் இருவரையும் மீண்டும் அமரச்செய்த ரித்வி
அவர்களுக்கென ஒரு சப்ரைஸ் நடனமொன்று பெண்களும் ஆண்களும் சேர்ந்து ஒழுங்கு செய்திருப்பதாக அறிவித்தான்.....
அவனது அறிவிப்பின் பிரகாரம் ரித்வி, ரவி, சுந்தர்,ஹரி என்று ஆண்கள் கூட்டணியும் அனு, சஞ்சு, ப்ரீதா என்று பெண்கள் கூட்டணியும் இணைந்து சில பாடல்களை மேஸ்அப் செய்து ஆடினர்.... இந்த ஆட்டம் முடிந்தது ஶ்ரீயை பாட அழைத்தான் ரித்வி....
 
Last edited:

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
ஶ்ரீயோ மறுக்க அவளை கண்களால் கெஞ்சி பாடச்சொன்னான் ரிஷி.... தனக்கு விருப்பமில்லாத போதிலும் அவனுக்காக அவள் மனம் கவர்ந்த அந்த பாடலை பாடினாள் ஶ்ரீ....



உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ
(உன்னோடு வாழாத..)

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்து விடும் ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆணில்லையே
நீயும் போனால் நானில்லையே
நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே
ஆம் நமக்குள் ஊடலில்லை
(உன்னோடு வாழாத..)

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன்
அன்பே தீயாயிரு
நீ ஒரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா
அன்பே முள்ளாயிரு
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை
காதலோடு பேதமில்லை
(உன்னோடு வாழாத..)
என்று ஶ்ரீ பாடி முடிக்க காதை பிளக்கும் வகையில் கை தட்டும் சத்தம்... ஏற்கனவே அவள் குரலால் வசீகரிக்கப்பட்டவனுக்கு இப்பாடல் தேனாய் காதில் பாய தனக்காக பாடப்பட்ட பாடலில் பொதிந்திருந்த அந்த காதலில் சிக்குண்டு மெய்மறந்திருந்தான் ரிஷி.. ஶ்ரீ சபையிற்கு நன்றி தெரிவித்துவிட்டு மைக்கை ரிதவியிடம் கொடுத்துவிட்டு ஊஞ்சலில் ரிஷியருகே வந்தமர்ந்தாள்...
ரிஷி அவள் காதருகே குனிந்து
“அம்லு சூப்பரா பாடுன.... பாட்டு உன்னோட வாயிசிற்கு சூட்டாச்சு... அதுவும் பாட்டுல இருந்த பீல்...... பா...சான்சே இல்லைபோ....இப்போ உன்னை இறுக்கமா கட்டிப்புடிச்சி இப்படி ஸ்வீட்டா பாடின வாயிற்கு இச்சு அடிக்கனும் போல இருக்கு... “
“ஆசைய பாரு...இச்சடிக்கனுமா அதுவும் இவ்வளவு பேரையும் வச்சிக்கிட்டு....நடக்குறத பேசுங்க... முடியாதுனு சொல்லுறியா???சரி உனக்கு நான் இச்சடிச்சா நீ என்ன தருவ??”
“என்ன அத்தான் விளையாடுறீங்களா???”
“அம்லு நான் சீரியஸா கேட்குறேன்...”
“சரி நீங்க சீரியஸா கேட்கிறதால நானும் சீரியஸா சொல்லுறேன்...நீங்க எல்லாரும் இருக்கும் போது என் கன்னத்துல கிஸ் பண்ணா யாருமில்லாத நேரத்துல நான் உங்களுக்கு ஸ்வீட்டு தரேன்.... டீலா???” என்று ஶ்ரீ கேட்க ரிஷியோ
“இந்த ரிஷிக்கே சாலேன்ஜா???? ரைட்டு நான் இந்த டீலுக்கு ஓகே.... இன்னைக்கு உன்னை ஒரு வழி பண்ணாம இந்த ரிஷி ஓய மாட்டான்....” என்று சூளுரைத்துவிட்டு ரித்வியை அழைத்தவன் அவனது காதில் ஏதோ உரைக்க அவனோ சிரித்துக்கொண்டு ஆமோதித்தவன் ஶ்ரீயை பார்த்து கேலிச்சிரிப்பொன்று சிரித்துவிட்டு சென்றான்...
ரித்வி சென்றதும் ரிஷியின் காதை கடித்தாள் ஶ்ரீ....
“அய்த்தான்... ரித்வி அத்தான்கிட்ட என்ன சொன்னீங்க???”
“பொறுமை ரொம்ப அவசியம் அம்லு..... வெய்ட் ஆன்ட் சீ...” என்று சிரித்துக்கொண்டே ரிஷி கூற அவனை செல்லமாக முறைத்துக்கொண்டே ஶ்ரீ நடப்பதை கவனிக்க தொடங்கினாள்....
ரித்வி மைக்கில் ரிஷியும் ஶ்ரீயும் கப்பில் டான்ஸ் ஆடுவதற்காக அழைத்தான்...
ஶ்ரீயோ ரிஷியை பார்த்து என்னவென்று சைகையாலேயே கேட்க அவனோ சிரித்தபடி அவள் கைபிடித்து அழைத்து சென்றான்...
அவர்கள் வந்ததும் பாடல் ஒலிக்கத்தொடங்கியது....
கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பார்க்கணும் டி கத்துகடி
மாமன் கிட்ட அதனையும் அத்துபடி

விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

அடியே கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனும் டி
கத்துக்கடி மாமன் கிட்ட அத்தனையும் அத்துபடி

விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளே இல்ல ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு மோகத்த தான் தூண்டுதடி

ஓடாதே என் புள்ளி மானே
நீ இல்லயினா வெம்பி போனேன்

அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கு என்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடீ

உன் சன்னதி தேடி தானே
அடி ஓடி இங்கே வந்தேன் நானே

ஒதுங்கி போட தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுபுட்ட அங்க இங்க வெட்டி வைப்பெனெ

அடிகிறியே சொல்லி அர சைஸு கிள்ளி
என் கிட்ட வந்த வால ஓட்ட நறுக்கிடுவேனே

கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிகிட
கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனும் டி

கத்துக்கடி மாமன் கிட்ட அதனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் நானே அடியே

தாரம் ஆதாரம் ஆக போறேன் சேதாரமா நீ வா
ஆக்க பொருத்த என் மாமா உனக்கு ஆற பொறுக்கலையா

வாடி என் ஜோடி நீ தானடி ஒரசி பாத்துக்கலாம்
வாரேன் சம்சாரம் ஆனா பின்னே பசியா தீத்துக்கலாம்

அடி பித்தனானேன் உன்னாலே சித்திரமே என்ன கொல்லாம கொல்லூறியே
நான் தினுசாக பொறந்தேனே உனக்காக வாழ்ந்தேனே அள்ளாம அள்ளூரியே

ஒதுங்கி போட தள்ளி நான் முள் ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டு புட்டாஅங்க இங்க வெட்டி வைப்பெனெ

அடிகிறியே சொல்லி அர சைஸு கிள்ளி
என் கிட்ட வந்த வால ஓட்ட நறுக்கிடுவேனே

கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிகிட
கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனும் டி

கத்துக்கடி மாமன் கிட்ட அதனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளே இல்ல ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு மோகத்த தான் தூண்டுதடி

ஓடாதே என் புள்ளி மானே நீ இல்லயினா வெம்பி போனேன்
அச்சாரம் போடா பின்னே ஆசைக்கென்ன வெளியடி

ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடீ
உன் சன்னதி தேடி தானே அடி ஊதி இங்கு வந்தேன் நானே

ஒதுங்கி போட தள்ளி நான் முள் ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டு புட்டாஅங்க இங்க வெட்டி வைப்பேனே
அடிகிறியே சொல்லி அர சைஸு கிள்ளி
என் கிட்ட வந்த வால ஓட்ட நறுக்கிடுவேனே

கட்டிகிட கட்டிகிட கட்டிகிட கட்டிகிட
என்று பாடல் முடிய ரிஷி ஶ்ரீயின் கன்னத்தில் முத்தமிட்டவாறு ஆடலை முடித்திருந்தான்...
சபையிலிருந்த அனைத்து இளசுகளும் கைதட்டி கூச்சலிட்டது... ஶ்ரீயோ அவனது செயலில் வெட்கப்பட்டு நிற்க அனைவரும் அவளை கேலி செய்யத்தொடங்கினர்...
ரிஷியோ அவளை ரசித்தவாறு ஶ்ரீயை அழைத்துக்கொண்டு வந்து தங்களிடத்தில் அமர்ந்தான்...
பின் அனைவரும் உணவுண்ண அழைக்கப்பட ரிஷியிற்கும் ஶ்ரீயிற்கும் உணவு அங்கு வரவழைக்கப்பட்டது....
அந்த ஊஞ்சலிலே அமர்ந்தபடி இருவரும் உணவுண்ண இளசுகள் பட்டாளம் அவர்களை சூழ்ந்துகொண்டு அவர்களிருவரையும் கலாட்டா செய்து கொண்டிருந்தது...
இவ்வாறு நிச்சயதார்த்த நாள் ஜோஜோவென்று முடிவடைந்தது.....
மாப்பிள்ளை வீட்டார் கிளம்புத்தயாராகும் போது ரிஷியிற்கு ஶ்ரீயிடமிருந்து மெசேஜ் ஒன்று வந்திருந்தது...
“வாஷ் ரூமிற்கு போறதா சொல்லிட்டு என்னோட ரூமிற்கு வாங்க....” என்று இருந்தது....
அவள் கூறியபடி வாஸ் ரூம் செல்லவேண்டுமென கூற ராஜேஷ்குமார் அவர்களது ரூமிற்கு அழைத்து செல்லமுயல ஒருவாறு அவருக்கு போக்கு காட்டிவிட்டு ஶ்ரீயின் ரூமினுள் மெல்ல நுழைந்தான்...
அங்கு யாருமில்லாமல் இருக்க கதவு அடைபடும் சத்தம் கேட்டது.... திரும்பி பார்க்க ஶ்ரீ கதவை தாழ்பாளிட்டிருந்தாள்....
கதவில் சாய்ந்தபடி அவனை பார்த்து கள்ளச்சிரிப்பு சிரித்தபடி கண்களில் மையலுடன் நின்றவளை கண்டதும் ரவிவர்மனின் ஓவியம் ரிஷியின் நினைவில் வந்தது...
லெஹேங்காவில் நின்றவள் ஒரு புறம் சரிந்த படி நிற்க கைகளிரண்டையும் மார்பிற்கு குறுக்கே கட்டியபடி தலையை சிறிது சாய்த்தபடி கண்களால் வா என்ற அழைப்பை விடுத்தபடி நின்றவளை கண்டதும் செதுக்கிய சிற்பமொன்று உயிர் கொண்டு வந்ததாய் நினைத்தான் ரிஷி....
அவளை நோக்கி அடியெடுத்து வைத்தவன் அவளுக்கும் தனக்குமான இடைவெளியை நொடிக்கு நொடி குறைத்தான்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top