நிச்சயிக்க வந்தவனை
நின் கண்ணசைவு
நிர்கதியாய்
நிற்கவைப்பது
நியாயம் தானா??
மூன்று மாதங்களுக்கு பிறகு....
விழாக்கோலம் பூண்டிருந்தது ஶ்ரீதான்யாவின் வீடு... வாசலில் வாழைமரம் கட்டப்பட்டு தோரணம், பூமாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது வாயில். .
ஆறு பேச்சஸ் நிலத்தில் இரண்டு மாடிகளுடன் நின்றிருந்த அந்த வீட்டில் வெளியலங்காரம் இன்னும் சில மீதமிருக்க ஆடவர்கள் சிலர் அதை ஓடியாடி கவனித்துக்கொண்டிருந்தனர்....
ஒருபுறம் ஆடவர்கள் அலங்கரிக்கும் வேலையில் மும்முரமாய் இருக்க மறுபுறமோ பெண்கள் நிறைகுடம் வைப்பது, வாசல் நிலையிற்கு திலகமிடுவது, வாயிலில் வருபவர்களை வரவேற்கும் முகமாக வண்ண வண்ண நிறங்களில் கோலமிடுவது என்று பிசியாய் இருந்தனர்...இதனிடையே ஆண்கள் பெண்களை வம்பிழுப்பதும், பெண்கள் ஆண்களை வம்பிழுப்பதும் என்று அந்த இடமே களைகட்டியது....
வெளியே உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு சற்றும் குறையாத வகையில் வீட்டினுள்ளும் அனைவரும் சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்தனர்...
ஆண்கள் நடுச்சாலையில் அமர்ந்து அன்றைய நிகழ்வு சம்மந்தமாக உரையாடியபடியிருக்க பெண்களோ மற்றைய வேளைகளில் ஈடுபட்டிருந்தனர்..
இருவர் பூஜையறையை அலங்கரித்தபடியிருக்க மற்றவர்கள் சமையலறை மற்றும் மணப்பெண் அறையில் தமக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்ததனர்...
இன்னும் ஒரு கூட்டம் நிச்சயத்திற்கான சீர்தட்டு ஒழுங்கமைப்பில் ஈடுபட்டிருந்தது...
இங்கு ஶ்ரீயின் அறையில் இளம்பெண்கள் பட்டாளம் கூடியிருந்தது... ப்யூட்டிஷின் நிச்சயப்பெண்ணான ஶ்ரீயினை தன் கைவண்ணத்தால் இந்திரன் மயங்கிய ரம்பை ஊர்வசியின் வனப்பிலும் மிதமிஞ்சியதாய் அழகியாய் மாற்றிக்கொண்டிருந்தார்....
மறுபுறம் ஶ்ரீயின் நண்பர் பட்டாளம், உறவினர் பட்டாளமென்று இளம்யுவதிகள் அனைவரும் ஶ்ரீயை சூழ்ந்துகொண்டு வம்பழந்துகொண்டிருந்தனர்....
“ஏன் ஶ்ரீ எப்படி உன்னை பார்த்து அத்தான் கவுந்தாருனு தெரியலை... நீ பேச ஆரம்பிச்சாலே நம்ம பசங்க ஓடிப்போயிருவாங்க... அதுவும் உன்கிட்ட வாய் குடுத்தா சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிற மாதிரி.... இதெல்லாம் தெரிஞ்சும் எப்படி அத்தானுக்கு உன்மேல லவ் வந்துச்சுனு சத்தியமா இப்போ வரைக்கும் புரியலை... ஒரு வேலை ஊரு நல்லா இருக்கட்டும்னு அத்தான் இந்த ரிஸ்கை எடுக்குறாரோ??” என்று ப்ரீதா ஆரம்பிக்க சஞ்சு தொடர்ந்தாள்...
“ஆமா அக்கா.. எனக்கும் இதே டவுட்டு தான்... எனக்கு தான் இவ கூட சுத்தனும்னு தலைவிதி.... ஆனா ரிஷி அண்ணா எதுக்கு தெரிஞ்சே இவகிட்ட மாட்டிகிட்டாருனு தெரியலை..”
“இல்லை சஞ்சு அக்கா... அத்தான் இவளை சமாளிச்சிரலாம்னு கான்பிடன்ஸ்ல லவ்வுல விழுந்திருப்பாரு... ஆனா பாவம் மனுஷன் இப்போ எஸ்கேப்பாக முடியாம தடுமாறுறாரு....” என்று அனுவும் கைகோர்க்க
“ஓய்... என்ன என்னை பார்த்தா கொடுமைக்காரி மாதிரியா இருக்கு?? நான் என்னமோ அவரை வண்டை வண்டையா வேலை வாங்கி கொடுமை படுத்துன மாதிரியும் அதை நீங்க எல்லாம் கண்ணால பார்த்த மாதிரியும் சொல்லிட்டு இருக்கீங்க...??”
“சொன்னாலும் சொல்லாட்டியும் அது தானேடி உண்மை.... அந்த மனுஷனை அங்க வா இங்க வானு பாடுபடுத்துறது மட்டுமில்லாமல் அவரு பர்சையும் மொத்தமா காலி பண்ணி ஏப்பம் விடாட்டி தான் உனக்கு தூக்கம் வரமாட்டேங்குதே....” என்று சஞ்சு கூற
“நான் அவர் பர்சை காலி பண்ணதை நீ பார்த்தியா???”
“அப்போ அதெல்லாம் என்னடி???” என்று எதிரே இருந்த கபொர்ட்டை சஞ்சு காட்ட
“அது ரிஷி அத்தான் எனக்கு ஆசையா வாங்கிக்கொடுத்தது....”
“அவரு ஆசையா வாங்கிக்கொடுத்ததா இல்லை நீ அடிச்சுப்புடுங்கி வாங்குனதானு அவருக்கு தானே தெரியும்??” என்று ப்ரீதா கூற மற்றைய அனைவரும் சிரித்தனர்...
“ப்ரீதா டார்லிங்... நானாவது பரவாயில்லை... உங்க கைவரிசையால ஐம்பதாயிரமா இருந்த ஹரி அத்தானோட கிரெடிட் கார்ட் லிமிட் இப்போ எழுபத்தைந்தாயிரமா ஜாஸ்தியாயிருச்சே...அது எந்த கணக்குல சேர்த்தி.....???”
“அது அது..” என்று ப்ரீதா இழுக்க ஶ்ரீயோ
“எது எது...” என்றிழுக்க மீண்டும் அவ்விடத்தில் ஒரு சிரிப்பலை படர்ந்தது..
“ப்ரீதா அக்கா.... நாம எல்லோரும் நிச்சயத்துக்கு புடவை எடுக்க போனோமே அப்போ என்ன நடந்துச்சு தெரியுமா???”என்று அனு தொடங்க
“இவ கடையையே புரட்டிப்போட்ட கதையை தானே கேட்குற??” என்று ப்ரீதா கேட்க
“அது தான் தெரிந்த கதையே அக்கா.... நமக்கு தெரியாம ஒரு கதை ஓடிச்சு.... அதை நான் தெரியாமல் பார்த்துட்டேன்...”
“அப்படி என்ன நடந்துச்சு??”
“நாம் எல்லாம் புடவை செலெக்ட் பண்ணிட்டு இருந்தப்போ அத்தான் வந்தாரா???”
“ஆமா... அது வரைக்கும் அது சரியில்லை இது சரியில்லைனு சொல்லிட்டு இருந்தவ அவரு வந்ததும் இந்த புடவை நல்லாயிருக்குனு ஒரு பக்கா கேவலமான புடவையை எடுத்துக்கிட்டு பிட்டோன் ரூமிற்கு போனா....”
“அவ சும்மா போகலகா.. அத்தானுக்கு ஜாடையா கண்ணை காட்டிட்டு தான் போனா...”
“அப்படியா சங்கதி...??? அப்புறம்”
“பிட்டொன் ரூம் போனவ ரூமை லாக் பண்ணலை... அந்த கேப்புல அத்தான் சுத்தி முத்தி யாரும் பார்க்கலைனு கன்போம் பண்ணிட்டு பிட்டொன் ரூமுக்குள்ள நுழைஞ்சுட்டாரு...”
“அடியாத்தி... அத்தனை பேரும் இருந்தபோதேவா????”
“ஏய் அனு உனக்கு எப்படி தெரியும்??? உனக்கு யாரு இப்படி தப்பு தப்பா சொன்னது??” என்று ஶ்ரீ அனுவை தடுக்க முயல
“யாரு சொன்னதா... ஹாஹா... நா லைவ்வா பார்த்தது கேட்டது... அப்புறம் ப்ரீதாக்கா என்ன நடந்துச்சுனா???”
“அடியேய்.... அனு சும்மா ரீல் சுத்தாத... அதுக்கு பிறகு ஒன்னுமே நடக்கலை... அத்தானை வெளியே அனுப்பிட்டேன்... அவ்வளவு தான்..”
“அது தான் இல்லை... ப்ரீதா அக்கா சஞ்சு அக்கா இவ சொல்லுறத நம்பாதீங்க.... உண்மை கதையை நான் சொல்லுறேன்... பிட்டொன் ரூமுக்குள்ள வந்த அத்தான் இவகிட்ட ஹஸ்கி வாயிசில் ஏதோ சொல்ல இவளும் அதுக்கு ஏதோ சொல்ல இரண்டு பேரும் மெதுவா சிரிச்சுக்கிட்டாங்க..”
“அனு உனக்கு எப்படி பிட்டொன் ரூமில் நடந்தது தெரியும்???” என்று சஞ்சு கேட்க
“அத்தான் நுழைந்ததும் நானும் பக்கத்துல இருந்த பிட்டொன் ரூமுக்குள்ள நுழைஞ்சிட்டேன்...”
“அடிப்பாவி.. இப்படியா அடுத்தவன் பெட்ரூமிற்குள்ள என்ன நடக்குதுனு எட்டி பார்ப்ப??” என்று ஶ்ரீ அங்கலாய்க்க அனுவோ
“ஹலோ நீங்க பப்ளிக் பிளேசில் இருந்துகிட்டு ரொமெண்ஸ் பண்ணுறது தப்பு இல்லையாம்..நாங்க உங்களுக்கு பார்டி கார்ட் வேலை பார்த்தது தப்பாம்...”
“அனு எனக்கு ஒரு டவுட்டு...”
“சொல்லுங்க சஞ்சு அக்கா...”
“இதுல நீ எங்கமா பார்டிகார்ட் வேலை பார்த்த??”
“ஒரு கன்னிப்பொண்ணும் ஒரு கன்னிப்பையனும் தனியா இருக்கும் போது ஏதும் தப்பு தண்டா நடந்திடாமல் இருக்க பார்டிகார்ட்டா இருந்து கண்காணிச்சேன்..”
“அம்மாடி அனு தெய்வமே..... நீ எங்கயோ போயிட்ட...” என்று சஞ்சுகூற
“தாங்ஸ்கா .. அப்புறம் நடந்தத கேட்டீங்கனா மெர்சலாகிடுவீங்க....”
“அப்படி என்னமா நடந்தது??”
“ஹஸ்கி வாயிசில் பேசிட்டு இருந்தவங்க திடீர்னு சத்தத்தை காணோம்.... என்னடானு பார்த்தா ப்பசக், ப்பசக்னு சத்தம்....”
“ஐயோ...” என்று ப்ரீதாவும் சஞ்சுவும் ஒரு சேர கூற
“இதுக்கே ஐயோனா எப்படி..... இன்னும் வகை வகையா இருக்கு...” என்ற அனுவை மீண்டும் தடுத்தாள் ஶ்ரீ..
“அடியேய் அனு ஏன்டி இப்படி பண்ணுற???”
“இரு அக்கா முழுசா முடிச்சிர்றேன்...”
“ஆல்ரெடி என் மானத்தை பிச்சி உதறி தொங்க போட்டுட்ட... இன்னும் என்னடி பாக்கி இருக்கு....???”
நின் கண்ணசைவு
நிர்கதியாய்
நிற்கவைப்பது
நியாயம் தானா??
மூன்று மாதங்களுக்கு பிறகு....
விழாக்கோலம் பூண்டிருந்தது ஶ்ரீதான்யாவின் வீடு... வாசலில் வாழைமரம் கட்டப்பட்டு தோரணம், பூமாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது வாயில். .
ஆறு பேச்சஸ் நிலத்தில் இரண்டு மாடிகளுடன் நின்றிருந்த அந்த வீட்டில் வெளியலங்காரம் இன்னும் சில மீதமிருக்க ஆடவர்கள் சிலர் அதை ஓடியாடி கவனித்துக்கொண்டிருந்தனர்....
ஒருபுறம் ஆடவர்கள் அலங்கரிக்கும் வேலையில் மும்முரமாய் இருக்க மறுபுறமோ பெண்கள் நிறைகுடம் வைப்பது, வாசல் நிலையிற்கு திலகமிடுவது, வாயிலில் வருபவர்களை வரவேற்கும் முகமாக வண்ண வண்ண நிறங்களில் கோலமிடுவது என்று பிசியாய் இருந்தனர்...இதனிடையே ஆண்கள் பெண்களை வம்பிழுப்பதும், பெண்கள் ஆண்களை வம்பிழுப்பதும் என்று அந்த இடமே களைகட்டியது....
வெளியே உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு சற்றும் குறையாத வகையில் வீட்டினுள்ளும் அனைவரும் சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்தனர்...
ஆண்கள் நடுச்சாலையில் அமர்ந்து அன்றைய நிகழ்வு சம்மந்தமாக உரையாடியபடியிருக்க பெண்களோ மற்றைய வேளைகளில் ஈடுபட்டிருந்தனர்..
இருவர் பூஜையறையை அலங்கரித்தபடியிருக்க மற்றவர்கள் சமையலறை மற்றும் மணப்பெண் அறையில் தமக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்ததனர்...
இன்னும் ஒரு கூட்டம் நிச்சயத்திற்கான சீர்தட்டு ஒழுங்கமைப்பில் ஈடுபட்டிருந்தது...
இங்கு ஶ்ரீயின் அறையில் இளம்பெண்கள் பட்டாளம் கூடியிருந்தது... ப்யூட்டிஷின் நிச்சயப்பெண்ணான ஶ்ரீயினை தன் கைவண்ணத்தால் இந்திரன் மயங்கிய ரம்பை ஊர்வசியின் வனப்பிலும் மிதமிஞ்சியதாய் அழகியாய் மாற்றிக்கொண்டிருந்தார்....
மறுபுறம் ஶ்ரீயின் நண்பர் பட்டாளம், உறவினர் பட்டாளமென்று இளம்யுவதிகள் அனைவரும் ஶ்ரீயை சூழ்ந்துகொண்டு வம்பழந்துகொண்டிருந்தனர்....
“ஏன் ஶ்ரீ எப்படி உன்னை பார்த்து அத்தான் கவுந்தாருனு தெரியலை... நீ பேச ஆரம்பிச்சாலே நம்ம பசங்க ஓடிப்போயிருவாங்க... அதுவும் உன்கிட்ட வாய் குடுத்தா சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிற மாதிரி.... இதெல்லாம் தெரிஞ்சும் எப்படி அத்தானுக்கு உன்மேல லவ் வந்துச்சுனு சத்தியமா இப்போ வரைக்கும் புரியலை... ஒரு வேலை ஊரு நல்லா இருக்கட்டும்னு அத்தான் இந்த ரிஸ்கை எடுக்குறாரோ??” என்று ப்ரீதா ஆரம்பிக்க சஞ்சு தொடர்ந்தாள்...
“ஆமா அக்கா.. எனக்கும் இதே டவுட்டு தான்... எனக்கு தான் இவ கூட சுத்தனும்னு தலைவிதி.... ஆனா ரிஷி அண்ணா எதுக்கு தெரிஞ்சே இவகிட்ட மாட்டிகிட்டாருனு தெரியலை..”
“இல்லை சஞ்சு அக்கா... அத்தான் இவளை சமாளிச்சிரலாம்னு கான்பிடன்ஸ்ல லவ்வுல விழுந்திருப்பாரு... ஆனா பாவம் மனுஷன் இப்போ எஸ்கேப்பாக முடியாம தடுமாறுறாரு....” என்று அனுவும் கைகோர்க்க
“ஓய்... என்ன என்னை பார்த்தா கொடுமைக்காரி மாதிரியா இருக்கு?? நான் என்னமோ அவரை வண்டை வண்டையா வேலை வாங்கி கொடுமை படுத்துன மாதிரியும் அதை நீங்க எல்லாம் கண்ணால பார்த்த மாதிரியும் சொல்லிட்டு இருக்கீங்க...??”
“சொன்னாலும் சொல்லாட்டியும் அது தானேடி உண்மை.... அந்த மனுஷனை அங்க வா இங்க வானு பாடுபடுத்துறது மட்டுமில்லாமல் அவரு பர்சையும் மொத்தமா காலி பண்ணி ஏப்பம் விடாட்டி தான் உனக்கு தூக்கம் வரமாட்டேங்குதே....” என்று சஞ்சு கூற
“நான் அவர் பர்சை காலி பண்ணதை நீ பார்த்தியா???”
“அப்போ அதெல்லாம் என்னடி???” என்று எதிரே இருந்த கபொர்ட்டை சஞ்சு காட்ட
“அது ரிஷி அத்தான் எனக்கு ஆசையா வாங்கிக்கொடுத்தது....”
“அவரு ஆசையா வாங்கிக்கொடுத்ததா இல்லை நீ அடிச்சுப்புடுங்கி வாங்குனதானு அவருக்கு தானே தெரியும்??” என்று ப்ரீதா கூற மற்றைய அனைவரும் சிரித்தனர்...
“ப்ரீதா டார்லிங்... நானாவது பரவாயில்லை... உங்க கைவரிசையால ஐம்பதாயிரமா இருந்த ஹரி அத்தானோட கிரெடிட் கார்ட் லிமிட் இப்போ எழுபத்தைந்தாயிரமா ஜாஸ்தியாயிருச்சே...அது எந்த கணக்குல சேர்த்தி.....???”
“அது அது..” என்று ப்ரீதா இழுக்க ஶ்ரீயோ
“எது எது...” என்றிழுக்க மீண்டும் அவ்விடத்தில் ஒரு சிரிப்பலை படர்ந்தது..
“ப்ரீதா அக்கா.... நாம எல்லோரும் நிச்சயத்துக்கு புடவை எடுக்க போனோமே அப்போ என்ன நடந்துச்சு தெரியுமா???”என்று அனு தொடங்க
“இவ கடையையே புரட்டிப்போட்ட கதையை தானே கேட்குற??” என்று ப்ரீதா கேட்க
“அது தான் தெரிந்த கதையே அக்கா.... நமக்கு தெரியாம ஒரு கதை ஓடிச்சு.... அதை நான் தெரியாமல் பார்த்துட்டேன்...”
“அப்படி என்ன நடந்துச்சு??”
“நாம் எல்லாம் புடவை செலெக்ட் பண்ணிட்டு இருந்தப்போ அத்தான் வந்தாரா???”
“ஆமா... அது வரைக்கும் அது சரியில்லை இது சரியில்லைனு சொல்லிட்டு இருந்தவ அவரு வந்ததும் இந்த புடவை நல்லாயிருக்குனு ஒரு பக்கா கேவலமான புடவையை எடுத்துக்கிட்டு பிட்டோன் ரூமிற்கு போனா....”
“அவ சும்மா போகலகா.. அத்தானுக்கு ஜாடையா கண்ணை காட்டிட்டு தான் போனா...”
“அப்படியா சங்கதி...??? அப்புறம்”
“பிட்டொன் ரூம் போனவ ரூமை லாக் பண்ணலை... அந்த கேப்புல அத்தான் சுத்தி முத்தி யாரும் பார்க்கலைனு கன்போம் பண்ணிட்டு பிட்டொன் ரூமுக்குள்ள நுழைஞ்சுட்டாரு...”
“அடியாத்தி... அத்தனை பேரும் இருந்தபோதேவா????”
“ஏய் அனு உனக்கு எப்படி தெரியும்??? உனக்கு யாரு இப்படி தப்பு தப்பா சொன்னது??” என்று ஶ்ரீ அனுவை தடுக்க முயல
“யாரு சொன்னதா... ஹாஹா... நா லைவ்வா பார்த்தது கேட்டது... அப்புறம் ப்ரீதாக்கா என்ன நடந்துச்சுனா???”
“அடியேய்.... அனு சும்மா ரீல் சுத்தாத... அதுக்கு பிறகு ஒன்னுமே நடக்கலை... அத்தானை வெளியே அனுப்பிட்டேன்... அவ்வளவு தான்..”
“அது தான் இல்லை... ப்ரீதா அக்கா சஞ்சு அக்கா இவ சொல்லுறத நம்பாதீங்க.... உண்மை கதையை நான் சொல்லுறேன்... பிட்டொன் ரூமுக்குள்ள வந்த அத்தான் இவகிட்ட ஹஸ்கி வாயிசில் ஏதோ சொல்ல இவளும் அதுக்கு ஏதோ சொல்ல இரண்டு பேரும் மெதுவா சிரிச்சுக்கிட்டாங்க..”
“அனு உனக்கு எப்படி பிட்டொன் ரூமில் நடந்தது தெரியும்???” என்று சஞ்சு கேட்க
“அத்தான் நுழைந்ததும் நானும் பக்கத்துல இருந்த பிட்டொன் ரூமுக்குள்ள நுழைஞ்சிட்டேன்...”
“அடிப்பாவி.. இப்படியா அடுத்தவன் பெட்ரூமிற்குள்ள என்ன நடக்குதுனு எட்டி பார்ப்ப??” என்று ஶ்ரீ அங்கலாய்க்க அனுவோ
“ஹலோ நீங்க பப்ளிக் பிளேசில் இருந்துகிட்டு ரொமெண்ஸ் பண்ணுறது தப்பு இல்லையாம்..நாங்க உங்களுக்கு பார்டி கார்ட் வேலை பார்த்தது தப்பாம்...”
“அனு எனக்கு ஒரு டவுட்டு...”
“சொல்லுங்க சஞ்சு அக்கா...”
“இதுல நீ எங்கமா பார்டிகார்ட் வேலை பார்த்த??”
“ஒரு கன்னிப்பொண்ணும் ஒரு கன்னிப்பையனும் தனியா இருக்கும் போது ஏதும் தப்பு தண்டா நடந்திடாமல் இருக்க பார்டிகார்ட்டா இருந்து கண்காணிச்சேன்..”
“அம்மாடி அனு தெய்வமே..... நீ எங்கயோ போயிட்ட...” என்று சஞ்சுகூற
“தாங்ஸ்கா .. அப்புறம் நடந்தத கேட்டீங்கனா மெர்சலாகிடுவீங்க....”
“அப்படி என்னமா நடந்தது??”
“ஹஸ்கி வாயிசில் பேசிட்டு இருந்தவங்க திடீர்னு சத்தத்தை காணோம்.... என்னடானு பார்த்தா ப்பசக், ப்பசக்னு சத்தம்....”
“ஐயோ...” என்று ப்ரீதாவும் சஞ்சுவும் ஒரு சேர கூற
“இதுக்கே ஐயோனா எப்படி..... இன்னும் வகை வகையா இருக்கு...” என்ற அனுவை மீண்டும் தடுத்தாள் ஶ்ரீ..
“அடியேய் அனு ஏன்டி இப்படி பண்ணுற???”
“இரு அக்கா முழுசா முடிச்சிர்றேன்...”
“ஆல்ரெடி என் மானத்தை பிச்சி உதறி தொங்க போட்டுட்ட... இன்னும் என்னடி பாக்கி இருக்கு....???”