நினைவெல்லாம் நீ(யே)யா_16

Advertisement

ஹரிணி துருவன் பிரச்சனை முடிய ஆதவை பார்த்த விருதாசலமோ தம்பி நா உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசலாமா என கேட்க. சரிங்க தாத்தா ஆனா சிவாவும் என கூட வரட்டுமே என ஆதவ் கேட்க சரி என்றபடி தன் அறைக்குள் நுழைந்தார் விருதாசலம் அவருடனே உள்ளே நுழைந்தனர் சிவாவும் ஆதவும்.

தம்பி நா என்ன கேட்க போறேனு உங்களுக்கு தெரியும். முதல்ல பார்ட்னரா என் வீட்டுக்குள் வந்திங்க, அப்பறம் வேலாயுதம் மகனா வந்திங்க, இப்ப என அமைதியாக நிற்க.

தாத்தா நா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லுறேன் என தன்னுடனான ருத்ராவின் கல்லூரி வாழ்க்கையும் பிறகு அதில் ஏற்பட்ட பிரிவினையும், அவளை பிரிந்துஅவன் பட்ட கஷ்டங்களையும் கூறியவன். இப்ப சொல்லுங்க தாத்தா நா பண்ணது தப்பா என ஆதவ் கேட்க.

சிவாவோ ரொம்ப கஷ்ட பட்டுட்டா தாத்தா, ருத்ராகிட்ட மன்னிப்பு கேட்டு கல்யாணம் பண்ணிக்கதா ஊருக்கே வந்தான் என கூற.

என் பேத்திய நீ அப்படி பேசினதுக்கு உன்ன சும்மா விடகூடாதுனுதா இருந்த ஆனா அதுக்கு ஆண்டவனே தண்டணை கொடுத்திட்ட போது கொஞ்சம் நிம்மதியா இருக்கு. ஆனா ருத்ரா உன்கூட வாழ விருப்பம் இல்லனு சொல்லிட்டா என்னால ஒண்ணும் செய்ய முடியாது என விருதாசலம் கூற. அவ என் கூட வாழுறத நீங்க பாக்கதானே போறிங்க என ஆதவ் கூற. எப்படியோ சந்தோஷமா வாழ்ந்தா சரிதா என வெளியே சென்றனர்.

வேலாயுதமோ, அப்பா அவ தப்புக்கு நா மன்னிப்பு கேட்டுக்குறேன். அவ ஏன் இப்படி பண்ணானு எங்களுக்கு தெரியல என விருதாசலத்தின் அருகே நின்று பேச.

அட என்னடா மன்னிப்பு எல்லா கேட்டுகிட்டு, ருத்ராவுக்கு இந்த கல்யாணம் சம்மதம்னா நம்ப மேல
பேசலாம் என விருதாசலம் கூற.


தாத்தா நா ருத்ராகிட்ட பேசிலாமா? என ஆதவ் கேட்க. சாந்தியோ டேய் என்ன பேச போற பண்ண வேல போதாதா என கேட்க.

அம்மா என ஆதவ் அழைக்க, விருதாசலமோ, சாந்தி அவ போய் பேசட்டும் என ஆதவை நோக்கி போகும் படி தலையசைக்க ஆதவ் ருத்ரா இருக்கும் அறையின் கதவை தட்டினான்.

கதவை திறந்த ருத்ரா ஆதவை கண்டு முரைத்தபடி நிற்க. தள்ளுடி என்றபடி உள்ளே சென்று கதவை தாழிட்டான்.

ஏய், எதுக்கு தாழ் போடுற வெளிய போ என கத்த, சாவகாசமாக கட்டில் அமர்ந்த ஆதவ் சுண்டு விரலை காதில் விட்டு தலையை ஆட்டி கத்தாதடி காது வலிக்குது என கூற.

உன்ன வெளிய போக சொன்ன என ருத்ரா கூற.

போறேன் ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம், வெளிய வந்து என் கூட வாழுறேனு சொல்லு என கூற

உன் கூட எல்லா என்னால வாழ முடியாது வெளிய போ.

திரும்ப திரும்ப ஓட்ட ரெக்காடு மாதிரி பாடாத. நீ என் கூட வாழ மாட்டேனு எனக்கு தெரியும். ஏன்னா நீ பெரிய கோழ, உனக்கு தெரியம் இருந்தா நீ இப்படி அறைக்குள்ள இருந்திருக்கு மாட்ட,
என்ன, என்ன பண்ணலானு இந்நேரத்துக்கு யோசிச்சிட்டு இருந்திருப்ப என ஆதவ் ருத்ராவை பார்த்து நக்கலாக சிரித்தபடி, எனக்கு தெரியும் டி உன்கிட்ட எப்படி பேசினா வேலையாகும்னு என எண்ணியபடி வெளியே சென்றான்.


ஆதவ் வெளியேறியவுடன் அவன் கூறி சென்றதை யோசித்த ருத்ரா இருடா உன்ன என்ன பண்ணுறேனு பாரு, உன்ன பழிவாங்காம விடமாட்டேன் என எண்ணியபடி வெளியே வந்தாள்.

ருத்ரா வந்ததை பார்த்த விருதாசலம் . வாம்மா ஆதவ் உன்ன கல்யாணம் பண்ணிட்டான் அவன் உன் கூட வாழ ஆசப்படுறான் நீ என்ன சொல்லுற என கேட்க.

தாத்தா, நா அவங்க கூட வாழுறேன் என கூற. அவளின் பேச்சை கேட்டு அதிர்ந்தனர் மொத்த குடும்பமும்.

தெரியாதவர்களிடம் பேசவே யோசிக்கும் அவளின் சுபாவம் அறிந்த குடும்பத்தினர்கள் எப்படி யாரோ தெரியாத ஒருத்தர் கூட உடனே எதையும் யோசிக்காம வாழுறனு சொல்லுறா என எண்ணிக்கொண்டிருக்க. ருத்ரா என அழைத்தார் பரஞ்ஜோதி.

அப்பா இதுக்கு மேல நா எதுவும் சொல்ல விரும்பல . சாந்தியை பார்த்த ருத்ரா அத்த உங்க மருமகளா நா உங்க வீட்டுக்கு வரலாமா என கேட்க. ருத்ராவின் கையை பிடித்து நீ மருமகளா வர நா குடுத்துவச்சியிருக்கனும்மா என கூறினார்.

ருத்ராவின் இந்த பேச்சில் குடும்பத்தினர்கள் சற்று அதிர்ந்துதான் இருந்தனர்.

துருவனோ ஆதவின் தோளை யாரும் அறியா வண்ணம் தட்டி சிரிக்க. ஆதவும் புருவம் உயர்த்தி ருத்ராவை பார்த்தான்.

இருவரின் பிரச்சணையும் தீர பெருமூச்சுவிட்ட விருதாசலம். விஷ்ணு எங்க என கேட்டார். அப்பொழுதுதான் அனைவருக்கும் விஷ்ணுவின் நினைவு வர நா பாக்கல என ஒவ்வொருவரும் கூறினர்.

சிவா அவனுக்கு போன் போடு என விருதாசலம் கூற. சிவாவும் விஷாணுவிற்கு அழைக்க அங்கிருந்த தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்பதே திரும்ப திரும்ப வர கடுப்பான சிவா தாத்தா போன் போகல என கூற. எங்க போனான் என்ன நினச்சிட்டு இருக்கா அவ என விருதாசலம் குரல் உயர்த்த. மீனாட்சியோ வருவா அமைதியா இருங்க என கூற.

கவிதா எல்லாருக்கும் மோர் கொடுக்க அனைவரின் இவ்வளவு நேர பஞ்சாயத்து தாகத்தை மோர் தீர்த்து வைத்தது.

சிவாவோ கவிதாவை பார்த்து அம்மா நா கூட பஞ்சாயத்து மதியமும் தாண்டி போகுதே இன்னக்கு சோறு இல்லனு நெனச்ச நீங்க மோர் கொண்டு வந்திட்டிங்க என கூற,
நானு அதேதா நினைத்தேன் அத்தை என மோரை எடுத்தான் துருவன்.


உமையாளோ மீனாட்சியை பார்த்து அத்தை காலையில இருந்தே யாரும் சாப்பிடல மதியமாவது சாப்பிடட்டும் மாமா கூப்பிடுங்க என கூற.

மீனாட்சி வாங்கையா எல்லாரும் சாப்பாட்டுக்கு என கூற. அனைவருக்கும் பசியால் அமைதியாக சென்றனர்.

ஆண்கள் அனைவரும் சாப்பிட்டு செல்ல பெண்கள் அமர்ந்தனர். ஹரிணியும் ருத்ராவும் கடமையே என சாப்பிட தேன்மொழி சாப்பிட வரவே இல்லை.

கவிதா சாப்பாட்டை தேன் மொழியின் அறைக்கு எடுத்து சென்று ஊட்ட . அவளோ வாய்கூட திறக்காமல் சிலை போல இருக்க. என்னமா இப்படியே இருக்க எதுனாலும் அழுதிடு இல்லனா கத்திடு என கவிதா பயந்தபடி சொல்ல. அப்பொழுதும் பாவை போலவே இருந்தாள்.

வீட்டினர் அனைவரும் வந்து பேசியும் வாய்திறக்காமல் இருக்க அனைவரும் பயந்து போயினர். ஹரிணியோ தேன்மொழியிடம் பேச அவளுக்கும் அது தோல்வியிலே முடியந்தது.

சிவா தேன்மொழியின் நிலையால் விஷ்ணுவிற்கு அழைக்க அங்கிருந்து பதில் வராததால், சிவாவும் துருவும் அவனை தேடி அலைந்தனர்.

மாப்ள எங்கதான்டா போனா என சிவா கேட்க.

அததான்டா நானும் யோசிக்கிறேன், பிரண்ஸ் கூடவும் இல்ல, அவ வழக்கமா போகிற இடமும் இல்லனா, ஒரு வேளை காலேஜுக்கு போயிருப்பானோ என துருவன் கூற.

வாடா நாம அங்க போகலாம் என வண்டியை காலேஜை நோக்கி விட்டனர்.

கடைசியாக அவன் வேலை செய்யும் இடத்திற்கு சென்ற இருவரும் ஒரு மாணவனிடம் விஷ்ணு சார் எங்க என கேட்க? அவனோ சார் கம்பியூட்டர் லேப்ல இருக்கார் என கூற. கடுப்பான துருவன் அவன என கூறியபடி முன்னே செல்ல. சிவாவோ இது காலேஜ்டா வீட்டுக்கு போய் பாத்துக்கலாம் என கூற. இருவரும் லேப்பிற்கு சென்று அங்கிருந்த வேலையாளிடம் விஷ்ணுசார் என கேட்க. அவரோ இதோ அழைச்சிட்டு வரேன் என உள்ளே சென்றார்.

லேபில் கம்பியூட்டரில் டைப் செய்துக்கொண்டிருந்த விஷ்ணுவை பார்த்து, சார் உங்கள பார்க்க ரெண்டுபேர் வந்திருக்காங்க என கூற.

யாருனு கேட்டிங்களா? அண்ணா என கேட்க.

இல்ல சார் நீங்க வந்து பாருங்க என கூறிவிட்டு செல்ல.

யாரு என்றபடி வெளியே வந்தான். அங்கிருந்த சிவா துருவனை பார்த்து என்ன அண்ணா இங்க வந்திருக்கிங்க என கேட்க.

கடுப்பான துருவன் ஓங்கி அரைய, யாரும் இல்லாத இடம் என்பதால் கன்னத்தை பிடித்தபடி நின்றான் விஷ்ணு.

சிவா உடனே டேய் அமைதியா இரு என கையை பிடிக்க. விஷ்ணுவை நோக்கி என்னடா, அங்க அவ்வளவு பெரிய வேல பண்ணிட்டு இங்க வந்திருக்க இதுல போனையும் ஆப் பண்ணியிருக்க. ஒழுங்கா வீட்டுக்கு இப்பவே கிளம்பு என கூற.

அண்ணா டைப் பண்ணிட்டு இருந்தத பாதில விட்டு இருக்க அத முடிச்சிட்டு வருவா என கேட்க.

கடுப்பான துருவன் அடிங், அங்க என் தங்கச்சி பைதியகாரி மாதிரி இருக்கா இவனுக்கு டைப்பிங் வேலதா முக்கியமா என பல்லை கடித்தபடி கூற.

ஏய் என்னடா விளையாடுறியா ஒழுங்கா கிளம்பிவர வழிய பாரு இல்ல என்ன நடக்கும்னு தெரியாது என சிவா கோபமாக கூற.

அமைதியாக முதல்வர் அறையை நோக்கி சென்றவன் சிறிது நேரத்தில் வெளியே வந்து அவர்களுடன் கிளம்பினான்.

சிவா, விஷ்ணு முதல்வர் அறைநோக்கி சென்றவுடன் வீட்டினற்கு தகவல் சொல்ல.வீட்டினர் விஷ்ணுவின் வருகைக்கு காத்திருந்தனர்.

கதை எப்படி இருக்குனு கமெண்ட் பண்ணுங்க பிரண்ஸ்....

நீ(யே)யா.......?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top