அருமையான பதிவு கோம்ஸ்.ஏன்டா நொண்டிகிட்டு வர்றேன்னு கேட்டவனை, ஏன்டா மாட்டி விட்டேன்னு மதிய திட்டியதோடு நிறுத்தாம,ஆர்வக்கோளாறுல இவன் தோப்புக்கரணம் போட்டு மயங்கி விழுந்துட்டு,ஜக்கம்மா,ராட்சஷின்னு ஆதியை சொல்லி மாட்டிக்கிட்டான்
மதி தன் தங்கைக்கும்,நண்பனுக்கும் ஆர்ட்ஸ் காலேஜ்,வீடுன்னு பரிசு கொடுத்து அசத்திட்டான்.சஞ்சய் பி.ஏ வா உன்னோட தான் இருப்பேன்னு சொல்லி கலக்கிட்டான்.
அபி விரும்பறது தெரிஞ்சும் விட்டுக் கொடுக்கனும்னு அனு நெனச்சுருக்கான்னு தெரிஞ்சுருச்சே, இனியாவது மதி,அபி சொல்ல வர்றதை கேட்கலாம்.அனுவை மன்னித்தவன், அபியிடம்
கோபத்தையாவது குறைத்து இயல்பாக பேசலாம்.
ஆதி அன்புக்கு தான் அடிபணிவா,அத்தை மாதிரி அமைதியா இருக்க மாட்டேன்.பிரச்சனை பண்ணா போலிஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன் . களி திண்ண வேண்டியது தான் என சொல்லி சதீஷ் அம்மாவை வாயடைக்க வச்சுட்டா சூப்பர்.
பாட்டியை சமாளிக்கறவங்க தெய்வப்பிறவிங்க என அவர் பேத்தியே சொல்றான்னா கிழவி நிவியை என்ன பாடுபடுத்தியிருக்கும்னு தெரியுது