அருமையான பதிவு மித்ரா பரணி.காட்சியும் பாட்டும் கவிதைக்கூடல் அருமை.
காக்காக்கு சோறு வச்சேனான்னு பார்க்க போனேன்.அஸ்வின் பேரை கேட்டதும் கோபம் போயிருச்சு.இவர்களுக்கு"அரணாக"மட்டுமே இருக்க முடியும்,"அரனாக"அல்ல.
சக்தி பொண்ணுக்கு பாவக்காய் ஜூஸ் கொடுத்தா,பாரதி,அம்மாக்கு பாவக்காய் பாயாசத்தை கொடுக்க சொல்றா.அம்மாவை விட கிளவரா இருக்கேன்னு ஜெலஸ் ஹாஹா.
குயின் ஆஃப் தி ஹவுஸ் கலக்கறா சூப்பர்மனு,பாரதி,சக்தி பேச்சு கொள்ளை அழகு
இதுக்குதான் குழந்தைங்க முன்னே பேசறப்போ பார்த்து பேசனும்னு சொல்றது.அப்பாவும்
மாமாவும் பேசறதே சண்டை போடறதை போல இருக்க,அதை பார்த்த பாரதி,விசாகனிடம் பேசாமல் இருக்கா.உன்னிடம் கேட்டால் தான் பதில் சொல்லனும்னு மனு விளக்கி சொல்வது அருமை...
பிள்ளையை பற்றிய அம்மாவின் கணிப்புகள்,உணர்வால் தோன்றுவது அது என்றும் பொய்ப்பதில்லை.அன்புக் கட்டளைகள் எப்போதும் சாசனம் தான் உண்மை.