அன்பு வாசக தோழமைகளே!!
உங்கள் கேள்விகளுக்கு வரும் திங்கள் அன்று விடை அளிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். என்னுடைய நாட்காட்டி டிசம்பர் 7 வெள்ளி கிழமையோடு நின்றதால் எனக்கு இன்னமும் திங்கள் பிறக்கவேயில்லை என்று நினைக்கிறேன். புதுவருட வாழ்த்துக்களை என் நாட்காட்டி பிரகாரம் முன்னதாகவும் உங்களின் நாட்காட்டி படி பின்னதாகவும் தெரிவித்துவிட்டு கதையின் அடுத்த இரு அத்தியாயங்களை பதிவிடுகிறேன்.
'கதையெழுத மறந்துவிட்டு மன்னிப்புக்கோர சங்கடப்பட்டு எப்படியெல்லாம் டிசைன் டிசைனா காரணம் சொல்லுது பாருங்க.!' என்ற உங்களின் மனக்குரல்களின் புலம்பல்களுக்கெல்லாம் ஒன்று மட்டும் உண்மையாக சொல்லிக்கொள்கிறேன். "ஆமாங்க!! ஆமாம்!! மறந்து தான் போய்ட்டேன்!! நிஜமா என் கதையை எழுத நான் மறந்து தான் போய்ட்டேன்!!"
புதிதாக அமேசான் கின்டல் அன்லிமிடெடில் உறுப்பினராக சேர்ந்த காரணத்தினால் தான் நான் என் கதையை எழுத மறந்து போனேன்.
பல நாள் பட்டினி கிடப்பவனுக்கு விருந்து கிடைத்தால் எப்படி மகிழ்ந்து உண்பானோ அதேப்போல, அமெரிக்காவில் இருக்கும் எனக்கு புது புது எழுத்தாளர்களின் புது புது புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பெரும் விருந்து எனக்கு. எதைப் படிக்க? எதை விட? என்று தெரியாமல் படித்தேன்.. படிக்கிறேன்.. படிப்பேன்..
அதன் பாதிப்பு என் கதையை நான் மறந்த நிலை.!!
என் எழுத்தாள தோழமைகள் அனைவரும் மிக மிக நன்றாக எழுதுகிறார்கள். எனக்கு எழுதுவதற்கே சற்று பயமாக தான் இருக்கிறது. எப்படி இப்படியெல்லாம் யோசித்து எழுதுகிறார்கள் என்ற வியப்பே எனக்கு பயத்தையும் அதேப்போன்று எழுத வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கிறது. எழுத்தாள தோழமைகள் அனைவருக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்!!
நன்றி எழுத்தாள தோழமைகளே!!
(எப்படி இருந்தாலும் கதையை முடித்துவிடுவேன்.. இது கதையல்ல நிஜம் தான். அய்யோ!! நான் எழுதறது கதை தான். அந்த கதையை முடித்துவிடுவேன் என்பது மட்டும் நிஜம் தான்.. நம்பனும்!!)
இதோ தாயே யசோதா(ரா)!!! - வின் அடுத்த அத்தியாயம்.
https://mallikamanivannan.com/satya...4v43TfwyJ0szRo7bvPtkx7w9NqCjei8xHGxqhlaKY02hY
அத்தியாயத்தை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும்.
உங்களின் பொன்னான நேரத்தை செலவளித்து கதையை தொடர்ந்து படித்து, உங்களின் கருத்துக்களை கொடுத்து வரும் அனைத்து தோழமைகளுக்கும் நன்றி.
என்றும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்,
சத்யாஸ்ரீராம்.
உங்கள் கேள்விகளுக்கு வரும் திங்கள் அன்று விடை அளிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். என்னுடைய நாட்காட்டி டிசம்பர் 7 வெள்ளி கிழமையோடு நின்றதால் எனக்கு இன்னமும் திங்கள் பிறக்கவேயில்லை என்று நினைக்கிறேன். புதுவருட வாழ்த்துக்களை என் நாட்காட்டி பிரகாரம் முன்னதாகவும் உங்களின் நாட்காட்டி படி பின்னதாகவும் தெரிவித்துவிட்டு கதையின் அடுத்த இரு அத்தியாயங்களை பதிவிடுகிறேன்.
'கதையெழுத மறந்துவிட்டு மன்னிப்புக்கோர சங்கடப்பட்டு எப்படியெல்லாம் டிசைன் டிசைனா காரணம் சொல்லுது பாருங்க.!' என்ற உங்களின் மனக்குரல்களின் புலம்பல்களுக்கெல்லாம் ஒன்று மட்டும் உண்மையாக சொல்லிக்கொள்கிறேன். "ஆமாங்க!! ஆமாம்!! மறந்து தான் போய்ட்டேன்!! நிஜமா என் கதையை எழுத நான் மறந்து தான் போய்ட்டேன்!!"
புதிதாக அமேசான் கின்டல் அன்லிமிடெடில் உறுப்பினராக சேர்ந்த காரணத்தினால் தான் நான் என் கதையை எழுத மறந்து போனேன்.
பல நாள் பட்டினி கிடப்பவனுக்கு விருந்து கிடைத்தால் எப்படி மகிழ்ந்து உண்பானோ அதேப்போல, அமெரிக்காவில் இருக்கும் எனக்கு புது புது எழுத்தாளர்களின் புது புது புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பெரும் விருந்து எனக்கு. எதைப் படிக்க? எதை விட? என்று தெரியாமல் படித்தேன்.. படிக்கிறேன்.. படிப்பேன்..
அதன் பாதிப்பு என் கதையை நான் மறந்த நிலை.!!
என் எழுத்தாள தோழமைகள் அனைவரும் மிக மிக நன்றாக எழுதுகிறார்கள். எனக்கு எழுதுவதற்கே சற்று பயமாக தான் இருக்கிறது. எப்படி இப்படியெல்லாம் யோசித்து எழுதுகிறார்கள் என்ற வியப்பே எனக்கு பயத்தையும் அதேப்போன்று எழுத வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கிறது. எழுத்தாள தோழமைகள் அனைவருக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்!!
நன்றி எழுத்தாள தோழமைகளே!!
(எப்படி இருந்தாலும் கதையை முடித்துவிடுவேன்.. இது கதையல்ல நிஜம் தான். அய்யோ!! நான் எழுதறது கதை தான். அந்த கதையை முடித்துவிடுவேன் என்பது மட்டும் நிஜம் தான்.. நம்பனும்!!)
இதோ தாயே யசோதா(ரா)!!! - வின் அடுத்த அத்தியாயம்.
https://mallikamanivannan.com/satya...4v43TfwyJ0szRo7bvPtkx7w9NqCjei8xHGxqhlaKY02hY
அத்தியாயத்தை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும்.
உங்களின் பொன்னான நேரத்தை செலவளித்து கதையை தொடர்ந்து படித்து, உங்களின் கருத்துக்களை கொடுத்து வரும் அனைத்து தோழமைகளுக்கும் நன்றி.
என்றும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்,
சத்யாஸ்ரீராம்.