ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் teaser 4

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ்

வள்ளியை ஒரு வழி பண்ணுங்கன்னு கேட்டு கிட்டே இருக்கீங்க வள்ளியோட அழிவு காலம் ஆரம்பமாகிருச்சு.:D

இந்த teaser epi 25ல பா யாரும் நாளைய epila இல்லையே னு கட்டைய கைல எடுத்துடாதீங்க

அந்த பைஸ்ட்டார் ஹோட்டலில் உள்ள ஒன்பதாம் மாடியிலுள்ள உணவகத்துக்கு சென்று பார்க்க வேண்டியவரை பார்த்து பேசி விட்டு மின் தூக்கியில் ஏற அது ஆறாம் மாடியில் நின்று, கதவு திறக்க அங்கே உள்ள விருந்தினர் அரங்கத்தில் பார்ட்டி நடை பெறுவதற்கான அறிகுறிகளோடு கூட்டம் நிரம்பி வழிய தூரத்தில் வள்ளி யாருடனையோ பேசுவது தெரிய மனைவியை கண்ட சந்தோசத்தில் அவளிடம் பேசி விட்டு செல்லலாம் என்றெண்ணி வெளியேற முட்படும் போது கதவு முடிக்க கொண்டது.



அது ஐந்தாம் மாடியில் நின்று கொள்ள படி வழியாக ஏறியவன் அவளைத்தேட அவள் அங்கே உள்ள மின் தூக்கில் உள்ளே நுழைவதைக் கண்டு அப்பக்கம் ஓட அங்கே வந்த பெண்ணொருவர்



"வாட்ட சப்ரைஸ் நீங்க கோமளவள்ளியோட வீட்டுக்காரர் தானே!" என்று கேக்க செல்வராஜும் "ஆமாம்" என்று தலையசைத்தான்.

"நீங்க எவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன், ஆச்சரியமாக இருக்கு எங்க பாட்டிக்கு எல்லாம் வந்திருக்கிறீங்க" என்று சொல்ல



"புருவம் சுருக்கியவன் "அவ எங்க கூப்புடுறா சுத்த போர் னு தானே சொல்லுவா" என்று மனதில் நினைத்தவன் சுற்றி முற்றி பார்க்க அது ஒரு பணக்கார வர்க்க பாட்டியாகவே இருந்தது ஒழிய ஏழைகளுக்கு உதவி செய்வோர் வைக்கும் எளிமையான பாட்டியாக தெரியவில்லை.



செல்வராஜின் தேடலை பார்த்த அப்பெண் "உங்க வைப் இப்போ தான் கிளம்பி போனாங்க" என்று விட்டு "மிஸ்டர் செல்வராஜ் இப் யு டோன்ட் மைன்ட் உங்க வைப்க்கு எந்த கடைல புடவ வாங்குவீங்கன்னு சொல்ல முடியுமா? உங்க செலேக்சன் எல்லாம் பிரமாதம்" என்று புன்னகைக்க



"உங்க பேர்?" என்று செல்வராஜ் கேக்க

"ஐம் கலா எனும் சித்ரகலா அமெரிக்க பிரெண்டுனு சொல்லி இருப்பாளே!" செல்வராஜ் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான்.

தனது அமெரிக்க நண்பி கலா தான் வற்புறுத்தி விலை கூடிய புடவைகளை பரிசாக தந்ததாக வள்ளி சொன்னதென்ன? இந்தம்மா புடவை கடையை பற்றி கேக்கும் விதம் என்ன? நடக்கும் பாட்டியே போதும் வள்ளி தன்னிடம் பொய் சொல்லி இருக்கிறாள் என்பதற்கு. ஏன் இந்த பொய்? எதற்க்காக? என்று குழம்பியவன்

"அத வள்ளி கிட்டேயே கேளுங்க, நான் சொன்னா எனக்கு தர்ம அடி கிடைக்கும்" என்று நழுவியவன் வள்ளியிடம் உடனடியாக பேசவேண்டும் என்று வீடு கிளம்பினான்.


:p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top