பிள்ளை பொறக்கப்போற வேளை அப்பனுக்கு கொஞ்சமே கொஞ்சம் ஒழுங்கு வருமோ வாழ்க்கையில். அவனோட தீராத மோகமும் அவள் மேல இருக்குற பரிதாபமும் மெல்ல மெல்ல அன்பை தோற்றுவிக்குமோ என்னமோ. பார்ப்போம்.
இந்த சாஷா கைப்பாவையா இருக்கறது கூட ஒத்துக்க முடியுது ஏன்னா இது நாள் வரை அவளோட அம்மாவும் இவனும் அவளோட பயந்த சுபாவத்தை exploit பண்ணி அவளுக்கு வேற choice - யே கொடுக்கலை.
ஆனால் இவ ஏன் பார்கவி வார்த்தையெல்லாம் நியாயப்படுத்தி மெகா serial heroine மாதிரி irritate பண்ணுறா? இவ ஒன்னு கொடுத்தா அதுக்கு பதிலா அவனும் சிலது கொடுத்தான். இந்த Barter system-ல் இவ வேசின்னா அவனும் விரும்பியே விலை போன ஆடவன் தான். இப்படி தான் அவ அதைப் பார்க்கணுமே தவிர அவனோட அம்மா சொன்னதை நியாயப்படுத்த கூடாது. (யார் சொல்லுவாங்க இவளுக்கு இதை).
இவளும் அவங்களை மாதிரியே, தன் பையனை, எதுவுமே தட்டிக்கேட்காமல் அடங்காத பொறுக்கியா வளர்த்து 'பாசமான அம்மா ' பட்டம் வாங்கப்போராளாமா?
பார்கவிக்கும் பீஷ்மனுக்கும் நல்லது நினைக்கிறவ, தெரிந்தே அப்பா இல்லாமல் குழந்தையை வளர்க்க ஆசைப்படுவதும் அந்த சிசுவுக்கு செய்யும் அநியாயம் தானே. அப்படிப் பார்த்தால் பீஷ்மன் சொன்னா மாதிரி abortion தானே சரியான முடிவா இருக்கும்.