கற்பூர முல்லை Episode 31

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 31
அகிலன் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறான் என்று அகிலனின் அப்பா கூறியதும் பைரவி அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை ஆனாலும் அவள் சமாளித்துக் கொண்டு எங்கள் வீட்டில் ஒரு பெண்ணை கொடுத்து இருக்க, உங்களால் எப்படி இப்படி ஒரு பதிலை கூற முடிகிறது ?என்று கூறினாள் .அதைக் கேட்டு ரவியும் மிகவும் அதிர்ச்சி அடைந்தான்.

அக்கா...... என்ன பேசுகிறாய் நீ....? என்று கூறினான். இது சம்பந்தப்பட்டிருப்பது உன் வாழ்க்கை மட்டுமல்ல இன்னொரு பெண்ணின் வாழ்க்கையும் கூட என்று கூறினான் ரவி.

என்னடா.... உன் பொண்டாட்டி ஒரே ராத்திரியில் உன்னை மயக்கி விட்டாளா.....? என்று கேலியாக கூறினாள். அது இங்க பேச்சே இல்லை அக்கா, நீ கூறுவது கொஞ்சம் கூட நியாயம் இல்லாதது என்று கூறினான்.

தம்பி..... இது என் வாழ்க்கை இதில் நீ தலையிட வேண்டியது இல்லை என்று கூறினாள்.

அதேபோல் என் வாழ்க்கையிலும் நீ தலையிட முடியாது அக்கா திவ்யாவின் வாழ்க்கையை பனையமாக வைத்துக் கொண்டு அவர்களை இப்படி கேட்பது சரியல்ல என்று கூறினான்.

அங்கு இருந்த யாவரும் பைரவி இப்படி பேசுவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.

ஆனால் ரவி நியாயத்தின் பக்கம் இருப்பது அகிலனின் குடும்பத்தை ஓரளவு சமாதானப்படுத்தியது.

எது எப்படி இருந்தாலும் இதுதான் என் முடிவு என்று கூறியவாறு அங்கிருந்து கிளம்பி விட்டாள் பைரவி.

ரவியின் பெற்றோருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆனாலும் அகிலனின் பெற்றோரிடம் அவள் சற்று பிடிவாதக்காரி. அவள் மனதை நாங்கள் மாற்றுகிறோம். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறிவிட்டு வந்தனர்.

அன்று இரவு ரூமிற்கு வந்த திவ்யா ரவியிடம் மிகவும் நன்றிங்க..... என்று கூறினாள் . நான் நியாயத்தை தான் பேசினேன்.... அந்த இடத்தில் வேறு யார் இருந்தாலும் நான் இதைத்தான் கூறியிருப்பேன் என்றான்.

அப்படி அவனோடு தன்னை ஐக்கியமாக்கி கொண்டாள் திவ்யா.....

****************
அகிலனுக்கு பைரவி கூறியது கேட்டதும் ஆத்திரமாக வந்தது. ஆனாலும் அம்மா அப்பா இருப்பதால் தன்னை சமாளித்துக் கொண்டு நின்றிருந்தான். இரவு அவனுக்கும் தூக்கம் பிடிக்கவில்லை.
ஆனால் ரவி பேசியது அவனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

அந்த நேரம் பார்த்து தமிழின் போன் வந்தது. எடுத்து பேசினான்.

கல்யாணம் விருந்து எல்லாம் நன்றாக முடிந்ததா என்று அவள் கேட்ட கேள்விக்கு ஏதோ பதில் சொன்னான். ஏன் ஒரு மாதிரி பேசுகிறீர்கள் என்று அவள் கேட்டபோது ஒன்றுமில்லை என்று மறுத்தான்.

எல்லாம் முடிந்து எப்போது வருவீர்கள் என்று கேட்டாள்.... எப்பொழுது வந்தால் என்ன...? எப்படி இருந்தாலும் வரத்தானே போகிறேன் என்று சற்று கோபமாக கூறினான்.

பைரவி மேல் இருந்த கோபத்தை தமிழிடம் காட்டினான்.... அவன் அப்படி சொன்னதற்கு மறு வார்த்தை பேசாமல் சரி.... நான் போனை வைக்கிறேன் என்று கூறி போனை கட் செய்தாள்.

அதற்கு அப்புறம் தான் தமிழிடம் தேவையில்லாமல் பேசி விட்டோமே..... என்று வருந்தினான்...

இதை இப்படியே விடக்கூடாது என்று அப்பா அம்மாவிடம் சென்றான்....

அவர்களுக்கும் இவனின் நிலையை பார்த்து கஷ்டமாக இருந்தது...

பார்வதி அவனை மடியில் சாய்த்துக் கொண்டு அவனுக்கு ஆறுதல் கூறினாள்...
சரி விடு...... அதுதான் மாப்பிள்ளை புரிந்து கொண்டாரே.... அப்புறம் என்ன..... மாப்பிள்ளை விட்டாரும் நல்ல விதமாக நல்லவிதமாகத் தான் பேசியிருக்கிறார்கள் அதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்று அவனை தேற்றினாள்.

இவள் மேல் இருக்கும் கோவத்தில் தமிழிடம் கோபமாக பேசி விட்டேன் என்று கூறினான்... என்னப்பா நீ இப்படி எல்லாம் செய்யலாமா....? போ.... போய் அவளை சமாதானப்படுத்து என்று கூறி அவனை அனுப்பி வைத்தார் பார்வதி.

பிறகு தமிழுக்கு கால் செய்தான். ஆனால் லைன் கிடைக்கவில்லை.

கல்யாண சடங்குகள் எல்லாம் முடிந்து அகிலனும், மற்றவர்களும் கிளம்புவதாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் முறைப்படி திவ்யாவிற்கு அகிலனின் வீட்டில் விருந்து வைப்பது முறை. அதனால் அகிலனும் மற்றவர்களும் கிளம்பினர்.

வீட்டிற்கு சென்ற அடுத்த நாளே விருந்து வைப்பதாக தீர்மானிக்கப்பட்டது. உடனே தமிழுக்கும் கால் செய்து கூறினா
ன். அவளும் வருவதாக கூறினாள்.

மலரும்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top