Interesting story. நுணுக்கமான பல விஷயங்கள் இந்த high level security profession பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சுது.
பரசுராம் character ரொம்ப நெகிழ வைக்குது. அவர் மேல ராமதாசும் அவங்க அப்பாவும் வெச்சுருக்குற மதிப்பு பாசம் அவர் மறைந்த பின்னும் அவரோட மகனைக் காக்குது. அந்த விதத்தில் மறைந்த பின்னும் அவர் தன்னோட மகனை support பண்ணிட்டேன்தான் இருக்கார்.
கம்பன் வித்தியாசமான ஆளு (உங்க Hero character) தான்.
Attitude bound Youth வீரா இன்னிக்கி நம்ம வீடுகளில் அதிகம் தென்படும் character தான்.
அவன் அதை நினைச்சு வருந்தறது, அந்த தாக்கத்தில் அவன் சஞ்சய் மேல மதிப்பு வைக்கறது எல்லாமே superb.
கம்பன் மேல் ராமதாசின் அடாவடி பாசம் அசத்தல்.
கம்பனோட காதல், அவன் காதலுக்கு கிடைச்ச காதலி எல்லாமே அழகு.
சூர்யா character with all his positive and negative aspects ரொம்ப பிடிக்குது. உறவுகளை மதிக்கும் அவர்களிடம் எதிர்பார்ப்பு வைக்கும் வீட்டின் கடைக்குட்டி.
பாவம் அவன் செஞ்ச தப்புக்கு அவனுக்கு இப்படி ஆதிராங்கிற ஆயுள் தண்டனை.
காவ்யா - சூர்யாவோட நட்பு பல நல்ல நிகழ்வுகளின் ஆரம்பப்புள்ளி.
Parental care -க்கான மேன்மையை சொல்லும் ஒரு கதை படித்த நிறைவு.
(பத்துமணி நிகழ்ச்சியை பார்க்காமல் விட்டது எவ்வளவு தப்பாப் போச்சு. கம்பனோட கேலியெல்லாம் டக்குன்னு புரியவே இல்லை. )