என் செல்லக்குட்டி

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"என் வீட்டு மாடியில்
எரியும் சூரிய விளக்கில்
எங்கிருந்தோ ஒரு சத்தம்"

"மாடி முழுதும் நான் தேட
மறைந்திருந்தாள் மூலையில் அவள்"

"மரணத்தின் வாயில் சென்ற
வலியில் முனங்கினாள்
வலிக்காமல் அவளை அள்ளி
என் மடியில் கிடத்தி
மருந்திட்டேன் அவள் வலி போக்க"

"மருந்திட்ட மயக்கத்தில் அவள் இருக்க
அவள் அழகில் மயங்கித் தான் நான் இருந்தேன்"

"சில நாட்கள் சென்றிருக்க
அவள் சேட்டைகளும் அதிகரிக்க
சிரிப்புடன் கண்டிருந்தேன்
அவளின் சின்ன சின்ன செய்கைகளை"

"என் இதயத்தினுள்ளே
இடம் பிடித்தாள்
இம்சைகளும் அவள் தந்தாள்"

"இனிய மாலை பொழுதிலே
அவள் இனத்தோடு சேர பறந்துவிட்டாள்
என் வீட்டின் பச்சைக்கிளி"

"இறகுகள் அவள் கொண்டதே
இன்பமாய் பறக்கத்தானே"

"பறந்து சென்றவள் தான்
பார்க்க வருவாள் தினம் என்னை
அவளின் இனத்துடன்"

"நீல வானமதில் நெடுந்தூர பயணம்
தினம் செல்லும் என் செல்லக்குட்டியே
நான் வளர்த்த பச்சைக்கிளியே"

"ஊர் சுற்றி நீ மகிழ
அதை கண்டு நான் மகிழ
காத்திருக்கிறேன் தினமும் உன் வருகைக்காக"

"வாசல் வந்த பச்சைக்கிளியே
வானம் நோக்கிபறந்த என் செல்லக்குட்டியே"
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top