என் இதய விழி நீயே 30

Advertisement

achuma

Well-Known Member
hi friends how are you all
please be safe:)(y)

இந்த கொரோனா வந்து ரொம்ப கஷ்ட்ட பட்டுட்டேன், இப்போ தான் கொஞ்சம் ஓகே ..
சாரி பிரென்ட்ஸ் , ரொம்ப நாள் கழிச்சி அப்டேட் பண்றதுக்கு ..
இன்னும் ஒரு எபி தான் இருக்கு .

hi banu mam ungala miss panren,
உங்க கமெண்ட் எப்பவும் இருக்கும்னு நெச்சிட்டே தான் நான் எபி போடுறேன்

என் இதய விழி நீயே

ஆடிட்டர் கூறிய அனைத்தையும், கேட்டு சிவநேசன் அப்படியே , இடிந்து போய் அமர்ந்து விட்டார் ..
"இந்த விஷயம் , எல்லாம் விஜயன் காதுக்கு போச்சுன்னா , அவன் எப்படி தங்குவானே , தெரியலையே."
ஸ்ரீ அவள் மாமனாரிடம் சென்று, "மாமா , நீங்க கவலை படற அளவுக்கு அந்த பிரேமா ஒன்னும் நல்லவ இல்லை ..
இன்னும் சொல்லனும்னா சித்தப்பாவை அவகிட்ட இருந்து காப்பாத்துறோம் ..
வேற நான் எதுவும் சொல்ல போறது இல்லை, என்னையும் எதுவும் அந்த பொம்பளை பற்றி கேட்காதீங்க , என்று கூறினாள் ..
நிஷா அனைத்தும் அவளிடம் கூறியதிலிருந்து, ஸ்ரீக்கு பிரேமாவை கொள்ளும் வெறியே வந்தது ..

"அக்கா , அம்மா வீட்டுல யாரும் இல்லாத நேரத்துல, சிவநேசன் மாமா போட்டோ அவங்க போட்டோ பக்கத்துல வெச்சிட்டு அந்த போட்டோல கொஞ்சி கொஞ்சி பேசுறது நான் பார்த்து இருக்கேன், நான் ஸ்கூல் இருந்து வந்ததை அவங்க கவனிக்கல, எனக்கு சரியாய் தெரியல என்றாலும் , என் அப்பா போட்டோ பக்கத்துல இல்லாம , எதுக்கு மாமா போட்டோ ஜோடியா வெச்சிட்டு இருக்காங்கனு ஒரு கோவம் , எனக்கு நல்ல நினைவு இருக்கு, அவங்க அன்னைக்கு பேசினது "..

"டேய் சிவா, என் மனசு எல்லாம் நீ தான் டா, என்னை புரிய வைக்க சரியான சூழ்நிலை அமைய மாட்டேங்குது,என்னை நீ பூரணிக்கு, முன்னையே பார்த்து இருந்தா , அந்த இடத்தில நான் இப்போ வைரத்திலயும், பணத்திலயும், அப்படியே ஜொலிச்சு இருப்பேன்"

"ஹ்ம்ம் , இப்போவும், ஒன்னும் காலம் கடந்து போகல , உன்னை என் வழிக்கு கொண்டு வந்தே தீருவேன் , இவங்க எல்லாரையும் விட்டுட்டு , நம்ம எங்கேயாவது, போயிடலாம் , செல்வம் செழிப்போடு நிம்மதியா வாழலாம், அப்படினு லூசு தனமா பேசிட்டு இருந்தாங்க"..

இது அனைத்தும் கூறி முடிப்பதற்குள், நிஷாவிற்கு கை கால் எல்லாம் வேர்த்து நடுங்க ஆரம்பித்தது ..

"எனக்கு யாருகிட்ட , எப்படி சொல்றதுனும் தெரியல , ஆனா அவங்க கிட்ட இருக்க பிடிக்கலை . அதான் ஹாஸ்டல் சேர்ந்துட்டேன் ..ஆனா , அப்பாக்கு நான் துரோகம் செய்து இருக்கேனு இன்னும் கொஞ்சம் பெரிய பொண்ணா ஆனதும் தான் எனக்கு தெரிய வந்தது" ..

"ஆனா பூரணி அத்தை மாமா வாழ்க்கையில நம்பிக்கை இருந்தது , அதுனால் யாருக்கும் சொல்லாம அவங்க பெயரும் வெளிய சொல்லி நம்ம குடும்பத்துக்கு அசிங்கம் ஏற்படுத்தாம இருக்கனும் தான் நான் எல்லாத்தையும் மறைச்சேன் "..

"ஆனா அது எவ்வளவு பெரிய தப்புனு இப்போ தான் புரியுது ..எனக்கு தாய் பாசம் கிடைக்கல, எங்க அப்பாக்கு ஒரு நல்ல மனைவி கிடைக்கல , என் படிப்பு முடிஞ்சதும், அவங்க கிட்ட இருக்க எனக்கு பிடிக்கல, அதான் எனக்கு கல்யாணத்திற்கு ஏற்பாடு போனது நானும் சம்மதம் சொன்னேன் .."

"ஆதியோட கல்யாணம் செய்துகிட்டா , அவங்களுக்கு மண்டையில அண்ணன் , தங்கை உறவு முறை தெரிய வரும்னு நான் நினைத்தேன், ஆனா அவங்க என்னை அந்த வீட்டுக்கு மருமகள் ஆக்க முடிவு பண்ணதே ஷோரூம் , கிடைக்க தான் எனக்கு அப்போ தெரியல" .

"ஆனாலும், கிஷோர் இல்லாம , என்னால வாழ முடியாது, நான் உணர்ந்த தருணமும் அந்த கல்யாண நிகழ்ச்சி தான் ".

"இப்போ கூட, அபி, அங்க கம்பெனி பார்த்துகிறதா ,தெரிஞ்சதும், அவங்க இடம் அவங்களுக்கு தெரியும்னு நான் அப்படியே விட்டுட்டேன்..

ஆனா , இப்படி அடுத்த பொண்ணுங்களுக்கு கெடுதல் செய்வாங்கனு எனக்கு சத்தியமா தெரியாது , நானே அப்பா கிட்ட எல்லாம் இப்போவே சொல்லிடறேன்," என்றாள் ஆவேசத்துடன் ..

அதற்குள் அங்கு சத்தம் கேட்டு அறைக்குள் சென்றால் , நிஷாவின் தந்தை அனைத்தும் கேட்டு அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்து தரையில் விழுந்து கிடந்தார் ..



அப்பொழுது தான் , அவள் தந்தை இந்த அறையில் இருந்து அனைத்தும் கேட்டு இருக்கிறார் , என்று தெரிய வந்தது.தன்னையே நொந்து கொண்டு , ஆம்புலென்ஸ்க்கு , அழைத்து, பிறகு கிஷோருக்கு என்று அனைவருக்கும், விஷயத்தை தெரிய படுத்தினாள் ..

விஜயன் மருத்துவமனையில் சேர்க்க பட்டு மூன்று மணி நேர சிகிச்சைக்கு பிறகு கண் திறந்தார் ..

அதன் பிறகு நிஷா அவள் தந்தையிடம் மன்னிப்பு கேட்க சென்றதற்கு , அவளை தடுத்து , "நிஷா உனக்கு ஒரு நல்ல அம்மா கொடுக்காம போய்ட்டேன், என்னை மன்னிச்சுடு டா, நானும் உனக்கு ஒரு நல்ல தந்தையா இல்லாம நீ தனியாவே வளரும் நிலைமை வந்துடுச்சே," என்று காலம் கடந்து , வருந்தினார் .

நிஷாவும் விஜயனும் அழுகையில் கரைய , கிஷோர் தான், அவரின் உடல் நிலை கருதி, நிஷாவை அடக்கினான் ..

விஜயன், சிவநேசனுக்கு அழைத்து ,பிரேமாவின் பெயரில் புகார் கொடுக்க சொன்னார் ..

சிவநேசனின் கம்பெனி என்பதால், அவரை கொடுக்க சொல்கிறேன், இல்லை என்றால் தானே கொடுத்து இருப்பதாக கூறினார்..
அந்த இரவே, சிவநேசனின் புகாரின் பெயரில் பிரேமா கைது செய்ய பட்டு, காவல் நிலையத்தில் இருந்தாள் ..

பிரேமவால் இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளி வரமால், அப்படியே உறைந்து இருந்தார் ..

யாருக்கும் தெரியாத அளவு அவர்களின் தவறுகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், அதுவும் சிவநேசனே புகார் செய்து இருப்பது, அதுவே அவரின் அதிர்ச்சிக்கு காரணம் ..

உண்மையில் இந்த விஷயத்தை ஸ்ரீரியும் அபியும் கூட சொல்ல தயங்கும் விஷயம் என்பதால் தான் , அவர் இருவரிடமும் துணிச்சலாக அன்று சண்டையிட்டார் ..

எப்படி கேள்வி கேட்டு இருந்தாலும், சந்தோஷ் வாய் திறப்பதற்கு இல்லை , பிறகு எப்படி என்று குழப்பத்தில் இருந்தாள்..


விசாரணையில், சந்தோசுடன் சேர்ந்து எதுவும் செய்யவில்லை என்றும், மக்களுடன் தொடர்பில் இருப்பதற்கு, அவளின், கம்பெனியில் வேலை செய்யும் அடையாளம் மட்டும் கொடுத்ததாகவும் , ஒற்று கொண்டாள் ..

தவறு செய்பவர்களை விட அந்த தவறுக்கு துணை இருப்பது தான் பெரும் தவறு , இது பிரேமாவிற்கு யாரு புரிய வைப்பது ..

பிரேமாவுடன் சேர்ந்து , அனைவரும் ஆயுள் தண்டனைக்கு உட்படுத்த பட்டனர் ..

இந்த பிரச்னை அணைத்து முடிந்து, நிஷாவின் வளைகாப்பு இனிதே நிகழ்ந்தது ..

ஸ்ரீயும் அபியும், பிரேமாவின் சிவநேசன் மீதான தவறான எண்ணத்தை , யாருக்கும் சொல்லாமல், அப்டியே மறைத்து விட்டனர், நிஷாவையும், அவ்வாறே இருக்குமாறு கூறினர் ..

விஜயன் தான், அவரின் வாழ்க்கையில் தோற்ற உணர்வு, எனினும், அதை பற்றிய நினைப்பிற்கு கூட தகுதி இல்லாத ஆளை பற்றி இனி வருந்த கூடாது , என்பதில் தெளிவாக இருந்தார் ..

நாட்கள் அதன் போக்கில் சென்றது ..
பல பெண்களுக்கு , அவரின் கம்பெனியில் வேலை செய்தவர்களால் , நிகழ்ந்த கொடுமைகளுக்கு , சிவநேசன் மிகவும் வருந்தினார் ..
அவரை அதில் இருந்து தேற்றி, வெளி கொண்டு வருவதற்குள் வீட்டில் உள்ள அனைவருக்கும், சரியாக இருந்தது ..

விஜயன் அவரை எங்கேனும் வெளியே அழைத்து சென்று, அவருக்கு ஆறுதலாக இருந்தார் .
அதன் பிறகே , சிவநேசன் பழைய நிலைக்கு சிறிது திரும்பினார் ..

அபி, ஆதி வாழ்வில், நாள் ஒரு சீண்டலும், மகிழ்ச்சியும் என்று அவர்களின் நாட்கள் அழகாக சென்றது ..

நிஷாவிற்கு, அழகான, இரு ஆண் குழந்தைகள் பிறந்தது ..
புது வரவில் வீடும், பழைய மகிழ்ச்சிக்கு திரும்பியது , லலிதா, ஷோபனா இருவரும் நிஷாவையும் குழந்தையும், கவனித்து கொள்வதற்கே நேரம் சரியாக இருந்தது ..

அபியும், ஆதியும் கூட குழந்தையை பார்த்து விட்டு பெங்களூரு திரும்பினர் ..
அன்று இரவு, அபி ஆதியிடம் குழந்தைகளின் அழகை, அவர்களின் அசைவுகள் என்று குழந்தை பற்றியே பேசி கொண்டிருந்தாள் ..

ஆதியிடம் இருந்து பதில் இல்லாமல் போக, அவனை நிமிர்ந்து பார்த்தாள் , அவனின் காதல் பார்வையின் உஷ்ணம் தாங்காமல் , வெட்கத்தில் தலை குனிந்து, "ஏன் இப்படி பார்க்கிறே ஆதி ," என்று திக்கி திணறி , கேட்டாள் ..
அவனும் அபியை நெருங்கி, அவளை அணைத்து ," ஹ்ம்ம் , இன்னும் எவ்வளவு நாள் தான் நான் உன்னை பார்த்துட்டு மட்டுமே இருக்கிறது , என்று அவன் உதடுகள், அவள் காதுகளில் உரசி கொண்டே அவளின் கண்கள் முகம் என்று , அவளை அவனின் உதடுகளால் தீண்டி பெண்ணவளை சிலிர்க்க செய்தான் ..

அபியின் வெட்கம் கலந்த சம்மதத்தில்,அவளை கட்டிலில் சரித்து அவள் மேல் படர்ந்தான் , அங்கு அவர்களின் காதல் கச்சேரி இனிதே அரங்கேறியது ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top