எனக்கு ஒரு சந்தேகம்....

Advertisement

Vidya Venkatesh

Well-Known Member
ஓம் சாயிராம்

அன்புள்ளங்களே!

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, இத்தளத்தில் கதைகள் எழுதி வரும் என்னை எத்தனை பேர் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியாது.

என் பெயர் வித்யா வெங்கடேஷ். இதுவரை இரண்டு முழு நாவல்களும், சில சிறுகதைகளையும் இத்தளத்தில் பதிவிட்டிருக்கிறேன். தற்போது "கோதையின் பிரேமை" என்ற புதுக்கதை Ongoingல் பதிவிட்டு வருகிறேன்.

எழுத எழுத, வாசகர்கள் நம்மை அடையாளம் கண்டுகொண்டு, நம் கதைகளைத் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பார்கள் என்று தான் ஒவ்வொரு எழுத்தாளரும் நினைப்பார். நானும் அதற்கு விதிவிலக்கில்லை.

ஆனால் என் விஷயத்தில் எல்லாம் தலைகீழாக மாறுவது போல ஒரு உணர்வு. முதல் கதைக்குக் கிடைத்த வரவேற்பு கூட, அதற்குப் பின் பதிவிட்ட கதைகளுக்குக் கிடைக்கவில்லை. நாளுக்கு நாள், அத்தியாயத்திற்கு அத்தியாயம், வாசகர்கள் லைக்ஸ் & கமெண்ட்ஸ் குறைந்து கொண்டே வருகிறது.

என் எழுத்தில் ஏதாவது குறை இருந்தால், அதை என்னிடம் வெளிப்படையாகக் கூறுங்கள் தோழமைகளே! திருத்திக் கொள்ள வேண்டிய ஒன்றாக இருந்தால் நிச்சயம் திருத்திக்கொள்வேன்.

உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களே, எழுத்துலகில் கத்துக்குட்டியான என்னைப் போன்றவர்களின் எழுத்துப் பணி மேம்பட பேருவகையாக இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.

உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
வித்யா வெங்கடேஷ்.
 
Last edited:

Jafar ali

Well-Known Member
உங்கள் ஆதங்கம் புரிகிறது உங்கள் கதையை இதுவரை நான் படித்தது இல்லை படித்து பார்த்து விட்டு சொல்கிறேன் ஆனால் நான் மற்றவர்கள் கதையை படித்த வகையில் சொல்கிறேன் எனக்கு முதல் இரண்டு அல்லது மூன்று பதிவுக்குள் கதை தெளிவு வேண்டும் அதிக கதா பாத்திரங்களின் பெயர் குழப்பத்தை கொடுக்கலாம் எழுத்து நடை சுவாரஸ்யமாக கொண்டு செல்லுதல் மற்றும் காதல் மோதல் நாயகர்களின் ஆளுமை நாம் கதையை படித்து கொண்டிருக்கும் பொழுது நம் இதழ்கள் விரிவது, கணமான நிகழ்வுகளில் மனம் கணப்பது நெகிழ்ச்சியான தருனங்களில் கண்களில் நீர் வருதல் ஒரு கதையை படிக்க எடுத்தால் தொடர்ந்து படிப்பது இது நல்ல கதைசொல்லிகளின் வழக்கம்
இது என்னுடைய கண்ணோட்டம்
 

Vidya Venkatesh

Well-Known Member
உங்கள் ஆதங்கம் புரிகிறது உங்கள் கதையை இதுவரை நான் படித்தது இல்லை படித்து பார்த்து விட்டு சொல்கிறேன் ஆனால் நான் மற்றவர்கள் கதையை படித்த வகையில் சொல்கிறேன் எனக்கு முதல் இரண்டு அல்லது மூன்று பதிவுக்குள் கதை தெளிவு வேண்டும் அதிக கதா பாத்திரங்களின் பெயர் குழப்பத்தை கொடுக்கலாம் எழுத்து நடை சுவாரஸ்யமாக கொண்டு செல்லுதல் மற்றும் காதல் மோதல் நாயகர்களின் ஆளுமை நாம் கதையை படித்து கொண்டிருக்கும் பொழுது நம் இதழ்கள் விரிவது, கணமான நிகழ்வுகளில் மனம் கணப்பது நெகிழ்ச்சியான தருனங்களில் கண்களில் நீர் வருதல் ஒரு கதையை படிக்க எடுத்தால் தொடர்ந்து படிப்பது இது நல்ல கதைசொல்லிகளின் வழக்கம்
இது என்னுடைய கண்ணோட்டம்
இத்தனை அழகாக உங்கள் எதிர்பார்ப்புகளை விவரித்து குறிப்பிட்டதற்கு நன்றிகள் பல நட்பே!

எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல், திடீரென்று முளைத்த ஆசையில் எழுத வந்தவள் தான் நான். முதல் கதையில், நிறைய சந்திப்பிழைகளும், கொஞ்சம் எழுத்துப் பிழைகளும் இருப்பதை நானே உணர்வேன். எழுத எழுத தான் அவற்றை எப்படிக் குறைப்பது என்று கண்டறிந்தேன்.

எழுத்துநடை எப்படி இருக்கிறது என்று நீங்கள் தான் படித்துப் பார்த்து சொல்ல வேண்டும்.

மற்றபடி கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யும் போதும், உண்மை தகவல்கள் கொடுக்கும் போதும் மிகவும் கவனமாகக் கையாளுவேன். அதேபோல நேர்மறையான சிந்தனை கொண்ட கதைகள் மட்டும் தான் எழுத வேண்டும் என்பது என் நோக்கம்.

நேரம் கிடைக்கும்போது படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள் நட்பே!
 

Deviharisha

Well-Known Member
Hai Vidhya dear, நான் சில குறிப்பிட்ட‌ கதைகளை மட்டுமே படிப்பேன். நிறைய characters வரும் நாவல்கள் படிப்பதில் தடுமாற்றம் வரும் . Stress இல்லாமல் இருக்கத்தான் கதை படிப்பதே. நான் எப்போதுமே கதை 2‌epi படிப்பேன் பிடிக்கலை என்றால் last epi படிப்பேன். பிடித்தால் continue பண்ணுவேன். ஒரு கதை எத்தனை episodes வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு ஆறு‌ மாதிரி நம்மை படிக்கும்போது நம்மை மறந்து, நம் கவலைகளை மறந்து அடித்து செல்லணும். சில கதைகளை நான் நிறைய தடவைகள் படித்து இருக்கிறேன். அதே மாதிரி உங்கள் கதையும் இருக்கும் என்று நம்பி படிக்க ஆரம்பிக்கிறேன். Daily update போடுறீங்களா தெரியாது. But போட்டால் சந்தோஷமாக படிப்பேன்.
 

apsareezbeena loganathan

Well-Known Member
எனக்கு ஒரு சந்தேகம்
என்னை தெரியுமா உங்களுக்கு..
Just joking dear.....
இப்போ தானே தொடக்கம்...
இனி வரும் காலங்களில் எல்லாம்
இனிதாக மாற.....வாழ்த்துக்கள்டா
 

apsareezbeena loganathan

Well-Known Member
ஆரம்பத்திலேயே கதையில் ஒரு முடிச்சு
அந்த முடிச்சியை எவ்வாறு,
அவிழ்க்கும் விதம்தான் சுவாரஸ்யம் அடுத்து என்ன என்ற ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கும் கதை...
படிப்பவர்களை தூண்டச் செய்யும்....
மெல்லிய காதல் கதை
குடும்ப கதை.....
நட்புக்கதை....
துப்பறியும் கதை..... இதை மையமாகக் கொண்டு தான் பல கதைகள் இங்கு எழுதப்படுகிறது அதில் நிகழ்வுகளும் சூழ்நிலைகளையும் அதை கையாளும் விதத்தை எவ்வாறு விவரிக்கிறார்கள் என்பதிலேயே கதையின் சுவாரஸ்யமும் அழுத்தமும் எண்ணங்களை விதைத்துச் செல்லும் .....
ஒரு கதை என்ன செய்து விட முடியும் நம்மை அழ வைக்க முடியும்
சிந்திக்க வைக்க முடியும்
அதில் உள்ள கதாபாத்திரங்களுடன் இணைத்துக் கொள்ளச் செய்யும்
உருகச் செய்யும்
சூழ்நிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று தெளிவை ஏற்படுத்த செய்யும்
பொழுது போக்காக இருந்தாலும் அதில் ஒரு பொது கருத்து இருக்கத்தான் செய்யும் இவை அனைத்தும் இருக்கும் கதைகள் நிச்சயம் வெற்றி அடையச் செய்யும்.....
 

Nirmala senthilkumar

Well-Known Member
Vidya ma kku enna confusion
Ellam sariya taan poghuthu
Oru silar 10 episode kku apparam taan read pannuvanga
Situation ingha sariilla ma
Puyal mazhai kulir
Half yearly exams
Festival m athiham
Health problem m intha season la athihama irrukku
So respond panna mudiyalai pola
Neenga update podunga ma
Readers vandhuruvangha
Story nalla illannu neenga yosikka venam
Eppovum pola same positive approach oda correct ahh poghuthu
:love::love::love:
 

Vidya Venkatesh

Well-Known Member
Hai Vidhya dear, நான் சில குறிப்பிட்ட‌ கதைகளை மட்டுமே படிப்பேன். நிறைய characters வரும் நாவல்கள் படிப்பதில் தடுமாற்றம் வரும் . Stress இல்லாமல் இருக்கத்தான் கதை படிப்பதே. நான் எப்போதுமே கதை 2‌epi படிப்பேன் பிடிக்கலை என்றால் last epi படிப்பேன். பிடித்தால் continue பண்ணுவேன். ஒரு கதை எத்தனை episodes வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு ஆறு‌ மாதிரி நம்மை படிக்கும்போது நம்மை மறந்து, நம் கவலைகளை மறந்து அடித்து செல்லணும். சில கதைகளை நான் நிறைய தடவைகள் படித்து இருக்கிறேன். அதே மாதிரி உங்கள் கதையும் இருக்கும் என்று நம்பி படிக்க ஆரம்பிக்கிறேன். Daily update போடுறீங்களா தெரியாது. But போட்டால் சந்தோஷமாக படிப்பேன்.

கதை படிக்கும் விஷயத்தில் நானும் உங்களை மாதிரி தான் நட்பே! "We become the books we read" என்ற பழமொழிக்கு இணங்க, கதையில் வரும் விஷயங்களில் ஐக்கியமாகும் ரகம் நான்.

அதனால் தான் நேர்மறையான கதைகள் மட்டுமே எழுத வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். ஆனால் அப்படி Stereotyped ஆக எழுதுவதால் தான், என் கதைகள் வாசகர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்று சந்தேகம் முளைத்தது. அதற்காக என் கொள்கைகளுக்கு மாறாக எப்போதும் எழுதப்போவதில்லை.

நீங்கள் எதிர்பார்க்கும் Stress இல்லாத கதைகள் தான் எனது அத்தனை கதைகளும். "அன்பின் ஆழம்", "பாசமென்னும் பள்ளத்தாக்கில்" இரண்டுமே நிறைவுற்ற நாவல்கள்.

நீங்கள் சொல்வது போல முதல் இரண்டு அத்தியாயங்கள் படித்து, உங்கள் கருத்தைப் பகிருங்கள் நட்பே. இல்லையானால் எனது சிறுகதை ஒன்றைப் படித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தாலும் சரி. உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்து நிச்சயம் எனக்கு பேருவகையாக இருக்கும்.

ஆன்கோயிங்க் கதை வாரத்தில் இரண்டு நாட்கள் திங்கள், மற்றும் வியாழன் மட்டுமே தற்போது என்னால் பதிவிட முடியும் மா. தினமும் பதிவிடுவது சிரமம்.

நேரம் எடுத்து கருத்து பதிவிட்ட உங்கள் அன்பிற்கு என் பணிவான நன்றிகள் நட்பே!!!
 

Vidya Venkatesh

Well-Known Member
எனக்கு ஒரு சந்தேகம்
என்னை தெரியுமா உங்களுக்கு..
Just joking dear.....
இப்போ தானே தொடக்கம்...
இனி வரும் காலங்களில் எல்லாம்
இனிதாக மாற.....வாழ்த்துக்கள்டா
உங்களை மறக்க முடியுமா தோழி! என் முதல் கதைக்கு முதல் கருத்து பதிவிட்ட தோழி அல்லவா நீங்கள்; அன்று முதல் என்றென்றும் தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும் அன்புள்ளம் அல்லவா நீங்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top