எந்தன் காதல் நீதானே 19

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அந்த குடும்பத்துக்கு ஏத்த மருமகன் நீதாண்டா :p:p:p
பாய்ண்டா பேசுற..... அவர் தான் எங்களுக்கு பயப்படணும் :p:p:p பழிக்கு பழி........
மருமகன் பேச்சுக்கு மறுபேச்சு பேசிடுவாரா மாமனார்........
மாமனார் மாமியார் கிட்ட பாலை தூக்கி போட மாமியார் உன் மச்சான் கிட்ட போட, மச்சான் எப்படி ஒரே செகண்ட் ல வேலையை முடிச்சுட்டான் பாரு........

சாமர்த்தியமான கோழி சாமத்துல கூட முட்டையிடுமாம் னு சொல்வாங்க........
காமாட்சிக்கு ரொம்ப பொருத்தம் இது........
ஒரு தின்பண்டத்துக்கு அப்படி பேசின பொம்பளையா இப்படி சில்லண்டி வேலை பண்ணிவச்சிருக்கு.....
கூட்டு குடும்பங்களில் இப்படி ஒருத்தங்க கண்டிப்பா இருப்பாங்க......
எல்லாமே பொதுவில் னு நம்பிகிட்டு இருக்கவங்க கடைசியில் மனசொடிஞ்சு தான் போறாங்க.......

செமதாண்டா நீ :love::love::love:
நச்சுனு ஒரு கேள்வி கேட்டு வாயில் இருந்து உண்மையை வரவச்சுட்ட.......
வாயில்லா பூச்சி உங்கம்மாவையும் பேசவச்சுட்ட.......
உங்கப்பாவும் ஓகே சொல்லிட்டார்......

உன் மச்சானுக்கு பை நிறைய தங்கம் கிடைக்கும் போல.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

ஹா ஹா ஹா
இரண்டு அத்தைமார்களும் வந்திருக்கும் நேரத்தில் இந்த ஜெய் எப்படி கால்குலேட் பண்ணி அகல்யாவின் கல்யாணத்தைப் பேசி முடிச்சுட்டான்

மாமாவுக்கு பயந்த நிலாவுக்குத்தான் புருஷனின் திறமை தெரியவில்லை
இன்னும் கொஞ்சம் நீ வளரணும், வெண்ணிலா

ஹா ஹா ஹா
உங்க டெபாசிட் காலி காலி ஜெயராமன் ஸார்
பசங்க வளர்ந்துட்டாங்க இனி அவங்க பார்த்துக்குவாங்கன்னு ஓரம் கட்டுங்க அமுதா ஹஸ்பெண்ட்

இந்த லூசு வெண்ணிலாதான் எல்லாத்துக்கும் பயந்துக்குது
காமாட்சி தனியா நகை வாங்கும் விஷயத்தை ஜெய் இப்படி போட்டு உடைச்சிட்டானே
ஹா ஹா ஹா

அதானே
மாமியார் ஆகி பேரன் பேத்தி எடுக்கப் போறாங்க
இன்னுமா மகேஸ்வரி கோப்ப்ப்பால் ராஜகோபாலுக்கு பயப்படணும்?

இன்னும் கொஞ்சம் வசதி இருந்திருந்தால் காமாட்சி இன்னொரு கற்பகம் ஆகியிருப்பாள்
சந்திரன்தான் பாவம் ஒரு அப்பிராணி

நீ வாய் பேசினதுக்கு எல்லார் முன்னாடியுமா உன்னை ஜெய் திட்டுவான்?
ரூமுக்குள்ளே வா வெந்நீர் மகளே உனக்கு இருக்கு
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.புகழ் நல்லவன்,வசதியான இடம்னு தெரிஞ்சும் ஜெயராமன் ரெண்டு பொண்ணுங்களுக்கும் ஒரே அளவு நகை செய்யனும்,பொதுவுல இருந்து அவ்வளவு செய்ய முடியாது வசதியான இடம் வேண்டாம்னு சொல்றார்:rolleyes::rolleyes::rolleyes:.
ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி செய்யறோம்னு ஜெய் சொல்றதையும் கேட்க மாட்டேங்கறார் :mad::mad:

காமாட்ஷி யாருக்கும் தெரியாமல் நகைய வாங்கி,அகல்யாக்கு போடறதை விட அதிகம் போடுவேன்னு சொல்லுது,ஜெயராமன் இப்போதாவது ஆளுங்கள புரிஞ்சு நடந்துக்கட்டும்:unsure::unsure:.

முன்னாடி பொண்ணு கொடுத்திருந்தோம்,இப்போ எடுத்திருக்கோம்,அவர் தான் எங்களுக்கு பயப்படனும் ஹாஹா அப்படிப்போடு,ஜெய் மாப்பிள்ளை முறுக்கை காட்டறான்:D:D:D.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த காமாட்சி பெரிய தில்லாலங்கடியா இருக்கும் போல... பொது காசுல நகை வாங்குனதும் இல்லாம... என்னமோ காசை மிச்சம் பிடிச்சு கொஞ்சமா வாங்கினேன்.. போனா போகுதுங்கிற ரேஞ்சுல பேசுது....

புகழ் & அகல்யா கல்யாணத்துக்கு ஜெயராமன் ஒத்துக்கிட்டார்... இதுக்கே இப்படின்னா... யுவராஜ் & ராதிகா கல்யாணத்துக்கு எப்படி ஒத்துப்பார்??? :unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top