உன் நிழல் நான் தாெட - நன்றி

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
நிழலாக என் கதையை தாெடர்தவர்களுக்கு நன்றி

ஹாய் பிரண்ட்ஸ் எனக்கு கதை வாசிக்கிறது நான் ரொம்ப பிடிக்கும். நான் புனித சவேரியார் கல்லூரியில் படிக்கும் பொழுது எனது சீனியர் செண்பகவல்லி மூலமாகவே எனக்கு கதை படிக்கும் ஆர்வம் வந்தது.

அப்பொழுது எல்லாம் எனது பொழுதுபோக்கு புத்தகங்களுடன் மட்டுமே கழிந்தது. சமீபகாலமாக ஆன்லைன் கதைகளை வாசிக்கும் பொழுதும் அதற்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை பார்க்கும் பொழுதும் எனக்கும் கதை எழுத வேண்டும் என்று ஒரு சிறிய ஆர்வம் ஏற்பட்டது.

சின்ன வயசுல இருந்து வெற்றி கிடைக்காது என்று தெரிந்தாலும் கூட போட்டியில் கலந்து கொள்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னுடைய யுஜி காலேஜ் லைஃப்ல சில பாேட்டிகளில் நான் ஒரு தடவை கூட வெற்றி பெற்றது கிடையாது, இருந்தாலும் நான் தாேல்வியடைந்த போட்டிகளிலும் கலந்து கொள்வேன்.

அதன் பிறகு பிஎட் படிக்கும் பொழுது அந்த சில போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற, அது எனக்கு மேலும் ஆர்வத்தையே தந்தது. அப்படிப்பட்ட ஒரு ஆர்வத்தினால் இந்த தளத்தில் என்னுடைய முதல் கதையை (கதை அப்படின்னு நினைக்கிறேன்) பதிவு செய்தேன்.

அப்படி நான் பதிவு செய்வதற்கு வாய்ப்பளித்த மல்லிகா மேம் மற்றும் ஹமீதா மேம் இருவருக்கும் என் முதல் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதுவரைக்கும் என்னுடைய கதைக்கு ஆதரவு தந்த அனைத்து நல்ல வாசக உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிறையபேர் என்னுடைய கதையை படித்து பார்த்து தங்களுடைய கமெண்ட் லைக் கொடுத்து இருக்கிறீர்கள். அதைப்போல் அமைதியாக வாசித்து என் கதைக்கு ஆதரவு அளித்தவர்கள் அநேகம்.

நீங்கள் அனைவரும் என் கதைக்கு தரும் ஒவ்வொரு லைக் அண்ட் கமெண்ட் ஒவ்வொன்றும் எனக்கு மிகவும் முக்கியமானது.

நான் ஜெயிச்ச மேடையில் நின்று பரிசு வாங்கும்..பாேது என்னுடைய கவனம் முழுதும் எனக்காக கீழே கைதட்டும் என்னுடைய நண்பர்கள் மீது தான் இருக்கும்.

என் கையில் இருக்கும் பரிசை விட அவர்கள் கையில் இருந்து வரும் ககர ஒலியே எனக்கு சந்தோஷத்தை தரும். அதுபோலவே உங்களுடைய லைக் அண்ட் கமெண்ட்.

தேங்க்யூ வெரி மச் ஃபார் யுவர் அண்ட் கண்டிஷனல் சப்போர்ட் ஃபார் மை ஸ்டோரி.

மீண்டும் எனது புதிய முயற்சியுடன் உங்களை சந்திக்க வருவேன். அதற்கும் உங்களின் ஆதரவை நிச்சயம் எதிர்பார்ப்பேன்.

இப்பாேது நான் www.Tamilnovelwriters.com ல் "கண் விழித்தேன் உன் நினைவில்" என்கின்ற தலைப்பில் தமிழர் திருநாள் அன்று ஆரம்பித்த போட்டி கலந்து காெண்டு இருக்கிறேன். அத முடிந்தவுடன் "உன்னை மறவேன் உயிரே" என்கிற கதையுடன் உங்களை சந்திக்க வருகிறேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
"உன் நிழல் நான் தொட" நாவல்
ரொம்பவே நல்லாயிருந்தது
நிறைய எதிர்பாராத டுவிஸ்ட்டுகள்
நீங்கள் வைத்து என்னால சிலது
கண்டுபிடிக்க முடியலைப்பா
"கண் விழித்தேன் உன் நினைவில்"
ஆரம்பம் நல்லாயிருக்கு
அடுத்த லவ்லி நாவல் "உன்னை
மறவேன் உயிரே" நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், செசிலி டியர்
 
Last edited:

PUTHUMAIRAJ

New Member
நான் உங்கள் நாவல் கதை படிச்சிகிட்டு இருகேன் ...சூப்பரா இருக்கு.... உங்க வாழ்க்கைல இது ஒரு அருமையான முயற்சி மற்றும் வாய்ப்பும் கூட உண்மையிலே பாராட்டக்கூடிய விஷயம்.....


தொடர்ந்து நாவல் எழுத வாழ்த்துக்கள் .......(y)(y)
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
"உன் நிழல் நான் தொட" நாவல்
ரொம்பவே நல்லாயிருந்தது
நிறைய எதிர்பாராத டுவிஸ்ட்டுகள்
நீங்கள் வைத்து என்னால சிலது
கண்டுபிடிக்க முடியலைப்பா
"கண் விழித்தேன் உன் நினைவில்"
ஆரம்பம் நல்லாயிருக்கு
அடுத்த லவ்லி நாவல் "உன்னை
மறவேன் உயிரே" நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், செசிலி டியர்
Thank for your support dr
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
நான் உங்கள் நாவல் கதை படிச்சிகிட்டு இருகேன் ...சூப்பரா இருக்கு.... உங்க வாழ்க்கைல இது ஒரு அருமையான முயற்சி மற்றும் வாய்ப்பும் கூட உண்மையிலே பாராட்டக்கூடிய விஷயம்.....


தொடர்ந்து நாவல் எழுத வாழ்த்துக்கள் .......(y)(y)
Thank you for your concern
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top