ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி டீஸர்.
சித்திரை புத்தாண்டு விளையாட்டுக்கள்.
மாலையில் அந்த விளையாட்டு மைதானமே நிரம்பி வழிந்தது புத்தாண்டு விளையாட்டுக்களை கொண்டாட ஆரம்பித்திருந்தனர். மத பேதமின்றி ஊர் மக்கள் அனைவரும் கலந்துக்க கொள்ள கூடிய விழாவாக இருக்க, பெரியவர்களுக்கு, சிறியவர்களுக்கு, ஜோடிகளுக்கு என்று போட்டிகள் நடை பெற அவ்விடமே சந்தோசம் நிரம்பியுள்ள சொர்க்க பூமியாக காணப்பட்டது.
பெண்கள் பெரிய பேரிகையை அடித்தவாறே பாடி விழாவை ஆரம்பித்து வைக்க, முதலில் சிறுவர்களுக்கான போட்டிகள் ஆரம்பமாக ஆர்வமாக குழந்தைகள் கலந்து கொண்டனர். யானைக்கு கண் வைத்தல், பன் சாப்பிடுதல், கயிறிலுக்கும் போட்டி, பலூன் ஊதுதல், போன்றவை நடை பெற ஸ்ரீராம் பலூன் ஊதும் போட்டியில் மட்டும் கலந்துக்க கொண்டான். வெற்றி பெற வில்லையானாலும் குழந்தைகளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட ஸ்ரீராமும் அவனுக்கு கிடைத்த பரிசுப்பொதியை தூக்கிக் காட்டியவாறு துள்ளிக் குதித்தான்.
அதன் பின் பெரியவர்களுக்கான போட்டிகள் நடை பெற இருபாலாருக்கான போட்டிகளில் போட்டியில் அனைவருமே கலந்துக்க கொள்ள யானைக்கு கண் வைத்தல் போட்டியில் இயல் வெற்றி பெற்றாள். தேசிக்காய், கரண்டி ஓட்டத்தில் அகல்யா வெற்றி பெற, மண் பானை உடைத்தலில் இளா வெற்றியீட்டினான். கயிறிலுக்கும் போட்டியில் அமுதன், ரிஷி, இளா, தானா, என என அனைவரும் கலந்துக்க கொண்டு வெற்றியை தட்டிச்சென்றனர்.
ஆண்களுக்கு மட்டுமேயான போட்டிகளில் தலையணை சண்டை, சருக்கு மரம் ஏறுதல், சிறப்பாக நடந்துக்க கொண்டிருக்க, பெண்களுக்கு ஓலை பிண்ணுதல் போட்டியில் கலந்துக்க கொண்ட மங்கம்மா வெற்றி பெற, தேங்காய் துருவல் போட்டியில் சீதா வெற்றி பெற்றார்.
ஜோடிகளுக்காக, மாறு கால் கட்டி ஓட்டமும், யோகர்ட் ஊட்டும் போட்டியும் நடை பெற இதில் ரிஷி, யாழிசை ஜோடியே வெற்றி பெற்றனர்.
வித்தியாசமாகவும், இனிமையாகவும் நெஞ்சில் நீங்க பசுமையான நினைவுகளாக பதிந்துப் போனது இவ்வருட சித்திரை புத்தாண்டு அனைவருக்கும்.
சித்திரை புத்தாண்டு விளையாட்டுக்கள்.
மாலையில் அந்த விளையாட்டு மைதானமே நிரம்பி வழிந்தது புத்தாண்டு விளையாட்டுக்களை கொண்டாட ஆரம்பித்திருந்தனர். மத பேதமின்றி ஊர் மக்கள் அனைவரும் கலந்துக்க கொள்ள கூடிய விழாவாக இருக்க, பெரியவர்களுக்கு, சிறியவர்களுக்கு, ஜோடிகளுக்கு என்று போட்டிகள் நடை பெற அவ்விடமே சந்தோசம் நிரம்பியுள்ள சொர்க்க பூமியாக காணப்பட்டது.
பெண்கள் பெரிய பேரிகையை அடித்தவாறே பாடி விழாவை ஆரம்பித்து வைக்க, முதலில் சிறுவர்களுக்கான போட்டிகள் ஆரம்பமாக ஆர்வமாக குழந்தைகள் கலந்து கொண்டனர். யானைக்கு கண் வைத்தல், பன் சாப்பிடுதல், கயிறிலுக்கும் போட்டி, பலூன் ஊதுதல், போன்றவை நடை பெற ஸ்ரீராம் பலூன் ஊதும் போட்டியில் மட்டும் கலந்துக்க கொண்டான். வெற்றி பெற வில்லையானாலும் குழந்தைகளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட ஸ்ரீராமும் அவனுக்கு கிடைத்த பரிசுப்பொதியை தூக்கிக் காட்டியவாறு துள்ளிக் குதித்தான்.
அதன் பின் பெரியவர்களுக்கான போட்டிகள் நடை பெற இருபாலாருக்கான போட்டிகளில் போட்டியில் அனைவருமே கலந்துக்க கொள்ள யானைக்கு கண் வைத்தல் போட்டியில் இயல் வெற்றி பெற்றாள். தேசிக்காய், கரண்டி ஓட்டத்தில் அகல்யா வெற்றி பெற, மண் பானை உடைத்தலில் இளா வெற்றியீட்டினான். கயிறிலுக்கும் போட்டியில் அமுதன், ரிஷி, இளா, தானா, என என அனைவரும் கலந்துக்க கொண்டு வெற்றியை தட்டிச்சென்றனர்.
ஆண்களுக்கு மட்டுமேயான போட்டிகளில் தலையணை சண்டை, சருக்கு மரம் ஏறுதல், சிறப்பாக நடந்துக்க கொண்டிருக்க, பெண்களுக்கு ஓலை பிண்ணுதல் போட்டியில் கலந்துக்க கொண்ட மங்கம்மா வெற்றி பெற, தேங்காய் துருவல் போட்டியில் சீதா வெற்றி பெற்றார்.
ஜோடிகளுக்காக, மாறு கால் கட்டி ஓட்டமும், யோகர்ட் ஊட்டும் போட்டியும் நடை பெற இதில் ரிஷி, யாழிசை ஜோடியே வெற்றி பெற்றனர்.
வித்தியாசமாகவும், இனிமையாகவும் நெஞ்சில் நீங்க பசுமையான நினைவுகளாக பதிந்துப் போனது இவ்வருட சித்திரை புத்தாண்டு அனைவருக்கும்.
Last edited: