ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி டீஸர்
மெதுவாக கண்விழித்த கயல்விழி அங்கே தன்னையே கவலையாக பாத்திருந்த பிரதீபன் மற்றும், அமுதனை கேள்வியாக ஏறிட
"என்னாச்சு குட்டிமா? எதுக்கு நீ இந்த ரூமுக்கு வந்த? நீ இந்த ரூம்ல மயங்கி விழுந்திருக்குறத பாத்து அமுதன் தான் உன்ன கட்டில்ல தூக்கி வச்சிட்டு என்ன கூப்பிட்டான்" ரிஷி இழைத்த கொடுமைகள் நியாபகத்தில் வந்து தான் அவள் மயங்கி சரிந்தாள் என்று நினைத்து பிரதீபன் கவலையாக சொல்ல
அமுதனும் "நா வரும் போது இதோ இங்க தான் விழுந்திருந்த கயல். எதுக்கு நீ இங்க வந்த?" யோசனையாக கேக்க
இருவரும் மாறி மாறி சொல்லியதில் குழம்பிய கயல்விழியின் நியாபக அடுக்கில் தன் கணவன் அவளை அணைத்து முத்தமிட்டது வரவே அவனின் சுகந்தம் அவ்வறையில் இருப்பது போலயே ஒரு பிரம்மை அவளுள்.
"அவங்க அவங்க இங்க இருந்தாங்க" என்றவள் விரல்கள் உதடுகளை ஸ்பரிசம் செய்ய கணவன் தந்த முத்தத்தின் தித்திப்பு இன்னும் மாறாது இருக்க வார்த்தைகள் தடுக்கியே வெளிவந்தன.
அவள் ரிஷியை பற்றித்தான் சொல்கின்றாள் என்று புரிந்துக் கொண்டு "நா இப்போ தான் வரேன் கயல்" அமுதன் சொல்ல
எங்கே அவள் அமுதனை கண்டுதான் குழம்பி இருக்கிறாள் என்று நினைத்து ப்ரதீபனும் "ஆமா கயல் இவன் என் கூடத்தான் இருந்தான்"
"இல்ல.. நா பாத்தேன் அது அவங்க தான்" அவன் அணைத்ததையும், முத்தமிட்டதையும் சொல்ல முடியாமல் திணற,
"நீ இந்த ரூமுக்கு வந்ததால் இங்க ரிஷி இருக்குற மாதிரி தோணி இருக்கும்" பிரதீபன் அவளின் தலையை தடவியவாறே சமாதானப் படுத்த
அமுதனும் "பிரம்மையாக இருக்கும், ஒருவேளை ரிஷி ஆவியா வந்திருப்பானோ" சொன்னவன் பக்கென்று சிரித்து விட அவனை எரிச்சலாக பார்த்த பிரதீபன் கயல்விழியின் முன் திட்ட முடியாமல் முறைக்கலானான்.
"பிரம்மையா? இல்ல இல்ல அது அவர் தான். என் தேகம் முழுக்க அவரின் ஸ்பரிசங்கள், சுவாசம் முழுக்க அவரின் வாசம். கண்டிப்பா அவர் இங்க வந்தார்" மனதுக்குள் அரற்றியவள் என்ன சொன்னாலும் இவர்கள் நம்பமாட்டார்கள் என்று தோன்ற அவளுக்கு யோசிக்க தனிமை தேவை படவே மெளனமாக எழுந்து தனதறையை நோக்கிச் சென்றாள்.
மெதுவாக கண்விழித்த கயல்விழி அங்கே தன்னையே கவலையாக பாத்திருந்த பிரதீபன் மற்றும், அமுதனை கேள்வியாக ஏறிட
"என்னாச்சு குட்டிமா? எதுக்கு நீ இந்த ரூமுக்கு வந்த? நீ இந்த ரூம்ல மயங்கி விழுந்திருக்குறத பாத்து அமுதன் தான் உன்ன கட்டில்ல தூக்கி வச்சிட்டு என்ன கூப்பிட்டான்" ரிஷி இழைத்த கொடுமைகள் நியாபகத்தில் வந்து தான் அவள் மயங்கி சரிந்தாள் என்று நினைத்து பிரதீபன் கவலையாக சொல்ல
அமுதனும் "நா வரும் போது இதோ இங்க தான் விழுந்திருந்த கயல். எதுக்கு நீ இங்க வந்த?" யோசனையாக கேக்க
இருவரும் மாறி மாறி சொல்லியதில் குழம்பிய கயல்விழியின் நியாபக அடுக்கில் தன் கணவன் அவளை அணைத்து முத்தமிட்டது வரவே அவனின் சுகந்தம் அவ்வறையில் இருப்பது போலயே ஒரு பிரம்மை அவளுள்.
"அவங்க அவங்க இங்க இருந்தாங்க" என்றவள் விரல்கள் உதடுகளை ஸ்பரிசம் செய்ய கணவன் தந்த முத்தத்தின் தித்திப்பு இன்னும் மாறாது இருக்க வார்த்தைகள் தடுக்கியே வெளிவந்தன.
அவள் ரிஷியை பற்றித்தான் சொல்கின்றாள் என்று புரிந்துக் கொண்டு "நா இப்போ தான் வரேன் கயல்" அமுதன் சொல்ல
எங்கே அவள் அமுதனை கண்டுதான் குழம்பி இருக்கிறாள் என்று நினைத்து ப்ரதீபனும் "ஆமா கயல் இவன் என் கூடத்தான் இருந்தான்"
"இல்ல.. நா பாத்தேன் அது அவங்க தான்" அவன் அணைத்ததையும், முத்தமிட்டதையும் சொல்ல முடியாமல் திணற,
"நீ இந்த ரூமுக்கு வந்ததால் இங்க ரிஷி இருக்குற மாதிரி தோணி இருக்கும்" பிரதீபன் அவளின் தலையை தடவியவாறே சமாதானப் படுத்த
அமுதனும் "பிரம்மையாக இருக்கும், ஒருவேளை ரிஷி ஆவியா வந்திருப்பானோ" சொன்னவன் பக்கென்று சிரித்து விட அவனை எரிச்சலாக பார்த்த பிரதீபன் கயல்விழியின் முன் திட்ட முடியாமல் முறைக்கலானான்.
"பிரம்மையா? இல்ல இல்ல அது அவர் தான். என் தேகம் முழுக்க அவரின் ஸ்பரிசங்கள், சுவாசம் முழுக்க அவரின் வாசம். கண்டிப்பா அவர் இங்க வந்தார்" மனதுக்குள் அரற்றியவள் என்ன சொன்னாலும் இவர்கள் நம்பமாட்டார்கள் என்று தோன்ற அவளுக்கு யோசிக்க தனிமை தேவை படவே மெளனமாக எழுந்து தனதறையை நோக்கிச் சென்றாள்.