உன் கண்ணில் என் விம்பம் teaser 13

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்திலிருந்து குட்டி teaser:geek:

உண்மையிலேயே இந்த கதையை எழுத நான் ரொம்பவே பயந்தேன். :(உங்க cmnts தான் என்ன எழுத தூண்டி கிட்டே இருக்கு.:cool:

நன்றி, நன்றி, நன்றி.:love::love::love:


images (9).jpg
சத்தம் வரமால் பூஜையை முடித்துக் கொண்டவள் பிரதீபன் எழுந்துக்கொள்வானோ என்று வழக்கம் போல் அஞ்சியவாறே மாடிக்கு செல்லலாம் என்று பூஜையறையை விட்டு வெளியே வர ப்ரதீபனின் அறையில் அவன் வாந்தியெடுக்கும் சத்தம் கேக்கவே ஒரு கணம் நின்றவள் மாடிக்கு செல்ல அடுத்த அடியை எடுத்து வைக்க பிரதீபன் முனகும் சத்தம் கேக்கவே! காதை தீட்டியவள் அவன் வலியில் கதறுவது போல் தோன்ற உள்ளே! செல்வோமா? வேண்டாமா? என்று மனதுக்குள் பட்டி மன்றம் நடத்தலானாள்.





ராமு தாத்தா வெளியே இருக்கும் வீட்டில் இந்நேரம் தூங்கிக் கொண்டிருப்பதால் அவரை எழுப்ப இந்த இருட்டில் செல்ல பயந்தவள், ரிஷியும் இல்லாத பட்ச்சத்தில் உள்ளே சென்று தான் பார்ப்போம் என்று முடிவெடுத்து கதவை மெதுவாக திறந்தாள்.



அவள் அங்கே கண்ட காட்ச்சி பிரதீபன் அவன் மீதும், அறை முழுவதும் வாந்தியெடுத்து சோபாவில் சுருண்டு கிடப்பதும், மதுபான பாட்டில்கள் அறை முழுவதும் தாறு மாறாக கிடப்பதே!



வாந்தியின் நாற்றமும், மதுபான மற்றும் சிகரெட்டின் நாற்றமும் சேர்ந்து கெட்ட வாடை வீச யாழிசைக்கு குடலை பிராட்டிக்கு கொண்டு வரவே கதவை மூடிக் கொண்டு வெளியே ஓடினாள்.



"சே என்ன நாத்தம் நாறுது, உள்ள இருந்தா செத்துடுவேன்" என்றவள் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு மின் விசிறையையும் இயக்கி அமர்ந்து விட்டாள்.

download (5).jpg

"ஐயோ அவரு மயக்கத்துல இருக்கிறாரா? தூங்குறாறாண்ணே தெரியலையே! அதுக்குள்ளே இருந்தா சத்தியமா செத்துடுவாரு" ப்ரதீபனுக்காக வருந்தியவள் மேலே சென்று ரிஷியின் காஸ்டலியான பெர்பியூமை எடுத்துக் கொண்டு வந்து அவள் மூக்கையும், வாயையும் துணியால் கட்டியவள் முதலில் செய்தது அறை முழுவதும் வாசனை திரவியத்தை தெளிப்பதே!



ப்ரதீபனை பார்க்க அவன் போதையில் உளறியவாறு இருக்க ஜன்னல்களை திறந்து விட்டவள் அவனை தூக்கி அமர்த்த சுயநினைவில்லாது புலம்பிக் கொண்டிருந்தான்.



பார்க்க பரிதாபமான நிலையில் அவனிருக்க "என்னடி பண்ண போற இப்போ" யாழிசையின் மனம் கேள்வி எழுப்ப



"ஆபத்துக்கு பாவமில்லை" என்றவள் ப்ரதீபனை இழுக்காத குறையாக தூக்கி நிறுத்தியவள் அவன் எடுத்து வைத்திருக்கும் வாந்தி மிதிப்படாமல் அவனை குளியலறைக்குள் கொண்டு சென்று அங்கிருந்த பிளாஸ்டிக் பெஞ்சில் அமர்த்தி அவனின் டீஷர்ட்டில் கை வைக்க யாழிசையை தள்ளி விட்டிருந்தான் பிரதீபன்.

****************************************************************************************************

வலியையும் பொருட்படுத்தாது சாம்பிராணி புகையை அறை முழுவதும் பரப்பி விட்டவள் விடிகாலை பொழுது என்பதால் வாசற் கதவை திறந்து வைத்து “குளித்து விட்டு வந்து கோலம் போடலாம்” என்ற முணுமுணுப்போடையே மாடியேறி குளித்து விட்டு மீண்டும் கீழே வர அந்நேரம் தான் விமான நிலையத்திலிருந்து டாக்சியில் வந்த ரிஷிக்கு காவலாளி வாயிலை திறந்து விட்டிருந்தான்.

images (48).jpg

அறைக்குள் சென்று ப்ரதீபனை கட்டிலில் கிடத்தி போர்வையையும் போர்த்தி விட்டு நிமிர ருத்ர மூர்த்தியாக நின்று கொண்டிருந்த ரிஷி அவளை அறைந்தது மாத்திரமல்லாது வலித்துக் கொண்டிருந்த கையை பிடித்து யாழிசை கத்த கத்த தர தரவென இழுத்துக் கொண்டு சென்றவன் அவளை பேச விடாது வார்த்தைகளை தணலாக்கி அவள் மேல் கொட்டலானான்.
 

RajiChele

Well-Known Member
ஏம்மா இப்படி கொஞ்ச கொஞ்சமாக பிரஷர் ஏத்தரதுக்கு ஒரே எபி ல ஏத்தி விட்டுடு உனக்கு புண்ணியமா போகும்:oops::oops::oops:
Ha ha very true sis!!! Mila sis konjam pathu panunga!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top