உன் கண்ணில் என் விம்பம் teaser 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ Sunday special:love::love:

நம்ம பானுமா சண்டே ஸ்பெஷல் எங்க என்று கேட்டாங்க சோ உடனே எழுதி சுடச்சுட போட்டாச்சு.:cool::D

images (33).jpg

அறைக்குள் நுழைந்த யாழிசை தனக்கு தாலி கட்டின நெடுமாறன் எங்கே என சுற்றும் முற்றும் பார்க்க அவனை காணவில்லை. அம்மா அறிவுரை என்ற பெயரில் சொன்னதெல்லாம் கண்முன் வந்தது.

"பால அவர் கைல கொடுத்து கால்ல விழுந்து வணங்கு"

"கால்ல விழவும் பால கொடுக்கவும் ஆள் உள்ள இருக்கணும்ல்ல. எங்க போய்ட்டானோ! ஆள் உள்ள இல்லனா என்ன செய்யணும் னு அம்மா சொல்லவே இல்ல" தன்மேலேயே கரிசனம் வர என்ன செய்வது என்று குழம்பியவள் அருகில் இருந்த மேசையில் பால் செம்பை மூடி வைத்தாள்.

அறையின் அலங்காரத்தில் லயித்தவள் இது என் அறையா என்று வியப்புக்குள்ளானாள். இரண்டு பேர் படுக்க கூடிய கட்டில் தான் அதில் தான் யாழிசையும் இயலும் தூங்குவார்கள். இன்று அதன் அலங்காரம் மிக அழகாக அவளை கவர்ந்தது. மல்லிகையும், ரோஜாவுமாக அறை முழுவதும் பரந்து, மணம் வீசிக்கொண்டிருக்க ஆழ்ந்த மூச்சை இழுத்து வீட்டுக் கொண்டாள் யாழ்.

அவளுடைய இரும்பு பீரோ இல்லாது புதிய ஒரு பலகையிலான பீரோ அறையில் குடியிருக்க ஒரு பக்க கதவில் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. அதில் விழும் தன் விம்பத்தை பார்த்தவள் "அழகிடி நீ" என்று தன்னையே கொஞ்சிக் கொண்டாள்.

கட்டிலுக்கு அருகே சுழலும் மின் விசிறி காணாமல் போய் புதிதாய் ஒரு முகட்டு மின்விசிறி மேலே சுழன்று கொண்டிருந்தது.

"எத்தனை நாள் காத்து வரலன்னு புழுக்கத்துல தூங்கி இருப்பேன். ஜன்னலை திறக்கக் கூட அம்மா விடாது. இன்னைக்கி அவன் வந்ததும் எல்லாத்தையும் மாத்திட்டாங்க" தன் அன்னையை நினைத்து மனத்தால் முறைத்தவள் கால் கடுக்கவே கட்டிலில் போய் அமர்ந்த்துக் கொண்டாள்.

யாழிசை நன்றாக துணிகளை தைப்பவள் அவளுடைய துணி, இயலுடைய கல்யாணத்துணி, வீட்டாரோட துணி என்று இந்த மூன்று நாளாக தையல் இயந்திரத்திலேயே அவளுடைய இரவுகள் செல்ல அமர்ந்த வாக்கிலேயே! கண்ணயர்ந்தாள்.

images (45).jpg

அறைக்குள் வந்த ரிஷிக்கு காணக் கிடைத்தது தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியைத்தான். கால்கள் இரண்டும் கீழே இருக்க, தலக்கணையை இடுப்புக்கு வைத்து தலையை கட்டிலில் சாய்த்து தூங்கிக் கொண்டிருந்தவள் இடது கை அவளின் வயிற்றின் மேலும், வலது கை அவன் புறம் இருக்கும் தலக்கணையிலும் இருந்தது.

அவளின் அருகில் வந்து அவள் முகம் பார்க்க சிப்பி இமைமூடி அவள் தூங்க கண்களில் அசைவில்லை. சர்வ அலங்காரத்தோடு தூங்கும் தேவதை. கூரான மூக்கு அதில் புதிதாய் குடிகொண்டிருக்கும் மூக்குத்தி. ஆரஞ்சு சுளை போல் இருக்கும் உதடுகள். இரண்டும் ஒன்றோடு ஒன்று சேராமல் தனியாக பிரிந்து இருக்கும் அழகு அவனை சுண்டி இழுக்க தனது தடித்த பெரிய இதழ்களை இடைவெளி நிரப்ப மனம் துடிக்க இதற்க்கு மேலும் தன்னால் கட்டுக்குள் இருக்க முடியாது என்றெண்ணியவன் அவள் கால்களை தூக்கி கட்டிலில் வைத்து அவள் மேலே சரிந்து அவளை எடுத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கினான்.



அனுமதி இல்லாமல் மனைவியென்றாலும் தொடக்கூடாது எண்றதெல்லாம் அவன் அறியான். அவளை அடைய தாலி என்ற உரிமை சான்று அவனுக்கு போதுமாக இருக்க,

யாழின் கல்யாணக் கனவுகள் தான் என்ன? அவளின் ஆசா பாசங்கள் என்ன? எதையயும் அறிந்து கொள்ளும் ஆவல் இல்லாது அவள் உடல் கிடைத்தால் போதும் என்று இருக்கும் கணவனோடு யாழின் வாழ்க்கை எத்திசையில் பயணிக்குமோ!
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ Sunday special:love::love:

நம்ம பண்ணுமா சண்டே ஸ்பெஷல் எங்க என்று கேட்டாங்க சோ உடனே எழுதி சுடச்சுட போட்டாச்சு.:cool::D

View attachment 3981

அறைக்குள் நுழைந்த யாழிசை தனக்கு தாலி கட்டின நெடுமாறன் எங்கே என சுற்றும் முற்றும் பார்க்க அவனை காணவில்லை. அம்மா அறிவுரை என்ற பெயரில் சொன்னதெல்லாம் கண்முன் வந்தது.

"பாலா அவர் கைல கொடுத்து கால் விழுந்து வணங்கு"

"கால்ல விழவும் பாலா கொடுக்கவும் ஆள் உள்ள இருக்கணும்ல்ல. எங்க போய்ட்டானோ! ஆள் உள்ள இல்லனா என்ன செய்யணும் னு அம்மா சொல்லவே இல்ல" தன்மேலேயே கரிசனம் வர என்ன செய்வது என்று குழம்பியவள் அருகில் இருந்த மேசையில் பால் செம்பை மூடி வைத்தாள்.

அறையின் அலங்காரத்தில் லயித்தவள் இது என் அறையா என்று வியப்புக்குள்ளானாள். இரண்டு பேர் படுக்க கூடிய காட்டில் தான் அதில் தான் யாழிசையும் இயலும் தூங்குவார்கள். இன்று அதன் அலங்காரம் மிக அழகாக அவளை கவர்ந்தது. மல்லிகையும், ரோஜாவுமாக அறை முழுவதும் பரந்தது, மனம் வீசிக்கொண்டிருக்க ஆழ்ந்த மூச்சை இழுத்து வீட்டுக் கொண்டாள் யாழ்.

அவளுடைய இரும்பு பீரோ இல்லாது புதிய ஒரு பலகையிலான பீரோ அறையில் குடியிருக்க ஒரு பக்க கதவில் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. அதில் விழும் தன் விம்பத்தை பார்த்தவள் "அழகிடி நீ" என்று தன்னையே கொஞ்சிக் கொண்டாள்.

கட்டிலுக்கு அருகே சுழலும் மின் விசிறி காணாமல் போய் புதிதாய் ஒரு முகட்டு மின்விசிறி மேலே சுழன்று கொண்டிருந்தது.

"எத்தனை நாள் காத்து வரலன்னு புழுக்கத்துல தூங்கி இருப்பேன். ஜன்னலை திறக்கக் கூட அம்மா விடாது. இன்னைக்கி அவன் வந்ததும் எல்லாத்தையும் மாத்திட்டாங்க" தன் அன்னையை நினைத்து மனத்தால் முறைத்தவள் கால் கடுக்கவே கட்டிலில் போய் அமர்ந்த்துக் கொண்டாள்.

யாழிசை நன்றாக துணிகளை தைப்பவள் அவளுடைய துணி, இயலுடைய கல்யாணத்துணி, வீட்டாரோட துணி என்று இந்த மூன்று நாளாக தையல் இயந்திரத்திலேயே அவளுடைய இரவுகள் செல்ல அமர்ந்த வாக்கிலேயே! கண்ணயர்ந்தாள்.

View attachment 3982

அறைக்குள் வந்த ரிஷிக்கு காணக் கிடைத்தது தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியைத்தான். கால்கள் இரண்டும் கீழே இருக்க, தலக்கணையை இடுப்புக்கு வைத்து தலையை கட்டிலில் சாய்த்து தூங்கிக் கொண்டிருந்தவள் இடது கை அவளின் வயிற்றின் மேலும், வலது கை அவன் புறம் இருக்கும் தலக்கணையிலும் இருந்தது.

அவளின் அருகில் வந்து அவள் முகம் பார்க்க சிப்பி இமைமூடி அவள் தூங்க கண்களில் அசைவில்லை. சர்வ அலங்காரத்தோடு தூங்கும் தேவதை. கூரான மூக்கு அதில் புதிதாய் குடிகொண்டிருக்கும் மூக்குத்தி. ஆரஞ்சு சுளை போல் இருக்கும் உதடுகள். இரண்டும் ஒன்றோடு ஒன்று சேராமல் தனியாக பிரிந்து இருக்கும் அழகு அவனை சுண்டி இழுக்க தனது தடித்த பெரிய இதழ்களை இடைவெளி நிரப்ப மனம் துடிக்க இதற்க்கு மேலும் தன்னால் கட்டுக்குள் இருக்க முடியாது என்றெண்ணியவன் அவள் கால்களை தூக்கி கட்டிலில் வைத்து அவள் மேலே சரிந்து அவளை எடுத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கினான்.



அனுமதி இல்லாமல் மனைவியென்றாலும் தொடக்கூடாது எண்றதெல்லாம் அவன் அறியான். அவளை அடைய தாலி என்ற உரிமை சான்று அவனுக்கு போதுமாக இருக்க,

யாழின் கல்யாணக் கனவுகள் தான் என்ன? அவளின் ஆசா பாசங்கள் என்ன? எதையயும் அறிந்து கொள்ளும் ஆவல் இல்லாது அவள் உடல் கிடைத்தால் போதும் என்று இருக்கும் கணவனோடு யாழின் வாழ்க்கை எத்திசையில் பயணிக்குமோ!
Teaser கொடுத்ததுக்கு ரொம்பவும்
சந்தோஷம், பஸ்மிலா டியர்
ஆனால் என் பெயரை இப்படி எழுதிட்டீங்களேப்பா
தமிழ் உங்களிடம் மாட்டிக்
கொண்டு தடுமாறுது, மிலா டியர்
ஹா ஹா ஹா
பாலாவும் இல்லை
விஷ்வாவும் இல்லை
அது "பாலை" அவர் கையில
கொடுத்து காலில் விழுந்து
வணங்குன்னு யாழினியின்
அம்மா சொல்லியிருக்கிறார்
ஹா ஹா ஹா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top