உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 23

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

போன எபிக்கு ஆதரவளித்தவர்கள் அனைவருக்கும் நன்றி... இதோ அடுத்த எபி...


உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதே 23

rana-and-sai-pallavi.jpg


மெல்ல கண் விழித்த மகிழ் தான் எங்கே இருக்கிறோம் என்று சுற்றும் முற்றும் பார்க்க, அது ஒரு மருத்துவமனை அறை என்பதை கண்டுகொண்டாள். சோர்வுடன் தன் கண்களை மூடியவளுக்கு முதல் நாள் நடந்தவை யாவும் வலம் வந்தது.

அவை யாவும் உண்மையா இல்லை ஆசை கொண்ட மனதின் கற்பனையா? என்று யோசித்தவளுக்கு புகழ் அணிவித்த மோதிரம் நியாபகம் வர, அதனைக் காண தன் கைகளை தூக்கினாள்.

‘என்ன இது? கைய தூக்க முடியல… கீழ விழுந்ததில ஃப்ரேக்சரா?’ என்று சிந்தித்தவள் தன் கையை பார்க்க, அங்கே அவள் கண்டது அதனை பிடித்தவாறு மற்றொரு கை, அதன் அருகிலேயே ஒரு தலை.

மகிழின் அசைவில் தூக்கம் கெட, மெல்ல எழுந்தான் புகழ்.

“ஹே! எழுந்துட்டியா? இரு… டாக்டரை கூட்டிட்டு வரேன்” என்று அவன் கூறியதிலேயே அனைத்தும் உண்மை என்று புரிந்துபோனது அவளுக்கு. அதில் இறுக்கம் கொண்டவள் அவனிடம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

அதன்பின், மருத்துவர் வந்து அவளை பரிசோதித்ததாகட்டும், அனைவரும் வந்து அவளை பார்த்ததாகட்டும், அவள் தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்துவரும்வரை பெரியதாக எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.

மகிழை அவள் அறையில் விட்டு சிறிது நேரம் இருந்துவிட்டு புகழின் வீட்டினர் கிளம்ப, புகழ் மட்டும் அவளிடம் பேசுவதற்காக அறையினுள் நுழைந்தான்.

அவன் வருவதைக் கூட கவனிக்காது சுவற்றை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் மகிழ்.

அவளருகே வந்து நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தவன், அவள் கையை பிடித்துக்கொண்டு, “ரொம்ப பயந்துட்டேன்டா ஹனி… டாக்டர் உனக்கு அதிக மன அழுத்தத்தினால் வந்த மயக்கம் தான், வேற ஒன்னுமில்லைன்னு சொல்ற வரைக்கும் எனக்கு எதுவுமே ஓடல… என்னால தான உனக்கு இது எல்லாம்? சாரிடா” என்று பேச, அதனை கேட்டுக்கொண்டிருந்தவள் உடல் விரைத்து அமர்ந்திருந்தாள்.

“என்னடாம்மா… இன்னும் என்மேல கோபமா இருக்கியா? நான் சும்மா விளையாட்டுக்கு செஞ்சதுடா அது… நீ என்னை ப்ரார்த்தனாவை கல்யாணம் பண்ண சொன்னதுல கோபம் வந்தது. நம்ம இவ எப்படி அவ்வளவு ஈஸியா தூக்கி கொடுக்கலாம்னு ஒரு சின்ன சுணக்கம். அப்படி செஞ்சா உனக்கு எப்படி இருக்கும்னு காட்டத்தான் இந்த டிராமா போட்டேன்” என்று அவன் விளக்கிக்கொண்டிருக்க, அவன் கைகளில் இருந்து தன் கையை உருவியவள்,

“சாரி சார்! எனக்கு உங்க மேல எந்த விருப்பமும் இல்ல” என்று கூறினாள்.

“எங்கே என்னை பார்த்து சொல்லு! நான் உன் தமிழ்டா” என்று அவன் கூற,

அவன் கண்களை பார்த்தவள், “எனக்கு உங்க மேல எந்த விருப்பமும் இல்ல” என்று கூற, அதில் கோபம் கொண்டவன்,

“தூங்குறவங்கள எழுப்பலாம், நடிக்குறவங்கள எழுப்ப முடியாது. நீ என்ன லவ் பண்றேன்னு எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும். பிறகு ஏன் இப்படி?” என்று அவன் கேட்க, அவள் தலையை குனிந்துகொண்டாள்.

அவள் தாடையை பற்றி தன் முகம் காணச் செய்தவன், “ஏன்?” என்று அவள் கண்களை தவிப்புடன் நோக்க, விழிகள் கலங்கியது அவளுக்கு.

நிலம் நோக்கியவள், “நான் உங்களுக்கு பொருத்தமானவ இல்ல” என்று மெல்ல வார்த்தைகளை உதிர்த்தாள்.

“வாட் டூ யூ மீன்?” என்று அவன் கேட்க, மீண்டும் அதையே கூறியவள், “நீங்க ஒரு நல்ல பொண்ணா பார்த்து மேரேஜ் செய்துக்கோங்க” என்று முடிக்கும்முன், “ஏய்!” என்ற அவன் குரல் அவள் செவியில் விழுந்தது.

அதில் அதிர்ந்து அவன் முகம் காண, “உன்னைப் பற்றி நீ டெசைட் பண்ண உனக்கு உரிமை இருக்கு, ஆனா நான் என்ன செய்யனும்னு சொல்ல உனக்கு உரிமை இல்ல” என்றவன்,

“என்ன சொன்ன? எங்கள தேடி வந்து லவ் பண்ணீட்டு ஒரு நாள் எதுவுமே சொல்லாம அம்போன்னு விட்டுட்டு போய்டுவீங்களாம். நாங்க பல வருஷம் தேடி அலைந்து கண்டுபிடிச்சா, இவங்க வேற ஒருத்தங்க கூட எங்கள கோர்த்துவிடுவாங்க. நாங்க அப்படியே ஏத்துக்கனும். இவங்க பெரிய தியாகச்செம்மல்… நீ சொல்றத எல்லாம் பண்ண நாங்க என்ன கேனையன்னா?” என்று அவன் பொரிய, அவள் கண்களில் நீர் வழிந்தது. அதனை பார்க்கமுடியாத தன் மீதே அவனுக்கு கோபம் வர, “முதலில் அழுகைய நிறுத்து!” என்று குரலை உயர்த்தினான் அவன்.

“சே! நான் ஒரு மடையன்… உன் பின்னாடி நான் சுத்தினது எல்லாம் எனக்கு அப்போ இருந்த வெறும் இனக்கவர்ச்சி தான்டா… வேற ஒன்னுமே இல்லன்னு நீ எனக்கு அன்னைக்கு மறைமுகமா சொன்னதுக்கப்புறமும் உன் பின்னாலயே வரேன் பாத்தியா, என்னை சொல்லனும்” என்று தலையில் அடித்துக்கொள்ள, அவனை வலியோடு பார்த்தாள் அவள்.

அதனைக் கண்டவன், “என்ன சொல்லப்போற? நான் உன்ன உருகி உருகி லவ் பண்ணேன்னா? சரி, அப்படியே வெச்சுப்போம். உனக்கு என் மேல இருக்க அந்த சோ-கால்ட்-லவ்வுக்கு நீ இதுவரைக்கும் என்னடி செஞ்ச? ஒரு சிறு கல்லயாவது நகர்த்திருப்பியா? ஒரு ஆணியும் புடுங்கல… என்னை அம்போன்னு விட்டுட்டு வேற எவனையோ கல்யாணம் செய்ய போனவ தான நீ” என்று அவன் சொல்லும்போது அவள் வெடித்து அழ, அதை எல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் அவன் இல்லை.

“ஆனா, என்னமோ எனக்கு நல்லது செய்யுறபோல சீன் மட்டும் போட வேண்டியது… எனக்கு எது நல்லதுன்னு உனக்கு யாரு சொன்னது? ஏதாவது அசரிரி வந்து உனக்கு சொல்லுச்சா? புகழுக்கு அவனுக்கு எது நல்லதுன்னு தெரியாது. சோ, நீ அவனுக்கு எல்லாம் செஞ்சு கொடுன்னு?”

“இதுவரைக்கும் உன்னிடம் நான் எந்த விளக்கமும் கேட்டதில்லை. ஆனால், இப்போ எனக்கு தெரிஞ்சே ஆகனும். என்ன ரீசன்?” என்று அவள் கையை பற்றி இழுத்தபடி அவன் கேட்க, கேவலைத் தவிர அவளிடம் இருந்து வேறு எதுவும் வரவில்லை.

அவளை சிறிது நேரம் ஆழ்ந்து பார்த்தவன், “கீர்த்தியா?” என்று கேட்டான்.

அதில் அதிர்ந்து அவனைக் கண்டாள் மகிழ். அதுவே காரணம் என்று அவனுக்குப் புரிய, சிறிது இளகியவன், “ஹே லூசு… நான் லவ் பண்ற பொண்ணு நீ தான்னு நான் சொன்னதும் எவ்வளவு சந்தோஷமா இருந்தா தெரியுமா அவ? நம்ம நிச்சயத்திற்கான எல்லா ஏற்பாடும் அவ்வளவு ஆர்வத்தோட செய்தா” என்றவன், “வேற ஏதாவது இருக்கா?” என்று திரும்ப கேட்கவும், அதற்கும் அமைதியாக இருந்தாள் அவள்.

“என்ன தான் உன் பிரச்சனை? சொன்னா தானே தெரியும்?” என்று அவன் கேட்க,

“உங்களுக்கு நான் வேண்டாம்… கீர்த்தியை ஃப்ரெண்டா வெச்சுட்டு அவ அண்ணனையே லவ் பண்ணி அவளுக்கு துரோகம் செய்தேன், உங்ககிட்ட நான் யாருன்னு மறைச்சேன். உங்கள லவ் பண்ணிட்டு வேற ஒருத்தர திருமணம் செய்ய நெனச்சு, உங்களுக்கு துரோகம் செய்தேன். அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பின்பும் உங்களயே நெனச்சு அவருக்கு துரோகம் செய்தேன். நான் கெட்ட பொண்ணு… ரொம்ப ரொம்ப கெட்ட பொண்ணு… நீங்க வேற யாராவது நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்துக்கோங்க” என்று அவள் பிதற்றிக்கொண்டே போக,

“ஆமா… இவங்க மட்டும் தான் இந்த உலகத்துலயே கெட்டவங்க. நான் எல்லாம் கடைந்தெடுத்த நல்லவன் பாரு!” என்று அவன் எள்ளலாக உரைக்க, அவள் அதற்க்கும் தலையை குனிந்துகொண்டாள்.

அவளை நெருங்கி அமர்ந்தவன், “இங்க பாரு… இருவர் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதற்கு அவங்க ரெண்டு பேரும் நல்லவங்கங்கற தகுதி இருந்தா மட்டும் போதாது. எவ்வளவு தான் நல்லவங்களாக இருந்தாலும், அவங்க மனம் நிறைந்த மகிழ்ச்சியோட வாழ அவங்களுக்குள்ள காதல்ன்னு ஒன்னு வேணும். அதுதான் அவங்களுக்கு நடுவுல எந்த பிரச்சனை வந்தாலும் அவங்களை பிணைத்து வைக்கும். அது இல்லைன்னா ஒரு கட்டத்துல அவங்களுக்கு சலிப்பு வந்துரும். நமக்குள்ள அந்த காதல் இருக்கப்போ, வேற ஒருத்தர் கூட என்னால எப்படிடா?” என்று அவன் கேட்க, அவள் அமைதியாகவே இருந்தாள்.

“நான் இவ்வளவு சொல்லியும் நீ இப்படியே தான் இருப்பேன்னு சொல்றல்ல… ஏண்டி இவ்வளவு செல்ஃபிஷ்ஷாக இருக்க? உன்னால யாருதான் சந்தோஷமா இருக்கா? உன் அப்பா-அம்மா, நான், ஆதி, கீர்த்தி, இப்படி உன்னை சுத்தி இருக்க யாருமே சந்தோஷமா இல்ல. மனசுவிட்டு பேசுனா தான என்னன்னு தெரியும்?” என்றவனிடம், அவள், “நான் நிறைய தப்புபண்ணிருக்கேன்” என்று மீண்டும் புலம்ப,

“இங்கப்பாரு! நடந்து முடிந்ததைப் பற்றி பேசி ஆகப்போவது ஒன்றும் இல்ல. யாருதான் தப்பு செய்யல? தவறே செய்யாத உத்தமன் இருப்பது அரிதுடா. ஆனால், அதுல இருந்து திருந்தாம இருக்குறதுதான் தவறு. இப்போ நீ என்னைவிட்டு விலகி விலகி போனதால நான் இல்லாம இருக்க முடியாதுன்னு உனக்கும் தெரிஞ்சுருச்சு, எனக்கும் நீ இல்லாம இருக்க முடியாதுன்னு தெரிஞ்சுருச்சு… சோ, அதை எப்படி சரி செய்யலாம்னு யோசி” என்றவன், சிறிது இடைவெளிவிட்டு, “அதற்கு இப்போல இருந்தே என்னை ஒட்டிக்கிட்டு தான் இருப்பேன்னு நீ சொன்னாலும் எனக்கு ஓகேதான்” என்று சீண்டலுடன் முடிக்க, அதில் மெலிதாக சிரித்தவள், அவனை அடிக்க கை ஓங்கினாள். அவன் பேசியவற்றில் இருந்த நியாயம் புரிந்தவள், சிறிது சிறிதாக தன் குற்றவுணர்ச்சியை விட்டு வெளிவர நினைத்தாள், அவளவனுக்காக.

“உங்கள…” என்று அவள் சிணுங்க, “உண்மைய தான சொன்னேன்? விலகி இருந்த தவறை நெருங்கி தான சரி செய்யனும்?” என்றவன், “கிட்ட வரவா?” என்று மென்குரலில் கேட்க, அதில் வெட்கப்பட்டவள், வேறு புறம் நோக்கினாள்.

“ஹனி…” என்ற அவன் குரல் அருகில் கேட்க, அவள் மனதில் தோன்றிய உணர்ச்சி தேகம் முழுவதும் பரவ, சில்லென்றிருந்தது.

“ம்ம்ம்…” என்று மட்டும் அவள் உரைக்க, அவளை தன்னை நோக்கச் செய்தவன், “தேங்க்ஸ்டா” என்று ஆழ்ந்த குரலில் கூறி அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

அங்கே சில கேட்கப்படாத கேள்விகளும் சொல்லப்படாத விளக்கங்களும் இருந்தாலும், அவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு அப்போதைய சந்தோஷத்தை மட்டும் அனுபவித்தனர் காதலர்கள் இருவரும்.


முக்கியமான சிலவற்றை சொல்லிவிட்டேன். ஆனால், இன்னும் சில விளக்கங்கள் இருக்கின்றன தான். அவற்றை அடுத்த எபியில் சொல்லிவிடுகிறேன். இன்னும் இரண்டு எபி மட்டும் தான் பேலண்ஸ்... காலையில் சீக்கிரமே எழுதிவிட்டால் நாளை மதியத்திற்கு முன் இரண்டும் வந்துவிடும். இல்லையேல் நாளை மறுநாள் தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top