அருமையான பதிவு மிலா
.ராதையின் சுயரூபம்,அவள் இங்கு வந்த காரணமும் கண்ணபிரானுக்கு தெரியனும்னு கோதை நினைக்க,ராதை பேசிய பேச்சில் கண்ணபிரான்,ராதை,அபி
மகள் என இத்தனை வருடங்களாக சொல்லாமல் மறைத்திருந்த விஷயத்தை சொல்லிட்டார்
.
வேலுநாயகம் மகள் மேல் கொண்ட கண்மூடித்தனமான பாசத்தால்,திருமணமானவன் என சொன்ன பிறகும் மிரட்டி மகளுக்கு திருமணம் செய்து வைத்ததுடன்
,கயந்திகாவுக்கு இனி குழந்தை பிறக்காது என அபியின் குழந்தை இறந்து விட்டதாக சொல்லி,அபி குழந்தையை மகளிடம் கொடுத்த இவனை மனிதப் பிறவியாகவே நினைக்க முடியலை,ராட்சஷன்
.
அடுத்தவ புருசனை கட்டிட்ட பாவத்துக்கு கயந்திகாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போக, வேலுநாயகம் செய்த பாவத்துக்கு கடைசிகாலத்தில் பேசக்கூட முடியாமல் இறந்து போனான்
.
அதிர்ச்சியான நேரத்தில் கோதை,அப்பாவை புரிந்து பொறுமையாக நடந்து கொண்டது அருமை....
யாரை பழிவாங்க நினைத்தாலோ அவள் தன் அம்மா என தெரிந்து ராதைக்கு அதிர்ச்சி
.
யுவன் அக்காவிடம் உண்மையை சொல்வானா,உண்மை தெரிந்து கயந்திகாவின் நிலை என்ன